சனி, 15 செப்டம்பர், 2012

அனுமன் வாலில் வைத்த நெருப்பு....

அவரோட பயோடேட்டா ஈமெயில் வைத்திருக்கிற எல்லாருக்கும் வந்திருக்கும், இதை பர்வார்டு செய்ய்ங்கள் என்ற வேண்டுகோள் வேறு, இவ்வள்வு படிப்பா, பட்டமா என்றெல்லாம் ஆச்சரியப்பட்டு இந்தப் பதவிக்கு பொருத்தமான ஆள்தான் என்று எண்ணச்செய்தார்கள். சில ஆண்டுகள் கடந்தன. அப்படியெ நிலைமை தலைகீழ் பேஸ்புக், டிவிட்டற் அமெரிக்க ஜர்னல்கள் என எல்லா ஊடகங்களும் கேவலப்படுத்தின. அவர் மன்மொகன் சிங் தான். இதுவரைக்கும் இந்தியாவின் ஒரு தலைசிறந்த பதவியில் இருப்பவர் இவரைமாதிரி இவ்வளவு கேவலப்பட்டதில்லை. படிப்புக்கும் பட்டத்திற்கும் மக்கள் நலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகவங்கியில் ட்ரெய்னிங் எடுத்த எபெக்ட் இது.நாட்டின் வளர்ச்சிக்கு டீசல் விலை உயர்வு அவசியம் என்கிறார். மக்கள் அந்த விலை உயர்வால் துயரமடைவார்கள் எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பது தெரியவில்லை.
டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூ கூட்டியதால், இனி பஸ் கட்டண உயர்வை தவிற்கமுடியாது, லாரி வாடகை, டாக்சிவாடகை கூட்டாமல் கட்டுபடியாகாது. அதனால் பால், காய்கறி, பழங்கள், மளிகை எல்லாம் கூடும். ரயில் கட்டணம் உயர்த்தாமல் அதை சரக்கில் ஏற்றிவிடுவார்கள். டீ, காபி, ஒன்னும் அதே விலைக்கு விக்கமுடியாது, மணல், செங்கல், சிமெண்ட் ஏற்கனவே உச்சத்தில இருக்கு. வியாபாரிகள் யாரும் இதை தாங்கப்போவதில்லை. இங்க கொடுக்கிறதை இன்னொரு இடத்தில் பிடிங்கிவிடலாம். அரசு ஊழியருக்குக் கூட பரவாயில்லை டிஏவில் கொஞ்சம் சமாளிக்கலாம். எல்லாம் உழைப்பை மட்டுமெ விற்பவர்கள்தான் தாங்கவேண்டும். உழைப்புக்கும் டீசல் தொடர்பு நேரடியா இல்லயே. இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக இல்லை, ஆனாலும் மக்களை சந்திக்க கொஞ்சம் கூட மன்மோகன்சிங் அரசு பயப்படவில்லை. இந்த விலை உயர்வால் மகிழ்ச்சியடையது ficci, assocham cii மற்றும் உலகவங்கி தான். அவர்களின் சேவகர்களாக பணியாற்றுவதில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் பணியாற்றுவதில் எந்த வெட்கமும் இல்லை, உணர்வும் இல்லை.

மன்மோகன் வைத்த அனுமன் வாலில் தீ வேகமாக இன்றே பரவும்.

கருத்துகள் இல்லை: