வியாழன், 31 மார்ச், 2011

பகிர்வு-1

எந்தத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பே அரசு நிர்வாகத்தை கையிலெடுத்துக் கொண்டது. காவல்துறையில் உயர் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். வாக்களர்களுக்கு பூத் ஸ்லிப் தேர்தல் ஆணையமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த,எல்லாரும் வாக்களிக்கவேண்டும் என்ற செய்தியுடன் நிறைய விளம்பரங்களையும் தேர்தல் ஆணையம் தயாரித்து அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்கிறது. பொதிகையில் அப்படிப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. சன்,ஜெயா,கலைஞர் போன்ற டிவிசேனல்களில் வருகிறதா என தெரியவில்லை. முக்கியமாக அந்த விளம்பரங்களில் பணத்திற்காக உங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை விற்காதீர்கள் எனவும், மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என செய்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயித்ததைப்போல் நடக்கப்போற தேர்தல்ல தில்லுமுல்லு பண்ணமுடியாம இந்தத் தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி போடுதேன்னு முதல்வர் தேர்தல் ஆணையத்தை திட்டுறாரு. நல்லவேளை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ’பார்ப்பனர்’ அல்லாதவராக இருக்கிறார். இல்லையென்றால் இது பார்ப்பனர்களின் சதி என்று தமிழர்? தலைவர் வீரமணியும் சேர்ந்திருப்பார். மேற்குவங்கத்தில் மம்தா சவுரவ் கங்குலி தேர்தல் ஆணைய விளம்பரத்தில் நடிக்கக்கூடாது ஏன்னா அவரு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்ன்னு குற்றச்சாட்டு. பணம் விநியோகத்தை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் ரெம்ப கறாரா பணம் கொண்டுபோன எல்லாரையும் பிடிச்சாங்க, உடனே அய்யோ பாவம் வியாபாரிகளை பாடாய் படுத்துறாங்களேன்னு கலைஞர் கண்ணீர் விடுறாரு. மத்திய அரசு சில்லரை வணிகத்தில அந்நிய மூலதனத்த அனுமதிச்சப்ப இந்த வியாபாரிங்க கஷ்டமெல்லாம் தெரியல. இப்ப திமுக விற்கு தேர்தல் ஆணையமும் எதிர்க்கட்சியாக மாறிவிட்டது.

மதுரையில் மு.க.அழகிரியின் ஓட்டுக்குப்பணத்தை பார்த்துவிட்டு அதற்கு ‘திருமங்கலம் பார்மூலா‘ன்னு பேரே வைச்சுட்டாங்க. இதப்பார்த்து தான் அமெரிக்கக்காரனுக்கே இந்திய அரசியல்வாதிகளை ஈஸியா விலைக்குவாங்கிறாலாம்னு தெரிஞ்சி 2008ல மன்மோகன்சிங்கை அவன் காப்பாத்தினான். தமிழக்த்தில் நேர்மைக்காக மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஆட்சியர் சகாயம் இவங்கலுக்கு வளைஞ்சு கொடுக்கல,வுடனே ‘மாற்றம் வேணுமின்னா ஓட்டுப் போடுங்க’ ஒரு மாவட்ட ஆட்சியரே சொல்ராறுன்னு பதறுராங்க. அவருடைய நேர்மையை நாமக்கல் வாசிகளிடம் கேட்டா தெரியும். தங்களுக்கு சாதகமாக இல்லாத கண்ணியமான ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை என்ன பாடு படுத்தினாங்கன்னு மக்களுக்குத் தெரியும். தேர்தல் ஆணையம் ரெம்ப கெடுபிடியா இருக்காங்கன்னு வேற எந்த மாநிலத்திலயும் கேரளா, மேற்குவங்கம்,அஸ்ஸாம் அங்கிருந்தெல்ல்லாம் புகார் வரல, தமிழ்நாட்ல தான ஸ்பெக்டரம் காசு புழங்குது அத வச்சு ஜெயிச்சறலாம், இப்ப அதுல மண்ணைபோட்டா கோபம் வரத்தான் செய்யும்.

இன்னைக்கு கருத்துக்கணிப்பு வேற வந்திருச்சு. இதுக்கு ஏன் தேர்தல் ஆணையம் தடை போடலைன்னு தெரியல. இது அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு கருத்துக்கணிப்பு தானே? இந்தியாடுடே,ஹெட்லைன்ஸ் டுடேக்கு கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியா இருக்கிறாங்க இல்லன 44% ஓட்டுவாங்கப்போற திரிணாமூல் கூட்டணி 182 இடத்திலயும் ,அவங்களை விட 1 சதவீதம் கம்மியா வாங்குகிற இடதுமுண்ணனி 101 சீட்லயும் ஜெயிக்கும் சொல்வாங்களா. இன்னைக்கா சொல்றாங்கா,இதுக்கு முன்னாடி நடந்த ரெண்டு சட்டமன்றத்தேர்தல்கள் கருத்துக்கணிப்பிலயும் திரிணாமூல் காங்கிரஸ் தான் வரும்னு அவங்க ஆசைய்ய சொன்னாங்க அது வர்க்க பாசம். இந்தியாவில் இருக்கிற பெருமுதலாளிகளின் சங்கம் ‘FICCI' அதோட தலைவர் அமித் மித்ரா திரிணாமூல் வேட்பாளரா இருக்கிறாரு ஏன்னா அவாங்க அரசியல் அப்படி. திமுக வந்தாலும் அதிமுக வந்தாலும் ஆள்கிற வர்க்கத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்ல. தமிழக முதல்வர் கருணாநிதி இப்ப பத்திரிக்கைகளை எல்லாம் ‘பார்ப்பனர்’ பத்திரிக்கை இது இப்படித்தான் எழுதும்ன்னு சொல்றார். ஜெயலலிதா அராஜக ஆட்சி செய்த போது இவங்க எதிர்க்கத்தான் செஞ்சாங்க, அத வசதியா ‘முரசொலி’ மறந்துபோயிடுது. திமுகவை விமர்சித்த தினமணியின் கார்ட்டூனுக்கு பதில் சொல்லமுடியாம வைத்தியநாத அய்யர்! ஒரு பார்ப்பனர் அப்படித்தான் எழுதுவார்ன்னு சொல்லுது.ஆனந்தவிகடனில் வந்த கலைஞரின் குடும்ப ஆல்பத்தை வெளியிட்டு ஆக்டோபஸ் குடும்பம் என்று கட்டுரை போட்டதற்கு விகடன் குடும்பம் ஒரு பார்ப்பனக்குடும்பம் அதான் அவங்க இன ஜெயலலிதா ஆட்சிக்கு வர ஆசப்படுறாங்கன்னு முரசொலி எழுதுகிறது. ஸ்பெக்டரம் ஊழலை ஊழலே இல்லை ராசா ஜெயிலுக்கு போனபின்னாடியும் இன்றும் முரசொலி அப்படித்தான் எழுதுது. அத வாசிக்கிறவங்களப் பத்தி என்ன நினைச்சாங்களோ? திமுக தொண்டர்கள் அநியாயதுக்கு விசுவாசமா இருக்காங்களே!!!

செவ்வாய், 29 மார்ச், 2011

பகிர்வு

“தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை மனித்தன்மையற்ற செயல்.”

இந்த வரிகளை நாம் பாடநூல்களில் பார்க்கிறோம், இப்படி பாடப்புத்தகத்தில் எழுதுனா தீண்டாமை போய்விடும்னு இந்த அரசு நம்புகிறதா? இதை போக்குவதற்கு அரசு ஏதாவது செய்கிறதா? அட என்னங்க 21ம் நூற்றாண்டுளயும் இன்னும் தீண்டாமை அது இதுன்னு பேசி ஜாதி வித்தியாசத்தை பெரிசுபடுத்துறீங்க?ன்னு சில பேர் கேக்கிறாங்க. தீண்டாமை அப்படி இல்லன பாடப்புத்தகத்திலிருந்து இந்த வரிகளை நீக்கியிருக்கனும். பாடப்புத்தகத்தில் இந்த வரிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு இந்த வரிகளை எந்த ஆசிரியராவது வாசித்து காண்பித்தார்களா, அப்படின்னா என்ன என்று சொன்னார்களா என்றால் இல்லை.

தீண்டாமை இருக்கிறதா என்றால் இருக்கிறது, பல வடிவங்களில். உத்தபுரம் என்ற கிராமம் 2008ம் ஆண்டு செய்திகளில் வருகிறது. அந்த ஊர்ல சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு சும்மா ரெண்டு ஆள் உயருத்துக்கு சுவர் ஒன்று இருக்குது, அதுக்கு மேல இரும்புவேலி போட்டு மின்சாரம் இணைப்பு கொடுத்திருக்குன்னு ‘ஹிந்து’ பேப்பரில் போட்டோவோட செய்தி வந்தது. இந்த சுவர் ஏதோ இயற்கை சீற்றத்திற்கு அரணாகவோ அல்லது வனவிலங்குகள் அந்தப் பகுதிக்கு வந்துவிடக்கூடாதோன்னு அதக் கட்டல. ஒரு சாதி மக்கள பிரிச்சிவைக்கிறத்துக்காக அந்த சுவர் எழுப்பபட்டிருக்கு. தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி முயற்சிஎடுத்து போராட்டம் நடத்தியதால் சுமார் 10 மீட்டர் அள்விற்கு சுவரை உடைத்து பொதுப்பாதைக்கு திறந்துவிட்டது தமிழக அரசு. ஆனாலும் இன்னைக்கும் உத்தபுரம் தமிழ்நாட்ல நிறைய பேருக்குத் தெரியாது. இப்படி சுவர்கள் மூலம் சமீபத்தில் தீண்டாமை நிலவுகிறதுன்னு கோவையிலும், திருச்சியிலும் போராட்டம் நடந்து பின்னர் இடிக்கப்பட்டது.

‘கருக்கு’ நாவலில் எழுத்தாளர் பாமா, தன்னுடைய கிராமத்தையும் தனது வாழ்க்கை அனுபவத்தையும் கதையாக சொல்லியிருக்கிறார். அதில் பறைச்சாதிக்கும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இடையே இடுகாடு பிரச்சனை வருகிறது, அப்போது அரசின் காவல்துறை பணம் இருப்பவர்கள் பக்கம் இருந்துகொண்டு தலித் மக்கள் மீதும் வீடுகள் மூதும் தாக்குதல் நடத்துகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் காவல்துறை தேடுதலால் ஊரைவிட்டே ஓடி மறைந்துவாழ்கிறார்கள். அப்போது பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது, அந்த சமுகத்தில் ஒரு மரணம் நிகழ்கிறது பெண்களே அடக்கம் செய்கிறார்கள். இதே அனுபவம் உத்தபுரத்திலும் நடந்தது. இந்த நாவலைப் படிக்கும் போது மிகுந்த வேதனையடைந்தேன். நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்து தலித்மக்கள் அனுபவித்த இந்த துயரம் எனக்கு அசாதாரணமாகப் படவில்லை எனும்போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. தலித் இலக்கியம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தலித்தாக இந்த ஒடுக்கு முறையை அனுபவித்து அந்த மக்களின் துயரத்தை பொதுவெளிக்கு கொண்டுவருவது தான் தலித் இலக்கியம். கருக்கு நாவல் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

ஒவ்வொரு கிராமத்திலும் ‘கருக்கு’ நாவல்ல பார்த்த சம்பவங்கள் வரலாம், என்னுடைய சிறுவயதில் எங்க கிராமத்தில் ரெண்டு குடிநீர்க்கிணறு இருந்தது, தனித்தனியாக கோயில் அது இன்னும் அப்படித்தான் இருக்கு. இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது, ஏனென்றால் நிலவுடமை தான் தீண்டாமையின் மையம். இன்று அந்த கிராமத்தில் எல்லா சமூகத்திற்கும் நிலமிருக்கிறது. தலித்மக்கள் சுயமரியாதையோடு வாழ்க்கை நடத்தமுடிகிறது.சிறுவயதில் பொதுகிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தேன், அப்போது ஒரு பெண்மணி குடத்துடன் வந்து கிணற்றிற்கு வெளியே நின்று யாசிக்கிறார், யாராவது தண்ணீர் ஊற்றுங்கள் என்று. சில சமயம் அந்தப் பெண்மணி அரைமணிநேரம் கூட காத்திருக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் அந்த பெண்மணி அருந்ததியினர் மக்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தலித் சமூக கிணற்றிலிருந்து கூட நீர் இறைக்க அனுமதி இல்லாத காலம் அது.பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏதோ மனசுமாறி அவங்களுக்கு சரிசமதை அளித்திடவில்லை எல்லாம் அவர்கள் கல்வியாலும் கடின உழைப்பாலும் இன்று முன்னேறியிருக்கிறார்கள். தீண்டாமையால் தலித் மக்கள் மதம் மாறியிருக்கிறார்கள், அங்கும் தீண்டாமை இருக்கிறது என்று தான் அனுபவித்ததையும் நாவலில் எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். கல்வி தான் விடுதலை செய்யும் என்று அனுபவரீதியாக பகிர்ந்திருக்கிறார்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

தேர்தலோ தேர்தல்...

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் மனுத்தாக்கல் முடிந்துவிட்டது,இனி தேர்தல் முடிவுகள் வரும்வரை எந்தக்கட்சியும் அணி மாறமுடியாது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் செய்துகொண்டது கூட்டணியா? அல்லது தொகுதி உடன்பாடா? தெரியல. கூட்டணின்னு சொன்னா அதக்கு ஏதோ __________முண்ணனின்னு பேரு இருக்கனும், ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிடணும், அதுக்கு கொள்கையெல்லாம் ஒண்ணாயிருக்கனும் (இருந்தா).பார்த்தவரைக்கும் மேற்குவங்கத்தில் இடதுசாரி கூட்டணியில எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை ஏன்ன அதுல எல்லாமே இடதுசாரி கட்சிகள். தேர்தல்ல போட்டியிடுவதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் எதை செய்ய்னும் செய்யக்கூடாது எல்லாமே கூட்டா முடிவெடுக்கிறங்க, இங்க அப்படியா. இவங்க எந்த சாரின்னே தெரியாது, எப்பவும் ஆட்சியில பங்கு வேணும் குறிப்பா மத்தியில, அங்க தான அதிகாரம் குவிஞ்சிகிடக்கு.

இலவசங்களை போட்டி போட்டு அறிவிப்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் சளைத்தவர்கள் இல்லை இவங்க ரெண்டு பேருக்கும் தான் கொள்கையளவில ஒத்துப்போகுது. அதாவது ஊழல், குடும்ப ஆட்சி ( அந்தம்மாவோட ஃபிரண்ட் குடும்பமா இருந்தா என்ன?) மதச்சார்பற்ற கட்சி?? திராவிடக்கட்சி, சுயநல அரசியல், தனிமனிதர்களை ஏசி அரசியல் நடத்துவது எல்லாமே ஒத்துப்போகுது. இந்தக் கூட்டணி எப்ப அமையுமோ, நடக்காதுன்னு யாராவது சொல்லமுடியுமா?

தமிழகத்தைப் போல் எந்த ஒரு மாநிலத்திலும் வாக்களர்களையும் குடிமக்களையும் இலவசதிட்டங்களாலும் வாக்குக்குப் பணம் கொடுத்தாலாவது ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிடலாம் என்பது இல்லை. வாக்காளர்களை இந்த அளவற்கு இழிசினர்களாக எந்த நாட்டிலும் கருதுவதில்லை. முறையாக அரசியல் என்பது சமூகசேவை என்பதன் அடிப்படையில் குடிமக்களாகிய நாம் தான் அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு பணம் தரவேண்டும், ஆனால் தலைகீழாக உள்ளது. இலவச டிவி, அடுப்பு, மிக்சி, கிரைண்டர், ஆடு, பசுமாடு அரிசி லேப்-டாப்பு என்ன அவலமான தேர்தல் அறிக்கைகள். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இல்வச டிவியை திருப்பியளித்து முதலமைச்சருக்கே இந்த மாதிரி இலவசம் வேணாம் நீங்களே எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்னு ஒரு விவசாயி சொன்னாரு எந்த ஊர்ய் பேரு ஞாபகமில்லை. நாம அப்படியா இருக்கிறோம் கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்டு (அது மக்கள் பணம் தானேங்கிற வியாக்யானம் வேற) அப்புறம் லஞ்சம் வாங்கறான், அய்யோ ஊழல் செய்றான்னு ஓலம் போடுறது.

ஊரெல்லாம் சாலையோரத்தில் தட்டிவைத்து அதில் “ தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு’ நாமக்கல் கவிஞரின் கவிதையின் முதல் வரிகளை மட்டும் எழுதியிருக்காங்க அடுத்த வரி சொல்லுது “தானம் பெறக்கூசிடுவான் ,தருவது மேலெனப் பேசிடுவான்” திட்டமிட்டு மறைத்து விட்டார்களோ? ஆட்சியதிகாரம் பெறுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாக்க்கு வேண்டும், பதவிக்கு வந்தவுடன் பெரும்பான்மை மக்களின் பர்ஸிலிருந்து பிடுங்கி மிகச்சிறிய குறைந்த எண்ணிக்கையிலான வசதிபடைத்தோருக்காக திட்டம் போடுவது. இப்படி அடியாள்வேலை தானே முதலாளித்துவ அரசியல்! சிந்திப்போம் மாற்றத்தை நோக்கி.....

வெள்ளி, 25 மார்ச், 2011

பற்றி எரியும் மேற்கு ஆசியா...

கடந்த பல வாரங்களாக வட ஆப்பிரிக்கா மேற்கு ஆசியா நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. துனீசியாவில் ஆரம்பித்த மக்கள் எழுச்சி அந்த நாட்டின் ஆட்சியாளர் பென் அலி பாயை சுருட்டிக்கொண்டு (பணத்தையும் தான்) ஓட்டமெடுத்தார், அடைக்கலம் கொடுக்கவே இருக்கிறது சவுதியிருக்க பயமேன்.அதன் தொடர்ச்சியாக எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி நீண்டுகொண்டே சென்று கடைசியில் ஹோசினிமுபாரக் பதவி விலகினார்.எகிப்தில் நடந்த போராட்டங்களுக்கு facebook,orkut,twitter தான் காரணம் என்று பல நாடுகளில் வலைப்பக்கங்களை முடக்கும் வேலையும் நடப்பதாக செய்திகள் வருகின்றன. சொன்னமாதிரி வெறும் இணையவழி உரையாடல்கள் புரட்சியாக மாறவில்லை,கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே எகிப்தின் தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள் பிரசித்திபெற்ற தகிரீர் ச்துக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் 2010ம் ஆண்டில் ஆட்சிக்கெதிராக அதிக அளவு ஆர்ப்பாட்டங்களை அந்த சதுக்கம் கண்டிருக்கிறது. ஏமன், பஹ்ரைன் ஜோர்தான் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த சில மத்தியகிழக்கு நாடுகள் தம் மக்களுக்கு தாட்பூட் சலுகைகளை வழங்கியது.சவுதியில் குடிமக்களுக்கு எத்தனையோ பில்லியன் டாலர்களை சலுகைகளாக இறைத்தார்கள், அங்கு பணியாற்றுகிற இந்திய ஊழியர்களும் இரண்டு மாச போனசை பெற்றிருக்கிறார்கள். இப்படியாவ்து குக்கர் பிரசரைக் குறைக்கலாம்ன் தான்!

லிபியாவில் கடாஃபிக்கெதிராக ஆயுதமேந்தி போராட்டம் ஒருபகுதியில் நடைபெற்றுவந்தது, அவர்களை ஒடுக்கிய கடாஃபிக்கெதிராக மேற்கத்திய நாடுகள் no fly zone போடவேண்டும் என ஐநாவை கேட்டு ,பொருளாதார தடைபோட்டு கடைசியில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.இப்போது லிபியா இன்னொரு ஈராக்காக மாறிவருகிறது என்பதில் ஐயமில்லை. பென்காசி நகரில் கலகம் செய்பவர்கள் அல்-கயிதா என்கிறார் கடாஃபி, ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு யாரை ஆதரித்தால் என்ன எண்ணெய் வளம் கிடைத்தால் போதும் தானே? லிபியாவின் கிழக்கு பிரதேசத்தில் எண்ணெய்வளம் அதிகமாக உள்ளது, எனவே அந்தப் பகுதி கடாஃபியிடமிருந்து மீட்கவேண்டும் முடிந்தால் லிபியாவில் கடாஃபியை தூக்கிவிட்டு வேற ஆட்சியாளரை கொண்டுவரவேண்டும். இது தான் திட்டம்.பென்காசியில் ஆயுதமேந்திய போராட்டக்காரகளுக்கு யார் ஆயுதம் வழங்கியது இதெல்லாம் பார்க்கும்போது ஈராக் நாட்டை ஆக்ரமிக்க அமெரிக்கக் கூட்டாளிகள் செய்யும் தகிடுதத்தம் வேலைதானோ என பார்க்கவேண்டியதுள்ளது. ஆட்சிமாற்றம் கோருகிற கலகக்காரர்கள் நேட்டோ படையை வரவழைக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அந்த நாட்டை பீடித்துள்ள சோகம். லிபியாவில் தோண்டப்படாத எண்ணெய்க் கிண்றுகள் ஈராக்கைப்போல நிறைய உள்ளன. கடாஃபி இருக்கிறவரை அந்த எண்ணெய்வள்த்தை சூரையாடமுடியாது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

லிபிய அதிபர் கடாஃபிக் கெதிராக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் ஐ நா சபையில் கொண்டுவந்த தீர்மானம் வெற்றியடைந்தது. அதே நாள் ஏமனில் அரசுக்கெதிராக போராடியவர்கள் 60பேர் மன்னர் சலாவின் படையினரால் அநியாமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு ஒருநாள் முன்பு பஹ்ரைனில் அரசியல் சாசனத்தை சீர்திருத்தம் செய்யப் போராடியவர்களை மற்ற வளைகுடா படையினரை (சவுதியின் படைகள் என வாசிக்கவும்) வரவழைத்து சொந்தமக்களை ஒடுக்கினர். பாகிஸ்தானில் 44 பொதுமக்களை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது. இதெல்லாம் மனித உரிமைகள் மீறல் என்று ஐநாவிற்கோ உலகத்து ஜனநாயகம் என்றால் என்ன? என்று டியூசன் எடுக்கும் அமெரிக்காவிற்கோ தெரியவில்லை. எகிப்தில் முபாரக் பதவியிலிருந்து இறங்கியவுடன் இந்த பிரதேசத்தில் சவுதிஅரேபியா தான் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக மாறிவிட்டது. அரபு ஒன்றியத்தில் உள்ள ஒரு நாட்டிற்கு எதிராக பல நாடுகள் (வளைகுடா) Nato படைகளை வரவழைத்து ஆக்ரமிக்கச் சொல்கிறது. எந்த அளவிற்கு இவர்களின் ஒற்றுமை இருக்கிறது.

அமெரிக்காவிற்கு, இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக சவுதிஅரேபியா இருந்தால் பிடிக்கும் அதே பாணியில் ஈரான் இருந்தால் பிடிக்காது. பிரிட்டிஷ் பிடியில் இந்தியா இருந்தபோது இந்து-முஸ்லீம் பிரிவினை வைத்தே அரசியல் நடத்திய மேற்குலகம் இப்போது அரபு நாடுகளில் சியா-சுன்னி மோதலைத் தூண்டி அரசியல் நடத்துகிறது. ஈரானை ஒரு சியா நாடாகவும் சவுதியை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்களின் நாடாகவும் அமெரிக்கா பிளக்கிறது. இந்த சதியில் சிக்கிக்கொண்டவர்கள் சகோதர நாடுகளை எதிரிநாடாக பாவிக்கின்றனர்.பஹ்ரைனில் பெரும்பாலான மக்கள் ஷியா பிரிவினர் இயற்கையாக அரசியல் சீர்திருத்த சட்டத்திருத்திர்கு போராடியவர்களை சுன்னி பிரிவினரின் ஆட்சிக்கெதிராக போராடுகிறார்கள் என்று திரிக்கிறார்கள். ஏன் இந்த எண்ணெய் வளம் இங்கு கிடைத்தது என்ற அள்விற்கு வளைகுடா நாடுகள் நொந்து கொள்ளவேண்டியதுதான்.

கிறுக்கல்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எழுதுகிறேன், தினமும் வலைப்பூவின் பக்கம் வந்தாலும் சோம்பலோ, மனக்குழப்பமோ களைப்போ காரணமாக பதிவிடமுடியவில்லை. நான் தொடரும் சில வலைப்பூக்களை தினமும் வாசித்தாலும் கருத்திடமுடியவில்லை.பெப்ரவரி 13ம்தேதி எனது துணைவி பெண்மகவை ஈன்றாள், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணோ பெண்ணோ ‘பாரதி’ யின் பெயரை சூட்டியாயிற்று.

மிகுந்த கூட்டணி கணக்குகள் முடிந்து அரசியல்கட்சிகள் ஒருவழியாக தேர்தல்களம் காணுகிறார்கள், வழக்கமான தேர்தல் போல இந்த தேர்தல் இல்லையென்று செய்திகள் மூலம் தெரிகிறது.தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு அன்பளிப்பு வழங்கமுடியாமல் தவிக்கிறார். காங்கிரஸ் கட்சி சிபிஐ என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி திமுகவை அடக்கிவிட்டது, காங்கிரஸ்காரர்கள் 63 நாயன்மார்களை ஸ்பெக்ட்ரம் உதவியால் பெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதுபோல உக்காந்து யோசிப்பதற்கென்றே நிறைய பேரை அப்பாயிண்ட செய்திருகிறார்கள், அங்கெ எல்லோருமே அப்பாயிண்ட்மெண்ட் மூலம் தானே பதவியில் இருக்கிறார்கள். திமுக அணி எதிர்பார்த்தது போல அதிமுக கூட்டணி சுக்கு நூறாக உடையவில்லை, இந்த தேர்தல் கூட்டணி அமைவதற்குள் நம் அரசியல் கட்சித்தலைவர்கள் எத்தனை இரவுகள் தூக்கத்தை கழித்தார்கள்.ஏப்ரல் 14ம்தேதியிலிருந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்கலாம் இடதுசாரிகள் தவிற்த்து. அவர்கள் கட்சி அலுவலகம் சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பாமக, அதிமுக தேமுதிக திமுக இன்னும் எத்தனையோ தேர்தல் காலத்தில் புதிதாக முளைத்த கட்சிகள் தேர்தல்கள், பதவிகள், காண்ட்ராக்டுகளுக்கு என்றே இயங்குகின்றன, அவர்கள் அரசியல் அப்படி ஏதோ பிரைவேட் லிமிடேட் கம்பெனியில் சேரும் பங்குதாரர்கள் மாதிரி அதன் தலைவர்கள். இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்கள் 10சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் இந்த சுயநல அரசியல்வாதிகளிடம் கெஞ்சவேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை என்றால் மக்கள் offer இருக்கிற கடையைத் தானே மொய்க்கிறார்கள். கடந்த தேர்தலில் நடந்த ஒரு கூத்து, மதுரையில் திமுகவினர் நாளிதழ்கள் வழியாக ஓட்டுக்குப்பணம் கொடுத்திருக்கிறார்கள் அதை கண்டுபிடித்த போலிசில் புகார் செய்த மார்க்சிஸ்ட்கட்சியின் ஆபிசில் பொதுமக்கள்! ரகளை செய்திருக்கிறார்கள் என்ன செய்வது எரிகிற வீட்டில் பிடுங்குவது போல அலைகிறார்கள். நண்பர் ஒருத்தர் இதுக்கு விளக்கம் கொடுத்தார், அதாவது ஊழல் செய்த மக்கள் பணம்தானே யார் கொடுத்தாலும் வாங்குவம் , பிடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுவம் , இப்பிடி யோசிச்சா என்ன பண்ரது. இந்த விவகாரம் அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது நமது அஞ்சாநெஞ்சனின் புகழும் சிதம்பரத்தின் ‘குலக்கொழுந்தின்’ புகழும் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது. பின்னே நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் விலைபோகமாட்டார்களா?

விக்கிலீக்ஸ் புயல் அமெரிக்காநாட்டை ஆட்டிவிட்டு இப்போது இந்தியாவை ஒரு வழி பண்ணுகிறது, இதற்கு ‘ஹிந்து’ நாளிதழ் என்ன பாடு படப்போகிறதோ?மடியில் கணமில்லையென்றால் வழியில் பயமில்லை. ‘ஹிந்து’வின் நேர்மை ‘சாயாத தலை’ மக்களை தெளிவுபெறசெய்தமைக்காக அதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.இதுவரை மன்மோகன்சிங் அரசின் வெளியுறவுத்துறை ஹிலாரிகிளிண்டனின் கட்டுப்பட்டில் இயங்குவது ஆச்சரியம் அளிக்கவில்லை, ஒருவேளை Disinvestmentல் அதை அமெரிக்காவிற்கு கொடுத்தாகிவிட்டதோ? மத்தியமைச்சரவை மாற்றியமைத்தால் அவர்களுக்கு பிடித்தமாதிரி, அத்வானிஜி வெளிய ஒருமாதிரி பேசுறாறு, அமெரிக்கத் தூதர்கிட்ட ஒருமாதிரி பேசுறாரு. அவங்க கொள்கையே அப்படித்தான! முதல் ஐக்கியமுண்ணனி ஆட்சியயின் கடிவாளம் இடதுசாரிகளிடம் இருந்ததால் பிரகாஷ்காரத்தைப் பார்த்து பேசியிருக்காங்க ,அங்க பப்பு வேகுமா, நல்லுறவு வைச்சுக்குவம் தப்பில்லை, அதுக்காக நாட்டை அடகு வைக்கிற மசோதாவை நாங்க அனுமதிக்கமாட்டோம்ன்னு நின்னார். அமெரிக்க கூடஅணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் சொன்னபின்னாடி ஆட்சியை தாங்கிப்பிடிக்க அமெரிக்கத்தூதரக ஊழியரே பட்டுவாடா செய்திருக்கார்ன மசோதாவாலா யாருக்கு பலன்கிடைக்கிற ஒப்பந்தமோ? பின்ன என்ன பன்றது அந்தக் கட்சியை உண்டு இல்லண்ணு பன்ற வேலைதான் இப்ப மேற்குவங்கத்தல மம்தா மாவோயிஸ்ட் மூலமா செய்றாங்க போல.

ஜப்பானில் நடந்த சோகமான நிலநடுக்கம்,சுனாமி ஆபத்து எல்லாத்தையும் விட சுனாமியால் உடைந்த அணுமின் நிலைய ரியாக்டர் வெடித்ததில் ஏற்பட்ட பாதிப்பு தான் அதிக கவலையளிக்கும் செய்தி. இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உடனே பிரதமர் ஆய்வு செய்யனும்னு பாவலா காமிக்கிறாரு, உடனே ரிட்டயரான அணு விஞ்ஞானி அனில் காகோட்கர் தூக்கத்திலிருந்து எ்ழுந்துவந்து அப்படியேல்லாம் இந்தியா அணு உலைக்கு பாதிப்பு வராதுன்னு சொல்றார். ஒருவேளை போபால் மாதிரி வந்தா நம்ம சாகமாட்டம்ன்னு நினைக்கிறாரா? படித்தவன் சூதும்வாதும் செய்கிற காலம் தான! அனல்மின்சாரம் செய்யத்தேவையான கனிமவளம் நம்மிடம் இருக்கிறது, வாய்ப்பு இருக்கிற இடத்தில் நீர்மின் நிலையம் அமைக்கலாம், சூரியசக்திக்கு அரசு மானியம் அளித்து இலவசங்களுக்கு பதில் கலைஞர் அதைக் கொடுக்கலாம் (அதிலஎங்க மானாடா மயிலாட வருது). மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஜெய்தாப்பூரில் மிகப்பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டு நிறுவன் உதவியுடன் 10,000 மெஹாவாட் அமைய உள்ளது, கொங்கன் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதி மட்டுமில்லை விவசாயமும் மீன்பிடியும் அங்கு முக்கிய தொழில். நிலநடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பும் அங்க இருக்கு அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். இங்க சிலர் என்னபன்றது நமக்கு தடையில்லா மின்சாரம் குறைந்தவிலை?யில் வேணுமே சொல்றாங்க. ஐரோப்பா நாடுகளில் அணு உலைகளுக்கு பலத்த எதிர்ப்பு வருகிறது, என்ன செய்ய அதுக்கு தான் third worldன்னு நாம இருக்கமே! தொடர்ந்து பயனிக்கமுடியும் என்ற நம்பிக்கையில்...