புதன், 13 ஆகஸ்ட், 2014

மணியாச்சி ..வாஞ்சிமணியாச்சி


நான் சொந்த ஊருக்கு ரயிலில் போகவேண்டுமானால் மணியாச்சி ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ பயணம் செய்யவேண்டும். அந்த ரயில்நிலையத்திற்கு ஜங்ஷன் என்பதைத்தவிற எந்த பிரபலுமும் கிடையாது. கருவேல மரங்கள் நிறைந்த கரிசல் காட்டின் நடுவே பக்கத்தில் ஊரே கிடையாது குறைந்தபட்சம் 1 கி.மீ ல் தான் மணியாச்சி கிராமம் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீராவி ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. திருநெல்வேலிருந்து மதுரைக்கு போகிறவழியில் 30வது கி.மீல் மணியாச்சி இருக்கிறது, அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு செல்லவேண்டுமானாலும் மணியாச்சி ரயில்நிலையத்தில்தான் இரண்டு பாதைகளும் இணைகிறது. எத்தனையோ நீராவி ரயில்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சகபயணியான இன்னொரு ரயிலுக்கு காத்திருக்கும், அந்த நேரத்தில் தாகத்திற்கு தண்ணீரையும் நிரப்பிக்கொள்ளும். அங்கிருந்த தண்டவாளங்களில் எரிந்துபோன கரித்துண்டுகளை சாம்பலோடு லோகோ ஓட்டுனர்கள் கீழே தட்டுவார்கள். அதை எடுத்து டீக்கடை பாய்லர்களும் ரயில்நிலையத்தின் கடைகளில் இயங்கிகொண்டிருக்கும். ராகம் போட்டு காப்பி..காப்பி என்று ஜன்ன்லோரம் விற்றுக்கொண்டிருப்பார்கள்.



அந்த ரயில் நிலையத்திற்கு ஒரு வரலாறும் உண்டு.

1911ம் ஆண்டு ஜூன்மாதம் 17ம்தேதி இரண்டு இளைஞர்கள் திருனெல்வேலிருந்து  மதுரை செல்லும் ரயிலில் ஏறினார்கள். ஒருவனுக்கு வயது 23, மற்றவனுக்கு வயது 22. அவர்கள் மேற்குறிப்பிட்ட ரயில்நிலையத்திற்கு ரயில் வந்துசேர்ந்ததும் இறங்கினார்கள். அந்த ரயில்  தூத்துக்குடியிலிருந்து இன்னொரு ரயில் வருவதற்காக காத்திருந்தது. ரயில் நிலையத்தில் பேசிவைத்தபடி ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டார்கள். அதே ரயிலில் திருநெல்வேலியிலிருந்து ஆஷ் என்ற வெள்ளைக்கார கலெக்டரும் இங்கிலாந்திலிருந்து ஐந்துநாட்களுக்கு முன்பு வந்த அவனது மனைவியும் தங்களது குழந்தைகளைக்கான கொடைக்கானல் செல்கிறார்கள். அந்த 23 வயது இளைஞன் வாஞ்சிநாதன், செங்கோட்டையிலிருந்து வருகிறான், திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் காட்டிலாகா பிரிவில் ஒரு குமாஸ்தாவாக வேலைசெய்துவருகிறான். ஆஷும் அவனது மனைவியும் உட்கார்ந்திருந்த முதல்வகுப்பு பெட்டியில் வாஞ்சிநாதன் ஏறினான், குட்மார்னிங் ஆஷ் என்றான்... ஒரு இந்தியன், அடிமை நம்மை பெயர் சொல்லி அழைக்கிறான் என்ற கோபம்கொண்ட போதிலும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, இங்கிருந்து போய்விடு என்கிறான். இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் குறிவைத்து ஆஷ் என்பவனை சுட்டுவிட்டு கீழே இறங்கினான். துப்பாக்கியின் சத்தம்கேட்டும் , ஆஷின் மனைவியின் அலறல் கேட்டும் ஆஷின் பாதுகாப்பு அதிகாரி ஓடிவந்து வாஞ்சியை கட்டிப்பிடித்துக் கொண்டான். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் இருவரும் உருள்கிறார்கள். ஒருவேகம் வந்து அந்த அதிகாரியை நெட்டித்தள்ளிவிட்டு வாஞ்சி ஓட்டமெடுக்கிறான், ரயில் நிலையத்தில் வேலைசெய்வோர், ஆஷின் சிப்பந்திகள் துரத்துகிறார்கள். நடைமேடையிலிருந்த் ஒரு கழிப்பறைக்கு உள்ளேசென்று தாளிட்டுக்கொண்டான் வாஞ்சி. அங்கே கூட்டம் கூடிவிட்டது, ஆனால் யாரும் உள்ளேபோக அஞ்சுகிறார்கள் ஏனென்றால் கைத்துப்பாக்கி வைத்திருக்கிறான்.

சில நிமிடங்கள் கரைகிறது, உள்ளேயிருந்து ஒரு வெடிச்சத்தம்.. பின்னர் கழிப்பறை கதவை உடைத்தார்கள். தன்னுடைய வாயில் சுட்டுக்கொண்டதால் அடையாளம் தெரியாமல் தலை சிதறிவிட்டது. சுடப்பட்ட ஆஷை மருத்துவமனை கொண்டுசெல்ல கொடைக்கானல் செல்லும் ரயிலை திருநெல்வெலிக்கு திருப்பிவிடுகிறார்கள். திருநெல்வேலி சென்று சேரும்முன்ன்ரே ஆஷ் செத்துப்போனான். தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியை ஒரு கூட்ஸ் ரயிலில் ஏற்றி திருனெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். வாஞ்சியுடன் கூடவந்த இளைஞன் அவனது சொந்த மைத்துனன் மணியாச்சி ரயில்நிலையத்திலிருந்து தப்பிஓடிவிட்டான். வாஞ்சியின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. திருநெல்வேலியில் தேசபக்தர்களை கொடுமைப்படுத்தியதற்காகவும், வெள்ளைக்காரர்களை ஆயுதப்புரட்சி செய்து விரட்ட ஆட்கள் சேர்ந்திருக்கிறோம் என்றும் இந்த கொலைக்கான காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தான்.

மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நிலையிலிருந்து வாஞ்சியின் உடலை மூன்று நாட்கள் கழித்து அவரது தந்தை, எனது மகன் வாஞ்சியின் உடல்தான். மூன்று மாதங்களாக அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தன்னைக்காப்பாற்றிக் கொள்ள வாக்குமூலம் கொடுத்தார்.

வாஞ்சிநாதன் திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் படிக்கும்போது கல்யாணம் நடந்துவிட்டது, வாஞ்சிக்கு வயது 18, மனைவி பொன்னமாளுக்கு வயது 8 , பால்ய விவாகம். வாஞ்சி இறந்தபோது வயது 23, பொன்னம்மாள் வாஞ்சி இறந்தபின்னர்தான் பூப்படைந்தார், கல்யாணமாகி 5 வருடங்கள் கழித்து பூப்படைவதற்குள் விதவையானார் பொன்னம்மாள். கன்னியாகவே விதவையான சோகவரலாறு. இந்திய சுதந்திரம்பெற்ற பிறகும் அந்த அம்மாவுக்கு தியாகி பென்ஷன் பல்வேறு காரணங்கள் சொல்லி மறுக்கப்பட்டது 1967ல் பென்ஷன் வழங்க அரசாங்க ஆணைவந்தபோது பொன்னம்மாள் உயிரோடு இல்லை.

வாஞ்சியின் நினைவாக மணியாச்சி ரயில்நிலையம் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் சூட்டப்பட்டது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஆயுதபூஜை


இந்தியாவில் ஆயுதங்களை வழிபடுவதற்கு, நன்றி செலுத்துவதற்கு ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில் எத்தனையோ கருவிகள், பொருடகளை உற்பத்திசெய்வதற்கும், மனித உழைப்பை எளிமைப்படுத்தவும் கருவிகளை படைத்திருக்கிறோம். மனிதசமுதாயத்தின் ஆரம்பகாலத்தில் மற்றவிலங்குகளைப்போல் வேட்டையாடி உயிர்வாழ்ந்திருக்கிறான், விலங்களை கருவிகள் இல்லாமல் உடல்பலத்தில் வேட்டையாடும்போது உடலில் காயம்,உயிரிழப்பும் ஏற்பட்டது அதனால் தொலைவிலிருந்து விலங்குகளை தாக்குவதற்கு அவன் பயன்படுத்திய முதல் ஆயுதம் கற்கள், அந்த கற்களையே பலவிதமாக செதுக்கி வேட்டையாடுவதற்கு பயன்படுதியுள்ளான், பின்னர் வில் அம்பு வை பயன்படுத்தி விலங்குகளை தொலைவிலிருந்தே தாக்கமுடிந்தது. இப்போது எறிந்த அம்புகளை மீண்டும் உற்பத்தி செய்யவேண்டியிருந்தது, அதற்கு மாற்றாக பூமராங் எனப்படுகிற ஆயுதம். விலங்குகளை தாக்கியபின் மீண்டும் மனிதனின் கைக்கு திருப்பிவந்தது.

அதற்கு அடுத்தகட்டமாக விலங்குகளை பழக்கி மேய்ச்சல் தொழிலை செய்தான், அடுத்து பயிர்தொழிலை கண்டுபிடித்து நிலையாக ஓரிடத்தில் வாழ்வதற்கு ஏற்பாடுசெய்தான். கற்கருவிகளிருந்து, செம்பு, இரும்புக் கருவிகளை உற்பத்திசெய்தான். அப்போது இரும்பிலான கோடாரி கண்டுபிடித்தது மிகவும் மகத்தான சாதனை, அதைவைத்து காட்டை திருத்தி பயிர்செய்ய ஏற்ற நிலங்களை உருவாக்க முடிந்தது. இப்படி கருவிகளின் வள்ர்ச்சியோடுதான் மனிதவாழ்க்கை முன்னேறியது.

மனித வாழ்க்கைக்கு அவசியமான அந்த கத்தி, கோடாரி, வாள் என பலவிதமான ஆயுதங்களுக்கு நன்றிசெலுத்த வழிபடும் கடவுள்களின் கையில் ஆயுதமாக கொடுத்தான். அதற்கு வழிபாடுசெய்தான் அதுவே ஆயுதபூஜை.

தந்தை பெரியார் கேட்டார், அன்பே உருவான கடவுள்களுக்கு ஏன் கொலைகார ஆயுதங்கள் என்று. அது பெரியாரியப்பார்வை.

அந்த ஆயுதங்கள் அன்றைய உற்பத்திக்கருவிகள் என்பது மார்க்சியப்பார்வை.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சிதம்பர (ஸ்மரண) நினைவுகள்...........

வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சிதம்பர நினைவுகள்’ கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன், அதை எழுதியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று மலையாள எழுத்தாளர். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருக்கிறார். தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். வம்சி பதிப்பகத்தையும் பவா-ஷைலஜா தம்பதியினரையும் வலைப்பூக்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன், அவர்கள் சம்பாதித்துள்ள் நட்புகளை பார்த்து வியந்திருக்கிறேன், கலை இலக்கியவாதிகள் சங்கமிக்கும் கூடாக 19,டி.எம்.சரோன் விளங்கிவருகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் என்பது பொதுஅடையாளம், எனக்கு நினைவில் வருவது வம்சி பதிப்பகம்.



இதற்கு முன்னர் வம்சி வெளியீட்டில் வந்த கந்தர்வன் சிறுகதைகள், ஜெயமோகன் எழுதிய அறம் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். “சிதம்பர நினைவுகள்” கட்டுரைத்தொகுப்பை வாசிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதே நினைவில் இல்லை, ஏதோ பாலச்சந்திரன் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது போல இருந்தது. பிறப்பால் மலையாளியான ஷைலஜா அவர்களுக்கு மலையாளத்தில் எழுதவோ, படிக்கவோ தெரியாது, தன்னுடைய சகோதரியின் மகள் ஒரு சிறுமியின் மூலமாக மலையாள அட்சரங்களைத கற்றுக்கொண்டு, பயின்று மலையாளத்தில் சுள்ளிக்காட்டின் கட்டுரையை வாசித்து தமிழில் மொழிபெயர்த்ததாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இலக்கியம் படிப்பதற்கென்று வெகுசிலரே அந்நிய மொழிகளை கற்றறிந்திருக்கிறார்கள்.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று எழுத்துக்காரன் எனக்கு ஒரு சாகசக்காரனாகத்தான் தெரிந்தான், கல்யாண்ஜி கூட வாகிக்கும்போது தன்னை பாலச்சந்திரனாக உணர்ந்தாராம். 18 வயதில் கொண்ட கொளகைகளுக்காக சொத்து,சுகம், சோறு என எல்லாத்தை துறந்து வீட்டைவிட்டு வெளியேறினார். தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னுரையில் சொல்வது போல, சோற்றுக்காக வாழ்பவன் மூளை இருப்பதைப் பற்றியே எண்ணமாட்டான், அறிவுக்காக வாழ்பவன் வயிற்றைப்பற்றி கவலைப்படமாட்டான், வறுமைகூட இலட்சியவாதியிடம் தோற்றுப்போகும். இன்னும் சொல்கிறார், கர்ணனை கடவுளுக்கே இரத்ததானம் செய்தவன் என்றும், அவனைவிட ஒருவேளை சோற்றிற்காக தன்ரத்தத்தை விற்று பசிபோக்கவேண்டிய சூழ்நிலையில் இன்னொரு உயிரை காப்பற்றியவனின் இரத்தம் கோபுர கலசங்களில் தெளிக்கப்படும் புனித நீரைவிட சிறந்தது என்கிறார்.

வாழ்க்கையில் சந்தித்த பெரும்பேறுகளை வெளியே சொல்லமுடியும், ஆனால் அவமானங்களையும், இழிவுகளையும், தானே மிருகத்தனமாக நடந்துகொண்டதையும் இவரால் மட்டுமே எழுதமுடிகிறது. மலையாள நாட்டில் திருவோணத் திருநாளில் யாரும் பிச்சை எடுக்கமாட்டார்களாம், ஆனால் அந்த நாளில் வயிற்றுப்பசியால் ஒரு வீட்டில் யாசகம் கேட்டு பிச்சைக்காரனாக சாப்பிடுகிறார், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் தன் கல்லூரியில் பார்த்த கவிஞனா? பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று வியந்து வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்கிறாள்.

கல்லுரியில் சேருவதற்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி கவிதை எழுதிய பணத்திலும், பத்திரிக்கையாளனாகவும் இருந்துகொண்டு படித்தும் வந்தார், அப்போதே காதல் கல்யாணம். மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டிய ஒரு பெண் ஒரு பொறுக்கியோடு ஓடிப்போனாள், அந்த பொறுக்கி வேறயாருமில்லை நான் தான் என்கிறார். படிப்பின் பாதியில் 6 மாதமாக ஹாஸ்டல் பீஸும் கல்லூரி பீஸூம் கட்டாமல் அவமானப்பட்டபோது சுள்ளிக்காட்டின் கவிதை வாசித்த ஜோசப் என்ற அரசியல்வாதி பீஸ்கட்டி படிப்பு தொடர உதவுகிறார்..யாரிடமும் கையேந்தவும், பிச்சைகேட்கவும் வெட்கப்பட்டதேயில்லை என்கிறார்.

பதினெட்டால் வயதில் ஒருவேளை சோற்றிற்காகவும் 5ரூபாய் சம்பள்த்திற்காகவும் நடிகர்திலகம் சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்கம்’ படம் திரையிடப்படுகிறது என்று ஆட்டோவில் சென்று கூவினாராம், அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அதே நடிகர் திலகத்தின் அரண்மனை போன்ற வீட்டில் அவரோடு ஸ்காட்ஸ் விஸ்கி பருகிய அனுபவத்தையும் சிவாஜி நடித்துக்காட்டிய கட்டபொம்மன் ஜாக்சந்துரையிடம் பேசிய வசனத்தை அருகிலிருந்து ரசித்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிய கலகக்காரி என்ற புகழ்பெற்ற கமலாதஸை சந்தித்த தருணங்கள். ஸ்வீடன்நாட்டு அரசவிருந்தாளியாக Gothenburg புத்தகத்திருவிழாவில் சந்தித்த தென்னாப்பிரிக்க தாயை சந்தித்த அனுபவம்.

நோபெல்கமிட்டி சேர்மனோடு ஒருமுறை உரையாடும்போது ஷென் எஸ்மெர்க், பாலச்சந்திரனை ‘இந்த அரங்கிற்கு மீண்டும் ஒருமுறை வருவதற்கான வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வாழ்த்தினாராம். அதாவது நோபெல்விருது பெறுவதற்கு. அதற்கு பாலச்சந்திரன், டால்ஸ்டாய் என்ற இலக்கிய  மாமேதைக்கு வழங்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அற்பமனிதனுக்கு வழங்கினீர்களே! டால்ஸ்டாய் என்ற மகா கலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை அவரோடு ஒப்பிடும்போது மிகவும் சாதாரண எழுத்துக்காரனான நான் ஏற்றுக்கொள்ள்முடியாது என்று பதிவு செய்தாராம்.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது கண்ணீர்துளிகளை செலவிடாமல் கடக்கமுடியாது. தமிழுக்கு அளித்த கே.வி.ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மனித ரத்தத்தின் விலை என்ன?

ஒரு எழுத்துக்காரன் தான் கொண்ட கொள்கைகளுக்காகவும், எழுத்துக்காகவும் வீட்டைவிட்டு பதினெட்டாம் வயதில் விலக்கப்பட்டான். ஒரு பத்திரிக்கையில் பணியாற்றிக்கொண்டே, மேடைகளில் கவிதைவாசித்துகொண்டும் கல்லூரியில் படித்துவந்தான். மிகுந்த பசியோடு அழுக்கு வேட்டியும் சட்டையுமாக திருவனந்தபுரம் தம்பனூரில் ஒரு ஹோட்டலில் நுழைந்து ஒரு மசால தோசை சாப்பிட்டான். கையில் நயாபைசா கிடையாது, கல்லாவில் உட்கார்ந்திருந்த ஐயரிடம், மன்னிச்சிடுங்க கையில காசு இல்ல என்றான். ஊரு,பேரு,எல்லாம் வாஞ்சையோடு விசாரித்த ஐயர் , திருட்டுப்பயலே என்று கன்னத்தில் பளார் விட்டார். உள்ளேயிருந்து ஒருவனை கூப்பிட்டுவிட்டு இவனை உள்ளே கூட்டிட்டு போவென்றார்.

ஹோட்டலின் சமையலறையில் ஒரு சாக்கு வெங்கயாத்தை அவனுக்கு முன்னாள்தள்ளி உரிடா தாயோளி என்றார்கள். எல்லா வெங்காயத்தை உரித்துமுடித்துவிட்டு வீங்கிய கண்களுடன் வெளியே வந்தபோது கல்லாவிலிருந்த ஐயர் , காசில்லன்னா மெடிக்கல் காலேஜ்க்கு போ., ரத்தம் வித்தா காசு கொடுப்பான் என்றார்.

நேராக ரத்தவங்கிக்கு சென்று ரத்தம்விற்க பெஞ்சில் வரிசையிலிருந்தான், ஒரு பாட்டில் ரத்தத்திற்கு பதினாறு ரூபாய் விலையாம்.. 12 ரூபாயில் டிரெனில் ஆலூவா போய்விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.

‘ரத்தம் எங்க வாங்குறாங்கன்னு தெரியுமா’ என்று கட்டம்போட்ட கைலியுடன் ஒருத்தன் வந்தான், எழுத்துக்காரனும் இவனும் அருகருகே இருந்த படுக்கையில் படுத்திருந்து இரத்தம் கொடுத்தார்கள் இல்லை விற்றார்கள். தலா பதினாறு ரூபாய் பெற்றுக்கொண்டு இறங்கினார்கள். கட்டம்போட்ட கைலி அணிந்தவன் எழுத்துக்காரனிடம் தன் கதையைச்சொன்னான். என் தங்கை ஜென்ரல் வார்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். வெளியிலிருந்து மருந்து வாங்க சீட்டு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். கையில் காசில்லை அதனால் இரத்தம் விற்றேன் என்று சொல்லிவிட்டு எனக்கு இங்கிலீஷ் தெரியாது, சரியான மருந்து கொடுக்கிறார்களா என்று பார்ப்பதற்கு என்னுடன்  மருந்துவாங்க உதவிசெய்யமுடியுமா என்றான்,. பல மெடிக்கல்ஷாப் அலைந்தார்கள் கடைசியில் ஒரு ஷாப்பில் மருந்து கிடைத்தது.. விலை 27 ரூபாய், அவனுக்கு தொண்டை அடைத்துவிட்டது. இன்னொரு பாட்டில் ரத்தம் கொடுத்துட்டு வரட்டுமா எனக்கேட்டான்.

எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.

 ‘அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ’

‘ஊருக்கு நாளைக்கு போய்க்கிறேன் இந்தா பணம்’

மருந்துவாங்கிக்கொண்டு அவன் தங்கை படுத்திருந்த ஜென்ரல் வார்டுக்கு சென்றார்கள். அங்கே  அவனுடைய அம்மா, மருந்துவாங்க காசு ஏது?

இதோ, என்னுடைய நண்பர்தான் கொடுத்தார். அம்மாவிற்கு ரத்தம்விற்றது தெரிந்தால் ஆதிரத்தம் சுண்டிவிடுமே!!

இப்படி முன்பின் தெரியாத ஒரு மனிதனுக்கு ரத்தம்விற்ற காசில் உதவியவர் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


புதன், 30 ஜூலை, 2014

அனந்தபுரி

அனந்தபுரி..

இந்த விடுமுறையில் குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்றேன், திருவனந்தபுரத்தில் மிருகக்காட்சி சாலை, பத்மநாபசுவாமி ஆலயம், அருங்காட்சியகம், பூங்கா, சட்டசபை வளாகம், கோவளம் கடற்கரை ஆகிய இடத்திற்கு சென்றோம். நாகர்கோவில் வழியாக ரயிலில் செல்லும்போது அவ்வள்வு பசுமை தென்னை, வாழை, பாக்கு, தேக்குமரங்கள், நீரோடைகள், கால்வாய்கள் காணுமிடமெங்கும் பூமித்தாய் பச்சைப்பட்டாடை உடுத்தியதுபோல.



ரயில்நிலையத்தில் இறங்கியபோது ஒரு தலைநகருக்குண்டான ஆரவாரம் ஏதுமில்லை, ஆட்டோக்காரர்களோ, டாக்ஸிகாரர்க்ளோ, லாட்ஜ் புரோக்கர்களோ யாருமே குறுக்கேவரவில்லை. திருவனந்தபுரம் ரயில்நிலையத்திற்கு இரண்டு வாசல்கள் ஒன்று தம்பனூர் மற்றொன்று பவர்ஹவுஸ் ரோடு. பவர்ஹவுஸ் ரோட்டில் 200 மீட்டரில் பிரிகிற சாலைபஜாரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினோம். நல்ல உபசரிப்பு. ஆட்டோவில் சென்றால் மீட்டர் கட்டணம். ஹோட்டல்களில் சீரகம்போட்டு கொதிக்கவைத்த மிதமான சூடுள்ள குடிநீர். சாலைகளில் நான் முந்தி நீ முந்தி என யாரும் வாகனங்களை ஓட்டவில்லை, சாலையோரங்களில் குப்பையோ, பிளாஷ்டிக் பொருட்களோ இறைந்துகிடக்கவில்லை. பேருந்துகளிலோ, பொதுமக்களிடமோ வழிகேட்டால் நிதானமாக சொல்கிறார்கள்.

திருவனந்தபுரத்தைப் பற்றி சமஸ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை அத்தனையும் உண்மை. இரவு சாப்பாடுக்கு அசைவ ஹோட்டலுக்கு போகலாம் என்று கெத்தில் சாஹிப் ஹோட்டலைத் தேடினேன் அதுவும் சாலை பஜாரில்தான். ஜெயமோகன் எழுதிய சோற்றுக்கடன் சிறுகதையைப் பற்றி வம்சி ஷைலஜா அக்கா அறம் நூலில் பதிப்புரையில் குறிப்பிட்டார்கள். அந்த நூலில் சில தனிமனிதர்களின் உண்மைக்க்தைகள் வரும். ஒருவன் கெத்தில் சாஹிப் ஹோட்டலில் சுமார் 5வருடங்கள் காசு கொடுக்காமல் சாப்பிட்டான். அது 1960 களில். மெனு கார்டோ, விலைப்பட்டியலோ கிடையாது. மதியமும் இரவும் மட்டும் தான் உணவு. சாப்பிட்டவர்கள் வெளியோ போகும்போது ஒரு உண்டியல் இருக்கும் அதிலே அவரவருக்கு எவ்வள்வு போடவேண்டுமோ அவ்வள்வு போடுவார்கள். உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் படிக்கும் ஒருவன் பசிபட்டினியால் வாடும்போது கெத்தில்சாஹிப் ஹோட்டலைப் பற்றி கேள்விப்பட்டு அங்கேபோய் சாப்பிடுகிறான். அவனுடைய தாய்கூட ஆக்கியசோற்றில் 4 பேர் சாப்பிடவேண்டும் என்பதற்காக அரைவயிறு தான் சோறிட்டாள் ஆனால் கெத்தில் சாஹிப் கை தின்னத்தின்ன இலையில் சோற்றை போட்டுக்கொண்டேயிருந்தது. அவன் தாயின் கையாக உணர்ந்தான். 5 ஆண்டுகள் சாப்பிட்டு யூனிவர்சிட்டி காலேஜில் படித்து வேலைகிடைத்தவுடன் 20,000 ரூ சீட்டு எடுத்துவந்து அந்த உண்டியலில் போட்டானாம். 1970களில் 20000 ரூக்கு திருவனந்தபுரத்தில் ஒரு வீடே வாங்கலாம். அதற்காக கெத்தில் சாஹிப் நன்றாக உபசரிக்கவும் இல்லை, அவன் எதுவுமே போடாதபோதும் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. அந்த கைகள் சிக்கன்குழம்பு, லெக்பீஸ், ஈரல், என போட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படி ஹோட்டல் நடத்திய கெத்தில் சாஹிப் ஒன்றும் குடிமொழுகி போய்விடவில்லை, சிறப்பாகத்தான் வாழ்ந்தாராம்.

இப்போது ரஹ்மானியா கெத்தில் சாஹிப் என்ற பெயரில் இருக்கிற ஒரு ஹோட்டலுக்கு சென்றேன், அது கெத்தில் சாஹிப்பின் வாரிசுகளா? என தெரியாது, அதே அறத்தை பின்பற்றுகிறார்களா என்றும் தெரியவில்லை.
உள்ளே நாற்காலிகளோ அலங்கார விளக்குகளோ கிடையாது, லேபிள், பெஞ்ச் டைப். இலையில் சப்பாத்தி வைக்கிறார்கள், ஒரு கிண்ணத்தில் சிக்கன் சூப் போன்ற கறி, பின்னர் தேங்காய் எண்ணெயில் வறுத்த சிக்கன் துண்டுகள் , ஈரல்கள், செம்மீன்பொடி இவையெல்லாம் எண்ணிக்கையே கிடையாது எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். ஒரு பிளேட்டுக்கு ரூ180. வாங்குகிறார்கள். ஆனால் பரிமாறியபோது சிக்கன் லெக் பீஸ் மாதிரி இல்லை. காக்காவாக இருக்குமோ என்றால் அதைவிட பெரியது. சராசரி சிக்கன் லெக் பீஸைவிட சிறியது. எப்படியோ சுவை நன்றாக இருந்தது, கூச்சத்தில் சரியாக சாப்பிடவில்லை, ஆனாலும் 180 ரூ.

இரவு 8:45 க்கு சாலை பாஜாரில் கடைகளை அடைத்துவிட்டார்கள். எனக்கு பயமாகிவிட்டது ஏதாவது பிரச்சனையா? என்றால் அதுதான் வழக்கமாம். ஞாயிற்றுகிழமைகளில் எல்லாக் கடைகளும் திறந்திருக்காது. அதுவும் 8 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். திருப்தியோடு வாழ்கிறார்கள் போல.

மிருகக்காட்சி சாலையில் பறவைகள், குரங்குகள் மான்களைப் பார்க்கும்போது கூட பரவாயில்லை, புலியை அடைத்துவைத்த கூட்டில் புலி கோபமாக உலாத்துகிறது. அதன் கண்கள் காட்டைத்தேடுகிறது. நமக்கு காட்சிப் பொருளுக்காக இப்படி விலங்குகளை ஆயுள் சிறை வைக்கவேண்டுமா? அல்லது விலங்குகளை ஓரிரு வருடங்களில் மாற்றிக்கொண்டேயிருக்கலாம்.

பெங்களூர், மைசூர் சென்றபோது அனந்தபுரியை மீண்டும் பார்க்கவேண்டுபோல இருந்தது.

சனி, 19 ஏப்ரல், 2014

உலகத்திரைப்படங்கள் -மிருனாள்சென்


வங்கத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் மிருனாள்சென் முக்கியமானவர், சிறந்த சமூக படங்களை இயக்கியிருக்கிறார். அவருடைய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. 1980 களில் அவர் சர்வதேச திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தன்னுடைய சுயசரிதையில் தனக்குப் பிடித்த திரைப்படங்களையும், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட உலக திரைப்படங்கள் இதோ...

Au Revoir Les Enfants (1987) Louis Malle - french
The Tin Drum (1979) -  Volker Schlöndorff - German ( Based on Gunter gross novel)
The Forgotten Hero (2004) - Shyam Benegal- Hindi
The Passion of Joan of Arc- Carl Theodor Dreyer - French
Aparajito –(1956) - Satyajit Ray- Bengali
Pather Panchali (1955)- Satyajit Ray- Bengali
Ajantrik – Ritwik Ghatak – Bengali
The Great Dictator (1940) – Charlie Chaplin –English
Minamata (1971) -Noriaki Tsuchimoto – Japan
Jour de Fête ("The Big Day 1949) - Jacques Tati. –French
The Kid (1921)  - Charlie Chaplin
London can take it  (1940) - Humphrey Jennings – English
This Land Is Mine ( 1943)  -Jean Renoir  -English

The Battle of Algiers (1966)- Gillo Pontecorvo –French

His knife in the water (1962) - Roman Polański, - Poland

The Hour of the Furnaces (1968) -  Octavio Getino and Fernando Solanas – Spanish 

Harvest: 3,000 Years is a 1976 Ethiopian film directed by Haile Gerima. 

Soleil O (Oh, Sun) is a 1967 French-Mauritanian drama film directed by Med Hondo. 

Arsenic and Old Lace is a 1944 American dark comedy film directed by Frank Capra 

The Loneliness of the Long Distance Runner is a 1962 film,- Tony Richardson- English 

if.... is a 1968 British drama film produced and directed by Lindsay Anderson 

O Lucky Man! is a 1973 British comedy-drama fantasy film –Lindsay Anderson 

Britannia Hospital is a 1982 black comedy film by British director Lindsay Anderson 

Saturday Night and Sunday Morning is a 1960 produced by Tony Richardson.     

Ekdin Pratidin – Mrinal Sen – Bengali 

Arohan (The Ascent) is 1982 Hindi film by Shyam Benegal, 

Stagecoach is a 1939 American Western film directed by John Ford 

The Grapes of Wrath is a 1940 drama film directed by John Ford. 

Chariots of Fire is a 1981 British historical drama film 

First Name: Carmen (French: Prénom Carmen) is a 1983 film by Jean-Luc Godard. 

The negro street – Eugene Palay 

Knife in the Head German is a 1978  German  film directed by Reinhard Hauff 

The Big Parade is a 1925 American silent film directed by King Vidor 

The Fountainhead is a 1949 American film directed by King Vidor 

Beyond the Forest is a 1949 American film noir directed by King Vidor 

War and Peace is the first English-language film – King vidor 

Matadayo 1993 - Akira Kurosawa. – Japan 

Diary for My Children  is a 1984 Hungarian drama film directed by Márta Mészáros. 

Under the Volcano is a 1984 film directed in Mexico by John Huston 

Kaos  is a 1984 Italian drama film directed by Paolo and Vittorio Taviani 

And the Ship Sails On (Italian: E la nave va) is a 1983 Italian film by Federico Fellini. 

Paris, Texas is a 1984 drama film directed by Wim Wenders – English 

The Spanish Earth (1937) - Joris Ivens – Spain 

Kharij  is a 1982 Bengali film by Mrinal Sen. 

The Battle of Chile is a documentary film directed by the Chilean Patricio Guzman 

The Traitor is a 1957 British drama film directed by Michael McCarthy  

The Seven Headed Lion is a 1970 directed by Glauber Rocha 

Antônio das Mortes) is a 1969 Brazilian film directed by Glauber Rocha. 

12 Angry Men is a 1957 American drama film directed by Sidney Lumet 

Mephisto is the title of a 1981 film directed by István Szabó 

Last Year in Marienbad is a 1961 French film directed by Alain Resnais

The Bicycle Thief, is director Vittorio De Sica's – Italian 

The Ballad of Narayama  is a 1983 Japanese film by director Shōhei Imamura 

Nostalghia is a 1983 Soviet/Italian film, directed by Andrei Tarkovsky 

The childhood of ivan 1962 Soviet film directed by Andrei Tarkovsky 

L'Argent ("Money") is a 1983 French drama film directed by Robert Bresson


வெள்ளி, 11 ஏப்ரல், 2014

சாப்ளின் கதை -- 2


 'The Kid' என்ற திரைப்படத்தில் ஓர் தாய் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் பெரிய கனவான் வீட்டுக்கு முன்னால் நின்ற காரின் இருக்கையில் குழந்தையை வைத்துவிட்டு ‘தயவு செய்து அன்புகாட்டுங்கள்’ என்ற சீட்டு எழுதிவைத்து விட்டுப் போய்விடுவார். சார்லியிடம் வந்துசேரும் குழந்தையை வளர்த்து வருவார், குழந்தைக்கு உடல்நலமில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகியபோது அனாதை குழந்தையை வளர்த்துவருகிறேன் என்று சொல்வார், உடனே அனாதை குழந்தைகள் மையத்திலிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும்போது குழந்தையின் உணர்ச்சி ஒரு தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதாக இருக்கும். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை சினிமாவில் காட்சியாக்கியிருப்பார். அனாதை களுக்கான பள்ளியிலும் தொழிலகத்திலும் இருந்த சார்லியையும் ஸிட்னியையும் தாய் ஹன்னா, என்னால் சொந்தவீடு அமைத்துக் கொள்ளமுடியும் என்று அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்தபிறகு குழந்தைகளை அழைத்துச்செல்ல அனுமதி தந்தார்கள். பட்டினியோடு வாழ்ந்தாலும் அம்மாவின் அண்மை சார்லிக்கு பூச்செண்டாக இருந்தது.

அம்மா வீட்டிலிருந்தபடியே தையல் வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்தார். அப்போது சார்லிக்கும், ஸிட்னிக்கும் பொழுதுபோக்கிற்காக நாடகம் நடித்து காண்பித்தார். எங்கிருந்தாவது கிடைக்கும் செய்தித்தாள்களில் இருக்கும் நகைச்சுவையை வாசித்துச் சிரித்து துன்பத்தை போக்குவார். சிலவாரங்கள் கழித்து அம்மாவுக்கு ‘மனநோய்’ வந்ததால் மிகவும் ஏமாற்றமாக போனது. அப்போது சார்லியின் அப்பா இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திவந்தார். அம்மாவை ‘மனநோய் விடுதிக்கு’ அழைத்துச் சென்றவுடன் சார்லியையும் ஸிட்னியையும் அரசாங்க அதிகாரிகள் அப்பாவிடம் கொண்டுசென்றார்கள். அங்கே லூஸி என்ற பெண்மணியும் அவளுடைய மூன்றுவயது மகனும் இருந்தார்கள். வேண்டாத விருந்தாளிகளின் புதுவரவால் லூஸி எரிச்சலடைந்தாள். சிறுவர்களை வேலைவாங்கிக் கொண்டு உணவுகொடுத்தாள். தந்தையைப் போல லூஸியும் பெரிய குடிகாரியாக இருந்தாள். எப்போதும் அவளுடைய அண்மை சிறுவன் சார்லிக்கு பயத்தைக் கொடுத்தது. அங்கிருந்தபடியே பள்ளிக்கு சென்றான். பள்ளிநேரம் முடிந்தவுடன் நேராக வீட்டுக்குவந்து சில்லரை வேலைகளைச் செய்யவேண்டும். ஒருநாள் மாலைநேரம் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது, வெகுநேரம் காத்திருந்தபோதும் யாரும் வரவில்லை. அப்படியே பசியோடு கால்போன போக்கில் நடந்தான், சாலைகளின் ஓரத்தில் விற்கும் உணவுப் பண்டங்களை பார்த்து பசி தீர்த்துக்கொண்டான். திரும்பி வீட்டுக்கு வந்தபோது இரவாகிவிட்டது அப்போதும் பூட்டிய கதவு திறக்கப்படவில்லை. பயத்தில் பசியும் மறந்தான், அருகே இருந்த பூங்காவின் அருகே சாலையோரத்தில் படுத்து உறங்கினான். பிறகு ரோந்துவந்த போலிஸ்காரர்கள் வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்கள்.

அம்மா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள், குறைந்த வாடகையில் ஒருஅறையுள்ள வீட்டை வாடகைக்கு பிடித்தவுடன் லூஸி யிடமிருந்து சிறுவர்களை அழைத்துச்சென்றார்கள். ஸிட்னி பனிரெண்டு வயதில் கப்பலில் வேலைக்குச் சென்றான். அம்மா மனநோய் காலத்தில் தேவாலயத்திற்கு அடிக்கடி சென்றார்கள். அங்கிருந்து சிறுசிறு வேலைகள் கிடைத்தன.  ஜாக்சன் என்பவர் குழந்தைகளை வைத்து சிறிய நாடகக் கம்பெனி நடத்திவந்தார். சார்லியின் தந்தை அங்கே சார்லியை சேர்த்துவிட்டார். எட்டுவயது சார்லி நாடகம் நடிப்பதற்கு இங்கிலாந்து முழுதும் சுற்றிவந்தான். அந்த வேலை கற்றுக்கொள்வதற்கும் பசி இல்லாமல் இருப்பதற்கும் உதவியாக இருந்தது. ஸிட்னி கப்பல்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான். தபால் நிலையத்தில் தபால்களை வீட்டுக்குவீடு டெலிவரி செய்யும் பையனாக வேலை செய்தான். சார்லியின் நாடகவேலை உடல்நலக்குறைவால் நின்றுபோனது. சிறுவர்கள் கிழிந்த ஆடைகளை தைத்து அணிந்துவந்தார்கள், ஸிட்னி தபால் சீருடையை வாரத்தின் விடுமுறை நாட்களிலும் அணிந்துவந்தான்.

1899ம் ஆண்டு, இங்கிலாந்தில் அப்போது யுத்தகாலம். சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாகியிருந்தது. வெளியில் எங்கும் யுத்தம் குறித்த பேச்சாகவேயிருந்தது. அம்மா யுத்தம் குறித்து ஒரு நாள் கூட பேசியதேயில்லை,  வாழ்க்கையே யுத்தமாகத்தானே இருந்தது. அம்மா வெகுநேரம் தையல் இயந்திரத்தில் மூழ்கினார்கள். குளிருக்கு முன்னால் ஸிட்னிக்கு ஓர் ஆடை தயாரிப்பதற்காக அதிகம் உழைத்தார்கள். பீஸ் ரேட்டுக்கு உழைப்பதை sweat shop என்பார்கள். அதிகவேலை வாங்கிக்கொண்டு குறைந்த ஊதியம் தருவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை சாக்குபோக்கு சொல்வார்கள். ஸ்ட்னி வேலைக்குப்போன நாட்களில் அவன் உடையை அடகுவைப்பார்கள், அவன் வரும்போது மீட்பார்கள். ஒரு சமயம் அடகுக்கடைக்காரன் அதை வைத்துக்கொண்டு பணம்தரமுடியாது, கந்தலான துணிக்கு பணம் தரமுடியாது என்றான். அம்மா வாரக்கடைசியில் மீட்டுக்கொள்வேன் என்று கண்ணீர் விட்டார்கள்.

அப்பாவின் உடல்நிலை மிகமோசமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக செய்தி வந்தது. அவர் சிரமப்பட்டு மூச்சுவிட்டார்.சில தினங்களில் தன்னுடைய 37வது வயதில் இறந்துபோனார். சவ அடக்கத்தை செய்வதற்குக் கூட பணம் இல்லை, ஒரு தர்ம் ஸ்தாபனம் சவ அடக்கச்செலவை ஏற்றபோது அப்பாவின் தம்பிகள் கோபப்பட்டார்கள். சவ அடக்கத்தின்போது மலர்வளையங்களை வைத்தார்கள் சிலர் பூக்களை போட்டார்கள். எங்களிடம் இடுவதற்கு ஒன்றுமில்லை, என்னிடமிருந்த மிகவும் பிடித்த கைக்குட்டையைத்தான் போட்டேன். வீட்டில் அடுத்தவேளை உணவுக்கு ஒன்றுமேயில்லை, விற்பதற்காக ஒரு பொருளும் இல்லை. பழைய எண்ணெய் அடுப்பு இருந்தது, அதை விற்று பசி தீர்த்தார்கள். அப்பாவின் உடமைகளை ஆஸ்பத்திரியிலிருந்து கொடுத்தனுப்பினார்கள். அதில் ஒரு ஆரஞ்சுப்பழம், ஒரு கோட், காலுறைக்குள் திணித்த அரை பவுன் நாணயம் இருந்தது. அப்போது கடவுளின் அனுக்கிரகமாகயிருந்தது.

அப்பா இறந்த துக்கச்சின்னமாக கையில் துணி கட்டியிருந்தான், மொத்தமாக பூக்கள் வாங்கி சிறு சிறு கட்டுகளாக பிரித்து விற்பனை செய்தான். துக்கச்சின்னத்திற்காக எல்லாமே சீக்கிரம் விற்பனையானதுடன், சிலர் அன்பளிப்பும் கொடுத்தார்கள். ஒருநாள் மதுக்கடையில் விற்ற வெளியே வந்தபோது அம்மா திட்டினார்கள். அதன்பிறகு சில்லரை விறப்னைக் கடையில் விளம்பரக்காரன் வேலை, மருத்துவரிடம் உதவியாளர் வேலை, வீட்டுவேலை, கண்ணாடி தயாரிக்கும் பவுண்டரியில் வேலை, புத்தகம் விற்பனை வேலை, அச்சகத்தில் வேலை என பல இடங்களில்  உழைத்தான்.  சார்லியின் அம்மாவழி தாத்தா மூட்டுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அம்மா, அடிக்கடி போய் பார்த்துவந்தார்கள். அந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது. அங்கிருந்து பைநிறைய முட்டைகளுடன் வருவார்கள். பசி நாட்களில் அது ஆடம்பரமாக உணர்ந்தார்கள். தாத்தா மருத்தவமனையிலிருந்து குண்மாகி திரும்பிவந்த நாள் மகிழ்ச்சிகரமாக இல்லை, ஏனென்றால் இனி முட்டை கிடைக்காதல்லவா..

                                                                                                                                --தொடரும்

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ




மிகுந்த சிரமத்தோடு கணவனும் மனைவியும் வீட்டில் உள்ள சில மதிப்புள்ள பொருட்களோடு தங்களை எப்படியோ காப்பாற்றிக்கொண்டார்கள்.

ஆனால் அவர்களின் வயதுவந்த மகளைக் காணவில்லை.
அந்தத் தாய் தன்னுடைய, பெண் கைக்குழந்தையை நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டாள்.

எருமை மாடு ஒன்று அவர்களிடம் இன்ருந்தது. கலக்காரர்கள் அதை இழுத்துச் சென்றார்கள். பசுமாடு கலகக்காரர்கள் பார்வையிலிருந்து எப்படியோ தப்பித்தது. ஆனால் அதன் கன்றுக்குட்டியைக் காணவில்லை.
கணவனும், மனைவியும், கைக்குழந்தையும் பசுமாடும் ஓர் மறைவிடத்தில் பத்திரமாக இருந்தார்கள். அப்பொது இருட்டு மிக மோசமாகக் கருத்துக் கிடந்தது. அந்தப் பெண்குழந்தை பயத்தால் அழுதபோது, அதை அசைவற்ற அந்த இரவில் மேளம் கொட்டுவது போன்ற சத்தத்தை எழுப்பியது. தாய் நடுங்கிப்போனாள். விரோதிகளுக்கு இந்தச்சத்தம் கேட்காமல் இருக்கக் குழந்தையின் வாயைத் தன் கையால் மூடினாள். சத்தம் சற்றுக் குறைந்தது. மேலும் பாதுகாப்பிற்க்காகத் தந்தை ஒரு தடித்த சொரசொரப்பான துணியைப் போட்டு அந்த குழந்தையை மூடினார்.
சில நிமிடங்கள் கழிந்தது. திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து கன்றுக்குட்டி ஒன்று கத்தியது. இந்தச் சத்தத்தைக் கேட்ட பசுமாட்டின் காதுகள் சிலிர்த்துக்கொண்டு விறைப்பானது. அதுமிகவும் அமைதியற்ற நிலையில் மேலும் கூழும் நகர்ந்து சத்தமாகத் திரும்பக் குரல் கொடுத்தது. அவர்கள் அதை அமைதியாக இருக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை.

இந்தச் சத்தம் இவர்களைத் தேடிக்கொண்டிருந்தவர்களை உஷார்படுத்தியது. எரிந்து கொண்டிருந்த தீவெட்டி வெளிச்சங்கள் தொலைவில் நிழலாடியது.

அந்தப்பெண் அவளின் கணவரிடம் கோபமாக, ‘’கேடுகெட்ட மிருகத்தை ஏன் நம்மோடு இழுத்து வந்தீர்கள்?’’ என்று கேட்டாள்.


## கோத்ராக்களும், முஸாபர்பூர்களும் நினைவில் நிழலாடியது.