உலகமயக்கொள்கையால் விமானநிலையத்தை தனியார் மயமாக்குவார்கள் என்று முன்பே இடதுசாரிகள் எச்சரித்தார்கள், ஆனால் வளர்ச்சி வேண்டுமானால் தனியாரால் தான் முடியும் என்று அரசும் தாராளவாதிகளும் ஆதரித்தனர். இன்று பயணிகள் வேதனையை அனுபவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு அரசு இப்படி வருவாய் ஈட்டும் வழிகளை அரசு ஏற்படுத்துகிறது, மக்கள் பணத்தை தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டை நிரப்பும் செயல் ஊழல் இல்லாமல் வேறென்ன? டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் விரிவாக்கம் செய்யப்பட்டன, காலதாமதம்,திட்டமிட்டதை விட அதிகமான பிராஜெக்ட் செலவு என்பதை காரணம் காட்டி பயணிகளிடம் Airport Development Fee (ADF) வசூல் செய்வதற்கு மத்தியரசு அனுமதித்தது. டெல்லி விமானநிலையம் GMR என்ற நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது, மும்பை விமானநிலையம் GVK நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது. டெல்லி, மும்பௌக்கு அடுத்தபடியாக ஹைதாராபாத், பெங்களூர் விமாநிலையங்களும் தனியார்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையங்கள் ஒரு நிறுவனம் போல் செயல்படுகின்றன. டெல்லி DIAL எனவும், மும்பை MIAL ஆகவும், ஹைதராபாத் HIAL எனவும் & பெங்களூர் BIAL ஆகவும் பெயர் மாற்றப்பட்டு Airports Authority of India விடம் வருமானத்தை பகிர்ந்துகொள்கிறது.
டெல்லி விமானநிலையமான DIAL பயணிகளிடம் 2010 ஆண்டு வரை ரூ1200 கோடி யையும் மும்பௌ விமானநிலையமான MIAL ரூ 1300 கோடியும் வசூல் செய்துள்ளன.இந்த இரு விமானநிலையங்கள் மட்டுமல்ல ஹைதாராபாத் விமான நிலையமும் பெங்களூர் விமானநிலையமும் வசூலில் இறங்கியுள்ளன. மேலே கூறப்பட்ட இரு நிறுவனக்கள் தான் இங்கும் தலா ஒரு ஏர்போர்ட்டை நிர்வகிக்கின்றன. இந்த கட்டணங்கள் ADF என்றும் UDF (user development fee)என்றும் வசூலிக்கப்படுகின்றன. தனியார் விமானநிலையங்கள் மட்டுமல்லாமல் AAI நிர்வகிக்கின்ற விமானநிலையங்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டன. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் கொள்கையை நீதிமன்றங்கள் மூலமா தடுத்து நிறுத்துவது. நீதிமன்றமும் ஏர்போர்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஒப்புதல் அளித்தால் மீண்டும் வசூலிக்கலாம் எனவும் கூறியுள்ளது, அதில் என்ன தடங்கல் வரப்போகிறது.
பயணிகளிடம் உள்ளூர் /வெளிநாடு என வசூலிக்கும் தொகை விமானநிலையம் வாரியாக..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக