திங்கள், 25 ஏப்ரல், 2011

அவதாரபுருஷர் மரிப்பதேன்?

சத்யசாயிபாபா தன்னுடைய 85 வயதில் இறந்துட்டாரு, இங்கேயுள்ள பத்திரிக்கைகள் தினமணி ‘முக்தி அடைந்தார்’ தினமலர் ‘ஸித்தியடைந்தார்’ அப்புறம் இந்த அரசியல்வாதிகள் (இடதுசாரிகள் விதிவிலக்கு)நம்ம பகுத்தறிவில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதியிலிருந்து மோடி, மன்மோகன்சிங், அதவானி, சோனியா,ரோசைய்யா டெண்டுல்கர் ஒருத்தர் பாக்கியில்ல எல்லோரும் ஐயோ 96 வயசு வரைக்கும் இருப்பேன்னு சொன்னாரே இப்படி இடையிலேயெ போயிட்டாரென்னு கவலை படுறாங்க. இப்ப அவரு போனதைப்பத்தி கூட அதிக கவலையில்லை அடுத்த ‘அவதாரபுருஷர்’ யாருங்கிறது இப்ப கவலைப்படுறாங்க.

ஆந்திர மாநிலஅரசு 4 நாட்கள் அரசு துக்கநாட்களாக அனுசரிக்கிறது, இது செக்யூலர் அரசாங்கமா இல்லையா இப்படி அறிவிக்கலாமா? நம்ம நாட்ல ஒரு ஜனாதிபதி பாக்கிகிடையாது (எனக்கு தெரிஞ்சு கே.ஆர்.நாராயணன் விதிவிலக்கு )எல்லாரும் வந்து காலில் விழுகிறது, ஒரு அரசு விழாவாகவே மாறிவிடுகிறது. அதேமாதிரி ஒரு பிரதமர் பாக்கி கிடையாது. அப்ப பாவம் மக்கள் என்ன பண்ணுவாங்க. இங்க சிலபேரு அவரு சாமியாராக இருந்துகிட்டு மக்கள் பணியை செஞ்சிருக்கிறாருன்னு புகழுறாங்க, இந்த அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வெட்கமில்லையா மக்கள்கிட்டயிருந்து எவ்வளவு வரி வரியாப் போட்டு பிடுங்கறேயே ஸ்கூலு, காலேஜூ, ஆஸ்பத்திரி, குடிக்க தண்ணிவசதி பண்ணித்தர முடியலையா? நம்ம பகுத்தறிவாதி பாபாவ சென்னைக்கு குடிநீர் ஏற்பாடு பண்ணியவர் என்று பெருமையோடு சொல்றாரு. இந்த மாதிரி டிரஸ்ட்களுக்கு, மடங்களுக்கு இத்தனெ கோடிக்கணக்காண பணம் எங்கிருந்துவருது அப்படின்னு விசாரிக்காம அவங்ககிட்ட போயி நமக்காக பிச்சை வாங்குறதுக்கு, அதுக்கு உலகவங்கிக்காரனே பரவாயில்லை. இப்படி நீங்க பணம் வாங்குறதுனால இன்னும் அந்தக் கூட்டத்துக்கு ஆள்சேர்த்துவிடுறாங்க.

கஷ்டப்படுகிற மக்களும் அவருகிட்டப் போறாங்க, மக்களுக்கு கஷ்டத்தை உருவாக்குகிற ஊழல்பேர்வழிகளும், பதுக்கல்பேர்வழிகளும் அவருகிட்ட போறாங்க. முன்னாடியெல்லாம் இந்த சாமியார்பேர்வழிகளுக்கு சொத்துபத்து ஒண்ணுமில்ல, இதெல்லாம் ஒரு பத்து பதினைஞ்சு வருஷமாத்தான். கேரளாவில ஒரு அம்மா, காலேஜ்கட்டுறாங்க, ஆஸ்பத்திரி கட்டுறாங்க, பள்ளிக்கூடம் கட்டுறாங்க. பிரதான்மந்திரி போயி அந்த அம்மாகிட்டஆசீர்வாதம் வாங்கிட்டு காலேஜ ஓப்பன்பண்றாரு. அப்புறம் எப்படி இவ்வளவு வருமானம் எப்படி வருதுண்ணு கேட்கறதுக்கு ஐடி ஆபிசருக்கு தெம்பு வருமா? சகமனிதர்களை தெருவில பட்டினியா கிடக்கிறதை பார்க்குறான், அவங்களை காரித்துப்பிட்டு பகவானுக்கு உண்டியல்ல போயி கோடிகோடியா பணத்தை கொட்டுறான். ஏழையின் சிரிப்புல இறைவன் எங்க தெரியிறாரு..நாட்ல மக்களுக்கு கல்வியறிவு எல்லாம் ஜாஸ்தியா இருக்கு, ஆனா பகுத்தறிவு ரிவர்சா போயிகிட்டு இருக்கு. கஷ்டப்படுறவன் இந்தமாதிரி சாமியாருகிட்ட போனாலாவது கஷ்டம் தீருமான்னு பார்க்கறான், காசிருக்கறவன் அங்கபோயி பாவத்தைக் கழுவிட்டு உண்டியல் போட்டுட்டு வரான். சித்திரா பெளர்ணமியண்ணிக்கு மேல்மருவத்தூர்ல ஏகப்பட்ட கூட்டம், எங்க பார்த்தாலும் ஒரே சிவப்பு சேலை,சிகப்பு வேட்டி,சட்டை கம்யூனிஸ்ட்க்கும் ஆதிபராசக்தி ஆளுகளுக்கும் வித்தியாசம் தெரியல. சபரிமலைக்கு நம்ம ஆளுக மாலைபோட்டுட்டு போகும்போது பெரியாரிஸ்ட்டுக்கும் அய்யப்ப பகதர்களுக்கும் வித்தியாசமே தெரியாது. 40 நாளக்கி சுத்தபத்தமா இருப்பாராம், நல்ல விசயம்தான் வருசம் பூரா இருந்துபாரு. அதுலஎண்ண கஞ்சத்தனம்.

வாயிலிருந்து லிங்கம் எடுத்தாராம், மேஜிக் காரன் வயித்திலிருந்து ஆட்டுக்குட்டியைவே எடுப்பான் அதுக்காக அவன் பின்னால போறதா? லிங்க எடுக்குற சாமியாரு அரக்கிலொ அரிசிய எடுக்கச் சொல்லுங்களேன் ஆக்கியாவது சாப்புடுலாம். இப்படித்தான் திருச்சியில ஒருத்தர் லிங்கம் எடுத்தாரு அப்புறம் ஜெயிலுக்குப் போனாரு..செத்தே போனாரு அவரெப்பத்தி அவ்வளவா பில்டப் இல்ல ஏன்ன? அவரு பண்ணிய்தெல்லாம் வெளிய வந்துருச்சி. காஞ்சி ஆச்சாரியார் ஜெயிலுக்குப் போனாரு சும்மாவா போனாரு கொலை பண்ணிட்டுப் போனாரு. அதுதான் இந்தியாவுக்கே பவர் செண்டர். ஒரு காலத்துல அங்கயிருந்துதான் யார தேர்தல் கமிஷனராப் போடலாம், யார நீதிபதியாப் போடலாம். இப்ப டாடா வும் அம்பானியும் இவர அந்த மந்திரியா போடு அவர இந்த மந்திரியாப் போடு சொல்ற மாதிரி சங்கரமடம் அந்தவேலையைச் செஞ்சது. ஆதிசங்கரரே ஆரம்பிச்ச மடம் மாதிரி கத எழுதுறாங்க,அதப்பத்தியெல்லாம் அருணன் “சங்கரமடத்தின் உண்மை வரலாறு’ ங்கிற புஸ்தகத்தில எழுதியிருக்கிறாரு.

சாயிபாபா குழுமத்துக்கு இப்ப அந்த 45,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரைக்கும் சொத்து தேரும்னு சொல்றாங்க.. வாரிசு இல்லாத சொத்தே அரசாங்கமே எடுத்துக்குமா இல்ல இன்னொரு அவதார புருஷனை தேடுவாங்களா? பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உண்மைய தைரியமா கொட்டிப்புட்டீங்க! எங்க திருந்தப் போறாங்க இந்த திருட்டுப் பசங்க. இந்த அவதார புருஷர் விட்டுட்டு போன 27,000 கோடியை யாரு லவட்டப் போறானோ. பகுத்தறிவு அரசியல்வாதிலேந்து படுபிற்போக்கு அரசியல்வாதிவரை புட்டப்பர்த்திக்கு ஓடுறான். ஏதாவது கிடைக்குமான்னுதானே. காசேதான் கடவுளடா!