செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஊழல் ஒழிஞ்சுபோச்சு

ச்சே எங்க பார்த்தாலும் ஒரே அன்னா ஹசாரேவைப் பத்திதான் பேச்சு, தீடீர்னு ஊழலை எதிர்த்துப் போராடவந்த அவதாரம் மாதிரி.வலைப்பதிவர்கள் எல்லாரும் அன்னா வை ஆதரித்து ஒரு பதிவு போடாதவர்கள் யாருமே இல்லை. ஒரு சமூக சேவகர் நல்ல விசயத்துக்காக அதுவும் இந்தியாவை அழித்துவருகிற ஊழல் என்கிற வைரஸ் கிருமிக்கு எதிராக போராடும்போது சாமான்ய மக்கள் ஆதரவு தராவிட்டால் நல்லாவாயிருக்கு. கொஞ்சபேரு மட்டும் தான் அவரோட போராட்டத்தை விமர்சித்து அப்படியில்லை, இந்த தனிமனிதர் ஊழலுக்கெதிராக போராட முடியாதுன்னு சொல்றவங்க இந்த இடதுசாரிங்க தான். இவங்க இப்படித்தான் இந்தியாவுக்கு அணுசக்தி மூலமாத்தான் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யமுடியும்னு இந்தநாடே (அப்படின்னா பேப்பர்காரன், எல்லா டிவிகாரங்களும் )நம்ம மன்மோவன்சிங்க்கு பின்னாடி நின்னம். இவங்க மட்டும் தான் எதிர்த்தாங்க. அதே மாதிரி இப்ப பாருங்க நம்ம மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் வ்றுமையை ஒழிச்சமாதிரி வேலையில்லா திண்டாடத்தை ஒழிச்சமாதிரி இந்த ஊழலையும் ஒரே மசோதா போட்டு ஒழிச்சரலாம்னு நினைக்கதுக்கு அன்னா ஹசாரே பாடுபடுறாறு. அவரோட வழியை விமர்சனம் பண்ணுறாங்க.

எல்லா இடத்துலயும் இந்த விவாதம்தான், ஏன் அவரோட வழிமுறையை தப்புன்னு சொல்றீங்க? நம்ம ஆளுகள நினைச்சா பரிதாபமா இருக்கு.. ஏதாவது புதுசா சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தா அவனுக்கு ஒரு தடவ சான்ஸ் கொடுப்போமே, எத்தன நாளக்கித்தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆட்சி செய்யறது. இதே மாதிரி பேப்பர்காரனும் டிவி காரனும் ஒரு ஆள ஒரே நாள்ல உச்சியி ஏத்தமுடியும் இறக்கவும் முடியும். நான் கூட நினைச்சேன், மக்களோட முழுகவனத்தை இந்த மீடியாகாரங்க ஊழல் பக்கம் திருப்பிவிட்டாங்க, ஏதோ பார்லிமெண்ட்ல முதலாளிமார்களுக்கு வரியை தள்ளுபடி பண்றாங்களோ இல்ல பெட்ரோல், டீசல் விலையை கூட்டப் போறாங்களோன்னு நெனைச்சேன். இன்னக்கி பாஜக காரங்க எந்த ஊர்ல பார்த்தாலும் ஊழலை ஒழிப்போம் போராடுவோம்ன் க்கிற ரேஞ்சுக்குத்தான் பேசுறாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை (அதான் 2009 பொதுத்தேர்தலுக்கு) பார்த்தேன், ஊழலை ஒழிக்க சட்டம் வேணுமுன்னோ இல்ல ஊழல் ஒரு பிரச்சனை மாதிரியே சொல்லல. மேல நாங்க ஆட்சிக்கு வந்தா 100 நாள்ல என்னசெய்வோம்னா தீவிரவாதத்தை ஒழிப்போம்,தீவிரவாதத்தை ஒழிப்போம்.... இது மட்டும் தான். இப்பதான் அவங்க பூனை காவிக்கூட்டம் வைச்ச வெடிகுண்டு, தீவிரவாதம் வெளியவருது. காங்கிரஸ் அறிக்கையையும் பார்த்தேன், அவங்களும் சொல்லல. ஏன் சொந்த செலவுல யாராவது சூனியம் வைச்சுக்குவாங்களா? மேல சொன்ன ரெண்டு பேரும்தான். ஆனா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில ‘லோக்பால்’ மசோதாவை கொண்டுவருவோம்னு சொல்லியிருங்காங்க. இதயெல்லாம் மீடியாக்காரன் எங்களுக்கு சொல்லலையேன்னு சிலபேரு ஆதங்கப்படுறாங்க. அவங்களுக்கு மீடியா யாரோடது, யாருக்கு சேவைசெய்யுதுன்னு தெரியல. இப்ப அன்னா ஹசாரேவோட கொள்கையப் பார்ப்போம்.

அவரோட கிராமத்தை ஒரு மாதிரி கிராமமா உருவாக்கியிருக்காரு, தீண்டாமையை அவங்க ஊர்ல ஒழிச்சிருக்காரு. மும்பை மராத்திகாரங்களுக்கு மட்டும் ஏதோ தாக்கரே கும்பல் கத்தும்போது ஏன் சும்மா இருந்தாரு, மோடி சிறந்த நிர்வாகின்னு சொல்றாரு அவரு தலைமையில சிறுபான்மை மக்கள்மேல நடந்த வன்முறையை கண்டிச்சு ஒரு அறிக்கை விட்டாரா. இப்பவும் ஊழலுக்கு முக்கிய காரணம் புதியபொருளாதாரக் கொள்கைதான் அதனாலே தான் லட்சம் கோடிகள் ஊழல் நடக்குது அதப்பத்தியும் அவருக்கு கவலை கிடையாது. இனிமே நாட்ல 50ரூ ,100ரூ,500ரூ லஞ்சம் வாங்கிறவங்க தான் ஊழல்பேர்வழிகள் சொல்வாறு. பொதுஜனமே கொஞ்சம் கண்ணாடியில பாருங்க என்னைக்காவது நம்மகிட்ட லஞ்சம்கேட்டா தரமுடியாதுன்னு சொல்லியிருக்கமா? இல்ல ஏன்ன நம்ம வேல சீக்கிரமாவும் சிலநேரம் குறுக்குவழியிலயும் நடக்கனும்.இப்ப நடக்கிற ஊழலை சட்டபூர்வமா மாத்தமுடியாதா?

ஸ்பெக்ட்ரத்தியே எடுத்துக்கவும் முதல்ல வந்தா இப்படித்தான்னு சட்டமே போட்டுட்டா இது ஊழலே கிடையாதே? இப்ப 2005ம் வருசத்திலிருந்து இந்தவருசம் வரக்கி 3,75,000 கோடிரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு வரிதள்ளுபடி பண்ணியிருக்காங்களே இத ஊழல்னு ஏன் மீடியாக்காரங்க (ஹிந்து பேப்பர் தவிர) சொல்லல. இதுவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழ்ப்புதானே? தேர்தல் செலவுக்கும் கட்சி நடத்துரத்துக்கும் பணம் கொடுக்கிறதானேலே பெருமுதலாளிகள் மேன்மேலும் லாபம் கொழுக்கற மாதிரி பட்ஜெட் போடுறது ஊழல் இல்லையா? யோசிச்சுப் பாருங்க.. ஊழல ஒழிக்க்றது ஒரு மசோதா போட்டுட்டு முடியுமா? அரசியல் கட்சி எப்படி நடக்குதுன்னு பாருங்க, தேர்தலுக்கு டாட்டா அம்பானி, பிர்லா ஏன் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தராங்கன்னு யோசிங்க.

கருத்துகள் இல்லை: