திங்கள், 23 டிசம்பர், 2013

மாதங்களில் மார்கழி!

மார்கழி என்றாலே அதிகாலை பஜனை தான், அதை வைணவர்கள் தான் தெருத்தெருவாக ஆண்டாளின் திருப்பாவையை பாடுவார்கள். ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்கள் பாடுவார்கள். 1980களில் தான் ஊருக்கு பஜனை என்பது அறிமுகம் ஆகிறது. சம்சாரிகள் ஊர்த்திருவிழா தவிற மற்ற நாட்களில் இன்றைக்குவரை யாரும் கிராமத்துக்கு கோவிலுக்கு பொவதில்லை, அது பூசாரியின் வேலை. இப்போது செவ்வாய், வெள்ளி கிழ்மைகளில் பெண்கள் சிலர் அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

வைணவர்கள் குடும்பம் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும், அவர்களின் சாமி ஒன்றே ஒன்று  தான் அவனுடைய அவதார புருஷ்ர்களையும் அவதாரங்களின் தாரங்களையும் மட்டுமே வணங்குவார்கள். இந்த பிள்ளையார், முருகன், மாரியம்மா, ஈஸ்வரன் என்ற எந்த கடவுளர்களையும் அவர்கள் மதிப்பதில்லை. வைணவம் என்பது தனி மதம், அங்கே சேர்ந்துவிட்டால் அவர்களுடைய தோள்களில் திருமாலின் சங்கு, சக்கரச் சின்னங்களை பதித்துவிடுவார்கள். அதற்குப் பின் அவர்கள் புலால் சாப்பிடக்கூடாது, சிலர் சின்னவெங்காயம், பூண்டு கூட சமையலில் சேர்க்கமாட்டார்கள். அவர்களின் ஷேத்திரயாத்திரை யாவும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் தான் இருக்கும். பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாடல்களை அவர்கள் பாடுவார்கள், நாலாயிர திவ்யபிரபந்தம் என்ற நூல் மிக முக்கியமானது. வைணவம் என்பது அது தமிழகத்தில் வள்ர்ந்த மதம், அது மைசூர், திருவிதாங்கூரையும் உள்ளடக்கியது வைணவத்தை சோழர்கள், பாண்டியர்கள் ஆதரித்திருக்கிறார்கள். பனிரெண்டு ஆழ்வார்கள் அனைவரும் தமிழில்தான் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

1980களில் கிராமத்திற்கு இடைசெவலிலிருந்து ஒரு பாகவதர் வந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கொவிலுக்கு ஆடித்திருவிழா வசூலுக்கு வருவார். அவருடன் நான் பல வீடுகளுக்குச் செல்வேன், 50பைசா, 1 ரூ, 2ரூ என சில்லரைகளில் வசூலாகும். கிராமத்திலிருந்து ஆண்டாள் கொவிலுக்கு வைணவர்களைத் தவிற வேற யாரும் பொனதில்லை, ஆண்டாள் கோவிலில் சில பஜனை கோஷ்டிகளில் கானத்தை பார்த்த வைணவர்கள் நம்மூரிலும் அதேமாதிரி பஜனை கோஷ்டியை உருவாக்க நினைத்தார்கள். அப்படியே ஒரு மார்கழி மாதத்தில் அந்த ஊர் பஜனை கோஷ்டியை அழைத்துவந்து ஊரில் பாடவைத்தார்கள். மக்களுக்கும் ஆர்வம் பெருகியது. அந்த பஜனை கோஷ்டியின் ஆசிரியரை வரவழைத்து பாடல்களும், அதற்கு நடனமும் கற்றுத்தர ஏற்பாடாயிற்று.

பல வாரங்கள் பயிற்சி நடைபெற்றது, எல்லோரும் எளிதாக ஆடும்படியான நடனம் தான் அதிகம், சில பாடல்களுக்கு மட்டும் நடனம் மாறுபடும். அதை அதிக சிரமேற்கொண்டு ஆடவெண்டும். பாடுவதற்கு எல்லோருக்கும் வராது, சிலர் வசனம் போல் வாசிப்பார்கள். அதற்கு ஒரு ஆசிரியர் தேர்தெடுக்கப்பட்டார், இது தவிற ஆர்மொனியம், ஜால்ரா என எளிய இசைக்கருவிகளும் இருக்கும். ஆடுவதற்கு நிறைய இளைஞர்கள் இருந்தார்கள், காலில் சலங்கையும் அணிவார்கள். சிறுவர்களுக்கு காலில் சலங்கை கட்டி ஆடவேண்டும் என்ற ஆசையிருக்கும் ஆனால் வாய்ப்பு கிடைக்காது. நானும் அப்போது சிறுவன் தான். மார்கழி தொடங்கியதும் பஜனை தொடங்கியது.


ஊரை கிழக்கும் மேற்குமாக பிரிக்கும் நீளமான தெருவில் பஜனையின் பயணம். பஜனைக்கென்று ஒரு சிறிய மடம் அந்த வீதியில் யாராவது ஒரு அறையை அந்த மாதத்திற்கு மட்டும் கொடுப்பார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளத்து நீரில் குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு நாமம் எல்லாம் போட்டுக்கொண்டு பஜனை துவங்கும். மார்கழி ஒன்றாம் தேதியில் புதிதில் சுமார் 30 பேர் பஜனையில் பங்கெடுப்பார்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கழண்டிவிடுவார்கள், ஏகாதசி அன்று விமரிசையான பஜனை இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிற பஜனை அதிகாலை வரை நீடிக்கும், அன்று விளம்பரத்திற்காகவும் விட்டுப்போனவர்கள் அநேகம்பேர் வருவார்கள். ஏகாதசி மார்கழியின் துவக்கத்தில் வந்துவிட்டால் பங்கெற்போர் மிகவும் குறைந்துவிடுவார்கள். பள்ளிச்சிறுவர்கள் அதிகமாக வருவார்கள். பஜனைக்காக போட்ட நாமத்தை அழித்துவிட்டுத்தான் பள்ளிக்கு செல்வார்கள். பஜனை கோஷ்டி தெருவெங்கும் சுற்றிவந்தவுடன் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து வந்த பிரசாதத்தை கொடுப்பார்கள். அதற்காக சில குழந்தைகள் மார்கழியின் அதிகாலை குளிரை பொருட்படுத்தாது வருவார்கள்.

சில வருடங்களுக்குப்பின் கார்த்திகை மாதம் மாலைபோடும் சீசன் வந்தது, ஒன்று ஐயப்பனுக்கும் மற்றொன்று திருச்செந்தூர் முருகனுக்கும். வசதியானவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள், மற்றவர்கள் முருகனுக்காக மாலை போடுவார்கள். மாலை பொடும் சீசன் வந்ததும் பஜனை டல்லடிக்க ஆரம்பித்தது. பஜனை கோஷ்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக குறைந்துவிட்டார்கள். ஒரு மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் அவன் பஜனையில் பாடினான், அதனால் நல்ல மார்க் வாங்கினான் என்பார்கள். கிராமத்தில் இப்போது பஜனை நடப்பதாகத் தெரியவில்லை. அந்த பாடல்களும் நடனமும், வாத்தியங்களும் தொடரவில்லை.

என்னுடைய பெற்றோர் 1980களில் இறுதியில் வைணவத்தில் சேர்ந்தார்கள், எனது தந்தை வைணவத்தில் சேர்வதற்கு என்னுடைய பெரியப்பாவும் அவர் சாப்பிட்ட சீக்குவந்த நாட்டுக்கோழிக்கறிக் குழம்பும்யும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஏதாவது பண்டிகை நாட்களில் ஆழ்வர்களின் பாடல்களை பாடுவார்கள், வாசிப்பதே பாடுவது போன்று. அவர்களுடன் சேர்ந்து வாசித்ததில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி என சில பாசுரங்கள் மனனம் செய்திருந்தேன். ஒரு சமயம் பெற்றோர் வைணவத்தில் சேர்ந்ததற்கு பின்னர் நானும் வைணவத்தில் சேர்ந்து அந்த முத்திரை குத்திக்கொள்வதாக இருந்தேன், அச்சமயங்களில் அசைவ உணவுவகைகளை தவிற்த்திருந்தேன். தச்சு வேலை செய்ய வந்த ஆசாரி ஒருவர் கருவாட்டுக் குழம்பைவைத்து என் எண்ணத்தை சீரழித்துவிட்டார்.

ஆனாலும் வைணவத்தின் மீதான பற்றுதல் நீங்கவில்லை, சென்னை வந்த பின்பும் சில ஆண்டுகள் மார்கழி பஜனையும், கடைசிச்சனி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. நூலகம் சென்றேன், எந்த புத்தகத்தை வாசித்தேனென்று தெரியவில்லை சாமிகளை விட்டு விட்டு பெரியார் கட்சிக்காரர்கள் பேசும் கூட்டத்திற்கு சென்று அங்கிருந்து இடதுபக்கம் திரும்பிவிட்டேன்.
 

வெள்ளி, 20 டிசம்பர், 2013

Run for Unity?

ஒற்றுமைகான ஓட்டம் என்ற பிரச்சாரத்தை மோடியும் பாஜக பரிவாரமும் செய்வது வேடிக்கையாக உள்ளது. சமீபத்திய தேர்தல்கள் மூலம் அவர்களின் வாக்குவங்கி வட இந்தியாவில் முன்னைவிட அதிகரித்திருக்கிறது. தென் மாநிலங்களிலும் படித்த நடுத்தர வர்க்கத்து மக்கள், சாதியில் மேல்சாதியினரும், இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்களும் இன்று இட  ஒதுகீட்டை தேவையில்லை என்று சந்தர்ப்பவாத அணுகுமுறையுடனும் பாஜகவின் பிரச்சார பீரங்கிகளாக மாறியுள்ளனர்.

90களில் தமிழகத்தில் சாதியை அடிப்படையாக வைத்து நடந்து அரசியலை புறந்தள்ளிய மத்தியதர வர்க்கம் இன்று அரசியலில் மதத்தை புகுத்தி மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிற வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிறார்கள். இவர்கள் ஒரு சாரார் மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் மிகுந்த ஊழல் கட்சி என்றும் சோனியாவின் குடும்ப ஆட்சி என்றும் , மோடியின் தலைமையில் குஜராத் அபரிதமான வள்ர்ச்சி கண்டுள்ளது அதற்காக மத்தியிலும் மோடியின் தலைமையை ஆதரிக்கிறார்கள்.

மற்றொரு பிரிவினர், அப்பட்டமாக சிறுபான்மை மீது துவேஷ அரசியலை நடத்துவது பாஜக என்பதாலேயெ அவர்களை ஆதரிக்கிறார்கள். பன்முக கலாச்சாரம் மிக்க சமூகத்தில் சிறுபான்மையினருக்கெதிராக  மதத்தை வைத்து மக்களை ஒருமுகப்படுத்தும் அரசியலை வெக்கமின்றி ஆதரிக்கிறார்கள். விடுதலைப்போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி என்பது பல்வெறு சித்தாங்கள் கொண்டவர்களையும் பிணைத்த இயக்கமாக இருந்தது. சோசலிச லட்சியத்தையுடைய நேருவும், நிலப்பிரபுத்துத்தை ஆதரித்த படேலும் காங்கிரசில் இருந்தார்கள். பாஜகவினர் இன்று படேலை முன்னுறுத்தி நேருமீது அவதூறு கிளப்புகிறார்கள். இதிலிருந்து படேல் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் பெரும்பான்மை மதவெறி மகாத்மாவைக் கொன்றது, நேரு 1952 தேர்தலில் வகுப்புவாதத்திற்கெதிரான பிரச்சாரத்தை செய்தார் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்குப்பின் சமரசமில்லாத பெரியதொரு பிரச்சாரம்  காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் செய்யவில்லை. அப்படிப்பட்ட தலைவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள்.

தேர்தலில் பாஜக 1952லிருந்து 1977 வரை குறிப்பிட்ட வாக்குகளை பெறாவிட்டாலும் அதன் வளர்ச்சி மெளனமாக பெருகி வந்துள்ளது. பெரும்பான்மை இந்துக்கள் மத அடிப்படையில் அணிதிரளாமல் இருந்தார்கள், இப்போது அதன் சதவீதம் அதிகரித்துவந்துகொண்டே இருக்கிறது. சமூகத்தில் சிறு பிரச்சனை கூட மதமோதலை உருவாக்கி அதை வாக்குகளாக மாறும் உத்தியை பாஜக கையாளுகிறது.

படேலை ஏன் முன்னிறுத்துகிறார்கள்! அவர் நேரு அமைச்சரவையில் துணைப்பிரதமராக இருந்தபோது எடுத்த சில நடவடிக்கைகளை ராமச்சந்திர குஹா எழுதிய  `காந்திக்குப்பிறகு இந்தியா` நூலிலிருந்து...

படேலின் உள்துறை அமைச்சகச் செயலர் மற்றதுறை செயலர்கள் கவனத்துக்கு என கடிதங்கள் எழுதினார்..... பாகிஸ்தான் உடனான உறவில் தற்போதுள்ள சூழலில் அவசரமும் முக்கியத்துவமும் பெறும் ஒரு அம்சம் இது. குறிப்பாக இந்திய யுனியனுடைய காஷ்மீர் மற்றும் ஹைதராபத் விஷ்யங்களிலான கொள்கையால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு பகுதியினரின் பரிவு குறைந்து, திவிரமாக பாகிஸ்தான் பக்கம் மிகுந்து வருவதற்கான சான்று அதிகரித்து வருகிறது. அத்தகைய அரசு ஊழியர்கள், (ரகசியச்) செய்திகளை எதிர்த்தரப்பிற்கு அனுப்ப பயனுள்ள வழிகளாக இருப்பார்கள். குறிப்பாக அவர்கள், தம் உறவினர்களின் செல்வாக்குக்கு எளிதில் உட்படக்கூடும்.

அரசின் முஸ்லீம் ஊழியர்கள் சிலர், இந்த வகையினராக இருக்கக்கூடும்.நிர்வக அமைப்பில் அவர்கள் அபாயகரமான ஓர் அம்சமாக அமைவார்கள் என்பது தெளிவு. எனவெ அவர்கள் வசம் முக்கியமான, தனிபட்ட ரகசியப் பணிகள் எதுவும் ஒப்படைக்கக்கூடாது. அவர்கள் முக்கியமான பதவிகளில் இருக்கக்கூடாது. இதற்காகத் தங்கள் அமைச்சகத்தில் உள்ள, மற்றும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களிலும், இந்திய டொமியனுக்கு விசுவாசக் குறைவாக இருந்து, நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக்கூடும் என்று கருதப்படுவோரது பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்க வெண்டுகிறேன். இந்த பட்டியல்கள் கருத்துடன் தயாரிக்கப்படவெண்டும். துறைத்தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகள் இவற்றைச் சரிபார்க்கவேண்டும். அத்த்கையோர் முக்கியமான, பொறுப்பான பதவிகள் வகிக்காமலும் முக்கிய, தனிப்பட்ட ரகசியப் பணிகளைக் கையாளாமலும் இருப்பதர்கு மட்டுமே இந்த்ப் பட்டியலைப் பயன்படுத்தவெண்டும்.

இதனால தவறாக யாரும் பழிவாங்கப்படக்கூடாது என்பதையும் நிஜமாகவே சந்தேகம் ஏற்படுத்துவோர் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படவெண்டும் என்பதையும் நான் சொல்லத்தேவையில்லை. உண்மையாக விசுவாசம் உள்ளவர்களுக்கும் திருப்திகரமாகப் பணியாற்றுபவர்களுக்கும், பிற பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்குத் தரும் வாய்ப்புகள் அனைத்தும் தரப்படவேண்டும்.

செயலர் ஒருவரது கடிதம் அமைச்சரின் அனுமதியில்லாமல் சுற்றுக்கு விடப்பட்டிருக்காது. இன்றளவும் அரசாங்கபணியிடங்களில் சிறுபான்மையினரின் பங்கு ஏன் குறைந்திருக்கிறது என்பதற்கு இந்த கடிதத்தின் சாராம்சமே ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

Madiba ! Son of Africa....


நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்துகிறார்கள், அவர் நீண்ட நாட்கள் சிறையிலிருந்தார் என்பதற்காகவா, தென் ஆப்பிரிக்காவின் விடுதலையின் ஆதர்சநாயகனாக இருந்தார் என்பதலா, நிறவெறிக்கு எதிராக மக்களை திரட்டி போராடியதற்காகவா எல்லாவற்றிற்க்காகவும் தான். அதற்கு மேலே!

நெல்சன் மண்டேலா விடுதலையடிந்த 1991க்குப்பின் அரசியல் இயக்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது, நாட்டின் 80 சதவீத கறுப்பின மக்களின் ஒற்றைக்குரலாக ANC  என்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விளங்கியது, நூற்றாண்டுகளாக 20 சதவீதற்கும் குறைவான வெள்ளையர்கள் மற்றும் ஆப்பிரிகான்ஸ் இனமக்கள் பூர்வகுடிகளை ஒடுக்கிவந்தார்கள், அதற்கு எதிர்வினையாக வெள்ளையர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுமோ என்று அஞ்சிய சூழ்நிலையில் மண்டேலா, இனி தென் ஆப்பிரிக்காவில் பல இனங்கள் இணங்கி வாழும் சமாதானம், ஜனநாயகம் தான் எங்கள் அரசியல் என்றார்.

காந்தியின் அகிம்சை வழியில் ஏ.என்.சி. போராட்டப்பாதை அமைந்தது. உலகின் எந்த நாட்டிலும் சொந்தமக்கள் தென் ஆப்பிரிக்கர்களைப் போல் நிறவெறியையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்திருக்கமாட்டார்கள். அவர் 1994 தேர்தலில் வெற்றியடைந்ததற்கு பின்னால் நாட்டின் 80 சதவீத நிலங்களையும் செல்வங்களையும் வைத்திருந்த வெள்ளையர்களும் ஆப்பிரிகான்ஸ்களும் எங்கே ஆட்சி மாறினால் தங்களிடமிருந்த நிலங்களை பறித்துவிடுவார்களோ , நாம் புறக்கணிக்கப்படுவோமோ என அஞ்சினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்தார். 1995ம் ஆண்டு உலகக்கொப்பை ரக்பி விளையாட்டை தென் ஆப்பிரிக்காவின் வெற்றி என்பது அந்த நாட்டின் மக்களை ஒற்றுமை கொள்ளச்செய்தது. தேசத்திற்கு விளையாடிய வீரர்கள் அனைவரும் வெள்ளையர்கள் அவர்களுக்கு அவநம்பிக்கையே இருந்தது. நெல்சன் மண்டேலா அந்த வீரர்களை உற்சாகப்படுத்தினார், அதைப்போல் கறுப்பின மக்களும் அந்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார்கள்.

நெல்சன் மண்டேலா மிகவும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது, ரக்பி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது. மக்கள் தங்கள் நிறங்களை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

விளையாட்டை மக்கள் ஒற்றுமைக்கு பயன்படுத்திய மாமனிதர் Madiba!

சனி, 14 டிசம்பர், 2013

நிறவெறி vs தீண்டாமை

தீண்டாமை என்பது மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சிந்தனையை கற்பிப்பது அதை ஒரு மதத்தின் சித்தாந்தம் வலியுறுத்துகிறது.

நிறவெறி என்பது வெள்ளைநிறம் உயர்ந்தது, ஆளப்பிறந்தது கறுப்பு என்பது அடிமைகளின் நிறம், சிந்திக்க தெரியாத மனிதர்களின் நிறம் என்ற கருத்தியலை தென் ஆப்பிரிக்காவில் முதலில் வெள்ளையர்கள் விதைத்தார்கள்.

இந்தியாவில் தீண்டாமையுடன் நிறமும் சேர்ந்துகொண்டது, உலகின் முதல் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா என்கிறது மனித இனங்களை ஆய்வுசெய்கிற விஞ்ஞானம்! இந்தியாவில் பூர்வகுடிகள் கறுப்பர்களே! தோலின் நிறம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறதொ அங்கே கலப்பு நடந்திருக்கிறது என்று பொருள். மனிதர்கள் கறுப்பு நிறத்தை யாரும் விரும்புவதில்லை அதைவைத்து அழகு கிரீம்களின் சந்தை விரிந்துகிடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் உச்சம் என்னவென்றால், ஒரு தாய் தந்தைக்கு பிறந்த குழந்தை மாற்று நிறமாக இருந்தால் பிரித்து வைக்கப்படும்.
தீண்டாமை என்பது அந்த சாதி தம்பதியருக்கு பிறந்த குழந்த அதே சாதிதான் . இனக்கலப்பு நடைபெறாமல் தடுத்து அகமண முறை நீடித்திருப்பதில் சாதயடிப்படையின் நோக்கங்களில் ஒன்று.

SKIN என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு வெள்ளைக்கார தாய் தந்தைக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன, முதல் குழந்தை அசல் வெள்ளையினம், இரண்டாம் குழந்தையின் நிறம் கறுப்புமல்ல, வெள்ளையுமல்ல, மாநிறம். ஆனால் முகஜாடை வெள்ளையினமல்ல என்று காட்டிக்கொடுத்துவிடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 1950 களில் நிறவெறி உச்சத்தில் இருந்த காலகட்டம் அந்த தம்பதியினர் தங்கள் வெள்ளையல்லாத இரண்டாவது  குழந்தையை தங்கும்விடுதியுடன் கூடிய  பள்ளியில் சேர்க்க கொண்டுசெல்கிறார்கள் , பள்ளியில் பிறப்புச்சான்றிதழ் அடிப்படையில் அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகள் அவளை வித்தியாசமாக பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அவளை வெறுக்கிறார்கள். ஒருமுறை வாய்ப்பாடு உரக்கச்சொல்லவில்லை என்று அடிஅடியென்று அந்த பிஞ்சுக்குழந்தையை அடிக்கிறார் வெள்ளை ஆசிரியர். பள்ளியில் அக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள், அவள் வெள்ளையினமா? கலப்பினமா? கறுபினமா? என்று. முடிவு அவள் நிறத்தவர் அதாவது கலப்பினம் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். மேலும் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நீக்கி விட்டுக்கெ கொண்டு போய் விட்ட்டுவிடுகிறது பள்ளி நிர்வாகம். அக்குழந்தை கெட்கிறது ஏன் என்னை பள்ளியிலிருந்து நீக்கினீர்கள் என்று, நிர்வாகம் உனது பெற்றோரிடம் கேட்டுக்கொள் என்று சொல்லிவிடுகிறார்கள்.

அந்த பெற்றோர் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், விசாரணையில் அந்தத் தாய் நான் இக்குழந்தைக்கு கருவுறும்போது எனது கணவருக்கு எந்த துரோகமும் இழைக்கவில்லை, அந்த கணவனும் நான் தான் இக்குழந்தையின் தந்தை என வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஒரு மனிசாட்சியுள்ள வழக்குறைஞர் அக்குழந்தைக்காக வாதிடுகிறார். நம் ஆப்பிரிக்கான்ஸ் மக்களிடம் கறுப்பினத்தின் ஜீன்கள் இருக்கின்றன, அதன் மூலம் பரிசுத்த வெள்ளைத் தம்பதிகளுக்கும் கூட நிறத்தவர்கள் (கலப்பினம்) பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார். வழக்கு வெற்றியடைந்தாலும் சமூகத்தில் அந்த பெற்றொர்கள் படும் அவதி கொஞ்சமல்ல. ஒரு ஹொட்டலோ, துணிக்கடையோ அது வெள்ளையருக்கென்றால் அக்குழந்தைக்கு இடமில்லை. இந்த சமூக விலக்கலால் அவள் வெள்ளையர்களை வெறுத்து அவள் வீட்டு கறுப்பின வேலைக்காரனை காதலிக்கிறாள். அவளுடைய தந்தை ஒரு இந்து மேல்சாதியின் மன்நிலையில் அக்காதலை வெறுக்கிறார். ஆனால் மகளின் காதலை தடுக்க முடியாமல் அவள் கறுப்பனை திருமணம் செய்துகொள்கிறார்.

கறுப்பர்கள் வாழ்கிற சமூகத்தில் அவள் வாழ்ந்துவருகிறாள், The urbans Area Act    சட்டப்படி கறுப்பர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. அங்கிருந்து இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள், குடிகார கணவனிடமிருந்து தன் இரண்டு குழந்தைகளோடும் ஒரிரவில் பிரிந்து செல்கிறார். குழநதைகளுடன் தலைந்கருக்கு சென்று அங்கே ஒரு நிறுவனத்தில் வேலைசெய்து வாழ்ந்துவருகிறார், அவளுடைய தாய் தந்தையை 20 ஆண்டுகளாக அவள் சந்திக்கவெ முடியவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிட்டது, ஆனால் தீண்டாமை இன்னும் நீடித்து அறிவியலோடும் பயணிக்கிறது.