வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மூன்று முதல்வர்கள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி.



அசையும் சொத்து ------- 41 கோடிகள்
அசையா சொத்து -------- 3 கோடிகள்
மொத்த சொத்து---------- 44 கோடிகள்

கேரளமுதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன்.




அசையும் சொத்து ------- 8.5 இலட்சம்
அசையா சொத்து -------- 7.5 இலட்சம்
மொத்த சொத்து -------- 16 இலட்சம்

மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா



அசையும் சொத்து ------- 31 இலட்சம்
அசையா சொத்து -------- 15 இலட்சம்
மொத்த சொத்து --------- 46 இலட்சம்

கேரளமுதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் அமைந்த கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் சிறிய ஊழல் புகார் கூட வந்ததில்லை. முதலமைச்சர் நேர்மையாக இருந்தால் தான் மற்ற அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள்.

மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது, 715 சதுராடி வீட்டில் இன்னமும் குடியிருந்து வருகிறார். அதுவும் தனது மனைவியின் வருமானத்தில் வாங்கியது.

தமிழக முதல்வரின் அறிவிக்கப்பட்ட சொத்துமதிப்பு 44 கோடி, அவருடைய குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிரூபாய். அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் மந்திரிகளாய் தனது கட்சிக்காரர்களை அமர்த்தி தனது குடும்ப முன்னேற்றத்திற்க்காக பாடுபட்டவர் தமிழக முதல்வர். கட்சியின் தலைவரே முதல்வர், அவரே பொதுக்குழு, செயற்குழு எல்லாமே. தலைமையே சொத்து சேர்ப்பதற்காக அரசியலில் ஈடுபட்டால் அமைச்சர்கள், மற்ற தலைவர்கள் எப்படி யிருப்பார்கள். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழக அமைச்சர்கள் ஈட்டிய வருமானத்தைப் பாருங்கள் (அறிவிக்கப்பட்டது மட்டும்). http://truetamilans.blogspot.com/2011/04/5.html.

சிந்திப்பீர் ! செயல்படுவீர்!!

கருத்துகள் இல்லை: