ஞாயிறு, 1 மே, 2011

மே தின வாழ்த்துக்கள்



சிகாகோ நகரில் 1886ல் மே முதல் நாள் 8மணி நேர வேலைக்கான போராட்டத்தின் அடையாளமே இன்று உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் மேதின நாளாக கொண்டாடிவருகிறது. இந்தியாவில் இன்னும் 8மணிநேர வேலையென்பது எல்லாருக்கும் வந்துவிடவில்லை, நாட்டின் மக்கள் தொகை பெருகியது போலவும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது போன்றும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. முறைசாரா தொழிலாளர்கள் பெருகியுள்ளனர், அவர்களுக்கு எந்தவித பணிப்பாதுகாப்போ, மருத்து்வசதியோ, சுத்தமான பணிச்சூழலோயில்லை. மாறாக நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துவருகிறது. உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச தொழிலாளர் நலச்சட்டங்களை அரசு தொழில் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தமறுக்கின்றன.போராடுகின்ற தொழிலாளர்களை தமிழன் என்றும் மனிதன் என்றும் பாராமல் பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களுக்காக தடிகொண்டு அடக்குகிறார்கள்.

இந்த நாளில் தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி வேறுபாட்டின்றி ஒரே வர்க்கமென்று உறுதிகொள்ள சபதமெடுப்போம். எல்லா அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி மேதின விழாவை கொண்டாடுகிறார்கள், தொழிலாளர்களாகிய நாம், யார் நம் பக்கம் நிற்கிறார்கள், நமக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுகிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணரவேண்டும். தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாதபோது வேறுவழியின்றி வேலைநிறுத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதை நமது ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன. ஒரு துறையினரின் ஊழியர்களின் போராட்டங்கள் அடுத்ததுறை ஊழியர்களால் இழிவுசெய்யப்படுகிறது. இதை தவிர்த்து வர்க்க ஒற்றுமையின் மூலம் ஒற்றுமை பேணப்படவேண்டும்.

உலகத்தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்!!!

கருத்துகள் இல்லை: