வியாழன், 5 மே, 2011

வாழ்வும் தாழ்வும்

கடந்தபோன வரலாற்றிலும் சரி நிகழ்கால வாழ்க்கையிலும் சரி சிந்தனையும் கருத்தும் இரண்டு விதமாக இருக்கிறது, ஒன்று ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றொன்று அடித்தட்டு மக்களின் சிந்தனை. இந்த சிந்தனையையும் கருத்தையும் பத்திரிக்கைகள், ஊடகங்கள், இலக்கியம் வாயிலாக பார்க்கிறோம். ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும் எல்லாரையும் இடதுசாரியா, வலதுசாரியா வென்று பிரித்துவிடலாம், சிலபேர் நாங்க ரெண்டு பக்கமும் இல்ல நடுவில இருக்கிறோம் என்று சொன்னால் அது ஏமாற்றுவேலை. எப்போதுமே ஆட்சியை புகழ்ந்து எழுதுவதினாலும் பேசினாலும் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கும். நீங்கள் ஆட்சியை விமர்சித்து எழுதினீர்களோ பேசினீர்களோ என்றால் தேசவிரோதிகளாக சித்தரிப்பார்கள். நீங்கள் இலங்கையில் நடந்த அல்லது நடக்கிற இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து பேசினால் ‘அரசு’ கவலைப்படுவதில்லை. அதே சமயம் நீங்கள் இந்திய ராணுவம் காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறலைப் பற்றி எழுதினால் உங்கள் மீது தேசவிரோத வழக்கு கூட வந்துவிடும். மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்தை தேசபக்தியாக எல்லா ஊடகங்களும் எழுதினார்கள் பேசினார்கள். யாருக்கான இந்தியா ஒளிர்கிறது என்பது தெரிந்துவிட்டது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக அரசோட புள்ளிவிவரங்களே சொல்கின்றன. இந்தியாவிக்குள்ளேயே இரண்டு இந்தியா இருக்கிறதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார், ஆனால் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான திட்டம் ஆட்சியாளர்களிடம் இல்லை. வருடத்திற்கு வருடம் நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது அதே சமயத்தில ஐநாவின் Human Development indicatorல் இந்தியாவின் Rank மோசமாகிக்கொண்டே வருகிறது. Forbes நிறுவனம் பில்லிணியர்களின் ரேஸ் பத்தி எழுதிக்கிட்டேயிருக்காங்க, அதுல இந்தியா 4வது இடத்தில இருக்குது, ஆனா HDIல் 134வது இடம் இருக்கு. பில்லினியர்கள் அமெரிக்கா,ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்தபடியா இந்தியாவுலதான் அதிகம் பேர் இருக்காங்க. பில்லிணியர்களோட சொத்துமதிப்பை வச்சுப்பார்த்தா இந்தியா ரெண்டாவது இடத்துல இருக்குது ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் சும்மா நானும் பில்லினியர் அப்படி எண்ணிக்கையில் இருக்காங்களே தவிர அவங்ககிட்ட அதிகமா ‘பில்லியண் டாலர்’ இல்ல. இப்படி ஒரு சமூகத்தில் 1சதம் பேரின் வளர்ச்சியைத்தான் ஒளிர்கிறதென்று கொண்டாடுகிறோம். இன்னும் நடுத்தர வர்க்கத்தில் பத்து சதவீதம்பேர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறுவிவசாயிகள் இந்த பதினைந்து வருடத்தில் சுமார் 2,00,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் கடன்சுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களோட கடன்சுமை ரூ 50,000 இருந்து 2 லட்சம் வரைக்கும் இருக்கலாம் இது ஐடி யில் வேலைபார்க்கிறவரோட ஒருமாச சம்பளம். இப்படி ஒருபகுதியினர் வேகமாக வளர்வதும் மறுபுறம் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாவதற்கும் என்ன காரணம். அவங்களோட தலைவிதியா இல்ல அரசாங்கத்தோட கொள்கைமுடிவா? யோசிக்கணும்.

கருத்துகள் இல்லை: