வெள்ளி, 1 மார்ச், 2013

உறிஞ்சப்படும் தண்ணீர்!

கடந்த வாரத்தில் மக்கள் நலனை முன்வைத்தும் எழுதும் பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் `தண்ணீர்` பற்றி `the hindu' வில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தண்ணீர் தட்டுபாடு நிலவிவருகிற காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்காக வீடுகள், நீச்சல் குளங்களுடன் கட்டப்பட்டுவருகின்றன. அதேபோல் வாட்டர் தீம் பார்க்குகள், கோல்ப் மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. இதெல்லாம் பணக்காரர்களுக்கு., அவர்களால் தண்ணீரை எந்த விலை கொடுத்தும் வாங்கம்முடியும். ஆனால் சாமானிய இந்தியர்கள், மக்களால் நகராட்சி குடிநீர் லாரிகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து வாழ்க்கை நடத்துபவர்கள், தண்ணீர் இல்லாமல் பயிர்செய்ய முடியாமல் வறுமைவாடும் விவசயிகளும் உள்ள நாடு இந்தியா என்பதை காண்வேண்டியதிருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நிலைமை ஆராய்ந்து எழுதிய கட்டுரையில் மாநிலஅரசு அறிவித்துள்ளபடி 7000 கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது, மாநிலத்தின் நீர்த்தேக்கத்தின் நீரின் அளவு 15 விழுக்காட்டிற்கும் கீழெ, இந்த வறட்சி `மனிதனால் உண்டாக்கப்பட்டது` என்கிறார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயத்திற்கும் மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீரை தொழிற்சாலைக்கு திசைதிருப்புகிறார்கள், இது தேவையில்லை என்றால் எப்படி வெலைவாய்ப்பு உருவாகும் என்ற கேள்வி எழுகிறது. அந்நிய செலவானியை ஈட்டிய தமிழகத்தின் தோல் தொழிற்சாலைகளை பாலாற்றை பாழ் படுத்தியது, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆறு சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் மாசுபடுத்துப்பட்டு விளைநிலங்கள் களர் நிலங்களாக மாற்றப்பட்டன. இப்படி ஏற்றுமதி, அந்நிய செலவாணி வெலைவாய்ப்பு என்கிற காரணங்களால் இயற்கை சீரழிவதோடு எதிர்கால சந்ததியன்ருக்கு தேவையான இயற்கை வளங்களை அழிக்கிறோம். 2005ம் ஆண்டில் நாக்பூர் அருகே ஒரு 'Fun & Food Village Water & Amusement Park' தொடங்கபட்டது அதில் 18 வகையான தண்ணீர் சறுக்கு விளையாட்டுக்கள் இருக்கின்றன,கோடையில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பூமியில் செயற்கையாக பனியை கேளிக்கைக்காக உருவாக்குகிறார்கள், இதற்கு எவ்வளவு மின்சாரம் பிடிக்கும், அதே பகுதியில் 15 மணிநேரம் வரை மின்சாரம் இல்லாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக `லவாசா` என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் உருவாக்கியிருக்கிறார்கள்,  செல்வந்தர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹில் சிட்டி  அது. அங்கே 0.87 டிஎம்சி கொள்ளளவு கிட்டத்தட்ட 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கிவைக்க அனுமதி வான்கியிருக்கிறார்கள்.

மஹா. மாநிலத்தில் புதிதாக கோல்ஃப் விளையாட்டு மைதானக்கள் உருவாகிவருகின்றன, இதுவரை 22 மைதானங்கள் இருக்கின்றனவாம், அந்த மைதானத்திற்கு அதிகமான நீர் தேவைப்படுவதோடு பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக தெளிக்கப்படுகின்றன. இது நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கிற போது 'Sharing distress' என்று பேசுகிறோம், ஆனால் ஏற்றுமதி விவசாயத்திற்கும் ஏற்றுமதி பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கும் அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது. குளிர்பானங்கள் தயாரிக்க பெப்சி, கோக் நிறுவனக்கள் ஆறுகளை கையூட்டு மூலம் வசப்படுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உற்ஞ்சி அதே மக்களுக்கு மினரல் வாட்டராக விற்கிறார்கள். வசதிபெற்றவர்கள் காற்றையும் கூட வாங்கிவிடலாம், அரசாங்கம் சாமானியர்களைப் பற்றி எப்போது கவலைப்பட்டது. தமிழகத்தில் மின் தட்டுப்படு நிலவியபோது சென்னையில் ஒருமணிநேரம்கூட மின் தடையில்லை ஆனால் கிராமப்புறங்களில் 14- 16 மணி நேரம் மின் தடை நிலவியது. சென்னைக்குள்ளும் நிலைமை ஒரே மாதிரி இருக்காது தென்சென்னை மத்தியசென்னையில் சாலைகள், குடிநீர் வசதிகள்  மாதிரி தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் வடசென்னையில் இருக்காது. பல பத்தாண்டுகளாக பொருளாதாரத்தடையை சந்தித்துவருகிற கியூபாவில் தேவைப்படாத மின்விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்றால் சாரி அணைத்துவிடுகிறென் என்பார்களாம், அதே மாதிரி வளர்ந்த நாடுகளின் மக்களிடம் சொன்னால் why i pay money for that என்பார்களாம்.


பொருளாதார ஆய்வறிக்கை 2011-12ன் படி எந்த மாநிலத்திலும் விவசாயத்திற்கான தண்ணீர் வசதி கடந்த பத்தாண்டுகளில் 0.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, தாணிய உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒரு ஏக்கர் சர்க்கரை பயிரிட தேவையான நீரை வைத்து 10 -12 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிடலாம், அதுபோல ரோஜாப்பூ பயிரடுவதற்கு அதிகமான நீர் தேவை சர்க்கரையும் ரோஜாப்பூவும் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுபவை. மஹா. மாநிலத்தின் அனுபவம் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை: