வியாழன், 5 மே, 2011

சமச்சீர் மின்வெட்டு

தமிழ்நாட்டில மூன்று வருஷமா தீராத பிரச்சனை மின்வெட்டுதான், சரியான திட்டம் போடாம அவசர கோலத்துக்கு எல்லாக் கம்பெனியையும் தமிழ்நாட்டுக்கு கூப்பிட்டு இங்க வந்து தொழில் செய்யின்னு ஒப்பந்தம் போட்டாங்க.அதே சமயத்தில மின்சார உற்பத்திக்கும் திட்டம் போட்டாங்க அது ரெம்ப வருஷமா காகிதத்தலேயே இருந்தது, ஆனா பன்னாட்டு கார் கம்பெனி, செல்போன் கம்பெனியெல்லாம் உடனே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இருக்கிற மின்சாரத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்வதற்கு பேருதான் மின்வெட்டு, ஆனா இந்த மின்வெட்டிற்கும் வர்க்க வேறுபாடு இருக்குது. எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி மின்வெட்டு கிடையாது. நகரங்களில் 2மணிநேரம் மின்வெட்டுனா கிராமத்தில அது 4 மணிநேரம் ,6 மணிநேரம் கூட கட் பண்ணுவாங்க, நகரத்திலதான பணக்காரங்க இருக்காங்க. சென்னையில் மின்வெட்டே கிடையாது அங்கே தான் நிறைய பன்னாட்டு நிறுவனக்கள் இருக்குதே, அதே உள்ளூர் தொழில் செய்பவர்களுக்கு வேறமாதிரி. இந்தமாதிரி முக்கியத்துவம் கொடுக்கிறதுக்கு என்ன வியாக்யானம் கூட கொடுக்கலாம். ஆனா ரிசல்ட் மக்களை நஷ்டப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களை வாழ்வைக்கிற கொள்கைதான் காரணம்.

நேற்று கோவையில் நடந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டத்தை ‘தினமலரும் தினமணியும் ஆதரித்தே செய்தி வெளியிட்டார்கள். தினமலர் இப்படி “தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது. இதேபோல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது” செய்தி வெளியிட்டுள்ளது. ஏனென்றால் இந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டம் நடத்தியவர்கள் சிறுதொழில் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள். அரசுக்கெதிராக அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களோ தங்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தினால் தினமலர் நக்கல் செய்து எழுதும். பொதுமக்கள் கஷ்டப்படுகிற மாதிரி எழுதுவாங்க.. சாலைமறியல், ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று எழுதுவார்கள். இங்கே தான் அவர்களின் வர்க்கசிந்தனை வெளிப்படுகிறது. எப்படி தமிழகத்தின் சிறுதொழில் செய்பவர்கள் ,வணிகர்கள் தங்கள் பிரச்ச்னைகளை கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாதபோது பொதுவெளியில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக போராடுகிறார்களோ அதே நியாயம் தான் ஒவ்வொரு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த மின்வெட்டினால் தொழிற்துறையினர் பாதிக்கப்படும்போது அதில் தொழிலாளர்களும் வேலையிழக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கேற்றது மிகவும் பாராட்டத்தக்கது.மத்திய அமைச்சரவையில் எந்த இலாகாக்கள் வேண்டும் என்பதை பிடிவாதமாக பெறும் கழக அரசு பற்றாக்குறை மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு என்ன தயக்கமோ?

கருத்துகள் இல்லை: