வியாழன், 28 ஏப்ரல், 2011

உண்மைகள் வெளிவரும் காலம்....

இரண்டு நாட்களுக்கு முன்னால் ‘அடர்கருப்பு’ வலைப்பக்கத்தில் ஒருவர் பின்னூட்டம் எழுதினார், இப்படி “கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் தோற்றுவிட்டால் அதைக்கூட அமெரிக்க சதி” என்று கம்யூனிஸ்ட்கள் சொல்வார்கள் என்றார். இதமாதிரி இன்னும் நிறையபேரு கேக்கிறாங்க ஏன் இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க அமெரிக்காவே எப்ப பார்த்தாலும் எதிர்க்கிறாங்க,அங்கயிருந்து ஜார்ஜ்புஷ் வந்தாலும் சரி நம்ம கருப்பர்கள் இனத்திலிருந்து வந்த ஒபாமா வந்தாலும் ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க இப்படித்தான். அமெரிக்க அந்தமாதிரி உலகம் பூராவும் அவங்கவிருப்பத்த நிறைவேத்துகிற அரசாங்கம் இருக்கணும்னு நினைக்கிது, அப்படியில்லன்னா அவங்கள தூக்குறவேலையப் பாக்கறாங்க. இப்ப நம்மூர்ல தேர்தல்ல வைகோவை அரசியல்ல இருந்து ‘வெளிய’ தள்ளுறதுக்கு ஸ்டெர்லைட் கம்பெனி ஒரு அம்மாவுக்கு காசுபணம் கொடுத்திருக்காங்கன்னு செய்தி வந்தது. வைகோ தூத்துக்குடியில் அமைக்கவிருந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்துனாரு, அந்த ஆலையை தடுக்கமுடியல அப்புறம் கோர்ட்டுக்குப் போனாலாவது நியாயம் கிடைக்கும்னு போனாரு (அது மூட நம்பிக்கைன்னு அந்த பகுத்தறிவுவாதிக்கு தெரியல) எப்படி கிடைக்கும். அதமாதிரி தான் இங்க இடதுசாரி கட்சிக்காரங்க புதிய பொருளாதாரத்தை எதிர்க்கிறாங்க, அமெரிக்க-அணு ஒப்பந்தத்தை எதிர்க்கிறாங்க, சில்லரைத்துறையில் அந்நியமூலதனத்தை எதிர்க்கிறாங்க,ராணுவக்கூட்டணியை எதிர்க்கிறங்க, பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரமுறையில்லாம கொள்ளையடிக்கதுக்கு எதிர்ப்பு சொல்றாங்க இவ்வளவு போதாதா? ஒரு காமெடி, 2004ல் நடந்த பொதுத்தேர்தல்ல இடதுசாரிங்க 60 சீட்டுக்கும் மேல ஜெயிச்சு அவங்க ஆதரவுயில்லாம மத்தியல ஒரு ஆட்சி அமைக்கமுடியாதுங்கிற நிலைம வந்தவுடனே சென்செக்ஸ் டமாலுன்னு கீழே போயிருச்சு, ஸ்திரத்தன்மை ஆட்சி இருக்காதாம்.

இந்த சென்செக்ஸ் பங்கு வர்த்தகத்தில ஈடுபடுகிற நம்ம நாட்டு மக்கள் 1.13 சதவீதம்தான் அத சிஐஐ என்கிற பெருமுதலாளிகள் சங்கம்தான் சொல்லுது. அது அப்படி கீழபோனவுடனே இங்க இருக்கிற பத்திரிக்கைகள் கார்ட்டூன் போடுறாங்க ‘பங்குசந்தை பில்டிங்கை ஒரு பிளைட் மோதி உடைக்குது அதுக்கு வாலுல ‘சுத்தியல் அரிவாள்’ சின்னத்தைப் போட்டிருகாங்க. அன்னிக்கி நிதிமந்திரி சிதம்பரம் தனிபிளைட்டுல மும்பைக்கு ஓடுறாரு, முதலீட்டாளர்களே பயப்படாதீங்க ‘பூதம்’ ஒன்னும் பண்ணாதுன்னு. இந்த சென்செக்ஸ் இண்டெக்ஸை பத்திரிக்கையாளர் சாய்நாத் “Misrey Index" னு சொல்வாரு, ஏன்னா எப்பெல்லாம் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை கிடைக்கிறமாதிரி ஒரு மசோதாவோ திட்டமோ வந்தா டமால்னு கீழே (கரடி வநதுறும்)போயிரும், அந்த மக்கள் கஷ்டப்படும் போது ‘காளை’ வந்துறும், எப்படின்னா 2004 ஜனவரியில சுனாமி வந்தப்ப இந்தியால, குறிப்பா தமிழ்நாட்ல நாகப்பட்ட்டினத்தில 30,300 வீடுகள் சேதம் ஆச்சு, நிறையபேர் இறந்துபோனாங்க அப்ப சென்செக்ஸ் ‘பீக்’ல் இருந்தது இது ஒண்ணு போதாதா? இங்க மட்டுமில்ல சுனாமி வந்த இலங்கை, இந்தோனேசியா நாடுகளிலும் இந்த மாதிரி பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உச்சத்தில இருந்தது, எதுக்கு? சுனாமி முடிஞ்சவுடனே 'rebuilding' க்காக பணம் வருமே அதுக்காக. அதமாதிரி பெட்ரோல்,டீசல் விலை கூடுனா விலைவாசியும் கூடுது சென்செக்ஸும் கூடுது, ஆனா பொதுமக்கள் கஷ்டபடுறாங்க அப்ப இது MISREY INDEX தானே? ட்ராக் மாறிப்போயிருச்சு....திரும்புறேன்.

போனவாரத்தில வந்த செய்தி ‘மம்தாவை வளர்த்தெடுக்கவேண்டும்’ என்று கல்கத்தாவிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் அவங்க நாட்டுக்கு அனுப்புன செய்தி விக்கிலீக்ஸ் மூலமா வெளிய வந்திருச்சி. ஏன் ‘மம்தா’ வளர்க்கனும் அவங்க இடதுமுண்ணனிக் கெதிராக அரசியலில் இருக்காங்க, அவங்க ஆட்சிக்குவந்தா அமெரிக்கவுக்கு ’Friendly'யா இருப்பாங்க இதுக்கு்த்தானே!! நந்திகிராம், சிங்கூர், மாவோயிஸ்ட் கூட கூட்டணி. மே2009 லிருந்து ஜன்வரி 2010 வரைக்கு 366 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்டிருக்காங்க. இன்னைக்கு பேப்பர்ல வந்த செய்தி, 1995ம் வருசம் மேற்குவங்கத்தில் இருக்கிற புருலியாமாவடத்தில் ஒரு விமானம் மேல்யிருந்தே நிறைய ஆயுதங்களை கீழேபோட்டிருக்கு, ஏகே47 மாதிரி நிறைய நவீன ஆயுதங்கள் அன்னிக்குயிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்துக்கு இந்த விஷ்யம் நடக்கிறதுக்கு முன்னாடியே பிரிட்டிஷ் உளவுத்துறை மூலமா தகவல் கிடைச்சிருக்கு, ஆனா நடவடிக்கை எடுக்கல ஏன்னா அது இடதுசாரி ஆட்சிக்கு எதிரா போடப்பட்ட ஆயுதங்கள். அதுமட்டுமில்ல அந்த ஆயுத்த்தை வாங்குனதே கம்யீனிஸ்ட் கட்சிதான் பிரச்சாரமே பண்ணுனாங்க , இன்னக்கு உண்மை வெளியவந்திருக்கு குற்றம்சாட்டப்பட்ட கிம்டேவி என்பவர் ‘இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம்’ என்று டைம்ஸ் நெள பேட்டியில சொல்லியிருக்காரு. இன்னிக்கியில்ல 1957ல் முதன்முறையா கேரளாவில அமைஞ்ச ஈஎம்எஸ் தலையில நடந்த இடதுமுண்ணனிக்கெதிரா விமோச்சன சமரம் நடந்தது. அதுலயும் அமெரிக்க வேல இருந்ததா முன்னாள் அமெரிக்க தூதர் பேட்ரிக் மொய்நிகான் தன்னோட ‘A Dangerous place'ங்கிற புக்குல சொல்லியிருக்காரு, அதுமட்டுமில்ல கேரளாவிலயும், மேற்குவங்கத்திலயும் இடதுசாரி ஆட்சியை தூக்குறதுக்கு சிஐஏ மூலமா காங்கிரஸ் கட்சிக்கு ரெண்டுவாட்டி பணம் கொடுத்ததாகவும் சொல்லியிருக்காரு.

இன்றைக்கு எப்படி மேற்கு வங்கத்தில இடதுமுண்ணனிக்கெதிராக தீவிர இடதுசாரியான மாவோயிஸ்ட், திரினாமூல், இன்னும் சில வலதுசாரி மத அடிப்படைவாதிகளும் கூட்டணி சேர்ந்திருக்காங்க, இதேமாதிரி 1959ல கேராளவில ‘விமோச்சன சமர’த்தில காங்கிரஸ் கட்சி, சில சர்ச்சுகள்,மதபீடங்கள் என மெகா கூட்டணி சேர்ந்திருக்காங்க. விமோச்சம் சமரம் ஏன் நடந்ததுன்னு தனியா ஒரு பதிவே போடனும். இதெயெல்லாம் பார்க்கும்போது 160 ஆண்டுக்கு முன்னாடி வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்ற முதல் வரிகள் தான் ஞாபகத்திக்கு வருது “ ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டி வருகிறது, அது தான் கம்யூனிசம் என்னும் பூதம். அந்தப் பூததத்தை ஓட்டுவதற்காக பழைய ஐரோப்பாவின் அனைத்து சக்திகளும் ஒரு புனித கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. போப்பாண்டவரும், ஜார் மன்னரும், மெட்டர்னிஹூம், கிசோவும் பிரெஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் காவல்துறை உளவாளிகளும் இந்தப் புனிதக்கூட்டணியில் இணைந்துள்ளனர்”.

மேலேயுள்ள வரிகளில் சொன்ன நாடுகள் மாறியிருக்கலாம் ஆனால் வர்க்கத்தன்மை என்பது மட்டும் எல்லாயிடத்திற்கு பொதுவானது.

2 கருத்துகள்:

cosmo சொன்னது…

காலம் கடந்து வெளிவந்தாலும் உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவித்த Times Now Channel க்கு பாராட்டுகள்
தோழரின் உடனடி பதிவுகளுக்கு
வாழ்த்துக்கள்

hariharan சொன்னது…

காஸ்மோ அவர்களே,
தங்கள் வருகைக்கு நன்றி!!