வியாழன், 27 டிசம்பர், 2012

சர்.வில்லியம் ஜோன்ஸ்...



இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், கி.பி. 1600 முதல் வர்த்தக நொக்கத்திற்கு வந்து அதை மட்டுமெ 1757வரை செய்துவந்த காலம் பகுதி ஒன்று. இந்த பகுதியில் அவர்கள் வியாபாரம் மட்டுமெ செய்தார்கள். 1757க்கு முன்பிருந்தே இந்திய அரசர்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியாக இருந்த பிரிட்டிஷார் ராணுவவீரர்களை சப்ளை செய்தார்கள் அவர்கள் மொகலாய அரசர்களுக்காகவும் போர்செய்திருக்கிறார்கள். 1757ல் பிளாசிப்போர் நடந்துமுடிந்துஅதில் ப்ரிட்டிஷ் ராணுவம் வெற்றிபெற்றதை அடுத்து அதற்கான செலவுத்தொகையை பணமாக அளிக்காமல் வங்காளத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை மொகலாய அரசர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்துவிட்டார்கள்.

இரண்டாம் பகுதி என்பது 1757 முதல் 1857 சிப்பாய்புரட்சி வரையிலான காலகட்டம், இந்த காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவை பற்றி கற்றார்கள், வரலாறு, மொழி, இலக்கியம் எல்லாவற்றையும் மற்றும் மக்களை தெரிந்து கொண்டால்தான் அவர்கள்மீது ஆட்சி செலுத்தமுடியும்.

மூன்றாம் காலகட்டம் என்பது சிப்பாய்புரட்சி முதல் இந்திய விடுதலைவரை (1857 -1947) இந்தியர்களை கடுமையாக சுரண்டினார்கள், அடக்குமுறை செய்தார்கள். அவர்களுடைய ராணுவத்திற்கு ஏராளமான பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்தார்கள். இரண்டாம் காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொண்டதால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி ஆட்சி செய்தார்கள். இந்த கட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது பிரிட்டிஷ் வருகைக்கு பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு நம்மை தாழ்வுமனப்பன்மை கொள்ளச்செய்தார்கள். அதுதான் இன்றுவரை வெள்ளைக்காரன் செய்தால் அது நல்லாத்தான் இருக்கும் என்று நம்பிவருகிறோம். இங்கிலாந்தில் சாதாரணத்தொழிலாளியாக இருந்தவன் இங்கே வந்து நமக்கு எஜமானரானர்கள். இப்போதும் கூட வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனக்களில் இங்கிலாந்தில் ஓய்வுபெற்றவுடன் இங்கேவந்து மேனேஜராக வெலைசெய்கிறார்கள். நாம் அவர்களை மாஸ்டர்களாக ஏற்றுகொள்வதற்கு ஆங்கிலம் என்ற மொழியும் நம்முடைய் தாழ்வுமனப்பான்மையும் தான் காரணம்.

சர் வில்லியம் ஜோன்ஸ் 1783ல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக வந்தார், 1746ல் பிறந்த இவர் சிறுவயதிலேயே அருந்தினாளராக இருந்ததால் கிரேக்கம், லத்தீன், பாரசீகம்,ஹீப்ரு அரேபிய மொழிகளை மிகச்சிறிய வயதிலெயே கற்றறிந்தார். ஆக்ஸ்போர்டு பழ்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான ‘சம்ஸ்கிருதத்தை’ பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் ஆசியரை தேர்ந்தெடுத்தார். அந்த வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் சர்.வில்லியம் ஜோன்ஸ. தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதை பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சிபெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் லத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். லத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!!


சிரியாவில் பள்ளிக்கு செல்லவேண்டிய குழந்தைகள், தாய் தந்தையரின் அன்போடும் பரிவோடும் வளர்ந்தவர்கள் கொடிய போரால் தினந்தோறும் அடுத்த வேளை உணவிற்காக எங்கோ வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு அமைதியாக இருந்த நாட்டின்மீது அநியாயமாக உள்நாட்டுப் போரை துவக்கி தினமும் அலுவலகம் சென்றவர்கள் கூலிப்படையினராக தெருவோரம் துப்பாக்கிகள் ஏந்தி ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்கள். யாருக்காக சண்டையிடுகிறார்கள்! ஆட்சி மாற்றத்தை பற்றி பேசுபவர்கள் முடியாட்சி மன்னர்கள் அதுதான் கேலிக்கூத்து. போர் எங்கு நடந்தாலும் கொடியது. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!!

சனி, 22 டிசம்பர், 2012

மதச்சார்பின்மையின் தேவை.

தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் ‘உதவிசெய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்றே எழுதப்படும் என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.- சுவாமி விவேகானந்தர்.

தான் சார்ந்துள்ள சமயத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாடுகாரணமாக அதனி மேன்மைப் படுத்திட அதனைப் பெருமைப் படுத்தி, மற்றவர்களின் சமயத்தை வெறுத்து எவரொருவர் செயல்பட்டாலும், அதன் மூலம் தான் சார்ந்துள்ள சமயத்திற்கே நாசம் விளைவிப்பார்- அசோகச்சக்கரவர்த்தி .
                                                  --------------------

மதச்சார்பின்மை என்ற கொள்கை இன்று வலதுசாரிகளாலும் சில சந்தர்ப்பவாதிகளாலும் கொச்சைப் படுத்தப்படுகிறது. வலதுசரிகள் பெரும்பான்மையினரின் மத சட்டத்தின் ஆட்சியை அமைக்கவிரும்புகிறார்கள். அது இந்தியாவிலும் சரி, எகிப்திலும் அதே மாதிரி தான். திமுக போன்ற சந்தர்ப்பவாத கட்சிகளாலும் மதச்சார்பினமை வாதம், மதவாதம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக எந்த கூட்டணியில் சேர்ந்தால் பதவியில் அமர்லாம் என்று தெரிந்துகொண்டு மதவாதிகளோடு குலாவிக்கொண்டும் அவர்களுக்கு எதிரான தேர்தல் கூட்டணி சேரும்போது `மதவாதம்` என்ற ஆபத்து வந்துவிட்டதைப் போல் பேசுவதுமாக சில கட்சிகள் உள்ளன.

இன்னும் சிலர் மதச்சார்பின்மை என்பது மேற்கத்தியவாதம் என்கிறார்கள். சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் விஞ்ஞானம் எல்லாம் மேற்கத்தியவாதம் என்பதற்காக யாரும் பேண்ட் சட்டை போடாமல் வேட்டி, கோவணம் அணிவதில்லை. எது சமூகத்திற்கு நல்ல கருத்தோ அது எங்கிருந்து வந்தால் என்ன? ஏற்றுகொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பதை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தமாதிரி வியாக்யானம் செய்கிறார்கள், அரசு எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கவெண்டும், அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ரி அடுத்தவர் மதம் குறித்து விமர்சிக்கக்கூடாது என்றும் சிலர் எழுதுவதை வாசித்திருக்கிறேன். உண்மையில் இது 'state' ச்மபந்தமான விசயம், பல்வேறு மதநம்பிக்கைகள் கொண்ட மக்கள் கூட்டத்தில் அரசு எந்த ஒரு மதத்தையும் தன்னுடைய ஆட்சி மதமாகவோ அல்லது நிர்வாகத்தில் மதத்தின் தலையீடோ இருக்கக்கூடாது என்பது தான். மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட விவகாரம், அரசு நிர்வாகத்தில் மதத்தை நுழைக்கக்கூடாது என்பது தான் மதச்சார்பின்மை.

மத அடிப்படையில் ஆட்சி நடபெற்றுவருகிற நமது அண்டை நாடுகளைவிட இந்தியாவின் ஸ்திரத்தன்மை நன்றாக உள்ளது, இப்போது எகிப்தில் நடைபெற்றுவருகிற மதக்கலவரங்களை அலசிப் பார்க்கவேண்டியதுள்ளது. பெரும்பான்மையினர் அவர்களின் மதச்சட்டத்தை ஆட்சியின் சட்டமாக நடைமுறைப்படுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது, அதற்கு எதிராகவும் மதச்சார்பற்ற அரசாக இருக்கவேண்டும் என்று சிறுபான்மையினரும் இதர ஜன்நாயகசக்திகளும் போராடுகிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால அங்கே மத அடிப்படையில் ஆட்சி அமைவது உறுதி. இந்தியா மற்ற நாடுகளிலிருந்து கிடைத்த படிப்பினைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.

வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள் 1857 வரை இந்தியாவில் மத நல்லிணக்கம் பேணபட்டது அதன்பின்னர் தான் இந்து-முஸ்லீம் மோதல்கள் ஆங்காங்கெ நடைபெற்று கடைசியில் அது 1947 ல் மத அடிப்படியில் பாகிஸ்தான் பிறந்தது. இன்று பாகிஸ்தானின் நிலைமை என்ன? பொருளாதார முன்னேற்றமும் அடையவில்லை, சமூக முன்னேற்றமும் அடையவில்லை. நிலையற்ற ஆட்சியும் பதட்டம் நிறைந்த வாழ்க்கையும் தான் மக்கள் அனுபவிக்கிறார்கள், சிறுபான்மையினரின் நிலைமை மோசமாக இரண்டம்தர குடிமகன்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி சிறுபான்மையினரை மோசமாகவும் இரண்டாம்தர் குடிமகன்களாகவும் நடத்த விரும்புகிற சக்திகள்தான் இந்துத்துவா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதற்கு வரலாற்றை சிறுபான்மையினரின் மீது வெறுப்புணர்வு தூண்டும் வகையில் எழுத முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக பிர்ந்த நேரத்தில் பண்டிட் நேருவுக்கு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கவேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதை நிராகரித்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்கும் என்று அறிவித்தார். நவீன இந்தியாவை நிர்மாணித்த இரு ஆட்சியாளர்கள் யாரென்றால் முதலில் பேரரசர் அக்பர், அடுத்து பண்டிட் நேரு என்று நீதிபதி.மார்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் அக்பர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார், அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தார். அதே நேரத்தில் மேற்கத்திய உலகத்தில் மதச்சண்டைகள் நடந்துவந்துள்ளன, கத்தோலிக்கள் பிராட்டஸ்டண்டுகள் மீதும் பிராட்டஸ்டண்ட்கள் கத்தோலிக்கர்கள் மீதும் கொலைகள் நடத்தினார்கள், இந்த இருபிரிவினரும் சேர்ந்து யூதர்களை அழித்தார்கள் என்பது வரலாறு.

இந்தியாவில் 1857ல் நடைபெற்ற `சிப்பாய்ப்புரட்சியை` ஆங்கிலேய வரலாற்றிசியர்கள் சிலர் `சிப்பாய் கலகம்` என்று எழுதினார்கள். மக்கள் எழுச்சியை கல்வரம் என்று இன்றும் எழுதுகிற போக்கு சில நாடுகளில் இருக்கிறது. சிப்பாய்புரட்சி தோல்வியில் முடிந்தாலும் அந்த படிப்பினைகளிலிருந்து பிரிட்டிஷார் மக்களை இந்து-முஸ்லீம் எனப்பிரிக்காமல் ஆட்சி நடத்தமுடியாது என்பதை உணர்ந்தார்கள். மத அடிப்படையில் பிரிதாளும் சூழ்ச்சியை கடைபிடித்து கலவரத்தை விதைத்தார்கள். ஆங்கிலேய கலெக்டர்கள் இந்துமத பீடங்களிடம் பணம்கொடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக பேசுமாரும் அதே பாணியில் மெளல்விகளுக்கு காசுகொடுத்து இந்துக்களுக்கு எதிராகவும் பேசுமாறும் செய்தார்கள். இந்தச் சண்டையை பயன்படுத்தி அவர்களின் ஆட்சி மேலும் ஒரு நூற்றாண்டுவரை நீடித்தது. B.N. Pandey என்ற பேராசிரியர் 1928ல் அலகாபாத் பழ்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சில மாணவர்கள் வரலாற்றுபுத்தகத்தை கொண்டுவந்து அதில் திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாமுக்கு மாறவேண்டும் இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று சொன்னராம், அதனால் அந்த மானமுள்ள 3000 பிராமணர்கள் தற்கொலைசெய்து கொண்டதாகவும் வரலாற்று பாடபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அந்த நூலை எழுதிய பேராசிரியர் ஹர்பிரசாத் சாஸ்திரியை தொடர்புகொண்டு இந்த தகவல்கள் எங்கே கிடைத்தன் என கேட்டிருக்கிறார் பாண்டே. அவர் மைசூர் அரசாங்க ஆவணத்திலிருந்து பெறப்பட்டதாக சொல்லியிருக்கிறார், மைசூர் பழ்கலைக்கழக பேராசிரியர் ஸிரீகாந்தியாவிற்கு கடிதம் எழுதி தகவலை கேட்டிருக்கிறார் , அப்படிப்பட்ட எந்த தகவலும் மைசூர் அரசாங்க ஆவணத்திடம் இல்லையென பதில் கிடைத்தது. ஆனால் திப்பு சுலதானைப் பற்றி இன்றும் மைசூர்பகுதி மக்கள் அறிவார்கள்,திப்பு சுல்தான் மைசூரில் மிகவும் பிரபலமான் வைணவக்கோயிலுக்கு வைரக்கீர்டம் அளித்திருக்கிறார், வருடந்தோறும் 156 இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருக்கிறார், அவர் மரியாதை நிமித்தமாக சிருங்கேரி மடத்திற்கு எழுதிய 30கடிதங்கள்  இன்றும் ஆவணமாக் உள்ளான. அவருடைய ஆட்சியில் பிரதம் மந்திரி ஓர் இந்து அவர் பெயர் புனையா, அவருடைய தளபதியும் ஒரு இந்து தான் அவர் கிருஷ்ணாராவ். வரலாற்றை இப்படி எழுதுவதால் இண்டியாவில் பெரும்பான்மை சமூக இந்து மாணவர்களிடம் முஸ்லீம் வெறுப்புணர்வு வளர்கிறது அதேபோன்று பாகிஸ்தானில் இந்து வெறுப்புணர்வு தூண்டப்படும்.

முதலில் படையெடுத்த மொகலாயர்களான கஜினிமுகம்மது ஓர் ஆக்ரமிப்பாளன், அவன் சோம்நாத் கோவிலை கொள்ளையடித்தான் இதைப்பற்றி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பாபருக்குபிந்தைய  மொகலாய அரசர்கள் இந்தியாவில் பிறந்தார்கள், மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் ஹோலி பண்டிகையும் தீபாவளியை கொண்டாடினார்கள் என்பதை பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை. இந்துக்கள் ஈத், மொகரம் பண்டிகைகளை இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள், சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் பண்டிகைகாலத்தில் பசுவதை கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள். 1857 சிப்பாய்ப்புரட்சி யில் பன்றியின் கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்து- முஸ்லீம் சிப்பாய்கள் சேர்ந்துதான் உபயோகிக்க  மறுத்ததுதான் புரட்சியின் முதல்விதை. அந்த புரட்சியில் வெள்ளை ஆட்சியால் பாதிக்கப்பட்ட இந்து மன்னர்கள் தாந்தியாதோபெ, ஜான்சிராணி போன்றோர் மட்டுமல்லாது சிப்பாய்புரட்சியின் நாய்கர்களும் மொகலாயர்களின் கடைசி சக்கரவர்த்தியான டில்லி பகதூர்ஷாவை புரட்சிக்கு தலைமைதாங்க சொல்லியிருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை என்பது எப்போதும் அவசியமானது, பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்று வ்ள்ளைக்காரர்களிடமிருந்து மதவெறி சக்திகள் கற்றுக்கொண்டார்கள். கலவரவிதைகள் விதைக்கப்படுவதையும் நாம் அறிகிறோம்.

வியாழன், 20 டிசம்பர், 2012

I salute Justice.Markandey katju....

அரசாங்க உத்தியோகம் முடிந்ததும் அப்பாடா என்று ஓய்வு கொள்பவர்கள் தான் சாமானியர்கள், ஆனால் பதவியில் இருந்தபோதும் மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றியவர்களால் பணிஓய்வு பெற்றாலும் அவர்கள் சமூகத்திற்கு உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படி நீதித்துறையில் நான் மதிப்பிடுகிற இருவரில் முதல்வர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றொருவர் மார்க்கண்டேய கட்ஜு. அயோக்கியர்களுக்கு எதிராக தன்னுடைய கருத்தை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பால்தாக்கரே இறந்தபோது  “நான் ஏன் அஞ்சலி செலுத்தமாட்டென்” என்ற கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியது.  பத்திரிக்கைத்துறையின் கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்துகொண்டு நெறிபிறளும் பத்திரிக்கைகளை எச்சரிக்கிறார். பத்திரிக்கைகள் மக்களுக்கு தேவையான சமூக-பொருளாதார விசயங்களை எழுதுவதர்குப் பதிலாக சினிமா நட்சத்திரங்களையும் கிரிக்கெட் பின்னால் செல்வதை கடுமையாக விமர்சித்தார். இன்றைக்கு குஜராத்தில் மோடி அரசு பற்றி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்பு விமர்சனம் செய்துள்ளார். அவர் ஒருமுறை எழுதிய “ 90% Fools" என்ற கட்டுரையை வாசித்த இரு மாணவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக எழுதிவ்ட்டார் என்று வழக்கு தொடுத்தனர். அந்த மாணவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினார். வீண்பெருமைக்ளை சுமப்பவர்கள் உடைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அவருடைய வலைத்தளத்தில் எழுதிவருகிற விசயங்களின் மையப்பொருள் மனிதநேயமின்றி வேறொருன்ருமில்லை.

தான் யார்? என்றே அனேக பேருக்குத் தெரிய்வைல்லை.. இன்னாரின் மகன், இந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவன் என்று முடியலாம். ஆனால் ந்மது பூர்வீகம் என்ன? இந்தியா என்பது என்ன? என்பது குறித்து ஆழமான கட்டுரை எழுதியுள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையையும் தமிழாக்கம் செய்யவேண்டிய தேவையுள்ளது. மக்கள் ஒற்றுமையை சாதியின் பெய்ரால் மதத்தின் பெயரால் குலைக்கிற சக்திகள் குரூரமாகி செய்லபடுகிற நேரத்தில் அவருடைய எழுத்துக்களை இளைஞர்களிடம் கொண்டுசெல்லவேண்டும்.
 

வியாழன், 29 நவம்பர், 2012

துளிர் - சிறுவர் அறிவியல் சஞ்சிகை


தமிழில் சிறுவர்களுக்காக அறிவியல் மாத இதழ் வருவதை ‘துளிர்’ இதழின் வெள்ளிவிழாவில் தான் அறிந்தேன். இன்னும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். தமிழில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன, அவைகள் பெரும்பாலும் இலக்கிய இதழ்கள் தவிற தொழிற்சங்கம், மத நிறுவனக்கள் வெளியிடுகிற பத்திரிக்கைகள் வருகின்றன, சில சிற்றிதழ்களின் ஆயுள் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் நின்றுபோனது என்று அந்த துறையில் இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். பத்திரிக்கை நடத்துவது என்பது எளிதான் காரியமல்ல அதுவும் விளம்ப்ரம் பெறாமல் இலாப நோக்கு இல்லாமல் தன்னார்வமாக சேவை போல செய்கிறார்கள். அதில் ‘துளிர்’ மாத இதழ் 25 ஆண்டுகளாக நிதி நெருக்கடிகளை சந்தித்தபோதும் மாதம் தவறாமல் மாணவர்களிடம் அறிவியல் சிந்தனைகளை கொண்டுசெல்வற்காக நெடிய பயணம் செய்திருக்கிறார்கள். அதை ஏற்று நடத்துவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். அவர்களுடைய சமூகமுன்னேற்றதிற்கான பணிக்கு  பாராட்டு என்று ஒரு வரியில் முடிக்கமுடியாது, தினமும் செய்திகளை வாசித்துவிட்டு எங்கும் ஊழல், லஞ்சம் அரசியல்வாதிகள் முதல் அதிகாரி, கடைநிலை அரசாங்க குமாஸ்தா வரை பழித்துவிட்டு தன்வேலை தானுண்டு என்பவர்கள் மத்தியில் அறிவியலை சமூகத்திர்கு கொண்டு செல்லவேண்டும், மக்கள் மூட நம்பிக்கைகளைலிருந்து விடுபடவெண்டும் என்று தங்களுடைய நேரத்தையும் வருமானத்தையும் சிந்தனையும் சமூகத்திற்கு செலவுசெய்கிறவர்களை ப் பார்க்கும்போது நாம் என்ன செய்தோம் என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது.

ஒரு நண்பர் கொடுத்த மின்னஞ்சல் மூலம் ‘துளிர்’ ன் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சியை இணையம் மூலாமக பார்த்தேன். அந்த நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் துறை (department of science govt of india) யின் இயக்குனர் முனைவர். இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அறிவியல் தேவையைக் குறித்தும் அவருடைய பால்யத்தை ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். பள்ளிப்பருவத்திலேயே அறிவியல் ஆர்வம் ஏற்பட்டு அவருடைய ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கை காரணமாக இன்றைக்கு விஞ்ஞானியாக இருக்கிறென் என்றார், இன்றைய சமூகத்தில் மத்தியதர வர்க்கம் தமத் பிள்ளைகள் விரைவில் வருமானம் ஈட்டக்கூடிய கல்வியை பெறவேண்டும் என்று தான் பார்க்கிறார்கள் அதனால் நகர்புறங்களிலிருந்து விஞ்ஞானிகள் கிடைக்கமாட்டர்கள் என்றார். 2025ம் ஆண்டில் இந்திய மக்களின் சராசரி வயது 29.5 இது இந்தியாவின் மனிதவளத்தை காட்டுகிறது, இதை வீணாக்குவதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் அரசின் கொள்கைகள் அல்லது ஆட்சியாளர்கள் கையில்தான். கி.பி.1750 உலகின் 45 சதமான பொருளாதார ப்லத்தை இந்தியாவும் சீனாவும் வைத்திருந்தது, ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி நிலைமை த்லைகீழாக மாற்றிவிட்டது, யாரிடம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் இருக்கிறதோ அவர்கள் தான் உலகை ஆள்கிறார்கள், இந்திய அரசின் அறிவிய்லதுறை 'Inspire' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் அறிவியலில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்கள், நாடு முழுதும் இருந்து சுமார் 3 லட்சம் மாணவர்கள் அந்த திட்டத்திற்க்காக ஒரு புராஜெக்ட் செய்திருக்கிறார்கள் சிறந்த பிராஜெக்ட் க்கு பரிசு உண்டு. அப்படி அனுப்பியதில் 1300 மாதிரிகள் தேர்ந்த்டுக்கப்பட்டு அதில் சுமார் 140 ப்ராஜெக்ட்கள் காப்புரிமை செய்வதற்கு அனுப்பட்டிருக்கிறதாம், எப்பேற்பட்ட திறன் நம் மாணவர்களிடம் இருக்கிறது. தேர்ந்துக்க்பபட்ட மாணவர்களில் கிராமப்புற மாணவர்களின் பங்கு அதிகம் அதிலும் பெண்களின் பங்கு மிக அதிகமாம்.  இதெல்லாம் நம்பிக்கை அளிக்கும் செய்திகளாக இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தில் உயர்கல்வி கற்ற ஒரு விஞ்ஞானியை இந்தியா தகுந்த மரியாதை கொடுத்து தக்கவைத்துக்கொள்கிறதா? என்பது கேள்விக்குறி!


விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் கிடையாது, சிற்றிதழ்கள், சில அரசியல் தத்துவார்த்த இதழ்களைத் தவிர வெகுஜன் ஊடகங்கள் என்று சொல்லபடும் எல்லா ஊடகங்களும் வாசகர்களை நம்பி தொழில் நடத்தவில்லை, பல பத்தாண்டுகளுக்கு முன்பு தினமணி யின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் சொன்னாராம், மூதாதையரின் செலவங்களை சிலர் சூதாடி அழித்தனர், சிலர் குடித்து அழித்தனர் நாங்கள் பத்திரிக்கை நடத்தி அழிக்கிறோம் என்றாராம். நிறைய சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா கட்டியவர்கள் அது அதன் ஆயுள் அற்பமாக போவதைப் பார்த்திருக்கிறார்கள். துளிர் இதழில் கேள்வி பதிலாக வந்ததை தொகுத்து சிறு நூலாக எதனாலே? எதனாலே? என்ற நூலை அறிவியல் வெளியீடு வெளியிட்டிருந்தது. என்னிடம் இருந்த அந்த நூலை இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் புரட்டிப்பார்த்தேன், அதிலிருந்த கேள்வி பதிலகள் சிறுவர்களுக்கு என்று ஒதுக்கமுடியாது, பெரும்பாலான கேள்விகளுக்கு விடை பெரியவர்களுக்கே தெரியவில்லை. அந்த இதழில் பணியாற்றி பின்பு வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய்வர்கள் பேசினார்கள். துளிர் 30000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன, பெரும்பாலும் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் இந்த ஆண்டு ஆயுள் சந்தா செலுத்தி வாங்கப்போகிறேன்,மாணவர்களுக்கு பரிசளிக்க புத்தகத்தைவிட சிறந்தது ஏதுமில்லை. மேன்மேலும் மக்களிடம் அறிவியல் சிந்தனைகளை எளிய தமிழில் கொண்டு செல்லும் துளிர் இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் - 2

மதம் என்பது மனிதர்களின் அந்தரங்கமானது பொதுவெளியில் , பணியிடங்கள், கல்விக்கூடங்கள் அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் எந்த கடவுளையும் வணங்கும் வழக்கத்தை நிறுவனமோ அரசோ அனுமதிக்கக்கூடாது, மனிதர்களும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். தைவானில் மக்கள் அப்படி நடந்திகொள்கிறார்கள் என்று அண்மையில் வாசித்தேன். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை மதச்சார்பற்ற இந்தியாவில் பெரும்பாலான அரசு அலுவலங்களில பெரும்பான்மை மதத்தின் கடவுளர்கள் சுவர்களில் அமர்ந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தனியார் அல்லது நிறுவனத்திலும் வெள்ளிதோறும் கடவுள் வழிபாடு நடைபெறுகிறது. சாதாரண மனிதனின் பக்தியை மதவெறியாக்குகிற வலதுசாரி அரசியல் அதை பயன்படுத்திக்கொள்கிறது.

சாமியார்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் கூட்டு என்பது இயற்கையானது, அதில் எங்கள் நிறுவனத்தின் உடமையாளரும் விதிவிலக்கல்ல.  ஐரோப்பாவில்  முதலாளித்துவம்   வளர்வதற்கு முன்பு மதகுருக்கள் (போப்) நிலப்பிரபுக்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.  சங்கராச்சாரியார்  எனக்குத் தெரிந்து ஆலைக்கு மூன்று முறை விஜயம்! செய்திருக்கிறார். அப்படி ஒருமுறை வந்திருந்தபோது எல்லோரையும் ஓரிடத்திற்கு அழைத்து அவரிடம் ஆசிர்வாதம் பெறுவதர்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அவரை சென்று வணங்கினார்கள் உடனே அவர் பிரசாதம் வழங்கினார். தொட்டால் தீட்டு என்பதை கடைபிடிக்கூடியவர். இந்த நிறுவனம் வியாபார போட்டியின் சதியால் முடக்கப்பட்டது ஆனால் சாமியார் கெட்ட ஆவி இருக்கிறதென்று சுற்றுச்சுவர் வழியே சென்று அதை விரட்டினார். மீண்டும் ஒரு முறை ஆலையில் கட்டப்பட்ட விநாயகர் ஆலய கும்பாபிசேகத்திற்கு வந்தார். சாமியார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள், அதே போல் பெரிய முதலாளிகளும் அவர்களிடம் செல்வார்கள். சில சமயங்களில் சமரசம், பதவி உயர்வு வாங்கித் தருவது போன்ற வேலைகளையெல்லாம் சாமியார்களை நாடினால் கிடைக்கும். இந்திய நாட்டின் எல்லா குடியரசுத்தலைவர்களும் விதிவிலக்காக கே..ஆர்.நாராயணன் காஞ்சிபுரம் வந்திருக்கிறார்கள். இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களும் அதில் ஒருவர். அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் சிறந்த குடியரசுத்தலைவர் எனவே அவரை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சிலர் வலைத்தளங்களில் எழுதினார்கள். ஆனால் அவர் சிறந்த மனிதர் அப்பளுக்கற்றவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவருடைய கொள்கைகள் மக்களை பிரதிபலிப்பதில்லை. உதாரணம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை வரவேற்றார், மாணவர்கள் கனவு காணவேண்டும் என்று இந்தியா முழுதும் பள்ளி மாணவர்களிடையே பேசினார் அரசுப்பள்ளியைவிட மேல்தட்டு பிள்ளைகளிடம் பேசினார், அரசாங்கப் பள்ளிகளை இவர் நினைத்திருந்தால் தரம் உயர்த்தியிருக்க முடியும் ஆனால் தமிழக் அரசாங்கப் பள்ளிகளை பார்த்தால் மற்ற இந்தியாவின் அரசுப் பள்ளிகள் இதைவிட மோசம்தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார்,என்றாலும் “கடவுள்” பதவிகள் காலியாய் கிடப்பது எதனால்? கவலைக்குரிய விசயம்.

பொது இடங்களில் பக்தியை சிலர் அதிகமாகக் காட்டுவார்கள், அவர்களை பெரிய பதவியில் இருப்பவர்களுக்குப் பிடிக்கும். இறைவழிபாட்டோடு துதிபாடுகிற வாய்ப்புகளும் கிடைக்கும். அரசாங்க மந்திரிகள் அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு அரசு அதிகாரிக்ளை பயன்படுத்திக் கொள்வார்கள் மறுப்பு ஏதும் தெரிவ்க்கமுடியாது. அப்படியே ஒரு பெரிய மேலாளர் வீட்டு திருமணம் நடைபெற்றது, எங்கள் துறை மேலாளர் எங்களை OD யில் அந்த வேலைக்கு அனுப்பினார், சிலர் அதை கவுரகமாக்அ விரும்பி ஏற்றார்கள் சிலர் வெறுப்போடு செய்தார்கள். நானும் காஞ்சி கார்த்திகேயனும் டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த பெரிய மண்டபத்தில் விழாவிற்கு வருகிறவர்களை வரவேற்று பன்னீர் தெளிப்பது, இனிப்பு வழங்குவதில் இருந்தோம். அப்போது வருகிற முகம் தெரியாத மனிதர்களிடம் பிலிப்பினோ சேல்ஸ் கேர்ள் மாதிரி செய்ற்கையாக புன்னகை செய்யவேண்டும். கார்த்தி நன்றாக காமெடி செய்வான். அதே பெரிய மேலாளர் பணி ஓய்வில் சென்றார். அவருக்கு துறைசார்ந்த பரிசுப் பொருள் வழங்கவேண்டும் என்று எங்கள் மேலாளார் வசூலித்தார். நான் ஒரு பைசா தரமுடியாது என்று கைவிரித்தேன், சுப்ரமணி என்ற பொறியாளர் தம்பி நீ மட்டும் தரமா இருந்தா அது நல்லாயிருக்காது உன்மேல மேலாளர் கோபம் கொள்வார் என்றார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபோது சிலரும் என்னோடு பணம் கொடுக்கவில்லை. தனியார் துறையில் ஊழல் இல்லையென்று பலர் நம்புகிறார்கள், நிலைமை அப்படியில்லை. வாய்ய்பு கிடைக்கும்போது முடிந்தவரை பார்க்கிறார்கள் வடிவங்கள் மாறுகின்றன. அதிகமான இயந்திரங்கள் ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதியானது. அதற்கு Import duty செலுத்தவேண்டும், அரசாங்கம் ஒரு சலுகை அறிவித்தது அதாவது EPCG scheme அதன்படி இறக்குமதி செய்த இயந்திரங்களின் மதிப்பிற்கு நிங்கள் தயாரித்த பொருட்களை ஏற்றுமதிசெய்து கிடைப்பதில் பேலன்ஸ் செய்து கொள்ளலாம். இது ஒரு சலுகை.இப்படி எண்ணற்ற சலுகைகள் தொழிலபதிகளுக்கு கிடைக்கும். சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் வரிகள் சம்பந்தமாக கடந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேடுகளுக்கு தள்ளுபடி செய்த பணம் 25.7 இலட்சம் கோடி தலைசுற்றுகிறதா? 2ஜி எல்லாம் சாதாரணம்.
ttp://www.thehindu.com/opinion/columns/sainath/to-fix-bpl-nix-cpl/article3223573.ece . அதைப்பற்றியெல்லாம் பொதுமக்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது, ஆனால் விவசாயிகள் வாங்கிய கடன், ரேசனுக்கு தெண்டமாக மானியம், எரிபொருள் மானியம் எல்பிஜி மானியம் என ஏகப்பட்ட புளுகுகளை அவிழ்த்துவிடுவார்கள்,இந்த பத்திரிக்கைகள் அதற்கு தகுந்தமாதிரி எழுதுவார்கள்.

இப்படி நம் ஒருவர் நண்பர் கஸ்டம்ஸ் கிளியன்ரன்ஸ் க்காக செல்வார், வெகுநாட்கள் அவர் கம்பெனியைவிட clearing agent office அமைந்துள்ள secondlane beach தெருவில் அதிகம் இருப்பார். நானும் போர்ட் டிரஸ்ட், அந்த்  கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜெண்ட் அலுவலத்திற்கு சென்றிருக்கிறேன். அந்த ஏரியாவில் உயர்தர சைவ, அசைவ ஹோட்டல்கள் அதிகம். எங்கெல்லாம் ல்ஞ்சப்பணம் அதிகமாக புரள்கிறதோ அங்கே இப்படி செலவுசெய்ய இடங்கள் இருக்கும், என் நண்பர் ஆங்கிலம் நுனிநாக்கில் பேசுவான் அதனால அவனுக்கு ஏற்ற வேலையாக மாறியது.  ஒரு நிறுவனம் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் காணிக்கையை எப்படி கணக்கில் எழுதுவார்கள்? என்று தெரியவில்லை. miscelineous??? நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல் என்று பொதுமக்கள் நானும் தான் பேசுவோம்! ஆனால் ஏசுநாதர் எவனொருவன் தவறு செய்யவில்லையோ  அவன் இந்த வேசியின் மீது கல்லெறியலாம் என்று கொடுத்த கல்லை பத்திரமாக மேல் பாக்கெட்டில் வைத்திருக்கிறோம். சிறிய கல் பெரிய கல் என்ற வித்தியாசம் இருக்கிறது ஆனால் எறிய முடியவில்லை!!

தொழிலதிபர்கள் தங்களுக்கு வெண்டியவர்களை மத்தியில் அமைச்சர்கள் ஆக்குவார்கள், அப்படி ஒரு வாய்ப்பு ஜெவுக்கு கிடைத்து வாழ்ப்பாடியார் பெட்ரோலியத்துறை இலாகாவில் அமர்ந்தார். அவராலும் தூக்கி நிறுத்தமுடியவில்லை. இப்படி எத்தனை நாட்கள்தான் சம்பளம் என்ற வகையில் தெண்டச் செலவு செய்வது? இடையில் டெக்னீசியன்களை, பொறியாளர்களை வாடகைக்கு விடுவது அதன் மூலம் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும் கம்பெனிக்கு கொஜ்சம் வருமானம் கிடைக்கும். அப்படி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படை கிளம்பியது நானும் ஒருவன். தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது அது அறுந்து விழபோவதை அறிவித்தார்கள், வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்ற வாய்ப்பை சொன்னார்கள். பலர் அப்போதே நல்ல வேலைக்கு சென்றார்கள். முயற்சி செய்து கிடைக்காதவர்கள், எதிர்காலத்தை எண்ணி புலம்பியவர்கள் இரவில் தூக்கமின்றி வாடியவர்கள் என பலர் இருந்தார்கள். அந்த கத்தி விழுந்த நாள் 31-12-2001.


 

வியாழன், 22 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம் -1


அப்போது 1996ம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்தால் தாங்காது, வியாசர்பாடி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாது மீன்பாடி வண்டிக்காரர்கள் தான் டூ வீலரை அக்கரை சேர்ப்பார்கள். அது பணம் பண்னுவதற்கு ஒரு வாய்ப்பு, சேவையும் கூட. நாங்கள் வேலை செய்த ப்ராஜெக்ட் பகுதியும் அப்படித்தான், செங்குன்றத்தில் புழல் ஏரியில் அதிகப்படியான நீரை திறந்துவிட்டால் ஆண்டார்குப்பத்தில் மார்பளவு நீர் தேங்கும். அப்படி இருமுறை மழைபெய்தது. காலையில் வேலைக்கு வருவதற்காக புறப்பட்டவர்கள் பஸ் காண்ட்ராக்டர்கள் இயக்கமுடியாது என்று மீண்டும் வீட்டிற்கே திருப்பினார்கள். அப்படி ஒரு சமயம் இரண்டுபேர் sincere ஆசாமிகள் மின் துறையைச் சேர்ந்தவர்கள் மார்பளவு நீரில் ஆண்டார் குப்பத்திலிருந்து கம்பெனிக்கு நடந்துசென்று பணியாற்றினார்கள். warehouse எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கும், டெக்ஸ்டைல்ஸ் மெஷின்கள் இருக்கிற மரப்பெட்டிகள் நனைந்துவிடாமல் இருக்க தார்பாலின் போடுவோம். ஸ்டோர்ஸ் கட்டிடத்தை யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் கேட்டில் சாவியும் சட்டர் கீயும் வாங்கி திறப்பார்கள், அந்த நாள் நம்ம ரெணுகுமார் காலை உணவை கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வண்டியில் வந்திறங்கினான், அங்கே மேலாளர் ஸ்டோர்ஸ் திறக்காமல் வெளியில் நின்றிருந்தார். ரேணு போய் கீ வாங்கிட்டு வாங்கோ என்றார் மேலாளர். அதே வண்டியை மடக்கிக்கொண்டு சென்றான். நான், கார்த்தி, கோவிந்த், ராமசந்திரன் ,சுரேஷ் ஆகியோர் ஸ்டோர்ஸ் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தோம். எங்கள் எதிரே ரேணுகுமார் வண்டியில் சென்றார். நாங்கள் செல்லும்வரை மேலாளர் வெள்யேதான் நின்றிருந்தார், ரெணுகுமார் வரவில்லை. நாங்களும் காத்திருந்தோம். வந்தான் ரேணு கையில் டீ கேண் அவனுடன் கேண்டீன் பையன்!!

என்னடா 9 மணிக்கு வரவேண்டிய டீ 8:15 க்கு வந்துவிட்டதெ என்று பார்த்தால் கீ வாங்குவதர்கு பதிலாக டீ வாங்கி வந்தான் ரேணு. மேலாளருக்கு வந்த கோபம் அப்படி. எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.  ரேணுகுமார் அப்படி நிறைய தமாஸ் பண்ணுவார். விதண்டாவாதம் செய்வார். ஒருமுறை சுப்பையாவுடன் பல் ஆஸ்பத்திரிக்குச் சென்றான் பல்லை சுத்தம் செய்துவிட்டு சுப்பையா பணம் கொடுத்துரு என்றான். அதை திரும்ப வாங்கவேமுடியவில்லை. அவரை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

மாதாவரம் ஒரு கிராமம் அங்கே மாம்பழசீசன் வந்துவிட்டால் ரோடே நாறிவிடும். கடைக்காரர்கள் அழுகிய பழங்களை சாலையில்தான் எரிவார்கள். மாதாவரம் சாராயத்திற்கு பேர்போனது, பேருந்தில் அங்கே வந்து குடித்துவிட்டு பஸ்ஸில் நடத்துனரிடம் சண்டை போடுவார்கள். பெருத்த அநியாயம் செய்வார்கள். மாதாவரம் பால்பண்ணை அங்கே தான் மணலி பகுதியில் வேலைசெய்வோர் சொந்தமாக வீடுகட்டி வசித்தார்கள். காற்றோட்டமான நல்ல பகுதி அது. பாரதியார் தெருவிற்கு குடிவருவதற்கு முன்பே மாரியம்மன் கோவில்தெருவில் ஒரு வீட்டில் அதே நண்பர்கள் குழாம் இருந்தோம். வீட்டுக்காரருக்கு பணம் மட்டுமே, மனித உறவுகள்பற்றி கவலையே கிடையாது. நமது வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் அவர்களிடமே எப்போது செல்வீர்கள் என்று கேட்பான். அப்படியொரு கழிசடை. வாடகை வீட்டில் வாழ்ந்தால் இப்படி நிறைய அவமானங்கள் சகிக்கவேண்டும். அப்போது ஐந்து பேர் சேர்ந்து ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கினோம், பண்பலை துவங்கிய நேரம். அப்போது ஒருத்தர் ரேடியோவில் பேசுவார் கனீரென்று இருக்கும் அவர் குரல். செளந்தருக்கு அவருடைய குரல் ரெம்ப பிடிக்கும். எல்லாரும் உறங்கிய பின்னரும் நான் ரேடியோ கேட்பேன், ஏ போதும்டா ஆப் பண்ணு என்பர்கள், ம் சரி என்று தூங்கிவிட்டால் காலையில் பேட்டரி தீர்ந்து கொர் என்று சவுண்ட் வரும்.

அப்பொது மாலையில் டீக்கடையில் தான் டீ சாப்பிடுவோம், யார் பணம் தருவது என்ற பிரச்ச்னை எங்களுக்கு இருக்காது. எல்லாம் பொதுதான். நாந்தான் நிதிமந்திரி. சினிமாவா, ஹோட்டலா, திநகர் செல்கிறோமா, பஸ்டிக்கெட் எல்லாமே பொதுக்கணக்கில்தான் யாரும் நட்டமடையவெண்டாம் என்ற ஏற்பாடு. நாங்கள் மாத பட்ஜெட் போடுவோம், சிலர் சாப்பாட்டுக் கணக்கை தினசரி போடுவதாக கேள்விப்பட்டோம். மாதவரத்தில் நல்ல ஹோட்டலே கிடையாது. ரோட்டொரத்தில் இஸ்லாமியர் ஒருவர் இட்லிக்கடை போட்டிருந்தார், பாய்கடை என்போம். அவர் சதா வேலைசெய்து கொண்டேயிருப்பார். ஐந்துவேலை தொழுகை செய்வதற்கு அவருக்கு நேரமில்லை. ரம்ஜான் மட்டும் ஒருநாள் கடைக்கு லீவுவிடுவார். கடைசிவரை மண்ணெணெய் அடுப்பு பயன்படுத்தினார். நாங்கள் கேட்போம் என்ன பாய் கொஞ்சம் கடையை சரிபண்ணுங்க..முடியல தம்பி என்பார். காலையில் அங்கே விடுமுறையில் மட்டும் சாப்பிடுவோம் அல்லது பூரி பார்சல், இரவு சாப்பிட்டால் கண்டிப்பாக ஆம்லெட், அந்த சூடான் ஆம்லெட்டை கையால் எடுத்துப்போடுவார், வேலை, வேலை தவிர வெறு எதுவும் செய்யமாட்டார். பீடி குடிப்பார் அதுவும் மத்தியான நேரத்தில் காய்கறி வெட்டும்போதும் சாம்பார் வைக்கும்போதும். நல்ல ஹோட்டலில் சாப்பிடவேண்டுமென்றால் பெரம்பூர் செல்லவெண்டும். மாதவரத்தில் நான்கு முறை வீடுகள் மாறியிருக்கிறோம். இரண்டாவது வீடுதான் பாரதியார் தெரு வீட்டின் எதிரெ சலூன் கடை , அந்த  கடைக்காரர் பாதிநாட்கள் நாதஸ்வரம் வாசிக்கப்போவார். என்னிடம் வாங்கிய ஒரு ஐம்பது ரூபாயை திரும்பி தரவேயில்லை. நான் கேட்டுப்பார்த்தேன், தரேன் என்பார் அவ்வாள்வுதான். முடிவேட்டி அப்படியே கழித்துவிடலாமா? என்று கூட யோசிப்பேன் அது முறையல்ல என்று ஏமாந்துபோனேன்.ஏற்கனவே நமக்கு ஏறுநெத்தி!

அங்கேயிருந்த சமயம் செளந்தர் செளதிஅரேபியா சென்றான், ராஜா கும்முடிப்பூண்டி சென்றதால் வேறு தெருவில் சிறியவீட்டில் நானும் ஞானசேகரும் தொடர்ந்தோம். அந்த வீட்டுக்காரர் நல்ல மனிதர், பெரியார் கொள்கைவாதி. நன்றாகப் பேசுவார். அப்போது மாதவரம் நூலகத்தில் உறுப்பினரானேன் பொழுதுபோக்குக்காக படித்த நூலகள் என்னை மாற்றின. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அது பொன்னீலன் எழுதிய புதிய தரிசனங்கள் என்ற நாவல். இடதுசாரி அரசியல் பற்றி பேசியது. நூலகத்திற்கு வரும் சில பத்திரிக்கைகள் கடைகளில் விற்காது, அப்படிப்பட்ட இலக்கிய இதழ்கள் அங்கே வரும். நாள் தவறாமல் கொவிலுக்கு சென்றவனை கடவுள் பற்றிய கேள்வி எழுப்ப அறைகூவல் விட்டது அந்த நூல்கள். பெரம்பூரில் பெரியார் இயக்கத்தினர் வாகனங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவார்கள். கடவுள்கள், தெய்வ சக்தி பற்றி எல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவார்கள் அவர்கள் விற்கும் புத்தகம் 1 ரூ, 2 ரூபாயில் கிடைக்கும். நாத்திகம் நோக்கி மெதுவாக சென்றுகொண்டிருந்தேன். வழிபட்ட கடவுள்கள்  கேள்விக்குள்ளானார்கள். அரசியல் பற்றி விவாதிக்கும் ஆர்வம் ஈர்த்தது, நேர்மையான அரசியல்வாதிகள் யார், படோபடம் இல்லாத அரசியல்வாதிகள் யார் என்ற தேடலில் அது என்னை 52, குக்ஸ்சாலை, பெரம்பூர் என்ற விலாசத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

வாழ்க்கைப் பயணத்தில் சென்னை...



சென்னை எல்லோரையும் வாழவைக்கும், தினந்தோறும் தமிழகத்தின் பல திசைகளிலிருந்து ஏராளமான பேருந்துகளிலும் ரயில்களிலும் மக்கள் சென்னையை நோக்கி வேலை தேடி சென்று கொண்டெயிருக்கிறார்கள். அப்படியே அரசாங்கமும் தமிழகத்தின் பட்ஜெட் பணத்தை பாதியை சென்னைக்கு ஒதுக்குகிறது , பன்னாட்டு தொழில்களும் அங்கே நிறுவதற்குத்தான் துணிகிறார்கள். அப்படித்தான் SPC என்ற நிறுவனம் மணலிக்கு அடுத்தே அமைந்தது. எங்களை பேட்ச் வாயிலாக வேலைக்கு எடுத்தார்கள், அதுவும ஒரேஒரு பேட்ச் தான். அதற்குள்ளே சங்கு சத்தம் கேட்டுவிட்டது. மொத்தம் 96 பேர் அன்று நினைவு , அது புரொடக்சன் மற்றும் மெயிண்டனென்ஸ் என இரு பிரிவுகள். முதல் ஆறு மாதம் பயிற்சி தூத்துக்குடியில் தாய் நிறுவனமான ஸ்பிக் உரத்தொழிற்சாலையில் தொடங்கியது. அது பசுமையான நினைவுகள். அந்த நகர் எங்குமே பசுமைதான். வெளியே வந்தால் வெயிலில் கண் கூசும் அளவிற்கு உப்பளம். மூன்று மாதப்பயிற்சி வகுப்பறைகளில் நடக்கும், அங்கே பயிற்சியளிப்பவர்கள் அந்த நிறுவந்த்தில் அந்தந்த துறைகளில்பணியாற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பயிற்று மொழி ஆங்கிலம், அந்த குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்தவுடன் அப்படி ஒரு தூக்கம் வரும் சொல்கிற விசயம் புரிந்தால் தூக்கம் வராது. அங்கே தரப்படும் பயிற்சி குறிப்புகளை சுண்டல் என்போம். அதை இன்னும் பாதுகாத்துவருகிற நண்பர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் தரமான நிறுவன பயிற்சிக்கூடமாக ஸ்பிக் ட்ரெய்னிங் செண்டர் இருந்தது ஒருகாலம். இப்போது என்ன நிலையோ. வட இந்தியாவின் உரத்தொழிற்சாலையிலிருந்து பயிற்சிக்காக இங்கே வருவார்கள் அப்படிப்பட்ட வசதிகள் கொண்டது. காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாற்றம் அடையவேண்டும் இல்லையென்றால் வெற்றியடையாது. இந்திய உரத்தொழிற்சாலைகள் எல்லாம் நாப்தா என்ற மூலப்பொருளிலிருந்து இயற்கை எரிவாயுக்கு மாறினார்கள். இங்கே இயறகை எரிவாயுக்கு மாற்றப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்காத எரிவாயு ஆலைக்கு கொண்டுவர அரசாங்கமும் ஆலையும் சிரமப்பரிகாரம் செய்யவில்லை அதனால் இன்று தமிழகத்தின் sick யூனிட்களின் ஒன்றாக ஸ்பிக் உரத் தொழிற்சாலை மாறியிருக்கிறது. நாங்கள் டிரெயின்ங் எடுத்த சமயத்தில் அங்கே ஸ்பிக் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தார்கள்,  தொழிற்சங்கத்தலைவர்கள் பலரை நிர்வாகம் வீட்டு அனுப்பியது.அது செல்லாது என்று சில மாதங்களுக்கு முன்பு இறுதித்தீர்ப்பு வந்தது. எப்பேர்ப்ட்ட நீதிமன்றங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் கனகராஜ் என்ற தோழர் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் உறுப்பின்ராக இருக்கிறார்.

நாங்கள் ஆறுமாதங்கள் கழித்து PTA, PFY உற்பத்தி செய்யவிருக்கும் ஆலைக்கு வருகிறோம், வருவதற்கு முன்பே நீங்களெல்லாம் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை, எனவே கூட்டாக சேர்ந்து அறை எடுத்து தங்குங்கள் அதுவும் நிறுவந்திற்கு அருகாமையில் இருந்தால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்றார்கள். அப்படியே சில சென்னைக்காரர்கள் முன்னமே வந்து வீடுபார்த்து வைத்தார்கள். அந்த வேலையை செய்தவர்களில் இந்த செட்டியார் என்றழைக்கபடுகிற சுந்தரும் ஒருவன். வந்து இறங்கிய நாள் safetyday அதற்காக ஒரு suitcase அளித்தார்கள். ஆங்காங்கே கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்துவந்தன. இந்த 96பேரை என்னசெய்வது என்று பிரித்து விட்டார்கள். அதில் நான் ஸ்டோர்ஸ் பிரிவுக்கு சென்றேன். அங்கே  என்ன வேலை, வருகிற சாமான்களை இறக்கிவைத்து அதை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.  என்னிடம் திடீரென்று அங்கே கண்டெய்னர்கள் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள் அங்கே சென்று கவனித்துக்கொள் என்றார்கள். டிரெய்லர்களிலிருந்து இறக்கிய கண்டெய்னர்களின் உள்ளேயிருந்து பெட்டிகளை வெளியே இழுத்தார்கள் அதை ஸ்டோரேஜ் பகுதியில் வரிசைக்கிராமாக அடுக்கினார்கள். கிரேன்கள் மற்றும் பிராஜெட்க்காக ஒரு மேலாளார் இருந்தார், அவர் கிரேனுக்கு ரிக்கிங் சிக்னல் கொடுத்தார். அதாவது சைகையில் கிரேன் ஆப்ரேடடருக்கு தெரிவிக்கும் மொழி. அதை ஒரு மேலாளார் செய்யவேண்டிய அவசியமில்லை அதற்கு தனிஆட்கள் இருப்பார்கள் ஆனாலும் எனக்கு அதுவும் தெரியும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதர்கு இரு வாய்ப்பு. அப்படித்தான் ஒரு பெட்டியை கிரேன் இறக்கிக்கொண்டிருக்கும் போது நான் சிக்னல் கொடுத்தேன் அவருக்கு வந்ததே கோபம், அப்ப நீங்க கொடுங்க என்றார், சாரி தெரியாமல் செய்துட்டென் என்றேன். அவர் பெயர் சர்புதீன். காலையில் கேண்டீனில் சாப்பிட்டு வெளியே வரும்போது அங்கே சாலை ஓரத்தில் நின்று பேசுவார் கிரேன் ஆப்ரேட்டர்கள், அவருடன் வேலைசெய்யும் பொறியாளர்கள் பவ்யமாக நின்றுகொண்டிருப்பார்கள். நாம் good morning என்று கை தூக்கினால் அந்த மேலாளர்கள் தலைதான் ஆட்டுவார்கள். கீழே இருப்பவர்கள் மேலே உள்ளவர்களுக்கு வணக்கம் சொல்லவேண்டும். ஒருவேளை அவர்கள் முதலில் நம்மை பார்த்துவிட்டாலும் அவர்கள் வாயிலிருந்தோ கையோ உய்ராது அது படிநிலை வணக்கம் தெரிவிக்கும் முறை அந்த முறையை காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

சென்னை வந்தாலும் எங்களுடைய பயிற்சி காலம் முடியவில்லை, அதனால் டிரெய்னீஸ் டைரி எழுதவேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கு உதவவேண்டும். நான் எழுதவேண்டும் என்ன எழுதுவது என்று மேலாளரைக் கேட்டேன். நீ டைரி எழுதுவதால் அன்றாட வேலையை எழுது என்றார். என்னுடைய டைரி முழுவதும் வந்துபோகும் கண்டெய்னர் எண்கள், அது எந்த டிரெய்லரிலிருந்து இறக்கப்பட்டது, அந்த கண்டெய்னரில் எந்த பெட்டிகள் இருந்தன அவை (ஒவ்வொன்றுக்கும் ஜெர்மன்காரன் எண் எழுதியிருப்பான்) களை எழுதினேன். பல நாட்கள் கழித்து என் அறைத்தோழன் ராஜாராமன் என்னுடைய டைரியைப் பார்த்தான். அடே, இந்த கண்டெய்னர் எண்களும், லாரி நம்பர்களும் எப்படி உன்னுடைய அறிவை வளார்க்கும் என்று கேட்டான்! ஒரே காமெடி தான். சென்னையில் ஏதாவது லாரி காணாமல் போய்விட்டால் கண்டெய்னர்கள் தொலைந்துவிட்டால் இந்த டைரி பயன்படும் என்று கிண்டலடிப்பான். ராஜா அந்த டைரிகள் அப்படியே பரணில் வைத்திருக்கிறேன் என் அருமை நண்பா!

தொடரும்.....

 

புதன், 21 நவம்பர், 2012

வாழ்க்கைப் பயணம்



அப்போது சென்னை மாதவரம் பாரதியார் தெருவில் இருந்தோம், நாங்கள் ஐந்து பேர். இப்போது எல்லோரும் சிதறு தேங்காய் போல ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம். ஆனால் எங்கள் நண்பன் அறைத்தோழன் அவன் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் இராஜாராமன் மின் துறை சென்னையிலிருந்து அவன் துபாய் அலுமினியம் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற ஆண்டு நினைவில் இல்லை. மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்தது, நான் துபாயில் 6 மாதகாலம் வேலைசெய்தபோது கூட அவனை சந்திக்கவில்லை என்ற காரணம் என்னை வருத்தியது. அவன் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தான். அவன் இன்னும் என் கண்முன்னே வருகிறான். வடைச்சட்டியில் அவன்  டீ குடித்ததை கடசிவரை மறக்கமுடியாது. என்னை அதிகமாய் சீண்டுவான், நான் அப்போது செய்தித்தாளை ஒரு பக்கம் விடமாட்டேன் ஆனால் விளையாட்டுச் செய்திகளை வாசிக்க விருப்பம் இருந்ததில்லை. எல்லோரும் கிரிக்கெட் பற்றி பேசினால் அந்த இடத்தில் நான் வேற்று பாஷைக்காரன் போல் ஆகிவிடுவேன் அந்த அளவிற்கு ஞானம். ராஜாராமன் விபத்தில் பலியான சம்பவத்தை செளந்தர் தான் எனக்குத் தெரிவித்தான். அப்போது அவன் செளதியில் இருந்தான். இன்னும் தொடர்பில் இருக்கிறான். நண்பர்கள் யாரும் தொடர்பே கொள்ளவில்லை என்று வருத்தப்படவில்லை எல்லோருக்கும் இந்த அவசரகதியில் அவர்கள் பாடே தாவு தீர்ந்துவிடுகிறது. அவர்களை நினைத்துப்பார்ப்பதே நட்பின் ஒரு அடையாளம் தான் என்ற கலீல் கிப்ரானின் கவிதை உண்டு.

செளந்தருக்கும் ராஜாராமனுக்கும் உள்ள உறவு மானசீகமானது, அவர்களுக்குள் கிண்டல் இருக்காது, சீரியஸ் தான். இன்னும் ராஜாராமன் என் மனக்கண்ணில் சிரித்துக்கொண்டே யிருக்கிறான். இன்னும் இருவரை விட்டுவிட்டென், ஒருவன் ஞானசேகர் மற்றொருவன் பிரபாகரன். ஞானசேகர் எப்போது கோபம் கொள்வான் என்று சொல்லமுடியாது, அவனுடைய தலைவர் கலைஞர். எதனால் அப்படி ஒரு பற்று என்று அவனிடம் கேட்டதில்லை. நாங்கள் அந்த நிறுவனத்தில் வேலைசெய்ய ஆரம்பத்திலிருந்து ஒரே வீட்டில் பேச்சிலர் வாழ்க்கையை துவக்கினோம். தூத்துக்குடியில் என்னுடைய அறை நன்பர்கள் பால்முருகன், ஹரிகரசுதன் மற்றும் செளந்தர். பின்னர் அணிமாற்றத்தில் சென்னையில் வேற அறை நண்பர்களாக இருந்தவர்கள் என்னுடன் இருந்தார்கள். நான் ஷாக்ஸ் என்பதை ஒரு நாளுக்கொரு துவைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவன் செளந்தர் தான். ஒரு நண்பன் என்றால் அவனிடம் உள்ள குறைகளை சுட்டி அவ்னை மாற்றவேண்டும். தெரிந்தே செய்கிற தவறுகளை திருத்தமுடியுமா? ஹரிகரசுதன் இப்போது லண்டனில் இருக்கிறான் என்பதை பேஷ்புக் மூலம் தெரிந்துகொண்டேன். பால்முருகன் செளதியிலிருந்து இந்தியாவிற்கு சென்றுவிட்டான், இந்த விடுமுறையில் அவனோடு தொடர்பு கொண்டேன். எத்தனை விசயங்களை மறந்தாலும் மெட்டுகுண்டு என்ற அவனுடைய ஊர்ப்பெயரை மறக்கமுடியாது. இப்போது பழைய நண்பர்களை நேரில் பார்த்தால் என்ன பேசிக்கொள்வோம் என்று தெரியவில்லை. ஆகஸ்டு 1995 முதல் நிறுவனம் வெளியே தள்ளியதுவரை டிசம்பர்2001 எங்கேயும் வேலை தேடவில்லை. வெளிநாட்டு மோகமும் சுத்தமாக இல்லை, அப்படியொரு திருப்தி வேலைமீது. இன்னும் பழைய கம்பெனி கதைகல் பற்றிச்சொன்னால் எங்க கம்பெனி என்று சொல்வது அதை மட்டும் தான். செளந்தர் 1998ம் ஆண்டு சவுதி சென்றான், பின்னர் ராஜாராமன் சென்னையிலேயே வேறு நிறுவனத்திற்குச் சென்றான் அங்கிருந்து துபாய் சென்றான். நாங்கள் சமையல் செய்து தான் சாப்பிட்டோம். அதை சொல்ல நினைத்துதான் இதை எழுத ஆரம்பித்தேன்.

கூட்டு, பொறியல் என்றால் என்ன? என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சாப்பிடுவது இரவு ஒருவேளை மட்டும் வீட்டில் அதற்கு எதுக்காய்ய கூட்டு? சாம்பார் வைத்தால் அதில் காய்கறி இருக்கிறதே! வாரத்தில் 5நாளில் 4 நாட்கள் சாம்பார் தான். எங்களுக்குள் நீ இன்னைக்கு சமைக்கனும் நான் இன்னைக்கு என்று பட்டியலே கிடையாது. எனக்கு விருப்பமான தேர்வு பாத்திரம் கழுவுவதுதான். ஆனால் என்னை ச்மையல் குருவாக செளந்தர் சொல்லிவிட்டான் என்பதற்காக சாம்பார் வைத்துத்தொலைத்தேன். நேற்று நாங்கள் செய்யும் ஒருவகையான உப்புமாவை ஞாபகம் கொண்டேன். அதுதான் எழுதுவதற்கு விதையே! அந்த உப்புமா எப்படி தயாரித்தோம் என்றால் வேடிக்கையானது. வெங்காயம், மிளகாய் கடுகு தாளித்து பின்னர் சம்பாரவைக்குத் தேவையான அளாவு தண்ணீர் ஊற்றுவோம், அது நன்றாக கொதிநிலை வரும்போது அதில் முட்டை இரண்டோ மூன்றோ அடித்து ஊற்றுவோம். பின்னர் ரவையை போட்டு கிண்டி இறக்கினால் உப்புமா ரெடி. எவன் சொன்னானோ இந்த பார்மூலாவை. இது ஒரு மெனு. கடைக்குப் போனால் முட்டைவாங்கும் ட்ரே இல்லாமல் போவதில்லை அந்த அளவிற்கு அவித்த முட்டை பிரியர்கள். சாப்பிடுவதற்கு சைடில் எதாவது வைத்துக்கொள்ளவேணுமே! பாரதியார் தெரு வீட்டிற்கு வந்தவுடந்தான் பாஸ்போர்ட் விண்ணப்பித்தேன் எனக்குட்துணை ராஜா. அவன் என்னை மாதிரி சோடாபுட்டி! எனக்கு -1 லிருந்து ஏறிக்கொண்டே வந்தது அவன் நிலைநிறுத்தினான் யோகாவாம் யோகா செய்வான், கேட்டால் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தார் என்பான். பாஸ்போர்ட் வாங்கிய கதை இன்னமும் நினைவில் உள்ளது. நாங்கள் வேலைக்குப்போய்விட்டால் வீட்டில் யாருமே கிடையாது, போலீஸ் என்கொயரி வந்தது. போலீஸ் ஸ்டேசன் செல்லவேண்டும். அவனுக்கும் இருக்கிறது என்கொயரி ஆகையால் இருவரும் மாதவரம் காவல்நிலையம் சென்றோம். உள்ளே சென்றதும் எனக்குப்பீதியானது அங்கே ஜட்டியுடன் ஒருவனை நிற்கவைத்து நமது பொதுமக்களின் நன்பர்கள்! அடித்தார்கள். என்னுடைய பீதியை ராஜாராமன் கடைக்கண்ணில் பார்த்தான், அவன் கண்ணிலும் தான் அச்சம் நைசாக மறைத்துவிட்டான். பின்னர் ஆய்வாளரை இருவரும் அணுகினோம். பாஸ்போர்ட் எடுத்து எங்கே போகப்போறீங்க என்றார், சும்மா ஒரு அட்ரஸ் புரூப் க்குத்தான் என்றோம். சரி சரி என்றார் மாமூல் எதுவும் கேட்கவில்லை நாங்களும் தருவதற்கு துணியவில்லை. நன்றி சொல்லி வெளியே வந்தபோது கொஜ்சம் ஸ்டேசனரி பொருட்கள் வாங்கிக்கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். எப்படியோ தலா 10ரூபாயை கறந்தார்கள். அறைக்கு வந்ததும் என்னுடைய பீதியை நண்பர்களிடம் சொல்லிவிட்டான், அதை அவன் அவ்வப்போது என்னை சீண்டுவதற்கு பயன்படுத்துவான்.


இன்னைக்குப்போதும்...

செவ்வாய், 20 நவம்பர், 2012

நோபல் பரிசு உருவான கதை.


அவரது பெயர் ஆல்பர்ட் பெர்ன்ஹார்டு நோபெல் , 1833ல் ஸ்டாக்ஹோமில் பிறந்தார்.அவரது தந்தை ரஷ்ய ராணுவத்திற்கு துப்பாக்கி ரவைகள் தயாரித்து வழங்கும் வேலை செய்துவந்தார்.

நோபெலும் அவரது அண்ணனும் தந்தைக்கு உதவியபடியே கல்வி கற்றுவந்தார்கள். பின்னாட்களில் ஸ்டாக்ஹோம் திரும்பியவர்கள் ஸ்வீடன் நாட்டு ராணுவத்திற்கு பலவகையான வெடி மருந்துகளை தயாரித்துக் கொடுத்தார்கள். நோபெல் தந்தையின் வெடிமருந்து தொழிற்சாலையின் வேதியியல் கூடத்தில் வெடிக்கும் பொருட்களை கலவைகளை பலவிதமாகத் தயாரித்து மினி வேதியியலாளர் ஆனார்.

1864ம் ஆண்டு ஒரு நாள் நைட்ரோ கிளிசரினுடன் பலவகை அமிலங்களை இணைத்து தயாரித்த திராவக வெடிக்கலவை செய்யும் ஆய்வில் இருந்தார், ஆய்வை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நோபெல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு ஒடினார் ஆய்வகமும் அவர்களது வெடிமருந்து ஆலையும் கூடவே அண்ணன் எமில் மற்றும் 26 பேரின் சடலங்களும் சிதைந்து கிடந்தன. அந்த சம்பவத்தால் நோபெலின் தாயும் தந்தையும் அதிர்ந்து போனார்கள் ஆனால் நோபெல் தனது ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அடுத்த ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்து உலகமெங்கும் கிணறு வெடுவதிலிருந்து, சுரங்க வேலைவரை பலவற்றிற்கு பயன்பட்ட வெடிமருந்து உற்பத்தி அவரை குறுகிய காலத்தில் செல்வந்தராக்கியது.

மனிதர் திருமணமே செய்துகொள்ளாமல் தனித்தே வாழ்ந்து தனது வாழ்வைப் பெரிய சாதனை என்றே கருதினார். 1895ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி காலையில் செய்தித்தாளை வாசித்து திடுக்கிட்டார்.

டைனமைட் வெடிமருந்து தயாரித்து பலர்சாக காரணமாக இருந்த ஆல்பிரட் நோபல் மரணம் என்று செய்தி பக்கத்தில் அவரது போட்டோவும் கூட. மனிதர் திரும்ப திரும்ப வாசித்தார் அவரைத்தான் இறந்துவிட்டதாக தினசரியில் செய்தி வந்திருந்தது.கோபமடைந்து பத்திரிக்கையாள்ர்களை தொடர்புகொண்டு திட்டித்தீர்க்க முடிவுசெய்தர், பிறகு முடிவை மாற்றினார். எல்லாரும் என்ன செய்கிறார்கள் பார்ப்போமே என்று அவருக்குத் தோன்றியது, ஆனால் அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஒருமணி நேரம், இரண்டு மணிநேரம் ...வீட்டுக்கு யாருமே வரவில்லை, உறவினர்கள் தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை. வீட்டிலிருந்து இறங்கீ தெருவில் நடந்தார், யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு தெரு தள்ளி ‘அழிந்தான் மனிதக் கொல்லி’ என பெரிய பேனர் வைத்து சிலர் இனிப்பு வழங்குவதைப் பார்த்து நொந்தார். வேகமாக வீடு திரும்பினார்.

அங்கே காத்திருந்தது ஒரே பெண்மணி பெர்தா வின்ஸ்கி, நோபெலின் பால்ய சினேகிதி.நட்புரீதியில் நலம் விசாரித்துக்கொண்டே பெர்தா வின்ஸ்கி அவரது நிலைமையை புரியவைத்தார். பணமும் புகழும் பெரிதல்ல், வேதியியாலாளராக இருந்தும் என்ன பயன்.. அழிவு ஆயுதங்களே செய்தவர் என்ற அவப்பெய்ரே நிலைக்கிறது, இருக்கும்போதே இறந்தவராக்கியது. நோபல் அந்தக் களங்கத்திலிருந்து வெளிவரக் கொண்டு வந்தவை தான் நொபல் பரிசுகள்.

பால்தாக்கரேவின் மரணம்


சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் , குடியரசுத்தலைவர் மாதிரி “நாடு மிகச்சிறந்த” தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன் அது போலியான உதட்டளவில் தெரிவிக்கிற அஞ்சலி. இல்லையென்றால் அவர் மக்களை பிரதேச ரீதியிலும், மதரீதியிலும் பிரிவினை செய்தவரை ஒரு பொறுப்பான தலைவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முன்னாள் உச்ச்நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு “நான் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமாட்டென் என்று கட்டுரை எழுதினார் அது ஹிந்து நாளிதழ் பிரசுரித்தது. அந்த கட்டுரையில் பாரதியின் “முப்பதுகோடி முகமுடையாள்” என்ற வேற்றுமையில் ஒற்றுமையை சீரழித்த தலைவர் என்றார். இந்தியத்திரு நாட்டில் ஒரு குடிமகன் எங்கே வேண்டுமானால் சென்று வேலை செய்யலாம், தொழில் செய்யலாம் ஆனால் அந்திய மாநிலத்தவரால் சொந்தமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவே அவர்களை விரட்டுவோம் என்ற பிரிவினை அரசியல் செய்தவர். அவருடைய அரசியல் எல்லாம் மக்கள் விரோத அரசியல் எமர்ஜென்சியை ஆதரித்தார், மும்பையில் தொழிற்சங்கவாதிகளுக்கெதிராக முதலாளித்துவவாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஒழித்துக்கட்டினார். பத்திரிக்கை ஆசிரியர் என்று தான் நடத்திய ‘சாம்னா’ வில் துவேசம் பரப்பினார். இப்படிப்பட்ட தலைவரின்மீது மரியாதை எப்படிவரும்.

அவருடைய இறுதி ஊர்வலம் நிகழ்ந்த நாளில் கடைகளெல்லாம் அடைத்து வீதிகளே வெறிச்சோடிக் காணப்பட்டது இது மரியாதைமிக்க தலைவர்ருக்கான அஞ்சலி செலுத்த அல்ல மாறாக தொண்டரடிப்பொடிகள் வன்முறை செய்து நாசம் விளைவிப்பார்கள் என்ற அச்சம் தான் காரணம் என்று இரண்டு பெண்கள் பேஸ்புக் ல் கமெண்ட் செய்திருந்தார்கள்.   அவர்களை போலீஸ் கைதுசெய்தது. அதற்கு பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மார்க்கண்டேய கட்ஜூ மஹாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதினார். அந்த பெண்களை விடுவிக்கவேண்டும், கைதுசெய்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க உரிமைகூட இல்லை, இந்த கருத்தால் பொதுமக்களுக்கு எந்த குந்தகமும் ஏற்படபோவதில்லை, பொய் இல்லை, தேசவிரோதமில்லை, ஆனாலும் போலீஸ் வன்முறையாளர்களுக்கு விசுவாசம் காட்டுகிறது.

அந்நிய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆள்வதற்கு மதரீதியாக பிளவுபடுத்திவிட்டு ஆட்சி செய்தார்கள், பால்தாக்கரே போன்ற வலதுசாரி சக்திகள் மக்களை மொழி , இன, மத ரீதியாக பிளவுபடுத்தி பெரும்பான்மையினரின் செல்வாக்கை பெற்று அதில் ஆட்சி செய்கிறார்கள். மொழியால், மதத்தால், வேறுமாநில மக்கள் என சிறுபான்மையினராக இருக்கின்ற மக்கள் எப்போதும் ஒரு அச்சத்திலேயே வாழவைத்தார். ஈழத்தை ஆதரித்தார் என்று அவரின் புகழ்பாட பெரியாரின் சீடர்களில் சிலர் புகழ்அஞ்சலி செலுத்தத்தவரவில்லை.

பால்தாக்கரேவின் மறைவால் நாடு ஆகப்பெரிய தலைவரை இழந்துவிட்டது என்று சொல்லமாட்டேன்.

சனி, 27 அக்டோபர், 2012

கணித மேதைகள்

சீனிவாச இராமானுஜன்

கணித மேதை இராமானுஜன் பிறந்தது ஒரு ஏழை குடும்பத்தில். 1887ல் பிறந்த இவர் கும்பகோணத்தில் வளர்ந்தார். தந்தை ஒரு துணிக்கடையில் சிப்பந்தியாகவும் தாயார் வீட்டிலேயெ உணவுவிடுதி நடத்திவந்தார். இராமானுஜன் நான்காம் வகுப்பு படிக்கும் போது வகுப்பாசிரியர் எந்த எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை ஒன்று தான் கிடைக்கும் என்று சொன்னார், அதற்கு “பூஜ்ஜியம் வகுத்தால் பூஜ்யம் கூடவா” என்று கேட்கிறார். ஆசிரியருக்கு சிறுவன் இராமனுஜன் சொன்ன முடிவுறா எண் விடையாகக் கிடைக்கும் என்று சொன்னது புரியவில்லை. அவருடைய தாய் நடத்திய உணவுவிடுதிக்கு சாப்பிடவரும் கல்லூரி மாணவர்களின் கணித புத்தகங்களை ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்து அது கல்லூரி மாணவர்களின் வீட்டுப்பாடத்தை இராமனுஜன் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது, இதற்காகவே உணவு விடுதிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

அரசு உதவியுடன் கும்பகோணத்திலேயே அரசு கல்லூரியில் கல்வி கற்க இடம் கிடைத்தது,  ஆனால் கணிதம் தவிற எல்லாப்பாடத்திலும் தோல்வி. இதனால் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. பிறகு வறுமை, எந்த வேலையும் கிடைக்காமல் ‘கணக்கு’ போடக்கூட காகிதத்திற்குக் கூட பஞ்சம். அப்போது அவருடைய ஆசிரியர் ஒருவர் உதவியால சென்னைத் துறைமுகத்தில் கணக்காளராக வேலையில் சேர்ந்தார். கணிதவரையறைகள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இந்திய கணிதவியல் சமூகத்தின் இதழில் அவருடைய சில ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. தாமஸ் ஹார்டி என்பவரது orders of infinity என்ற நூலை வாசித்துவிட்டு ராமானுஜன் ஹார்டிக்கு கடிதங்கள் எழுதத்தொடங்கினார். கணித நட்பு இராமனுஜத்தை கேம்பிரிட்ஜ் கொண்டுபோய்சேர்த்தது. ஹார்டி இராமனுஜத்திற்கு வெறும் வழிகாட்டியாக மட்டுமில்லாமல் உற்ற நண்பராகவும் விளங்கியிருக்கிறார்.

டாக்டர் சீனிவாக இராமனுஜன் இல்லையென்றால் இன்று நிகழ்தகவு எண் கோட்பாடு (Probablitic number factor) எனும் ஒரு தனித்துறையே கிடையாது என்கிறார்கள். உடல் நலக்குறைவால் 32 வயதிலேயே மரணமடைந்தார். இராமனுஜத்தின் பிறந்த தினமான டிசம்பர் 22 கணித தினமாக இந்தியாவில் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய 125 வது பிறந்த தினத்தையொட்டி 2012ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

ரெனே டெஸ்கார்ட்ஸ்


பள்ளிக்கூட குழந்தைகள் பயன்படுத்தும் x அச்சு மர்றும் y அச்சு கொண்ட வரைபடத்தாளை உருவாக்கியது ரெனே டெஸ்கார்ட்ஸ். இவர் பிரான்ஸில் கி.பி.1616ம் ஆண்டு பிறந்தார்.  பழ்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியவுடன் முன்னோர்கள் விட்டுச்சென்ற கணிதவரையறைகளை அனைத்தையும் படித்து அதிலிருந்து குறைகளை மேம்படுத்த ஆய்வில் இறங்கினார். டெஸ்கார்ட்ஸ் ‘எண்ணை அறியும் சமன்பாடு‘  என்கிற ஒன்றை அடைய முயன்று அறிவுப்பசியோடு இருந்தநேரம் ஜெர்மனி போருக்காக டச்சு இளவர்சர் நெசயுவின் படையில் சிப்பாயாக சேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் அவர் முகாம் காப்பாளர் வேலையை செய்யும் பணியில் மணிக்கணக்கில் கணிதத்திலும் சிந்தனையிலும்  மூழ்கியிருக்கிறார். 1637ல் 'Discourse on the methos rightly conducting the reason' எனும் நூலை வெளியிட்ட அதே ஆண்டில் உலகின் தலைசிறந்த தத்துவப் பேரறிஞர் என்று புகழ்பெற்றார். வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது? அதற்கு கட்டணம் எவ்வளவு என்று வரைபடத்தாள் முறையில் சமன்பாடுகளைப் புள்ளிகளாக்கிப் பின் புள்ளிகளைப் பணமாக எழுதும் முறை டெஸ்கார்ட்ஸ் வழங்கியது தான்.

காரல் பெட்ரிக் காஸ்

1781ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு கட்டட மேஸ்திரியான தன்னுடைய தந்தையின் கூலிக்கணக்கில் சில தொழிலாளர்களுக்குப் போடப்ப்ட்ட தொகையில் தவறு நேர்ந்திருப்பதை மூன்று வயது குழந்தை சுட்டிக்காட்டியது. ஒரு நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு கணக்கிட்டால் குழந்தை சொன்னது சரிதான், பேச்சு வருவதற்கு முன்பே எண்களுடன் விளையாடியதைப் பார்த்து பெற்றோர் பூரித்தனர். அந்த குழந்தைதான் காரல் பெட்ரிக் காஸ் (Carl Friedrich Gauss). பள்ளிக்கூடத்தில் காஸ் அடிப்படைக் கணிதத்தில் சூரப்புலி என்பதை அவருடைய ஆசிரியர்களால் நம்பமுடியவில்லை. அப்போது காஸிற்கு 10 வயதிருக்கும், மாணவர்களுக்கு பொழுது போவதற்காகக் கணித ஆசிரியர் ஒன்று முதல் நூறு வரையிலான எண்களை எழுதி அவற்றை கூட்டிப் போடுமாறு சொன்னார். மூன்றே நிமிடங்களில் தனது சிலேட்டில் 5050 என்று விடையை எழுதிக் காட்டினார், சக மாணவர்கள் சிரித்தார்கள் அவர்களுக்கு மூன்று மணிநேரம் கணக்குப்போட்டும் விடை வரவில்லை. ஆசிரியருக்கும் புரியவில்லை ஏதோ குருட்டுவாக்கில் விடை எழுதியிருக்கிறானென்று 101 முதல் 200 வரையிலான எண்களை செய்யச்சொன்னபோது அதற்கும் சரியான விடை எழுதினான், ஆசிரியர் ஆடிப்போனார்.

கணிதத்திலும் அதன் இணையிலான இயற்பியலிலும் காஸின் பங்களிப்பு அவரி வரலாற்றில் தலைசிறந்த  மேதைகளில் ஒருவராக்கியது. கணிதவியலின் அலகான ‘காஸ்’ அவரது நினைவாக சூட்டப்பட்டதுதான். அடிப்படைகணிதம், லாக்கணிதம் மட்டுமின்றி கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் டேனிஷ் மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார்.  இரு தனித்தனி விசைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது மூன்றாவதாக ஒரு புதியவிசை புதிய திசையில் முளைப்பதை காஸ் கண்டுபிடித்தார்.

தகவல்கள் - “கணிதத்தின் கதை” என்ற நூலிலிருந்து.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கணிதத்தின் கதை


கணிதத்தின் கதை

கணிதத்தை கண்டு பிடித்தவர்கள் யார் என்றால், எழுத்துக்களை கண்டு பிடித்தவர்கள் யாரோ அவர்கள் பெயர் தெரியாத பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பு வாழ்ந்த பழங்குடியினர்கள் தான். அதை பின்னர் வந்த அறிஞர்கள் அதை மேம் படுத்தினார்கள். தேவை தான் கண்டு பிடி ப் புகளின் தாய் என்கிறார்கள், ஆதியில் வாழ்ந்த அந்த மக்களுக்கு தங்களிடம் இருந்த கால்நடை செல்வங்கள் அன்றாட வாழ்க்கை, அவசரத் தேவைகளின் போது பொருட்கள் இத்தனை உள்ளதென எண்ணிவைக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன் புவியில் ஏற் பட்ட தட் பவெ ப் ப மாறுதல்களால் நைல், டைகரீஸ், யூப்ரடீஸ், ஆகிய நதிக்கரை ஓரங்களில் வாழ்ந்த கற்கால வேட்டையர்கள் இயற்கையால் விவசாயம் செய்வதை நோக்கித் தள்ளப்பட்டார்கள். காலங்கள் செல்லச்செல்ல ஒரு தனிப்பட்ட விவசாயி நாட்களை, தட்பவெப்பக் காலங்களை, பயிர்களை மற்றும் விளைபொருட்களை எண்ணி கணக்கு வைத்துக்கொள்ள அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள். நம்மைப் போல் விரல்களின் உதவியைத்தான் நாடியிருக்கிறார்கள். 20 விரல்கள் தானே இருக்கிறது. இருபதுக்கும் மேல் உலகில் எதையும் எண்ணி வைக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்பதை அவர்களால் நம்பமுடிந்திருக்காது அவர்கள் காலத்தில். அந்த இருபதின் சாட்சியாக பிரெஞ்சு மொழியில் எண்பதை குறிக்க quatre-vingt ம், தொண்ணூறைக் குறிக்க quatre-ving-dix என்றும் சொல்கிறார்கள்.

இப்படி சுவாராஸ்யமான கணித்தை பற்றிய தகவல்கள் கொண்ட நூல் கணித்தத்தின் கதை` இதை எழுதியவர், இரா.நடராசன். ஏற்கனவே இவரைப் பற்றி திரு.விஜயன் குறிப்பிட்டிருந்தார். கணிதமேதை இராமனுஜன் பிறந்து இந்த ஆண்டோடு 125 ஆண்டுகள் கொண்டாடும் இந்த வேளையில் கணிதத்தைப் பற்றி இரா.நடராசனே நிறைய புத்தகங்கள் எழுதி அவரை இந்த தருணத்தில் நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். புத்தகங்கள் வருடந்தோறும் இலட்சக்கணக்கில் வெளிவருகின்றன, அவை, நாவல்கள், கட்டுரைகள், சிறுகதை, கவிதை விமர்சனக்கள் என்றொருபக்கம். மறுபக்கம் விஞ்ஞானப் புத்தகங்கள், அறிவியல் வளர்ச்சி, தகவல் தொடர்பு, கணணி மொழி, மருத்துவம், பொறியியல் என பல துறைகளுக்கும் புத்தகங்கள் குவிக்கப்படுகின்றன. ஆனால் கணிதத்திற்கு என்று புத்தகங்கள் பள்ளிகள், கல்லூரிகளின் பாடபுத்தகங்கள், நோட்ஸுகள் தவிற கணிதத்திற்கு ஆராய்ச்சி, காண்டுபிடிப்பு, கட்டுரைகள் என புத்தகங்கள் வருகின்றனவா என்றால் இல்லை என்கிறார்கள் கணித ஆசிரியர்கள். உலகைமாற்றிய புத்தகங்களில் நியூட்டன் எழுதிய `பிரின்சிபியா மேத்தமெடிகா` வும் என்று ஒருமுறை புத்தகவிழாவில் முன்னால் மதுரை மாவட்ட ஆட்சியர்உதயசந்திரன் குறிப்பிட்டார். இந்தியாவில் இப்படி கணித ஆராய்ச்சி புத்தகங்களுக்கு பதிலாக வேத ஜோதிடத்திற்கான கணிதம் தான் எழுதப்பட்டிருக்கிறது.

தற்போதைய 1, 2, 3,.. எங்கிருந்து வந்தது? கிறிஸ்து பிறந்ததற்குப்பின் முதல் ஐநூறு ஆண்டுகள் வரையில் ரோம எண்சார்ந்த கணிதமெ இருந்தது. தற்போதைய எண்முறை பத்தின் மடங்குகளை அடிப்படியாகக் கொண்டது தசமமுறை, ஆங்கிலத்தில் டெசிமல் முறை என்கிறோம். இதைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர்கள் இந்தியர்கள். இதற்கு அரேபிய வணிகர்களும் காரணமாக இருந்துள்ளார்கள். ரோம எண்கள் அதிகபட்சமாக X என்றால் பத்து என்று நினைக்கிறோம், ஆனால் L என்றால் ஐமபது, C என்றால் நூறு, D என்றால் ஐநூறு, M என்றால் ஆயிரம் என்பது பிற்கால இணைப்புகள். மெசபடோமியாவிலும் பாபிலோனியாவிலும் தான் முதல் எண் வ்கை எழுத்துக்கள் அறிமுகமயின எண்களை வடிவங்களாக எழுதிவைக்கும் முறை வந்தது சுமார் கி.மு.2500 ல் என்கிறார்கள். அங்கே ஸெக்ஸாஜெசிமல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முறையை மெசபடோமியர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். அதன் மிச்சமோ 60 ஐ அடிப்படையாகக் கொண்டு இன்றும் நிமிடம், மணித்துளிகள் கணக்கிடப்படுகின்றன. கடைசியில் பூஜ்யத்தை அடைந்தவர்கள் இந்தியர்கள் தான். கி.பி. 628ல் சமஸ்கிருத அறிஞர் பிரம்மகுபதர் தன்னுடைய நூலில் `சூன்யா `வை கொண்டுவருகிறார், அது அரெபியாவிற்கு sifer ஆகச்சென்றது அங்கிருந்து லத்தீனுக்கு Ziphirum என சென்றது, பிற்காலத்தில் கி.[பி. 1491 லியானார்டோ பிபனாசி ஆங்கிலத்தில் ஜீரோவை அடைந்தார்.

அறிவியல் விஞ்ஞானிகள் என்று அறியப்படுகிற பலரும் கணிதத்தை ஆராய்ந்தவர்கள், அவர்களில் ஆர்க்கிமெடீஸ், தாலஸ், நியூட்டன்,பெர்னாலி பிரபலம். ஒவ்வொரு கணித மேதையைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் தனித்தனியாக புத்தகம் வேண்டியதில்லை, 100 பக்கத்தில் சிறந்த கணித அறிஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நூலில் சொல்லியிருக்கிறார். கி.மு. 640ல் பிறந்த தாலஸ் ஒரு சூரியக்கிரகணத் தேதியை முன்பாகக் கணித்து அறிவித்த முதல் விஞ்ஞானி அவர் தான். ஒரு வட்டத்தை இரண்டு பாதியாகப் பிரிக்கும் கோட்டிற்கு `விட்டம்` என்று பெயரிட்டவர் தாலஸ். பிதாகரஸ் தால்ஸின் வகுப்புத்தோழர். பிதாகரஸ் தேற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழில் போதையனார், `ஓடும் நீளம்தனை ஒரே எட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே`` என விளக்கியதாக சில மாதங்களுக்கு முன்பு குழுமத்தில் பார்த்தோம், அதே மாதிரி பிதாகரஸுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலொனியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும் அதற்கு நீருபணத்தை அளித்தது பிதாகரஸ்தான். அறிவியலோ, கணிதமோ நிரூபிக்கப்படவேண்டும். கிரேக்கர்கள் அதைச் செய்தார்கள். JI (பை) யை அடைந்தவர்கள் பிதாகரஸ்வாதிகள் தான் 3.14159 என்ற முடிவுறா எண்ணை 1,240,000,000,000 இலக்கங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.


கணித வரலாற்றில் ஜாம்பவான்கள் என்று மூன்றுபேரை குறிப்பிடுகிறார்கள், அவர்களில் முதலாமானவர் ஆரகிமெடீஸ் மற்றவர்கள் நியூட்டன் மற்றும் காஸ். ஆர்கிமெடிஸின் முதல் கண்டுபிடிப்பு திருகு (screw)என்று அழைக்கப்பட்ட நீள்விட்டக் குழாய்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கிய நைல் நதியிலிருந்து வயல் பரப்புகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம். கணிதத்தின் அடிப்படியில் பொறியியலுக்கு நெம்புகோல் தத்துவம், பளுதூக்கி என இரண்டு பரிசுகளை தந்தார். ஆர்க்கிமெடிஸின் மரணம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது, ரோமாபுரி மன்னர்கள் கிரேக்கத்தின் மீது படை எடுக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஆர்கிமெடிஸ் அளித்த போர்த்தளவாடங்களால் அவர்கள் சைராகுஸை கடல்வழியே நெருங்கமுடியவில்லை. கிரேக்கர்களின் பலவீனம் என்னவென்று பார்த்தார்கள், அது மது. கொண்டாட்ட நாட்களில் மது அருந்தாமல் இருக்கமுடியாது, அப்படி யொரு மதக்கொண்டட்ட நாளில் ரோமானிய தளபதி மார் செல்லஸ் சைராகுஸை பிடித்துவிட்டான். ``ஆர்கிமெடிஸ் நமது விருந்தாளி, உயிர்ரோடு கொண்டுவாருங்கள்`` என்பது தான் தளபதியின் உத்தரவு ஆனால் உணர்ச்சி வசப்பட்ட போர்வீரன் வாளை உருவியபடி ஆர்கிமெடிஸ் மீது பாய்ந்து கொன்றான். அப்பொதும் வீட்டின் வெளிப்பரப்பில் வட்டத்தின் உள்பரப்பிற்கு கணிதவரையறைகளை நிறுவிடமுயன்றார்.

இத்தாலியில் திறந்தவெளியில் கணிதப்போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன, ஆண்டனியோ பியோர், டர்டாக்லியா போன்ற ஜாம்பவான்கள் நாட்கணக்கில் கணித்திற்காக கத்தை கத்தையாக சமன்பாட்டை அள்ளிவீசியிருக்கிறார்கள். வாடிகனில் அரச குடும்பத்திற்கு ஜோதிட வாலையைச் செய்த கிர்லாமோ கார்னடோ கணித ஜாம்பவான்களோடு மோதினார். இவருக்கு வாட்டிகன் நகரத்து போப்பாண்டவரிடமிருந்து ஓய்வூதியம் வந்துகொண்டிருந்தது அந்த அள்விற்கு ஜோதிடத்தில் சூரப்புலி. கி.பி. 1545ல் மேபெரும் கணித ஆவணம் `ஆர்ஸ் மேக்னா ` வை எழுதியுள்ளார் , ஆர்ஸ் மேக்னா என்றால் மாபெரும் கலை என்று பொருள். இந்த புத்தகத்தைப் பற்றியே சுமார் ஐநூறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவ்வளவு சிறப்பான கணிதநூல். இவருடைய மாணவர் லொடுவிகோ பெராரி, சமன்பாட்டு நிரூபரணத்தின் ரகசியத்தை விலைக்கு விற்றுவிடவேண்டும் என்ற குடும்ப யோச்னையை ஏற்க மறுத்ததற்காக பெராரி தனது சகோதரியால் இரக்கமின்றி உணவில் விசம் வைத்துக் கொல்லப்பட்டவர்.


---------இன்னும் அடுத்த பகுதியில் இராமானுஜன் வருவார்.



திங்கள், 15 அக்டோபர், 2012

மீண்டும் சாவேஸ்...



மக்களாட்சியில் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் பெருவாரியான மக்களை தன்பக்கம் ஈர்த்திருக்கவேண்டும். மதவெறி, மொழிவெறி, பிரதேசவெறி, போலியான தேசியவெறியை நம்பி தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் பார்த்திருக்கிறோம். தங்களுடைய ஆட்சியின் கொள்கையால் பெரும்பான்மை மக்கள் பயன்பெற்று மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும் பார்த்திருக்கிறோம். அந்தவரிசையில் சாவேஸ் மக்களின் நம்பிக்கையாக உள்ளார். தென் அமெரிக்கக்கண்டத்தில் சேகுவேராவுக்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நட்சத்திரம் சாவேஸ் என்றால் மிகையில்லை.

நாமெல்லாம் உலகமயத்தின் கொள்கைகளின் நெருக்கடிகளை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அனுபவித்துவருகிறோம். லத்தீன் அமெரிக்கா அப்படியல்ல. ஸ்பானிய காலனி முடிவுக்குவந்தவுடன் அமெரிக்காவின் பொம்மைகளின் ஆட்சிகள் நடபெற்றுவந்த நாடுகள். ராணுவ ஜெனரல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர்களை கொலையும் செய்வார்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஆயுதம் மூலம் முன்றாம் உலக நாடுகளை அடிபணிய வைக்கமுடியாது என்ற நிலைமை வந்தபோது ஏகாதிபத்திய நாடுகளுக்கு உதித்த சிந்தனைதான் சுதந்திரவர்த்தகம். பெயர் வேண்டுமானால் `` சீர்திருத்தம்`` என்ற சொல்மாதிரி இனிப்பாக இருக்கலாம். இந்த சுதந்திர வர்த்தகத்தின் மூலம் மூன்றாம் உலகநாடுகள் தொடர்ந்து கடன்கார நாடுகளாக மாற்றப்படும், அங்கே உற்பத்தியாகும் பொருடகள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்காக. அவையாவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்குபவையாக இருக்கும். இப்படித்தான் 1990 வரை வெனிசுலா ஏகாதிபத்தியத்திற்கு வேட்டைக்காடாக இருந்தது. உலகவங்கியின் பொருளாதாரக் கொள்கைகளின் நெருக்கடிகளை தாங்கமுடியாமல் லட்சக்கணக்கான மக்கள் காரக்கஸின் தெருக்களில் இறங்கி போராடினார்கள். அவர்களுக்கு சாவெஸ் என்ற வழிகாட்டி கிடைத்தார்.

இந்தியாவில் இன்று அரசாங்கம் அமல்படுத்திவருகிற உலகவங்கியின் கொள்கைகளெல்லாம் தென் அமெரிக்க நாடுகளில் சோதிக்கப்பட்டவை. நமக்கு அந்த நாடுகளின் படிப்பினைகள் நல்ல முன்னுதாரணம். எண்ணெய் வளமிக்க நாடுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு 1998க்குப் பின்னர் வெனிசுலாவை இழந்துவிட்டமாதிரி இருந்தது. அதுமட்டுமா தனக்கே சவால் விடுக்கும் அளவிற்கு , எரிபொருள் நிறுவனக்களை தேசியமயமாக்குகிறார். பிடல் போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தென் அமெரிக்க நாடுகளை தனிஅமைப்பாக அணி திரட்டுகிறார். அதன் விளைவாக 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்கட்சிகள் , ராணுவ ஜெனரல்கள் கூட்டுசேர்ந்து சாவேஸுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார்கள். நாட்டின் தனியார் பன்னாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் சாவெஸைக்கு எதிராக பிரச்சாரம் செய்து தன் வர்க்க குணாம்சத்தை காண்பித்தது. கடைசியில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள் நான்கு நாட்களில் சாவேஸ் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றார். சாவெஸ் ஆட்சியை மக்கள் கொண்டுவந்த புரட்சியை the revoultion will not be televised என்ற ஆவணப்படம் http://video.google.com/videoplay?docid=5832390545689805144# காண்பித்தது. தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை எதிர்த்து அமெரிக்காவை பகிரங்கமாக கண்டித்தார்.

அமெரிக்காவிற்கு சென்ற ராஜாங்க மந்திரிகளின் உள்ளாடையை கழைந்ததைக்கூட வெளியில் சொல்லாமல் வாய்மூடிகளாக இருக்கிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாவேஸ் ஒரு முறை ஐநா கூட்டத்தொடருக்கு செல்லும்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளையும் மருத்துவர்களையும் அமெரிக்க அரசு விமான நிலையத்தைவிட்டு வெளியே விடாமல் தடுத்தது. அந்த சம்பவத்தை சாவேஸ் ஐநா சபையில் வைத்து அமெரிக்காவை கண்டித்தார். லிபியாவின் மீது , சிரியாவின் மீது அல்லது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்துகிற யுத்தம் அநியாயம் என்று தெரிந்தும் வல்லரசுக்கனவுடன் அமைதியாக இருக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் சாவேஸ் யுத்தத்தை கண்டித்தார்.ரெவ்.ராபர்ட்சன் என்ற பாதிரியார் புஷ் க்கு மிகவும் நெருக்கமானவர், புஷ் க்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், அப்போது பேசினார், `வெனிசுலா மீது 20,000 கோடி டாலர் செலவுசெய்து போர்செய்யத்தெவையில்லை சாவேஸை மட்டும் கொலை செய்தால் போதும், அமெரிக்காவிற்குத் தேவையான தடையில்லாமல் எண்ணெய் கிடைக்குமென்றார். இந்தப் பேச்சை ஜார்ஜ் புஷ் கண்டிக்கவில்லை அமெரிக்க மக்கள் கண்டனம் தெரிவித்தபின்பு பாதிரியார் வருத்தம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் பலன்கள் 40 சதவீதம் சாமானியமக்களைச் சென்றடைகிறது. மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. சார்க் அமைப்பு என்பது ஏதோ சம்பிரதாயத்திற்காக கூட்டம் கூடுகிறது, ஒவ்வொரு நாட்டிற்கு அடுத்த நாட்டை பிடிக்கவில்லை எல்லையைச் சுற்றி பதற்றம் தான். ஆனால் சாவேஸ் ALBA என்ற அமைப்பை உருவாக்கி தென் அமெரிக்க நாடுகளை ஓரணியில் திரட்டினார்.அவர்களுடன் பொருளாதார ஒத்துழைப்பை செயல்படுத்தினார். நடந்துமுடிந்த தேர்தலில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பொதுவேட்பாளரை சாவேஸுக்கு எதிராக நிறுத்தினார்கள் ஆனாலும் சாவேஸ் மகத்தான வெற்றிபெற்றார்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

சாமான்ய மனிதர்களைப் பற்றி கவலைப் படாத தேசம்.



நேற்று சென்னை திருவிக நகரில் பாதாளச்சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது ஈடுபட்ட தொழிலாளர் ஒருவரும் மாநகராட்சி அதிகாரி ஒருவரும் பலியாகியுள்ளனர். இதை எதிர்பாராத சம்பவம் , விபத்து என்றெல்லாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் இது கொலை, அரசு செய்த கொலை அதனால் யாருக்கும் தண்டனை கிடையாது. மனிதக்கழிவை மனிதர் அள்ளும் நிலையை நீதிமன்றம் தடைசெய்துவிட்டதாக செய்திகளில் வருகின்றன. ஆனால் தடையை மீறுவது சமூக விரொதிகளோ, லாபம் ஒன்றே குறிக்கொளுடன் செயல்படும் முதலாளியும் அல்ல. சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துகிற அரசு இயந்திரம். இது தான் முதல்முறையா? என்றால் பட்டியலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு மரணங்கள் ! கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா வல்லரசு நாடுகளுடன் போட்டிபோட வேண்டும் அந்நிய நாட்டு மால்கள் இங்கே கடைவிரிக்கவேண்டும், என்று சொல்வோர்கள் யாரும் சாக்கடை அடைப்பை நீக்கம் செய்ய இயந்திரம் வேண்டுமென்று சொல்லவில்லை. ஏன் இந்த அலட்சியம், அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு. அதை செய்வது இழிந்த சாதி என்பதால் தான்.


இச்சம்பவத்தில் ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், அவரை மீட்க உதவி செய்த பொறியாளரும் கொல்லப்பட்டுள்ளார். பெரும்பாலான சம்பவங்களில் அடைப்பு நீக்கும் தொழிலாளிகள் தான் உயிரிழக்கிறார்கள். இதைப்பற்றி விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை,  வேலைவாங்கும் நிர்வாகம் அந்த வேலையில் என்ன ஆபத்து இருக்கிறது என்று தெரியப்படுத்துதலும் இல்லை. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஆலைப்பணிகளில் தொழிலாளி இறந்தால் அவனைத்தூக்கி வீசிவிட்டு இன்னொருவனை அதெ பணியில் அமர்த்திக்கொள்வார்கள் எந்த இழப்பீடும் தரத்தேவையில்லை. அந்த நிகழ்ச்சி கண்ணெதிரே நம் நாட்டில் நடந்துவருகிறது. அதில் முறைசாராத் தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். 1990களுக்குப் பின் புதிய வேலைவாய்ப்புகள் எல்லாம் காண்ட்ராக்ட் மயம்தான். அது அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஆபத்தான பணிகளை செய்வது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஏனென்றால் நிர்வாகத்தை கேள்வி கேட்டால் அதே வேலையைச் செய்ய ஒருவன் வரிசையில் நிற்கிறான். பணிப்பாதுகாப்பும் இல்லை, உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. இழப்பீடும் வழங்கத் தேவையில்லை.

“இன்னொரு முறை நான் பிறக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அப்படி ஒரு வாய்ப்ப்ய்க் கிடைத்து இப்பூமியில் பிறக்க நேர்ந்தால் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்தில்தான் பிறக்க விரும்புகிறேன். மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் மனிதாபிமானமற்ற , சுகாதாரமற்ற, வெறுக்கத்தக்க பணியிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே அப்பிறவியைப் பயன்படுத்துவேன்” என்று மகாத்மாகாந்தி ஒரு முறை எழுதினார்.  தான் இன்னொருமுறை பிறக்கமாட்டேன் என்று மகாத்மாவுக்குத் தெரியும் போல.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையில் ஏராளமானவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் புலம் பெயர்ந்தார்கள். பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட , தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாகத் தடைசெய்து உத்தரவு போட்டது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்றுவிட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பபட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது. சுகாதாரப் பணி செய்த தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முஸ்லீம் எஜமானர்களைப் பின்தொடர்ந்து செல்ல எல்லையில் நின்றனர்.

யுவா சுவாங் இந்தியாவுக்கு வந்தபோது நகரங்கள் இங்கே சுத்தமாக இருப்பதாகவும் கழிவுகள் சுத்தம் செய்ய தனி ஏற்பாடுகள் இருப்பதாகவும் அப்படி கழிவுகளைச் சுத்தம் செய்யும் மனிதர்கள் நகர மக்களின் சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டு நகருக்கு வெளியே தூரமாகக் குடியமர்த்தபட்டுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்த வேலைகளை செய்யும் அந்த மக்கள் ஆகாத மக்களாகத் தள்ளித்தான் சேரிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அருந்ததியர்கள் தமிழகத்தில் பலபெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். பகடை, தொம்மான், மாதிகா, மாதாரி, சக்கிலியர், தோட்டி, ஆதி ஆந்திரர், ஆதி கர்நாட்கர் என. இவர்களுக்கு எந்த உடமையும் இல்லை. இந்த தொழிலிலிருந்து விடுபட்டால் மாற்று ஏற்பாடு செய்வதற்கு அரசுகள் தயாராக இல்லை. இடஒதுக்கீட்டின் பயனை பெறமுடியவில்லை. கல்விக்கூடங்களுக்குச் சென்று அங்கேயும் பள்ளிக்கூட கக்கூஸை ஆசிரியர்கள் சுத்தம் செய்யச் சொன்ன சம்பவங்கள் நிறைய உண்டு. சக உயர்சாதி மாணவர்கள் இவர்களுடன் பழகுவதில்லை.  ஆரம்பக்கல்வியோடு நின்று போன குழந்தைகள் நிறைய உண்டு. அப்புறம் எங்கே அரசு வேலைக்கு போட்டிபோடுவது. தனியார் நிறுவனக்கள் கண்ணுக்குத் தெரியாமல் சில சாதிகளுக்கு திறமையிருந்தும் வேலை தருவதில்லை.

நாளும் பொழுதும் நரகலையே பார்த்துப் பார்த்து விதவிதமான ஒவ்வாமை உணர்வுகளுக்கு ஆளாகும் இத்தொழிலாளிகள் வெத்திலை போட்டும் சாராயம் குடித்தும் மனம் அழிக்கிறார்கள். சமைத்துச் சாப்பிடும் மனநிலையே வாய்க்காமல் ஓட்டல்களில் ஏதாவது வாங்கிச் சாப்பிடும் பழக்கம் ஏராளமானவர்களுக்கு இருக்கிறது.  குடும்பமே ஓட்டலில் சாப்பிட்டுக் கடனாளியாகி சாராயம் குடித்துக் கடனாளியாகி என அருந்ததியர் வாழ்வு கொடுமையான கந்துவட்டிக் கடனில் மூழ்கிக்கிடக்கிறது. இவர்களிடம் வட்டி வாங்கியே கோடிஸ்வரர்களாக பிழைக்கும் கூட்டம் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி களிலும் இருக்கிறது. ஏழைகள் எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள், ஆனால் எந்தச் சாதியாரும் பிறசாதியாரின் மலத்தைச் சுமப்பதில்லை.

மனிதர் கழிவை மனிதர் அள்ளும் நிலைமை பற்றி Frontline magazine செப்டம்பர் 2006ம் ஆண்டு இதழில் கவர்ஸ்டோரி வெளியிட்டுள்ளது. அருந்ததியர்கள் வாழ்க்கை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் அவர்களை எட்டிப்பார்க்காத கல்வி, கவுரமான வேலைக்கு வகைசெய்யும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளில் மாற்றம்பெரும். ஊடகங்கள் இந்தச்சாவு சம்பவங்கள் வரும்போது அதை விவாதப்பொருளாக க்கொள்ளும். ஆனால் அது அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் அது விவாதப்பொருளாக  வரவேண்டும்.

http://www.frontlineonnet.com/fl2318/stories/20060922005900400.htm



ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகமொழி - வடமொழி



சில வாரங்களுக்கு முன்பு ” ஹிந்தி” இந்தியாவில் தோன்றிய மொழி அல்ல, அது தற்போதைய துருக்கியில் தோன்றியது என்பதாகும். ஹிந்தி நேரடியாக அங்கே பேசப்பட்டிருக்கிறதா என்பதைவிட ஹிந்தியின் மூலமொழியான சமஸ்கிருதத்திற்கும் ,கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையே ஒப்புமையுள்ளது.  சமஸ்கிருதத்தை இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே மொழியியலாளர்கள் அழைக்கிறார்கள்.  இந்த கருத்தின் மூலம் வேதங்களை இயற்றிய ஆரியர்கள் மத்திய ஆசியா அல்லது மேற்கு ஐரோப்பாவில் வசித்திருக்கவேண்டும் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதினால் புதிய கிளைமொழிகள் தோன்றினாலும் சில பொதுவான சொற்கள் தொடரவே செய்யும். தமிழுக்கும் , மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமை இதற்கு சான்று.

சுமார் 200 ஆண்டுகளாக வடமொழி, கிரேக்கம்,லத்தீன் முதலிய மொழிகள் தொடர்புடையன என அறிஞர்கள் அறிந்திருந்தனர். குறிப்பாக புனைவுக்கதைகள்,சொற்கள் முதலியவற்றில் ஒப்புமை அமைந்திருப்பது இனம்காணப்பட்டது. பரவலாகப் பயன்படுத்தபடும் பொருட்கள், உடலின் பகுதிகள், அடிப்படைக் கருத்துக்கள், உறவினர்களைச் சுட்டும் பெயர்கள் என பல அம்சங்களில் ஒப்புமை அமைந்திருக்கிறது.

வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்பது ஆகாயத்திற்கு தந்தையாக இருப்பவன் எனும் பொருள தரும். கிரேக்கத்தில் ஆகாயக்கடவுளுக்கு ‘தேயுஸ் பட்டர்’ என்றும் லத்தீனில் ‘ஜூப்பிட்டர்’ என்றுஇம் வழங்கப்படுகிறது. எண்கள் வரிசையிலும் ஒப்புமை உள்ளது. குதிரையை வடமொழியில் அஸூவ என்கிறார்கள், அவெஸ்டா (ஈரான்) மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ். தேர் என்பதை வடமொழியில் ரத என்றும், ஜெர்மனில் ராட் லத்தீனில் ரோட்டா என்றழைக்கப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் வடமொழி மற்ற ஐரோப்பிய மொழியின் சாயல் உள்ளது என்று கண்டுபிடித்தார்.


 இந்தோ-ஐரோப்பியர்கள் ஆரியர் என்றழைக்கப்படுகின்றனர்.  ‘ஆர்ய’ எனும் சொல் ரிக் வேதத்திலும் ‘அவெஸ்டா’விலும் குறிக்கப்பட்டுள்ளது. ஈரானியர்களாகவும் மற்றும் இந்தியர்களாகவும் பிரிவதற்கு முன்பிருந்த ஆரியர்களால் பேசப்பட்ட மொழியினைக் குறிக்கும் சொல் இந்தோ-ஈரானியன் என்பதாகும். இந்தோ-ஐரோப்பிய  மொழிக்கூறுகள் வடசிரியாவில் அல்லது மித்தானிஸ் நிலப்பகுதியில் கி.மு.1400 களில் தோன்றிவிட்டன. மித்தானின் கல்வெட்டுகளில் சில சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை கச்சிதமாக (Mitra)மித்ர,  (Varuna) வருண,  (Indra) இந்த்ர, (Nasatya)  நாசத்ய போன்றவற்றை ஒத்துள்ளன. இதே கடவுளகள் ரிக்வேதத்திலும் காணப்படுகின்றன. மித்தானியர்களின் மன்னர்களின் பெயர்களில் இந்தோ-ஆர்ய சொற்கள் உள்ளன. கி.மு. 14 அல்லது 15ம் நூற்றாண்டுகளில் ஹிட்டைட் பனுவல்களில் இந்தோ-ஐரோப்பிய மொழியே ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பனுவல்களில் தேர், குதிரை பற்றிய செய்திகள் உள்ளன. தேர் பற்றிய அள்வுகளைக் குறிக்கப் பயன்படுத்திய எண்கள் குறித்த சொற்கள் சமஸ்கிருத எண்களை மிகவும் ஒத்துள்ளன. அவை aika(eka), tera (tri), Panza (Panca), satta (sapta) , anna (nava). அதேபோல் குதிரைகளின் நிறங்களை குறிக்க  babu (babhru) , parita (palita) , pinkar (pingala) போன்ற சொற்கள் அரக்கு, சாம்பல், சிவந்த நிறங்களைக் குறிக்கும்.

கி.மு. 1600 வாக்கில் இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் பாபிலோனியாவிலும், இன்றைய ஈராக் பகுதிகளிலும் உள்ள காசிட் (Kassite) கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காசிட்கள் ஆட்சி கி.மு. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது, அக்கல்வெட்டுகள் சூர்யஷ் (Suryash) , மருதாஷ் (Marutash), என்ற இரு குறிப்புகளைத் தருகின்றன, இவையிரண்டும் ரிக் வேதத்தின் சூர்ய(Surya) , மருத் (Marut) என்ற இரண்டையும் அடையாளம் காட்டுகின்றன. காசிட் மொழியில் காற்றுக்கான கடவுள் புரியாஷ் (Buriyash) என்றழைக்கப்பட்டுள்ளது. இச்சொல்லை வேதக்கடவுளான ‘ வாயு’ என்பதுடன் தொடர்பு படுத்தலாம். ‘வாயுவை’ குறிக்கும் Bayar எனும் சொல் இந்தியில் இருந்துவருகிறது.

வேதநாகரீகமே இந்திய நாகரீகம், உண்மையில் ஆரியர்களின் பூமி இந்தியா: இங்கிருந்து தான் உலகம் முழுமைக்கும் ஆரியர்கள் பரவினர்” என்ற கருத்தெல்லாம் இந்திய இன மேன்மையை உயர்த்திப் பிடித்து ‘இந்து’ என அனைவரையும் அணிதிரட்டப் பயன்பட்டது. 
தொன்மையான நாகரீகங்கள் பாபிலோனியா, எகிபது மட்டுமே என்று வரலாற்று அறிஞர்கள் கருதியிருந்தார்கள். ஆரிய வருகைக்குப் பின்னர் தான் இந்தியாவில் நாகரீகம் எனவும் கருதியிருந்தனர். வேத நாகரீகமே இந்தியாவின் தொடக்கம் எனக்கருதி யிருந்தோருக்கு சிந்துவெளி நாகரீகம் பெரும் சவாலாக அமைந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய சிந்துவெளி நாகரீகங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை. இச்சான்று ஒரு வளர்ந்த வேதநாகரீத்திற்கு வெகுமுன்பே இந்தியாவில் வளர்ந்த நாகரீகம் இருந்துள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

# தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு மறைந்த இந்திய வரலாற்று அறிஞர் ராம்சரன் சர்மா அவர்கள் எழுதிய looking for the aryans என்ற நூலின் தமிழாக்கம் ‘ஆரியரைத்தேடி’ என்று என்சிபிஎச் நிறுவனம் வெளிட்ட நூலில் உள்ளது.
#மொழி ஒப்புமை சான்றுகள் The Aryans - V.Gordon Childe 1926ல் எழுதிய நூலில் கிடைத்தது.

வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழகத்தில் பெளத்தம், சமணம்.


தமிழ்நாட்டில்  கி.பி. 7ம் நூற்றாண்டுவரை சமணமும் பெளத்தமும் செல்வாக்குடன் இருந்தன. அதே நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கம் தோன்றியபிறகு பெளத்தம் படிப்படியாக மறைந்தது.இன்றளவும் வடமாவட்டங்களில் திண்டிவனம், வந்தவாசி,காஞ்சிபுரம் பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சமணர்களாக வாழ்ந்துவருகிறார்கள்.  இந்த செய்தியை பலர் அறியாமல் இருக்கலாம்.

சமண, பெளத்த மதங்களின் தொல்லெச்சங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. சைவ, வைணவ, சுமார்த்தத் துறவிகள் துறவுக்கு அடையாளமாகச் சிவப்பு ஆடை அணிகின்றனர். துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவை சமண, பெளத்த மதங்கள் தான். பெளத்த மதத்தின் துறவிகள்தாம் முதலில் செவ்வாடை அணிந்தவர்கள், ‘சீவர’ ஆடை அணிந்தவர்கள் என்று அவர்களை தேவாரம் கண்டிக்கிறது. பெளத்தமதம் அழிந்தபிறகு சைவ, வைணவ சுமார்த்தத் துறவிகள் சிவப்பு ஆடையை அணியத்தொடங்கினர். பெளத்தம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது. வேத, புராணங்களில், தேவார, திவ்வியப் பிரபந்தகளில் இவ்வழக்கம் பற்றிய பேச்சேயில்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது (இவ்வழக்கத்தை பிராமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை). பெளத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியினைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பெளத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டனர்.
அரசமரம் பெளத்தர்களுடைய புனிதச்சின்னமாகும் அது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. அதைப் பின்பற்றி தமிழர்களும் அரசமர வழிபாட்டினைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

‘பள்ளி’ என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள். பள்ளியறை என்றால் படுக்கையறை பள்ளிகொள்ளுதல் என்பது என்பது உறங்குதல். இந்த சொல் எப்படி கல்விக்கூடத்திற்கும் குறிப்பதாயிற்று?

கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகம்வந்த சமண மதத்தின் திகம்பரத் துறவிகள் மலைக்குகைகளில் தங்கத்தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகைகளில் தரைப்பகுதியை படுக்கையைப் போல சமதளமாக செதுக்கிக்கொடுத்தனர்.  இப்படிப்பட்ட குகைத்தளங்கள் திருப்பறங்குன்றம், திருவாதவூர், சமணமலை, நாகமலை ஆகிய இடங்களில் இன்றும் இருக்கிறது. நாகமலையிலுள்ள புலியங்குளம் குகையில் மட்டும் 50 படுக்கைகளுக்கு மேலாக வெட்டப்பட்டுள்ளது. ஆடையில்லாத சமணத்துறவிகள் பசித்த நேரத்தில் மட்டும் அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து பிச்சை ஏற்று உண்டுசெல்வர். கல்வி, மருந்து, உணவு ஆகிய மூன்று கொடைகளும் அடைக்கலம் அளித்தலும் சமண மதத்தின் தலையாய அறங்கள். ‘ஞானதானம்’ செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறுஇடம் கிடையாது.  கற்படுக்கைகளின் மீதுதான் அமர்ந்திருக்க இயலும். பள்ளிகளின் மீது பிள்ளைகள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று.

தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் உண்ணாநோன்பு என்பது மிகப்பெரிய போராட்டக் கருவி. உண்ணா நோன்புக் காலத்தில் தண்ணீர் மட்டும் அருந்துவது சமணர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதாகும். கடுமையான துறவை வலியுறுத்தியதும், தொல்பழைய சடங்குகளை நிராகரித்ததும், ஆடல் பாடல், போன்ற நுண்கலை உணர்வுகளை ஏற்றுக்கொள்ளாததும், புலால் உணவை முற்ரிலுமாக மறுத்ததும், பாண்டிய, சோழப்பேர்ரசுகள் வேத நெறிக்கு ஆதரவு அளித்ததும் சமண மதம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடையக் காரணங்களாயின.

தகவல்பண்பாட்டு அசைவுகள்- தொ.பரமசிவன்

சனி, 15 செப்டம்பர், 2012

அனுமன் வாலில் வைத்த நெருப்பு....

அவரோட பயோடேட்டா ஈமெயில் வைத்திருக்கிற எல்லாருக்கும் வந்திருக்கும், இதை பர்வார்டு செய்ய்ங்கள் என்ற வேண்டுகோள் வேறு, இவ்வள்வு படிப்பா, பட்டமா என்றெல்லாம் ஆச்சரியப்பட்டு இந்தப் பதவிக்கு பொருத்தமான ஆள்தான் என்று எண்ணச்செய்தார்கள். சில ஆண்டுகள் கடந்தன. அப்படியெ நிலைமை தலைகீழ் பேஸ்புக், டிவிட்டற் அமெரிக்க ஜர்னல்கள் என எல்லா ஊடகங்களும் கேவலப்படுத்தின. அவர் மன்மொகன் சிங் தான். இதுவரைக்கும் இந்தியாவின் ஒரு தலைசிறந்த பதவியில் இருப்பவர் இவரைமாதிரி இவ்வளவு கேவலப்பட்டதில்லை. படிப்புக்கும் பட்டத்திற்கும் மக்கள் நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகவங்கியில் ட்ரெய்னிங் எடுத்த எபெக்ட் இது.நாட்டின் வளர்ச்சிக்கு டீசல் விலை உயர்வு அவசியம் என்கிறார். மக்கள் அந்த விலை உயர்வால் துயரமடைவார்கள் எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பது தெரியவில்லை.
டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூ கூட்டியதால், இனி பஸ் கட்டண உயர்வை தவிற்கமுடியாது, லாரி வாடகை, டாக்சிவாடகை கூட்டாமல் கட்டுபடியாகாது. அதனால் பால், காய்கறி, பழங்கள், மளிகை எல்லாம் கூடும். ரயில் கட்டணம் உயர்த்தாமல் அதை சரக்கில் ஏற்றிவிடுவார்கள். டீ, காபி, ஒன்னும் அதே விலைக்கு விக்கமுடியாது, மணல், செங்கல், சிமெண்ட் ஏற்கனவே உச்சத்தில இருக்கு. வியாபாரிகள் யாரும் இதை தாங்கப்போவதில்லை. இங்க கொடுக்கிறதை இன்னொரு இடத்தில் பிடிங்கிவிடலாம். அரசு ஊழியருக்குக் கூட பரவாயில்லை டிஏவில் கொஞ்சம் சமாளிக்கலாம். எல்லாம் உழைப்பை மட்டுமெ விற்பவர்கள்தான் தாங்கவேண்டும். உழைப்புக்கும் டீசல் தொடர்பு நேரடியா இல்லயே. இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக இல்லை, ஆனாலும் மக்களை சந்திக்க கொஞ்சம் கூட மன்மோகன்சிங் அரசு பயப்படவில்லை. இந்த விலை உயர்வால் மகிழ்ச்சியடையது ficci, assocham cii மற்றும் உலகவங்கி தான். அவர்களின் சேவகர்களாக பணியாற்றுவதில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் பணியாற்றுவதில் எந்த வெட்கமும் இல்லை, உணர்வும் இல்லை.

மன்மோகன் வைத்த அனுமன் வாலில் தீ வேகமாக இன்றே பரவும்.

பண்பாட்டு அசைவுகள் -நூல் அறிமுகம்.

சோறு ஆக்கும்போது அதில் உப்பு போட்டு சோறாக்குவது எங்க ஊரில் பெரும்பாலான்வர்களின் பழக்கம், ஆனால் மற்ற ஊர்களில் இருக்கிற பழக்கம் சோறு ஆக்கும்போது உப்பு சேர்ப்பதில்லை, உப்பு போடாமல் செய்தால் வெப்பமண்டல பிரதேசத்தில் நீண்டநேரம் கெடாமல் இருக்கும். இதற்கு சமூககாரணியும் இருந்திருக்கிறது தமிழகத்தில். ஒடுக்கப்பட்ட சாதியினர் சோறு உலையில் கொதிக்கும்போதே உப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள், இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாக கருதப்பட்டது. மனிதன் உப்பை பயன்படுத்தக் கற்றுக்கொண்டது தான் முதல் வேதியியல் விஞ்ஞானம். சம்பளம் என்று சொல் உப்பு விளைகிற ‘அளம்’ என்பதிலிருந்து உண்டானது, slarary என்ற சொல் salt என்பதன் அடியாக பிறந்தது என்கிறார்கள்.

தமிழில் உப்புக்கு சுவை என்று பெயரும் உண்டு அதிலிருந்துதான் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு,கசப்பு என்ற சொற்கள் உண்டாகி -யிருக்கின்றன. உப்பிற்கு உணர்வும் இருக்கிறது, உப்பு போட்டுதான் திங்கிறியா? என்று சொல்வார்கள். உப்பு ஒரு மங்கலப்பொருளும் கூட புதுவீடு கட்டி குடியேறிவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் உப்புகொண்டு செல்வது கிராமத்தில் இன்றும் நிலவுகிறது. அதே மாதிரி துட்டி (துக்கம் அனுஷ்டிக்கிற) வீட்டில் உப்பு போட்டு சமைக்கமாட்டார்கள், இறந்தவரோடுள்ள உறவை அறுத்துகொள்கிற அடையாளம் அது. இதுபோன்ற தமிழர்களின் பண்பாடோடுடைய தொடர்புடையவற்றை களஆய்வோடு தமிழகம் அறிந்த பேரா. தொ.பரமசிவன் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற நூல் எழுதியுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு துஷ்டிவீட்டுக்கு சென்றிருக்கிறார், அந்த வீட்டில் திருமணமாகியுள்ள ஒருவர் சாலைவிபத்தில் பலியாகியுள்ளார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஊர்க்காரர்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியே கூடியிருக்கிறார்கள், பெண்கள் வீட்டுக்குள்ளே ஒப்பாரிவைத்திருக்கிறார்கள். அப்போது ஒரு மூதாட்டி வீட்டிலிருந்து வெளியே ஒரு சொம்பு நீருடன் வந்திருக்கிறார், பேசிக்கொண்டேயிருந்த மக்கள் மெளனமானார்கள், ஒருகையில் கொஞ்சம் முல்லைப்பூ வைத்துள்ள மூதாட்டி கூட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு பூவை சொம்பு நீரில் இட்டுள்ளார், மக்கள் த்சொ என்று அனுதாபம் காட்டியிருக்கிறார்கள், இன்னும் தொடர்ந்து இரண்டு, மூன்று பூக்களை தண்ணீரில் போட்டிருக்கிறார். பேராசியருக்கு இது என்ன சடங்கு என்று புரியவில்லை. மெளனமொழியில் உறையாடிய இந்த சடங்கின்மூலம் இறந்தவரின் மனைவி ‘மூன்று மாதம் கர்ப்பம்’ அதற்கு இறந்தவன் தான் காரணம. இன்னும் ஏழு மாதன் கழித்து பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் யார் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்கான சடங்கு அது.

தமிழ் என்ற சொல்லுக்கு நீர், இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற பொருளும் உடையது, குளிர்ச்சியுடையதால் நீரை தமிழர்கள் ‘தண்ணீர்’ என்ற பெயரிட்டார்கள். நீரினால் உடலைத்தூய்மை செய்தல் மட்டும் குளித்தல் இல்லை உடலை குளிர்ச்சி செய்தலே குளித்தல். வெப்பமண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு. இயறகையின் ஆற்றலில் நெருப்பை ஆரியர்கள் போற்றியது போல தமிழர்கள் நீரினை முதன்மைப் படுத்தியிருக்கிறார்கள். தமிழ்ர்கள் வீட்டுச்சடங்கில் ஒரு சொம்பு நீர் இடம்பெறும். (கட்டப்பஞ்சாயத்திலும் சொம்பு நீரா?). மொஹஞ்சதாரோ அகழ்வாய்வில் படிகளுடன் கூடிய நீர்த்துறை இடம்பெற்றிருக்கிறது. அது நீர்ச்சடங்கு செய்கிற குளம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சோறு என்பது நெல்லரிசி சோற்றை மட்டும் குறிக்கவில்லை,கம்பஞ்சோறு, சோளச்சோறூ, குதிரைவாலிச்சோறு என்றும் சொல்கிறார்கள், கற்றாழையின் சதைப்பற்றையும் சோறு என்று சொல்கிறார்கள். ‘சோறும் நீரும் விற்பனைக்குரிய பொருள் தமிழக்த்தில் இருந்ததில்லை. கிராமப்புறங்களில் ஊர்மடத்தில் (சாவடி)வழிச்செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் உறங்கக்கூடாது என்று ஊர்க்காரர்கள் ‘ இரவுச்சோறு’ கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. தமிழகத்தில் சமணம் நிலைபெற்ற காலத்தில் அவர்களின் தானத்தில்( கல்வி, உணவு, மருத்துவம்) உணவு தானமும் ஒன்று. விஜய நகரப் பேரரசு ஆட்சிக்குப் பின்னர் தான் சோறு விற்கப்பட்டு ஆங்கில ஆட்சியில் ஹோட்டல்கள் முளைத்திருக்கின்றன.

சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு பதிலாக ‘மனை’ என்ற சொல்லேயிருக்கிறது. உண்டு, உறங்கி, இனம் பெருக்கும் இந்த இடத்திற்குரியவளே ‘மனைவி’ எனப்பட்டாள். மன்னராட்சி காலத்தில் சாதிவாரியாக வீடுகட்டும் முறை நடைமுறையில் இருந்திருக்கிறது. சுட்டசெங்கலால் வீடுகட்டவும் மாடி எடுக்கவும் வீட்டுத்தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் பிராமணர்களுக்கு மட்டுமெ அந்த உரிமை இருந்திருக்கிறது. நிறைவாசல் சன்னல்கள், சுட்டசெங்கலால் சுவர் பின்புறவாசல் ஆகியவை தனித்தனி உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழகத்தில் அரைக்கால், முழுக்கால் சட்டை அறியப்படவில்லை. ஆங்கிலேயர்கள், நவாபு எனப்படுகிற வட நாட்டு முஸ்லீம்களால் தைத்த சட்டை அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆண்யாயினும் பெண்ணாயினும் உயர்குடிமக்களே முழங்காலுக்கீழே கணுக்கால் வரையிலான ஆடையினை அணிந்திருந்தார்கள். ஏனைய ஆண்களெல்லாம் முழங்கால்வரை தார்ப்பாய்ச்சி அணிந்திருந்தார்கள். இன்று சேலை தமிழர்களின் பண்பாட்டு ஆடை என்று சொல்கிறார்கள். சேலை 15ம் நூற்றாண்டில் தமிழக்த்தில் நடைபெற்ற விஜயநகரப் பேர்ரசு, தெலுங்கு மக்களின் குடியேற்றமும் தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம். இக்காலத்திற்கு முன்னர் ‘புடவை’ என்ற சொல் ஆண்களும் பெண்களும் மேலே அணியும் நீண்ட துணியினையே குறித்தது. சாதிய அமைப்பில் ஓர் இளைஞன் தன் திருமண நாளன்றுதான் பெரியவர்கள்முன்பு தோளில் துண்டு அணிய அனுமதிக்கப்படுகிறான்.பெரியவர்களிடம் பேசும்போது இளைஞர்களின் துண்டோ வேட்டியோ காற்றில் அலையுமாறு நின்ரு பேசுவது மரியாதைக்குறைவு என்று கருதப்பட்டது, அதனல் ஒடுக்கப்பட்டவர்கள் மேல்சாதிக்காரகள் முன்னிம் துண்டை இடிப்பில் கட்டும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

கி.பி. 17ம்நூற்றாண்டுவரை தமிழ்மக்களின் இயற்பெயர்கள் பெரும்பாலும் நான்கு அல்லத் ஐந்து எழுத்துப்பெயர்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஷ, ஸ, ஹ, ஜ, ஆகிய எழுத்துக்கள் உள்ளடக்கிய பெயர்களெல்லாம் உயர்வு தருபவையென்று சமீபத்தில் பத்திரிக்கை, வானொலி, டி.வி மூலம் உருவாகியிக்கிற மா்ற்றம். சாதிவாரியாக பெயர் வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ‘பெயர் சொன்னால் எளிதில் சாதி விளங்கும்’ என்ற நிலை இருந்திருக்கிறது. அமாவாசை, பலவேசம், சுடலை, கழுவன், ஒச்சன், ஆடி, கருப்பன், மாடசாமி, பிச்சை, பேச்சி முதலியவை ஒடுக்கப்பட்டவர்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள். மனுஸ்ருமிதியிலும் பெயர்கள் வர்ணக்கொட்பாடின் அடிப்படியில் வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலோர், கீழோர் என்ற பிரிவு விஜயநகரப் பேரரசு என்ற இந்து சாம்ராஜ்யத்தால் விளைந்தவை. தாலி அணியும் வழக்கம் கி.பி.10ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இருந்ததில்லை. ‘தாலியறுத்தான் சந்தை’ என்ற ஊர் குமரிமாவட்டத்தில் உள்ளது. தோள்சீலைப் போராட்ட காலத்தில் நாயர்கள் போராடிய சாதி பெண்களின் தாலிகளை அறுத்தனர். அதன் காரணப்பெயரில் ஊர் விளங்குகிறது.

தீபாவளிப் பண்டிகையும் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசு கொண்டுவந்த திருவிழா,சமண மதத்தின் 24ம் தீர்த்தங்கரரான் வர்த்தமானரின் இறந்த நாள் தான் தீபாவளி. தான் இறந்த நாளை வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரார் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார். பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நரகாசுரன் அழிந்ததாக தீபாவளிக்கதைகள் குறிப்பிடுவது மகாவீரர இறந்த நாளை ஆகும்.பிள்ளையார் கி.பி. 6ம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தக்கடவுள் வழிபாடு மாராட்டியத்தில் தென்பகுதியில் சித்பவனப் பிராமணர்கள் இடையே தோன்றியது. பின்னர் கீழைச்ச்ளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலைகொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் பரவியது. விநாயகர் என்பபடும் பிள்ளையார் வழிபாடு, வியாபாரம் செய்த சாதியார் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


பறையர்கள் எனப்படுவோர் தமிழகத்தின் தொல்குடிகளுள் ஒரு பிரிவினர் ஆவர். பறை எனும் தோற்கருவியின் அடையாளமாக இச்சொல் பிறந்திருக்கிறது. தோலைப் படுத்தத் தேவைப்படும் மூலப்பொருள்கள் சுண்ணாம்பு, அதை சேகரித்து காளவாசிலி இட்டுச் சுடுகின்ர பறையர் ‘சுண்ணாம்புப்ப்றையர்’ எனப்பட்டனர். வர்ணகோட்பாட்டில் மான் தோல் தவிற்த்து எல்லா தோல்களும் தீட்டுகுரியவை, எனவே இந்த வேலையை செய்பவர்கள் ‘இழிந்த’ சாதி ஆக்கப்பட்டனர். பறையர்கள் சில சாதியினருக்கு சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளார்கள். ‘பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீச்சாதியானான்’ என்னும் சொல்லடை தென்மாவட்டங்களில் வழங்கி வருகிறது. சிவபெருமான் சாபம் கொடுத்த கதை ஒன்று. திருவாரூர்க் கோவிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த் அவேள்வியின் பயனாக சிவபெருமான் ஒரு பறைமகன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில்போட்டுக்கொண்டு வேள்விக்கூடத்திற்கு வந்துவிட்டார். “பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டுவிட்டது’ என்று கத்திக்க்கொண்டே யாகம் செய்த பார்ப்பனர்கள் வெளியே ஓடிவிட்டனர். சீனங்கொண்ட சிவபெருமான்’ நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்தாரம். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு கெஞ்சியிருக்கிறார்கள். மனம் இரங்கிய சிவன் நிரந்தரமாக பறையன் ஆக்குவதற்குப் பதில் மத்தியானம் ஒரு நாளிகை நேரம் பறையர்களாகிவிடுவார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்; என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னும் ஏராளமான பண்பாட்டு தகவல்கள் நிறைந்துள்ள நூல் ‘ பாண்பாட்டு அசைவுகள்’, பெளத்தம், சமணம் தமிழகத்தில் செய்த மாற்றங்கள் என்ன என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

அநாமதேயர்கள் வழங்கிய நிதியா?



அநாமதேயர்கள் வழங்கிய நிதியால் அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பிவழிகிறது என்ற செய்தி வந்தது. adrindia.org என்ற இணையதளத்தில் அரசியல் கட்சிகளின் வருமானம்,  வரவு- செலவு கணக்கு வெளியிட்டுள்ளார்கள். 2001- 02 முதல் 2008-09 வரையிலான நிதியாண்டில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக வும் முறையே ரூ1500 கோடி, 750 கோடி பணம் கையிருப்பில் உள்ளதாகவும் மூன்றாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வசம் மேலே குறிப்பிடப்பட்ட நிதியாண்டில் ரூ338 கோடி இருப்பதால் அந்த கட்சிகள் மாதிரி சிபிஎம் கட்சியும் ஊழல் செய்து சம்பாதித்தது என்ற ஊடகங்கள் சொல்ல வருகிறார்கள். சாதாரண மக்களைவிட ஊடகத்துறைக்கு இடதுசாரிகளின் அரசியல் அமைப்பு பற்றி அதிகம் தெரிந்திருக்கும். அவர்கள் இதுவரை இந்தியாவின் பெருமுதலாளிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியோ, கட்சி நிதியோ பெறவில்லை. பிறகு எப்படி இத்தனை கோடி ரூபாய் உங்களிடம் இருக்கிறது என்பதன் மூலம் மற்ற கட்சிகள் மாதிரி இவர்களும் ஊழல்வாதிகள் தான் என்கிறார்கள்.
 
முதலில் பணம் கொடுத்தவர்கள் யாரும் அநாமதேயர்கள் அல்ல, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சட்டத்தில் ரூ 20000 க்கும் அதிகமாக நிதிஅளிப்பவர்களின் பட்டியல்தான் சமர்பிக்கவேண்டும். அந்தப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகமாக வசூலாவது தொழிலாளர்களிடமிருந்து தான் இயற்கையாகவே நிதியளித்த 98 சதவீதம் பேர் சட்டத்திற்கு அநாமதேயர்கள்.



காங்கிரஸ், பாஜக, அல்லது பிற முதலாளித்துவ கட்சிகள், பிராந்திய கட்சிகள் எப்படி பணம் வசூலித்தன என்பது குறித்த ஆராய்ச்சியை நாம் அலசவேண்டியதில்லை. அந்த கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் அடிக்கிற கொள்ளைகள் தினந்தோறும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. தேர்தலில் அதிகபணம்  செலவு செய்து வெற்றிபெற்று பின்னர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு மந்திரிபதவியை பேரம்பேசி வாங்கி சொத்துகுவிப்பது, நாட்டின் இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு உள்நாட்டு, பன்னாட்டு பெரிய நிறுவனக்களுக்கு தாரைவார்த்து அதன் மூலம் கட்சியின் கஜானாவையும் அதிகமாக சொந்த கஜானாவையும் நிரப்பிவருகிறார்கள் என்பது கண்கூடு. இடதுசாரிக் கட்சியான சிபிஎம் மீது வைக்கப்பட்டுள்ள புகாருக்கு விளக்கம் அளிப்பதே நம் கட்டுரை.

ADRINDIA நிறுவனத்தின் இன்னொரு அட்டவணையில் சிபிஎம்  2007-08 மற்றும் 2008-09  நிதியாண்டில் மட்டும் லெவியாக ரூ.45.51 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. Voluntory Contribution  ஆக இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55 கோடி ரூ பெற்றிருக்கிறது என்கிறது. இந்த  Voluntory Contribution  ஐ எந்த பெரு முதலாளிகளிடமிருந்து பெருவதில்லை என்ற கொள்கையில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. 2009ம் ஆண்டு கணக்கின்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் 5 சதவீதம் கட்சிக்கு மாதந்தோறும் வழங்கவேண்டும் , அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் பொருந்தும். கட்சியின் மிகப்பெரிய நிதி ஆதாரம் அதன் உறுப்பினர்கள் தரும் லெவிதான், இதுபோக வருடந்தோறும் கட்சி உறுப்பினர்கள் கட்சிநிதி வழங்கவேண்டும். தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறுதொழில் செய்வோரிரமிருந்து கட்சிவளர்ச்சிக்கு நிதி பெறுகிறார்கள். ADR India சொல்கிற மாதிரி ரூ.20,000 க்கும் அதிகமாக கட்சிக்கு நிதி வழங்கியோர் 2 சதவீதம் தான், அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு வருடந்தோறும் கணக்குகளை முறையாக வழங்கிவருவது இடதுசாரிகள் மட்டும் தான். மடியில் கணமில்லையென்றால் வழியில் என்ன பயம்.
சமீபத்தில் மறைந்த சிபிஎம் மாநில செயலாளர் வரதராஜன் அவர்களுக்கு குடியிருக்க சொந்தவீடு கூட இல்லை. ஆனால் கட்சி ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அலுவலகம் வைத்துள்ளது. இன்னொரு விசயம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு யாரும் வாடகைக்கு இடம் தரமாட்டார்கள், அப்படியொரு பிரச்சாரம். அதனால் சொந்த கட்டிடத்தின் தேவை, அன்றாடம் கட்சிப்பணிக்காக இயங்குபவர்கள் ஒதுங்குவதற்கு இடம் தேவை. சொந்த நலனைவிட கட்சியின் நலன்தான் முக்கியம் என்று நினைக்கும் இடதுசாரிகள் கட்சிக்கு இடம், சொந்தகட்டிடம் கட்டுகிறார்கள், மற்றவர்கள் கட்சியின் பணத்தை தலைவரின் பணமாக மாற்றி அதை ஒரு டிவியில் முதலீடு செய்து அது சொந்த உழைப்பு என்று வாழ்ந்துவருகிறார்கள். முதலாளித்துவ கட்சிகள் அடிக்கிற கொள்ளையைப் பார்த்துவிட்டு எல்லா கட்சிகளும் ஊழல்தான் அப்படி பொத்தாம்பொதுவாக பேசுவது சமூக நோயாகிவிட்டது. எங்காவது பஸ்ஸிலோ, ரயில் பயணத்திலோ தங்களுடைய அரசியலை பேசமாட்டார்கள் எல்லா அரசியல்வாதிகளையும் சாடுவார்கள். அது எளிது. நான் எந்த அரசியலுக்கு சாய்வில்லை என்று சொல்லும்போது விவாதத்திற்கு அங்கே இடமில்லை, பதில் சொல்வதற்கு தயாராக இல்லை, வெறும் ஒருவழிப்பாதை அல்லது சொற்பொழிவு மாதிரி தான். இது அவதூறுக்கு பதில்.