வெள்ளி, 8 மார்ச், 2013

ஹுகோ சாவேஸ் மறைந்தார்

வெனிசுலாவின் ஜனாதிபதி சாவேஸ் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் மக்கள் பணியாற்றியார் கடைசியில் மரணம் அவரை வென்றுவிட்டது, ஆனால் கோடானகோடி மக்கள் நெஞ்சங்களிலிருந்து சாவேஸை நீக்கமுடியாது. தென் அமெரிக்காவின் அங்கமான   வெனிசுலாவை   சென்ற நூற்றாண்டு வரை உலக்த்திற்கே தெரியாது, அந்த  நாட்டை இன்று உலகம் முழுவதும் பேசுவதற்கு காரணம் ஹூகோ சாவேஸ் எனும் மனிதர் தான் காரணம். அவர் மறைந்த நாளிலிருந்து இன்று வரை உலகத்தின் முக்கிய ஊடகங்களில் சாவேஸின் மறைவு பேசப்படுகிறது.  “யூரோ நியூஸ்” தொலைக்காட்சி ஊடகம் அன்னாரின் இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. எப்படி கோடானகோடி மக்களின் மனதில் இடம் பிடித்தார்?

மேற்கத்திய ஊடகங்கள் அவரை Firebrand leader என்றழைக்கிறார்கள்! அவர் உண்மையை அச்சமில்லாமல் பேசுகிறார். அதனால் அந்த அடைமொழி வழங்குகிறார்கள்.  2010ம் ஆண்டில் அவர் பிபிசிக்கு அளித்த "hardtalk" பேட்டியை பார்த்தேன். அது ஸ்டீபனுடன் உரையாடல். ஸ்டீபனுடைய முதல் கேள்வியே “உங்கள் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவே?” என்பதுதான். மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு பிடிக்காத தங்களுடைய பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களுக்கு எதிராக உள்ள ஒவ்வொரு நாட்டிலும் “மனித உரிமை மீறல்களை” கண்டுபிடிப்பார்கள். இந்த கேள்விக்கு சரியாக பதிலளித்தார்., அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இலட்சணக்கணக்கில் கொன்று குவித்தார்களே அவர்கள் தான் வெனிசுலாவை பார்த்து மனிதௌரிமைகள் மீறப்படுகின்றன என்கிறார்கள் என்றார்.  உங்கள் நாட்டின் பொருளாதரம் மோசமடைந்து வருகிறது, பணவீக்கம் அதிகரிக்கிறது அதனால் உங்களின் சோசலிசம் தோல்வி எனலாமா என்ற கேள்விக்கு, அமெரிக்க ஐரோப்பாவில் தற்போது என்ன வாழுதாம்? அங்கெ ஏற்பட்டுள்ள் வீழ்ச்சி எங்களையும் பாதிக்கத்தான் செய்யும் ஆனால் நாங்கள் முன்னேறுவோம் என்றார்.ஒரு கேள்விக்கு ஸ்டீபனை எதிர்கேள்வி கேட்டார், ஸ்டீபனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. லத்தின் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கிறீர்கள் ஆனால் அதில் தென் அமெரிக்க நாடுகள் எல்லாம்சேரவில்லை குறிப்பாக உங்கள் அண்டை நாடான கொலம்பியாவுடன் எல்லையில் பதற்றம் நிலவுகிறதே? அதர்கு பதிலளித்த சாவேஸ், 19, 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா எப்படி  இருந்தது? எங்கும் ரத்தவெறி! இரண்டாம் உலக்ப்போரில் ஐரோப்பாவில் ஒவ்வோரு நாடும் பக்கத்து நாட்டை ஆக்ரமித்தார்கள் , எத்தனை மில்லியண் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இன்று மாறவில்லையா? அதுபோல தென் அமெரிக்காவிலும் நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2012ல் எதிர்கொள்ளவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவீர்களா? என்ற கேள்விக்கு இன்னும் 21/2 ஆண்டுகள் உள்ளன, அதற்குள் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது  மக்கள் தான் தீர்மானிப்பார்கள் ,இங்கே நடக்கின்ற தேர்தல்கள் நெர்மையாக நடக்கின்றன என்பதை உலகம் அறியும். நான் குடியரசுத்தலைவராக இப்போது பணியாற்றுகிறேன்,  தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் ஓர் ஆசிரியனாக இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னால் என்ன வேலை செய்யமுடியுமோ அதை செய்வேன் என்றார் சாவேஸ்.

எண்ணெய் வளமிக்க வெனிசூலா அதைப்பயன்படுத்தி மக்கள் நலனில் செலவிடுகிறது, கடந்த 10 ஆண்டுகளில் 770 பில்லியண் டாலர்கள் மக்கள் நலனிற்காக செலவிடப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு 40 சதத்திலிருந்து 7 சதமாக குறைந்துள்ளது. கியூபாவிற்கு மலிவான கச்சா எண்னெய் வழங்கப்படுகிறது பதிலாக அங்கேயிருந்து மருத்துவர்கள் வெனிசூலாவில் மக்கள் பணியாற்றுகிறார்கள். அவர் எங்கு சென்றாலும் எளிதாக மக்களுடன் ஐக்கியமாகிவிடுவார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு ராணுவ சிப்பாயுடன் கட்டித்தழுவி அன்பை தெரிவிப்பார்.  இந்தியாவிற்கு 2005ம் ஆண்டில் வந்தபோது கல்கத்தா நகரில் திறந்த ஜீப்பில் அப்போதைய மாநில முதல்வர் புத்ததேவுடன் வலம்வந்தார், இப்படியொரு மகத்தான வரவேற்பை நான் பிரேசிலுக்கு அடுத்தப்டியாக இந்தியாவில்தான் பார்க்கிறேன் என்றார். சாவேஸின் மரணம் வெனிசுலாவிற்கும், லத்தின் அமெரிக்க மக்களுக்குமான இழப்புமட்டுமல்ல ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் கோடானகோடி மக்களுக்குமான பேரிழப்பு.

கருத்துகள் இல்லை: