வியாழன், 27 டிசம்பர், 2012

சர்.வில்லியம் ஜோன்ஸ்...



இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், கி.பி. 1600 முதல் வர்த்தக நொக்கத்திற்கு வந்து அதை மட்டுமெ 1757வரை செய்துவந்த காலம் பகுதி ஒன்று. இந்த பகுதியில் அவர்கள் வியாபாரம் மட்டுமெ செய்தார்கள். 1757க்கு முன்பிருந்தே இந்திய அரசர்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியாக இருந்த பிரிட்டிஷார் ராணுவவீரர்களை சப்ளை செய்தார்கள் அவர்கள் மொகலாய அரசர்களுக்காகவும் போர்செய்திருக்கிறார்கள். 1757ல் பிளாசிப்போர் நடந்துமுடிந்துஅதில் ப்ரிட்டிஷ் ராணுவம் வெற்றிபெற்றதை அடுத்து அதற்கான செலவுத்தொகையை பணமாக அளிக்காமல் வங்காளத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை மொகலாய அரசர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்துவிட்டார்கள்.

இரண்டாம் பகுதி என்பது 1757 முதல் 1857 சிப்பாய்புரட்சி வரையிலான காலகட்டம், இந்த காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவை பற்றி கற்றார்கள், வரலாறு, மொழி, இலக்கியம் எல்லாவற்றையும் மற்றும் மக்களை தெரிந்து கொண்டால்தான் அவர்கள்மீது ஆட்சி செலுத்தமுடியும்.

மூன்றாம் காலகட்டம் என்பது சிப்பாய்புரட்சி முதல் இந்திய விடுதலைவரை (1857 -1947) இந்தியர்களை கடுமையாக சுரண்டினார்கள், அடக்குமுறை செய்தார்கள். அவர்களுடைய ராணுவத்திற்கு ஏராளமான பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்தார்கள். இரண்டாம் காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொண்டதால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி ஆட்சி செய்தார்கள். இந்த கட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது பிரிட்டிஷ் வருகைக்கு பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு நம்மை தாழ்வுமனப்பன்மை கொள்ளச்செய்தார்கள். அதுதான் இன்றுவரை வெள்ளைக்காரன் செய்தால் அது நல்லாத்தான் இருக்கும் என்று நம்பிவருகிறோம். இங்கிலாந்தில் சாதாரணத்தொழிலாளியாக இருந்தவன் இங்கே வந்து நமக்கு எஜமானரானர்கள். இப்போதும் கூட வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனக்களில் இங்கிலாந்தில் ஓய்வுபெற்றவுடன் இங்கேவந்து மேனேஜராக வெலைசெய்கிறார்கள். நாம் அவர்களை மாஸ்டர்களாக ஏற்றுகொள்வதற்கு ஆங்கிலம் என்ற மொழியும் நம்முடைய் தாழ்வுமனப்பான்மையும் தான் காரணம்.

சர் வில்லியம் ஜோன்ஸ் 1783ல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக வந்தார், 1746ல் பிறந்த இவர் சிறுவயதிலேயே அருந்தினாளராக இருந்ததால் கிரேக்கம், லத்தீன், பாரசீகம்,ஹீப்ரு அரேபிய மொழிகளை மிகச்சிறிய வயதிலெயே கற்றறிந்தார். ஆக்ஸ்போர்டு பழ்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான ‘சம்ஸ்கிருதத்தை’ பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் ஆசியரை தேர்ந்தெடுத்தார். அந்த வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் சர்.வில்லியம் ஜோன்ஸ. தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதை பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சிபெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் லத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். லத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!!


சிரியாவில் பள்ளிக்கு செல்லவேண்டிய குழந்தைகள், தாய் தந்தையரின் அன்போடும் பரிவோடும் வளர்ந்தவர்கள் கொடிய போரால் தினந்தோறும் அடுத்த வேளை உணவிற்காக எங்கோ வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு அமைதியாக இருந்த நாட்டின்மீது அநியாயமாக உள்நாட்டுப் போரை துவக்கி தினமும் அலுவலகம் சென்றவர்கள் கூலிப்படையினராக தெருவோரம் துப்பாக்கிகள் ஏந்தி ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார்கள். யாருக்காக சண்டையிடுகிறார்கள்! ஆட்சி மாற்றத்தை பற்றி பேசுபவர்கள் முடியாட்சி மன்னர்கள் அதுதான் கேலிக்கூத்து. போர் எங்கு நடந்தாலும் கொடியது. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!!

சனி, 22 டிசம்பர், 2012

மதச்சார்பின்மையின் தேவை.

தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் ‘உதவிசெய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்றே எழுதப்படும் என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.- சுவாமி விவேகானந்தர்.

தான் சார்ந்துள்ள சமயத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாடுகாரணமாக அதனி மேன்மைப் படுத்திட அதனைப் பெருமைப் படுத்தி, மற்றவர்களின் சமயத்தை வெறுத்து எவரொருவர் செயல்பட்டாலும், அதன் மூலம் தான் சார்ந்துள்ள சமயத்திற்கே நாசம் விளைவிப்பார்- அசோகச்சக்கரவர்த்தி .
                                                  --------------------

மதச்சார்பின்மை என்ற கொள்கை இன்று வலதுசாரிகளாலும் சில சந்தர்ப்பவாதிகளாலும் கொச்சைப் படுத்தப்படுகிறது. வலதுசரிகள் பெரும்பான்மையினரின் மத சட்டத்தின் ஆட்சியை அமைக்கவிரும்புகிறார்கள். அது இந்தியாவிலும் சரி, எகிப்திலும் அதே மாதிரி தான். திமுக போன்ற சந்தர்ப்பவாத கட்சிகளாலும் மதச்சார்பினமை வாதம், மதவாதம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக எந்த கூட்டணியில் சேர்ந்தால் பதவியில் அமர்லாம் என்று தெரிந்துகொண்டு மதவாதிகளோடு குலாவிக்கொண்டும் அவர்களுக்கு எதிரான தேர்தல் கூட்டணி சேரும்போது `மதவாதம்` என்ற ஆபத்து வந்துவிட்டதைப் போல் பேசுவதுமாக சில கட்சிகள் உள்ளன.

இன்னும் சிலர் மதச்சார்பின்மை என்பது மேற்கத்தியவாதம் என்கிறார்கள். சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் விஞ்ஞானம் எல்லாம் மேற்கத்தியவாதம் என்பதற்காக யாரும் பேண்ட் சட்டை போடாமல் வேட்டி, கோவணம் அணிவதில்லை. எது சமூகத்திற்கு நல்ல கருத்தோ அது எங்கிருந்து வந்தால் என்ன? ஏற்றுகொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பதை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தமாதிரி வியாக்யானம் செய்கிறார்கள், அரசு எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கவெண்டும், அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ரி அடுத்தவர் மதம் குறித்து விமர்சிக்கக்கூடாது என்றும் சிலர் எழுதுவதை வாசித்திருக்கிறேன். உண்மையில் இது 'state' ச்மபந்தமான விசயம், பல்வேறு மதநம்பிக்கைகள் கொண்ட மக்கள் கூட்டத்தில் அரசு எந்த ஒரு மதத்தையும் தன்னுடைய ஆட்சி மதமாகவோ அல்லது நிர்வாகத்தில் மதத்தின் தலையீடோ இருக்கக்கூடாது என்பது தான். மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட விவகாரம், அரசு நிர்வாகத்தில் மதத்தை நுழைக்கக்கூடாது என்பது தான் மதச்சார்பின்மை.

மத அடிப்படையில் ஆட்சி நடபெற்றுவருகிற நமது அண்டை நாடுகளைவிட இந்தியாவின் ஸ்திரத்தன்மை நன்றாக உள்ளது, இப்போது எகிப்தில் நடைபெற்றுவருகிற மதக்கலவரங்களை அலசிப் பார்க்கவேண்டியதுள்ளது. பெரும்பான்மையினர் அவர்களின் மதச்சட்டத்தை ஆட்சியின் சட்டமாக நடைமுறைப்படுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது, அதற்கு எதிராகவும் மதச்சார்பற்ற அரசாக இருக்கவேண்டும் என்று சிறுபான்மையினரும் இதர ஜன்நாயகசக்திகளும் போராடுகிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால அங்கே மத அடிப்படையில் ஆட்சி அமைவது உறுதி. இந்தியா மற்ற நாடுகளிலிருந்து கிடைத்த படிப்பினைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.

வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள் 1857 வரை இந்தியாவில் மத நல்லிணக்கம் பேணபட்டது அதன்பின்னர் தான் இந்து-முஸ்லீம் மோதல்கள் ஆங்காங்கெ நடைபெற்று கடைசியில் அது 1947 ல் மத அடிப்படியில் பாகிஸ்தான் பிறந்தது. இன்று பாகிஸ்தானின் நிலைமை என்ன? பொருளாதார முன்னேற்றமும் அடையவில்லை, சமூக முன்னேற்றமும் அடையவில்லை. நிலையற்ற ஆட்சியும் பதட்டம் நிறைந்த வாழ்க்கையும் தான் மக்கள் அனுபவிக்கிறார்கள், சிறுபான்மையினரின் நிலைமை மோசமாக இரண்டம்தர குடிமகன்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி சிறுபான்மையினரை மோசமாகவும் இரண்டாம்தர் குடிமகன்களாகவும் நடத்த விரும்புகிற சக்திகள்தான் இந்துத்துவா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதற்கு வரலாற்றை சிறுபான்மையினரின் மீது வெறுப்புணர்வு தூண்டும் வகையில் எழுத முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக பிர்ந்த நேரத்தில் பண்டிட் நேருவுக்கு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கவேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதை நிராகரித்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக நீடிக்கும் என்று அறிவித்தார். நவீன இந்தியாவை நிர்மாணித்த இரு ஆட்சியாளர்கள் யாரென்றால் முதலில் பேரரசர் அக்பர், அடுத்து பண்டிட் நேரு என்று நீதிபதி.மார்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் அக்பர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார், அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தார். அதே நேரத்தில் மேற்கத்திய உலகத்தில் மதச்சண்டைகள் நடந்துவந்துள்ளன, கத்தோலிக்கள் பிராட்டஸ்டண்டுகள் மீதும் பிராட்டஸ்டண்ட்கள் கத்தோலிக்கர்கள் மீதும் கொலைகள் நடத்தினார்கள், இந்த இருபிரிவினரும் சேர்ந்து யூதர்களை அழித்தார்கள் என்பது வரலாறு.

இந்தியாவில் 1857ல் நடைபெற்ற `சிப்பாய்ப்புரட்சியை` ஆங்கிலேய வரலாற்றிசியர்கள் சிலர் `சிப்பாய் கலகம்` என்று எழுதினார்கள். மக்கள் எழுச்சியை கல்வரம் என்று இன்றும் எழுதுகிற போக்கு சில நாடுகளில் இருக்கிறது. சிப்பாய்புரட்சி தோல்வியில் முடிந்தாலும் அந்த படிப்பினைகளிலிருந்து பிரிட்டிஷார் மக்களை இந்து-முஸ்லீம் எனப்பிரிக்காமல் ஆட்சி நடத்தமுடியாது என்பதை உணர்ந்தார்கள். மத அடிப்படையில் பிரிதாளும் சூழ்ச்சியை கடைபிடித்து கலவரத்தை விதைத்தார்கள். ஆங்கிலேய கலெக்டர்கள் இந்துமத பீடங்களிடம் பணம்கொடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக பேசுமாரும் அதே பாணியில் மெளல்விகளுக்கு காசுகொடுத்து இந்துக்களுக்கு எதிராகவும் பேசுமாறும் செய்தார்கள். இந்தச் சண்டையை பயன்படுத்தி அவர்களின் ஆட்சி மேலும் ஒரு நூற்றாண்டுவரை நீடித்தது. B.N. Pandey என்ற பேராசிரியர் 1928ல் அலகாபாத் பழ்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சில மாணவர்கள் வரலாற்றுபுத்தகத்தை கொண்டுவந்து அதில் திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாமுக்கு மாறவேண்டும் இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று சொன்னராம், அதனால் அந்த மானமுள்ள 3000 பிராமணர்கள் தற்கொலைசெய்து கொண்டதாகவும் வரலாற்று பாடபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அந்த நூலை எழுதிய பேராசிரியர் ஹர்பிரசாத் சாஸ்திரியை தொடர்புகொண்டு இந்த தகவல்கள் எங்கே கிடைத்தன் என கேட்டிருக்கிறார் பாண்டே. அவர் மைசூர் அரசாங்க ஆவணத்திலிருந்து பெறப்பட்டதாக சொல்லியிருக்கிறார், மைசூர் பழ்கலைக்கழக பேராசிரியர் ஸிரீகாந்தியாவிற்கு கடிதம் எழுதி தகவலை கேட்டிருக்கிறார் , அப்படிப்பட்ட எந்த தகவலும் மைசூர் அரசாங்க ஆவணத்திடம் இல்லையென பதில் கிடைத்தது. ஆனால் திப்பு சுலதானைப் பற்றி இன்றும் மைசூர்பகுதி மக்கள் அறிவார்கள்,திப்பு சுல்தான் மைசூரில் மிகவும் பிரபலமான் வைணவக்கோயிலுக்கு வைரக்கீர்டம் அளித்திருக்கிறார், வருடந்தோறும் 156 இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருக்கிறார், அவர் மரியாதை நிமித்தமாக சிருங்கேரி மடத்திற்கு எழுதிய 30கடிதங்கள்  இன்றும் ஆவணமாக் உள்ளான. அவருடைய ஆட்சியில் பிரதம் மந்திரி ஓர் இந்து அவர் பெயர் புனையா, அவருடைய தளபதியும் ஒரு இந்து தான் அவர் கிருஷ்ணாராவ். வரலாற்றை இப்படி எழுதுவதால் இண்டியாவில் பெரும்பான்மை சமூக இந்து மாணவர்களிடம் முஸ்லீம் வெறுப்புணர்வு வளர்கிறது அதேபோன்று பாகிஸ்தானில் இந்து வெறுப்புணர்வு தூண்டப்படும்.

முதலில் படையெடுத்த மொகலாயர்களான கஜினிமுகம்மது ஓர் ஆக்ரமிப்பாளன், அவன் சோம்நாத் கோவிலை கொள்ளையடித்தான் இதைப்பற்றி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பாபருக்குபிந்தைய  மொகலாய அரசர்கள் இந்தியாவில் பிறந்தார்கள், மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் ஹோலி பண்டிகையும் தீபாவளியை கொண்டாடினார்கள் என்பதை பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை. இந்துக்கள் ஈத், மொகரம் பண்டிகைகளை இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள், சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் பண்டிகைகாலத்தில் பசுவதை கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள். 1857 சிப்பாய்ப்புரட்சி யில் பன்றியின் கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்து- முஸ்லீம் சிப்பாய்கள் சேர்ந்துதான் உபயோகிக்க  மறுத்ததுதான் புரட்சியின் முதல்விதை. அந்த புரட்சியில் வெள்ளை ஆட்சியால் பாதிக்கப்பட்ட இந்து மன்னர்கள் தாந்தியாதோபெ, ஜான்சிராணி போன்றோர் மட்டுமல்லாது சிப்பாய்புரட்சியின் நாய்கர்களும் மொகலாயர்களின் கடைசி சக்கரவர்த்தியான டில்லி பகதூர்ஷாவை புரட்சிக்கு தலைமைதாங்க சொல்லியிருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை என்பது எப்போதும் அவசியமானது, பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்று வ்ள்ளைக்காரர்களிடமிருந்து மதவெறி சக்திகள் கற்றுக்கொண்டார்கள். கலவரவிதைகள் விதைக்கப்படுவதையும் நாம் அறிகிறோம்.

வியாழன், 20 டிசம்பர், 2012

I salute Justice.Markandey katju....

அரசாங்க உத்தியோகம் முடிந்ததும் அப்பாடா என்று ஓய்வு கொள்பவர்கள் தான் சாமானியர்கள், ஆனால் பதவியில் இருந்தபோதும் மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றியவர்களால் பணிஓய்வு பெற்றாலும் அவர்கள் சமூகத்திற்கு உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படி நீதித்துறையில் நான் மதிப்பிடுகிற இருவரில் முதல்வர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றொருவர் மார்க்கண்டேய கட்ஜு. அயோக்கியர்களுக்கு எதிராக தன்னுடைய கருத்தை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பால்தாக்கரே இறந்தபோது  “நான் ஏன் அஞ்சலி செலுத்தமாட்டென்” என்ற கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியது.  பத்திரிக்கைத்துறையின் கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்துகொண்டு நெறிபிறளும் பத்திரிக்கைகளை எச்சரிக்கிறார். பத்திரிக்கைகள் மக்களுக்கு தேவையான சமூக-பொருளாதார விசயங்களை எழுதுவதர்குப் பதிலாக சினிமா நட்சத்திரங்களையும் கிரிக்கெட் பின்னால் செல்வதை கடுமையாக விமர்சித்தார். இன்றைக்கு குஜராத்தில் மோடி அரசு பற்றி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்பு விமர்சனம் செய்துள்ளார். அவர் ஒருமுறை எழுதிய “ 90% Fools" என்ற கட்டுரையை வாசித்த இரு மாணவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக எழுதிவ்ட்டார் என்று வழக்கு தொடுத்தனர். அந்த மாணவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினார். வீண்பெருமைக்ளை சுமப்பவர்கள் உடைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அவருடைய வலைத்தளத்தில் எழுதிவருகிற விசயங்களின் மையப்பொருள் மனிதநேயமின்றி வேறொருன்ருமில்லை.

தான் யார்? என்றே அனேக பேருக்குத் தெரிய்வைல்லை.. இன்னாரின் மகன், இந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவன் என்று முடியலாம். ஆனால் ந்மது பூர்வீகம் என்ன? இந்தியா என்பது என்ன? என்பது குறித்து ஆழமான கட்டுரை எழுதியுள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையையும் தமிழாக்கம் செய்யவேண்டிய தேவையுள்ளது. மக்கள் ஒற்றுமையை சாதியின் பெய்ரால் மதத்தின் பெயரால் குலைக்கிற சக்திகள் குரூரமாகி செய்லபடுகிற நேரத்தில் அவருடைய எழுத்துக்களை இளைஞர்களிடம் கொண்டுசெல்லவேண்டும்.