சனி, 27 அக்டோபர், 2012

கணித மேதைகள்

சீனிவாச இராமானுஜன்

கணித மேதை இராமானுஜன் பிறந்தது ஒரு ஏழை குடும்பத்தில். 1887ல் பிறந்த இவர் கும்பகோணத்தில் வளர்ந்தார். தந்தை ஒரு துணிக்கடையில் சிப்பந்தியாகவும் தாயார் வீட்டிலேயெ உணவுவிடுதி நடத்திவந்தார். இராமானுஜன் நான்காம் வகுப்பு படிக்கும் போது வகுப்பாசிரியர் எந்த எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை ஒன்று தான் கிடைக்கும் என்று சொன்னார், அதற்கு “பூஜ்ஜியம் வகுத்தால் பூஜ்யம் கூடவா” என்று கேட்கிறார். ஆசிரியருக்கு சிறுவன் இராமனுஜன் சொன்ன முடிவுறா எண் விடையாகக் கிடைக்கும் என்று சொன்னது புரியவில்லை. அவருடைய தாய் நடத்திய உணவுவிடுதிக்கு சாப்பிடவரும் கல்லூரி மாணவர்களின் கணித புத்தகங்களை ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்து அது கல்லூரி மாணவர்களின் வீட்டுப்பாடத்தை இராமனுஜன் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது, இதற்காகவே உணவு விடுதிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

அரசு உதவியுடன் கும்பகோணத்திலேயே அரசு கல்லூரியில் கல்வி கற்க இடம் கிடைத்தது,  ஆனால் கணிதம் தவிற எல்லாப்பாடத்திலும் தோல்வி. இதனால் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. பிறகு வறுமை, எந்த வேலையும் கிடைக்காமல் ‘கணக்கு’ போடக்கூட காகிதத்திற்குக் கூட பஞ்சம். அப்போது அவருடைய ஆசிரியர் ஒருவர் உதவியால சென்னைத் துறைமுகத்தில் கணக்காளராக வேலையில் சேர்ந்தார். கணிதவரையறைகள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இந்திய கணிதவியல் சமூகத்தின் இதழில் அவருடைய சில ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. தாமஸ் ஹார்டி என்பவரது orders of infinity என்ற நூலை வாசித்துவிட்டு ராமானுஜன் ஹார்டிக்கு கடிதங்கள் எழுதத்தொடங்கினார். கணித நட்பு இராமனுஜத்தை கேம்பிரிட்ஜ் கொண்டுபோய்சேர்த்தது. ஹார்டி இராமனுஜத்திற்கு வெறும் வழிகாட்டியாக மட்டுமில்லாமல் உற்ற நண்பராகவும் விளங்கியிருக்கிறார்.

டாக்டர் சீனிவாக இராமனுஜன் இல்லையென்றால் இன்று நிகழ்தகவு எண் கோட்பாடு (Probablitic number factor) எனும் ஒரு தனித்துறையே கிடையாது என்கிறார்கள். உடல் நலக்குறைவால் 32 வயதிலேயே மரணமடைந்தார். இராமனுஜத்தின் பிறந்த தினமான டிசம்பர் 22 கணித தினமாக இந்தியாவில் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய 125 வது பிறந்த தினத்தையொட்டி 2012ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

ரெனே டெஸ்கார்ட்ஸ்


பள்ளிக்கூட குழந்தைகள் பயன்படுத்தும் x அச்சு மர்றும் y அச்சு கொண்ட வரைபடத்தாளை உருவாக்கியது ரெனே டெஸ்கார்ட்ஸ். இவர் பிரான்ஸில் கி.பி.1616ம் ஆண்டு பிறந்தார்.  பழ்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியவுடன் முன்னோர்கள் விட்டுச்சென்ற கணிதவரையறைகளை அனைத்தையும் படித்து அதிலிருந்து குறைகளை மேம்படுத்த ஆய்வில் இறங்கினார். டெஸ்கார்ட்ஸ் ‘எண்ணை அறியும் சமன்பாடு‘  என்கிற ஒன்றை அடைய முயன்று அறிவுப்பசியோடு இருந்தநேரம் ஜெர்மனி போருக்காக டச்சு இளவர்சர் நெசயுவின் படையில் சிப்பாயாக சேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் அவர் முகாம் காப்பாளர் வேலையை செய்யும் பணியில் மணிக்கணக்கில் கணிதத்திலும் சிந்தனையிலும்  மூழ்கியிருக்கிறார். 1637ல் 'Discourse on the methos rightly conducting the reason' எனும் நூலை வெளியிட்ட அதே ஆண்டில் உலகின் தலைசிறந்த தத்துவப் பேரறிஞர் என்று புகழ்பெற்றார். வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது? அதற்கு கட்டணம் எவ்வளவு என்று வரைபடத்தாள் முறையில் சமன்பாடுகளைப் புள்ளிகளாக்கிப் பின் புள்ளிகளைப் பணமாக எழுதும் முறை டெஸ்கார்ட்ஸ் வழங்கியது தான்.

காரல் பெட்ரிக் காஸ்

1781ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு கட்டட மேஸ்திரியான தன்னுடைய தந்தையின் கூலிக்கணக்கில் சில தொழிலாளர்களுக்குப் போடப்ப்ட்ட தொகையில் தவறு நேர்ந்திருப்பதை மூன்று வயது குழந்தை சுட்டிக்காட்டியது. ஒரு நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு கணக்கிட்டால் குழந்தை சொன்னது சரிதான், பேச்சு வருவதற்கு முன்பே எண்களுடன் விளையாடியதைப் பார்த்து பெற்றோர் பூரித்தனர். அந்த குழந்தைதான் காரல் பெட்ரிக் காஸ் (Carl Friedrich Gauss). பள்ளிக்கூடத்தில் காஸ் அடிப்படைக் கணிதத்தில் சூரப்புலி என்பதை அவருடைய ஆசிரியர்களால் நம்பமுடியவில்லை. அப்போது காஸிற்கு 10 வயதிருக்கும், மாணவர்களுக்கு பொழுது போவதற்காகக் கணித ஆசிரியர் ஒன்று முதல் நூறு வரையிலான எண்களை எழுதி அவற்றை கூட்டிப் போடுமாறு சொன்னார். மூன்றே நிமிடங்களில் தனது சிலேட்டில் 5050 என்று விடையை எழுதிக் காட்டினார், சக மாணவர்கள் சிரித்தார்கள் அவர்களுக்கு மூன்று மணிநேரம் கணக்குப்போட்டும் விடை வரவில்லை. ஆசிரியருக்கும் புரியவில்லை ஏதோ குருட்டுவாக்கில் விடை எழுதியிருக்கிறானென்று 101 முதல் 200 வரையிலான எண்களை செய்யச்சொன்னபோது அதற்கும் சரியான விடை எழுதினான், ஆசிரியர் ஆடிப்போனார்.

கணிதத்திலும் அதன் இணையிலான இயற்பியலிலும் காஸின் பங்களிப்பு அவரி வரலாற்றில் தலைசிறந்த  மேதைகளில் ஒருவராக்கியது. கணிதவியலின் அலகான ‘காஸ்’ அவரது நினைவாக சூட்டப்பட்டதுதான். அடிப்படைகணிதம், லாக்கணிதம் மட்டுமின்றி கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் டேனிஷ் மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார்.  இரு தனித்தனி விசைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது மூன்றாவதாக ஒரு புதியவிசை புதிய திசையில் முளைப்பதை காஸ் கண்டுபிடித்தார்.

தகவல்கள் - “கணிதத்தின் கதை” என்ற நூலிலிருந்து.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கணிதத்தின் கதை


கணிதத்தின் கதை

கணிதத்தை கண்டு பிடித்தவர்கள் யார் என்றால், எழுத்துக்களை கண்டு பிடித்தவர்கள் யாரோ அவர்கள் பெயர் தெரியாத பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பு வாழ்ந்த பழங்குடியினர்கள் தான். அதை பின்னர் வந்த அறிஞர்கள் அதை மேம் படுத்தினார்கள். தேவை தான் கண்டு பிடி ப் புகளின் தாய் என்கிறார்கள், ஆதியில் வாழ்ந்த அந்த மக்களுக்கு தங்களிடம் இருந்த கால்நடை செல்வங்கள் அன்றாட வாழ்க்கை, அவசரத் தேவைகளின் போது பொருட்கள் இத்தனை உள்ளதென எண்ணிவைக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன் புவியில் ஏற் பட்ட தட் பவெ ப் ப மாறுதல்களால் நைல், டைகரீஸ், யூப்ரடீஸ், ஆகிய நதிக்கரை ஓரங்களில் வாழ்ந்த கற்கால வேட்டையர்கள் இயற்கையால் விவசாயம் செய்வதை நோக்கித் தள்ளப்பட்டார்கள். காலங்கள் செல்லச்செல்ல ஒரு தனிப்பட்ட விவசாயி நாட்களை, தட்பவெப்பக் காலங்களை, பயிர்களை மற்றும் விளைபொருட்களை எண்ணி கணக்கு வைத்துக்கொள்ள அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள். நம்மைப் போல் விரல்களின் உதவியைத்தான் நாடியிருக்கிறார்கள். 20 விரல்கள் தானே இருக்கிறது. இருபதுக்கும் மேல் உலகில் எதையும் எண்ணி வைக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்பதை அவர்களால் நம்பமுடிந்திருக்காது அவர்கள் காலத்தில். அந்த இருபதின் சாட்சியாக பிரெஞ்சு மொழியில் எண்பதை குறிக்க quatre-vingt ம், தொண்ணூறைக் குறிக்க quatre-ving-dix என்றும் சொல்கிறார்கள்.

இப்படி சுவாராஸ்யமான கணித்தை பற்றிய தகவல்கள் கொண்ட நூல் கணித்தத்தின் கதை` இதை எழுதியவர், இரா.நடராசன். ஏற்கனவே இவரைப் பற்றி திரு.விஜயன் குறிப்பிட்டிருந்தார். கணிதமேதை இராமனுஜன் பிறந்து இந்த ஆண்டோடு 125 ஆண்டுகள் கொண்டாடும் இந்த வேளையில் கணிதத்தைப் பற்றி இரா.நடராசனே நிறைய புத்தகங்கள் எழுதி அவரை இந்த தருணத்தில் நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். புத்தகங்கள் வருடந்தோறும் இலட்சக்கணக்கில் வெளிவருகின்றன, அவை, நாவல்கள், கட்டுரைகள், சிறுகதை, கவிதை விமர்சனக்கள் என்றொருபக்கம். மறுபக்கம் விஞ்ஞானப் புத்தகங்கள், அறிவியல் வளர்ச்சி, தகவல் தொடர்பு, கணணி மொழி, மருத்துவம், பொறியியல் என பல துறைகளுக்கும் புத்தகங்கள் குவிக்கப்படுகின்றன. ஆனால் கணிதத்திற்கு என்று புத்தகங்கள் பள்ளிகள், கல்லூரிகளின் பாடபுத்தகங்கள், நோட்ஸுகள் தவிற கணிதத்திற்கு ஆராய்ச்சி, காண்டுபிடிப்பு, கட்டுரைகள் என புத்தகங்கள் வருகின்றனவா என்றால் இல்லை என்கிறார்கள் கணித ஆசிரியர்கள். உலகைமாற்றிய புத்தகங்களில் நியூட்டன் எழுதிய `பிரின்சிபியா மேத்தமெடிகா` வும் என்று ஒருமுறை புத்தகவிழாவில் முன்னால் மதுரை மாவட்ட ஆட்சியர்உதயசந்திரன் குறிப்பிட்டார். இந்தியாவில் இப்படி கணித ஆராய்ச்சி புத்தகங்களுக்கு பதிலாக வேத ஜோதிடத்திற்கான கணிதம் தான் எழுதப்பட்டிருக்கிறது.

தற்போதைய 1, 2, 3,.. எங்கிருந்து வந்தது? கிறிஸ்து பிறந்ததற்குப்பின் முதல் ஐநூறு ஆண்டுகள் வரையில் ரோம எண்சார்ந்த கணிதமெ இருந்தது. தற்போதைய எண்முறை பத்தின் மடங்குகளை அடிப்படியாகக் கொண்டது தசமமுறை, ஆங்கிலத்தில் டெசிமல் முறை என்கிறோம். இதைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர்கள் இந்தியர்கள். இதற்கு அரேபிய வணிகர்களும் காரணமாக இருந்துள்ளார்கள். ரோம எண்கள் அதிகபட்சமாக X என்றால் பத்து என்று நினைக்கிறோம், ஆனால் L என்றால் ஐமபது, C என்றால் நூறு, D என்றால் ஐநூறு, M என்றால் ஆயிரம் என்பது பிற்கால இணைப்புகள். மெசபடோமியாவிலும் பாபிலோனியாவிலும் தான் முதல் எண் வ்கை எழுத்துக்கள் அறிமுகமயின எண்களை வடிவங்களாக எழுதிவைக்கும் முறை வந்தது சுமார் கி.மு.2500 ல் என்கிறார்கள். அங்கே ஸெக்ஸாஜெசிமல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முறையை மெசபடோமியர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். அதன் மிச்சமோ 60 ஐ அடிப்படையாகக் கொண்டு இன்றும் நிமிடம், மணித்துளிகள் கணக்கிடப்படுகின்றன. கடைசியில் பூஜ்யத்தை அடைந்தவர்கள் இந்தியர்கள் தான். கி.பி. 628ல் சமஸ்கிருத அறிஞர் பிரம்மகுபதர் தன்னுடைய நூலில் `சூன்யா `வை கொண்டுவருகிறார், அது அரெபியாவிற்கு sifer ஆகச்சென்றது அங்கிருந்து லத்தீனுக்கு Ziphirum என சென்றது, பிற்காலத்தில் கி.[பி. 1491 லியானார்டோ பிபனாசி ஆங்கிலத்தில் ஜீரோவை அடைந்தார்.

அறிவியல் விஞ்ஞானிகள் என்று அறியப்படுகிற பலரும் கணிதத்தை ஆராய்ந்தவர்கள், அவர்களில் ஆர்க்கிமெடீஸ், தாலஸ், நியூட்டன்,பெர்னாலி பிரபலம். ஒவ்வொரு கணித மேதையைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் தனித்தனியாக புத்தகம் வேண்டியதில்லை, 100 பக்கத்தில் சிறந்த கணித அறிஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நூலில் சொல்லியிருக்கிறார். கி.மு. 640ல் பிறந்த தாலஸ் ஒரு சூரியக்கிரகணத் தேதியை முன்பாகக் கணித்து அறிவித்த முதல் விஞ்ஞானி அவர் தான். ஒரு வட்டத்தை இரண்டு பாதியாகப் பிரிக்கும் கோட்டிற்கு `விட்டம்` என்று பெயரிட்டவர் தாலஸ். பிதாகரஸ் தால்ஸின் வகுப்புத்தோழர். பிதாகரஸ் தேற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழில் போதையனார், `ஓடும் நீளம்தனை ஒரே எட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே`` என விளக்கியதாக சில மாதங்களுக்கு முன்பு குழுமத்தில் பார்த்தோம், அதே மாதிரி பிதாகரஸுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலொனியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும் அதற்கு நீருபணத்தை அளித்தது பிதாகரஸ்தான். அறிவியலோ, கணிதமோ நிரூபிக்கப்படவேண்டும். கிரேக்கர்கள் அதைச் செய்தார்கள். JI (பை) யை அடைந்தவர்கள் பிதாகரஸ்வாதிகள் தான் 3.14159 என்ற முடிவுறா எண்ணை 1,240,000,000,000 இலக்கங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.


கணித வரலாற்றில் ஜாம்பவான்கள் என்று மூன்றுபேரை குறிப்பிடுகிறார்கள், அவர்களில் முதலாமானவர் ஆரகிமெடீஸ் மற்றவர்கள் நியூட்டன் மற்றும் காஸ். ஆர்கிமெடிஸின் முதல் கண்டுபிடிப்பு திருகு (screw)என்று அழைக்கப்பட்ட நீள்விட்டக் குழாய்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கிய நைல் நதியிலிருந்து வயல் பரப்புகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம். கணிதத்தின் அடிப்படியில் பொறியியலுக்கு நெம்புகோல் தத்துவம், பளுதூக்கி என இரண்டு பரிசுகளை தந்தார். ஆர்க்கிமெடிஸின் மரணம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது, ரோமாபுரி மன்னர்கள் கிரேக்கத்தின் மீது படை எடுக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஆர்கிமெடிஸ் அளித்த போர்த்தளவாடங்களால் அவர்கள் சைராகுஸை கடல்வழியே நெருங்கமுடியவில்லை. கிரேக்கர்களின் பலவீனம் என்னவென்று பார்த்தார்கள், அது மது. கொண்டாட்ட நாட்களில் மது அருந்தாமல் இருக்கமுடியாது, அப்படி யொரு மதக்கொண்டட்ட நாளில் ரோமானிய தளபதி மார் செல்லஸ் சைராகுஸை பிடித்துவிட்டான். ``ஆர்கிமெடிஸ் நமது விருந்தாளி, உயிர்ரோடு கொண்டுவாருங்கள்`` என்பது தான் தளபதியின் உத்தரவு ஆனால் உணர்ச்சி வசப்பட்ட போர்வீரன் வாளை உருவியபடி ஆர்கிமெடிஸ் மீது பாய்ந்து கொன்றான். அப்பொதும் வீட்டின் வெளிப்பரப்பில் வட்டத்தின் உள்பரப்பிற்கு கணிதவரையறைகளை நிறுவிடமுயன்றார்.

இத்தாலியில் திறந்தவெளியில் கணிதப்போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன, ஆண்டனியோ பியோர், டர்டாக்லியா போன்ற ஜாம்பவான்கள் நாட்கணக்கில் கணித்திற்காக கத்தை கத்தையாக சமன்பாட்டை அள்ளிவீசியிருக்கிறார்கள். வாடிகனில் அரச குடும்பத்திற்கு ஜோதிட வாலையைச் செய்த கிர்லாமோ கார்னடோ கணித ஜாம்பவான்களோடு மோதினார். இவருக்கு வாட்டிகன் நகரத்து போப்பாண்டவரிடமிருந்து ஓய்வூதியம் வந்துகொண்டிருந்தது அந்த அள்விற்கு ஜோதிடத்தில் சூரப்புலி. கி.பி. 1545ல் மேபெரும் கணித ஆவணம் `ஆர்ஸ் மேக்னா ` வை எழுதியுள்ளார் , ஆர்ஸ் மேக்னா என்றால் மாபெரும் கலை என்று பொருள். இந்த புத்தகத்தைப் பற்றியே சுமார் ஐநூறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவ்வளவு சிறப்பான கணிதநூல். இவருடைய மாணவர் லொடுவிகோ பெராரி, சமன்பாட்டு நிரூபரணத்தின் ரகசியத்தை விலைக்கு விற்றுவிடவேண்டும் என்ற குடும்ப யோச்னையை ஏற்க மறுத்ததற்காக பெராரி தனது சகோதரியால் இரக்கமின்றி உணவில் விசம் வைத்துக் கொல்லப்பட்டவர்.


---------இன்னும் அடுத்த பகுதியில் இராமானுஜன் வருவார்.



திங்கள், 15 அக்டோபர், 2012

மீண்டும் சாவேஸ்...



மக்களாட்சியில் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் பெருவாரியான மக்களை தன்பக்கம் ஈர்த்திருக்கவேண்டும். மதவெறி, மொழிவெறி, பிரதேசவெறி, போலியான தேசியவெறியை நம்பி தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் பார்த்திருக்கிறோம். தங்களுடைய ஆட்சியின் கொள்கையால் பெரும்பான்மை மக்கள் பயன்பெற்று மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும் பார்த்திருக்கிறோம். அந்தவரிசையில் சாவேஸ் மக்களின் நம்பிக்கையாக உள்ளார். தென் அமெரிக்கக்கண்டத்தில் சேகுவேராவுக்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நட்சத்திரம் சாவேஸ் என்றால் மிகையில்லை.

நாமெல்லாம் உலகமயத்தின் கொள்கைகளின் நெருக்கடிகளை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அனுபவித்துவருகிறோம். லத்தீன் அமெரிக்கா அப்படியல்ல. ஸ்பானிய காலனி முடிவுக்குவந்தவுடன் அமெரிக்காவின் பொம்மைகளின் ஆட்சிகள் நடபெற்றுவந்த நாடுகள். ராணுவ ஜெனரல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர்களை கொலையும் செய்வார்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஆயுதம் மூலம் முன்றாம் உலக நாடுகளை அடிபணிய வைக்கமுடியாது என்ற நிலைமை வந்தபோது ஏகாதிபத்திய நாடுகளுக்கு உதித்த சிந்தனைதான் சுதந்திரவர்த்தகம். பெயர் வேண்டுமானால் `` சீர்திருத்தம்`` என்ற சொல்மாதிரி இனிப்பாக இருக்கலாம். இந்த சுதந்திர வர்த்தகத்தின் மூலம் மூன்றாம் உலகநாடுகள் தொடர்ந்து கடன்கார நாடுகளாக மாற்றப்படும், அங்கே உற்பத்தியாகும் பொருடகள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்காக. அவையாவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்குபவையாக இருக்கும். இப்படித்தான் 1990 வரை வெனிசுலா ஏகாதிபத்தியத்திற்கு வேட்டைக்காடாக இருந்தது. உலகவங்கியின் பொருளாதாரக் கொள்கைகளின் நெருக்கடிகளை தாங்கமுடியாமல் லட்சக்கணக்கான மக்கள் காரக்கஸின் தெருக்களில் இறங்கி போராடினார்கள். அவர்களுக்கு சாவெஸ் என்ற வழிகாட்டி கிடைத்தார்.

இந்தியாவில் இன்று அரசாங்கம் அமல்படுத்திவருகிற உலகவங்கியின் கொள்கைகளெல்லாம் தென் அமெரிக்க நாடுகளில் சோதிக்கப்பட்டவை. நமக்கு அந்த நாடுகளின் படிப்பினைகள் நல்ல முன்னுதாரணம். எண்ணெய் வளமிக்க நாடுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு 1998க்குப் பின்னர் வெனிசுலாவை இழந்துவிட்டமாதிரி இருந்தது. அதுமட்டுமா தனக்கே சவால் விடுக்கும் அளவிற்கு , எரிபொருள் நிறுவனக்களை தேசியமயமாக்குகிறார். பிடல் போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தென் அமெரிக்க நாடுகளை தனிஅமைப்பாக அணி திரட்டுகிறார். அதன் விளைவாக 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்கட்சிகள் , ராணுவ ஜெனரல்கள் கூட்டுசேர்ந்து சாவேஸுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார்கள். நாட்டின் தனியார் பன்னாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் சாவெஸைக்கு எதிராக பிரச்சாரம் செய்து தன் வர்க்க குணாம்சத்தை காண்பித்தது. கடைசியில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள் நான்கு நாட்களில் சாவேஸ் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றார். சாவெஸ் ஆட்சியை மக்கள் கொண்டுவந்த புரட்சியை the revoultion will not be televised என்ற ஆவணப்படம் http://video.google.com/videoplay?docid=5832390545689805144# காண்பித்தது. தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை எதிர்த்து அமெரிக்காவை பகிரங்கமாக கண்டித்தார்.

அமெரிக்காவிற்கு சென்ற ராஜாங்க மந்திரிகளின் உள்ளாடையை கழைந்ததைக்கூட வெளியில் சொல்லாமல் வாய்மூடிகளாக இருக்கிற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாவேஸ் ஒரு முறை ஐநா கூட்டத்தொடருக்கு செல்லும்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளையும் மருத்துவர்களையும் அமெரிக்க அரசு விமான நிலையத்தைவிட்டு வெளியே விடாமல் தடுத்தது. அந்த சம்பவத்தை சாவேஸ் ஐநா சபையில் வைத்து அமெரிக்காவை கண்டித்தார். லிபியாவின் மீது , சிரியாவின் மீது அல்லது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்துகிற யுத்தம் அநியாயம் என்று தெரிந்தும் வல்லரசுக்கனவுடன் அமைதியாக இருக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் சாவேஸ் யுத்தத்தை கண்டித்தார்.ரெவ்.ராபர்ட்சன் என்ற பாதிரியார் புஷ் க்கு மிகவும் நெருக்கமானவர், புஷ் க்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், அப்போது பேசினார், `வெனிசுலா மீது 20,000 கோடி டாலர் செலவுசெய்து போர்செய்யத்தெவையில்லை சாவேஸை மட்டும் கொலை செய்தால் போதும், அமெரிக்காவிற்குத் தேவையான தடையில்லாமல் எண்ணெய் கிடைக்குமென்றார். இந்தப் பேச்சை ஜார்ஜ் புஷ் கண்டிக்கவில்லை அமெரிக்க மக்கள் கண்டனம் தெரிவித்தபின்பு பாதிரியார் வருத்தம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் பலன்கள் 40 சதவீதம் சாமானியமக்களைச் சென்றடைகிறது. மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. சார்க் அமைப்பு என்பது ஏதோ சம்பிரதாயத்திற்காக கூட்டம் கூடுகிறது, ஒவ்வொரு நாட்டிற்கு அடுத்த நாட்டை பிடிக்கவில்லை எல்லையைச் சுற்றி பதற்றம் தான். ஆனால் சாவேஸ் ALBA என்ற அமைப்பை உருவாக்கி தென் அமெரிக்க நாடுகளை ஓரணியில் திரட்டினார்.அவர்களுடன் பொருளாதார ஒத்துழைப்பை செயல்படுத்தினார். நடந்துமுடிந்த தேர்தலில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பொதுவேட்பாளரை சாவேஸுக்கு எதிராக நிறுத்தினார்கள் ஆனாலும் சாவேஸ் மகத்தான வெற்றிபெற்றார்.