இந்தவாரம் கோவையில் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன், அது எல்லா ஜவுளிக்கடைகள் இருக்கிற பிரதான சாலையில் இருக்கிறது. தரைத்தளம், பேஸ்மெண்ட், அப்புறம் மூன்றுமாடிகள்.உள்ளே நுழையும்போது எனக்கு ஏதாவ்து திருமண சத்திரத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது, அப்படியொரு வரவேற்பு. கடைக்கு வரும் கஷ்டமர்களை கும்பிடு போடுவதற்காக மூன்று , நான்கு பெண்களை வாசலில் நிறுத்தியிருக்கிறார்கள். அப்புறம் அதை கண்காணிப்பதற்கு சிலர் வேறு. எனக்கு கூச்சமாகிப்போனது. ஒரு கடைநிலை சிப்பந்தியைப் பார்த்து யாராவது சார் என்று விளித்தது போல் ஆகிவிட்டது.
கடையின் உள்ளே நுழைந்தால் எங்கும் யூனிபார்ம் அணிந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கடையில் வேலைபார்ப்பவர்கள். வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும் அவரை பிடித்து இழுக்காத குறைதான். இப்போது புதிதாக முழைத்துள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பில் போடுவதற்குத்தான் ஆளிருப்பார்கள். ஆனால் இங்கெ தலைகீழ். சரி எப்படி இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், ஒரு தளத்திற்கு குறைந்தபட்சம் 50 பேர் என்றால் மொத்தம் 5தளங்கள் 250 பேர். வாதத்திற்காக 250 குடும்பங்களை வாழ்வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த பாரம் எல்லாம் வாடிக்கையாளர்கள் தலை மீது தானே வைக்கிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகள் எல்லாயிடத்திலும் இதே நிலைமைதான். ஆனாலும் அங்கெ செல்வதை தவிற்க்கமுடியவில்லை.
வாசலில் வரவேற்பு செய்பவர்களைப் பார்த்தவுடன், பழைய ஞாபகம் வந்தது.சென்னையில் நான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் ஒரு பொதுமேலாளரின் மகள்/மகன் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. அந்த அதிகாரி அவர் சார்ந்த துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை மண்டபத்திற்கு அழைத்திருந்தார். மறுக்கமுடியாமல் சென்று தொண்டூழியம் செய்தோம். நானும் எனது நண்பனும் வரவேற்பு இடத்தில் வந்தவர்களுக்கு பன்னிர் தெளிப்பது, மற்றும் செயற்கையாக சிரிக்கும் வேலைகளை செய்தோம். எனது நண்பன் வருபவர்களை வைதுகொண்டே வரவேற்பான், எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு புன்னகை செய்தேன். அரசியல்கட்சி மாநாட்டிற்கு மட்டும் காசு கொடுத்து ஆள்களை திரட்டிவரவில்லை. இப்படி சில தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை அடிமை வேலைகளை ஏவுகிறார்கள் ஆனால் வெளியில் தெரிவதில்லை.
சனி, 9 ஜூலை, 2011
சனி, 2 ஜூலை, 2011
புதுசா வந்த பணக்கார சாமி
இது நாள் வரைக்கும் பணக்கார சாமி திருப்பதி ஏழுமலையான் இருந்தாரு அவருகிட்ட இருக்கிற நகைகளோட மதிப்பு 52,000 கோடி ரூபா, ஆனா இப்ப கேரளாவில இருக்கிற பத்மநாத சுவாமி கோயில்ல இருக்கிற பூட்டிய அறைகளைத் திறந்து அங்கிருக்கிற செல்வங்களை மதிப்பிடும் வேலை நடக்குது. இன்னைக்கு கேட்ட செய்தியின் படி சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நகைகள் தேரும் போல.இத என்ன பண்ணுவாங்க ???
திருப்பதிக்கு முக்கிய வருமானமே உண்டியல் தான். உண்டியல் 5 ரூ, 10ரூ காணிக்கையை போட்டு அவ்வள்வு சொத்து சேரல. சில வியாபாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் எல்லாம் சாமிகிட்ட சில அக்ரிமெண்ட் போட்டு முறைகேடா கிடைக்கிற பணத்துல சில பங்கை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துறாங்க. எல்லாம் பரிகாரம்,ஒரு பயம் தான் காரணம். சாமிகிட்ட அதக்கொடு இதக்கொடுன்னு கேக்குறதுக்காகவே ரெம்ப பேரு கோயிலுக்கு போறாங்க. திருப்பதி உண்டியல் சில சமயம் ஒரே கட்டுல கோடிக்கணக்கான ரூபா நோட்டுகள் கிலோ கணக்கில் நகைகள் உண்டியல்ல வந்திருக்கு. இப்படி அந்த சாமி பிறப்பால பணக்காரரு கிடையாது, பக்தர்களோட காணிக்கை தான். அவருக்கு பக்தர்கள் அம்பானியிலிருந்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ஷே வரைக்கு இருக்காங்க.
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்திச்சு? அந்தக் காலத்துல திருவாங்கூர் மஹாராஜாவோட கட்டுப்பாட்டுல திருவனந்தபுரம் இருந்துச்சு.இப்ப பூட்டிக்கிடந்த அறைகளிலிருந்து எடுத்த நகைகளெல்லாம் அந்த ராஜா காலத்து செல்வங்கள் தான். அந்தக் கால்த்து ராஜாக்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மக்களை குறிப்பாக விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரிமேல் வரி போட்டுத்தான் இப்படி செல்வங்களை சேர்த்தார்கள்.சேர்த்த செல்வங்களயெல்லாம் கோவில்களிலே பதுக்கினார்கள்,ஏனென்றால் மக்கள் ஒருவேளை பொங்கியெழுந்தாலும் கோயில்ல இருக்கிற கொள்ளை செல்வத்திற்கு ஆபத்தில்லை. அடுத்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ராஜாக்களுக்கு இந்த ரகசியம் தெரியும் அதனால தான் முதல்ல கோயில இடிப்பான், கொள்ளையடிப்பான் அப்புறம் பரிகாரமும் செய்வான். ஆட்சி செய்த பகுதியெல்லாம் ராஜாவோட நிலம் தான், அவரு குறுநில மன்னருக்கு அதிகாரம் கொடுப்பார் ஏக்கருக்கு இத்தனை ரூபா கொடுக்கணும் என்று, குறுநில மன்னர்,நிலப்பிரபுக்கள், ஜமீன்கள், அப்புறம் பண்ணையார்கள் கடைசியா அந்த நிலத்துல உழுகிற விவசாயி குத்தகை தரணும். இப்படி வரிசைக்கிரமமா அக்கிரமம் பண்ணினாங்க உழைக்காம ஒரு கூட்டம் படைகளை வச்சிகிட்டு உழைக்கிறவங்கள உறிஞ்சிவாழ்ந்த காலம் அது.வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவங்க கவலைப்படல. வெள்ளைக்காரனுக்கு ஒழுங்கா கப்பம் கட்டிவந்ததால அவங்க சம்ஸ்தானம் தப்பிச்சது. இப்படிப்பட்ட `மஹாராஜா’க்களை தான் அந்தக் கால்த்து மக்கள் தெய்வாம்சமா வணங்கினாங்க, இப்பவும் தான். அடிமைப்புத்தி என்னைக்கு போச்சு.
இந்த பணத்த என்ன பண்ணலாம்,. நாட்டுல வறுமையை ஒழிக்கிறதுக்கு பணம் இல்லைன்னு சொல்றாங்களே அதுக்கு பயன்படுத்தலாம், இந்த பணத்தை வச்சு நாடு பூராவும் ஆஸ்பத்திரி கட்டலாம், நிறைய பள்ளிகள் கல்லூரிகள் அரசாங்கமே கட்டலாம். எதுவுமே நடக்காது. `அனந்தசயன’ நாராயணன் மாதிரி இந்த நகைகள் திரும்பவும் தூங்கும்.
திருப்பதிக்கு முக்கிய வருமானமே உண்டியல் தான். உண்டியல் 5 ரூ, 10ரூ காணிக்கையை போட்டு அவ்வள்வு சொத்து சேரல. சில வியாபாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் எல்லாம் சாமிகிட்ட சில அக்ரிமெண்ட் போட்டு முறைகேடா கிடைக்கிற பணத்துல சில பங்கை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துறாங்க. எல்லாம் பரிகாரம்,ஒரு பயம் தான் காரணம். சாமிகிட்ட அதக்கொடு இதக்கொடுன்னு கேக்குறதுக்காகவே ரெம்ப பேரு கோயிலுக்கு போறாங்க. திருப்பதி உண்டியல் சில சமயம் ஒரே கட்டுல கோடிக்கணக்கான ரூபா நோட்டுகள் கிலோ கணக்கில் நகைகள் உண்டியல்ல வந்திருக்கு. இப்படி அந்த சாமி பிறப்பால பணக்காரரு கிடையாது, பக்தர்களோட காணிக்கை தான். அவருக்கு பக்தர்கள் அம்பானியிலிருந்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ஷே வரைக்கு இருக்காங்க.
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்திச்சு? அந்தக் காலத்துல திருவாங்கூர் மஹாராஜாவோட கட்டுப்பாட்டுல திருவனந்தபுரம் இருந்துச்சு.இப்ப பூட்டிக்கிடந்த அறைகளிலிருந்து எடுத்த நகைகளெல்லாம் அந்த ராஜா காலத்து செல்வங்கள் தான். அந்தக் கால்த்து ராஜாக்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மக்களை குறிப்பாக விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரிமேல் வரி போட்டுத்தான் இப்படி செல்வங்களை சேர்த்தார்கள்.சேர்த்த செல்வங்களயெல்லாம் கோவில்களிலே பதுக்கினார்கள்,ஏனென்றால் மக்கள் ஒருவேளை பொங்கியெழுந்தாலும் கோயில்ல இருக்கிற கொள்ளை செல்வத்திற்கு ஆபத்தில்லை. அடுத்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ராஜாக்களுக்கு இந்த ரகசியம் தெரியும் அதனால தான் முதல்ல கோயில இடிப்பான், கொள்ளையடிப்பான் அப்புறம் பரிகாரமும் செய்வான். ஆட்சி செய்த பகுதியெல்லாம் ராஜாவோட நிலம் தான், அவரு குறுநில மன்னருக்கு அதிகாரம் கொடுப்பார் ஏக்கருக்கு இத்தனை ரூபா கொடுக்கணும் என்று, குறுநில மன்னர்,நிலப்பிரபுக்கள், ஜமீன்கள், அப்புறம் பண்ணையார்கள் கடைசியா அந்த நிலத்துல உழுகிற விவசாயி குத்தகை தரணும். இப்படி வரிசைக்கிரமமா அக்கிரமம் பண்ணினாங்க உழைக்காம ஒரு கூட்டம் படைகளை வச்சிகிட்டு உழைக்கிறவங்கள உறிஞ்சிவாழ்ந்த காலம் அது.வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவங்க கவலைப்படல. வெள்ளைக்காரனுக்கு ஒழுங்கா கப்பம் கட்டிவந்ததால அவங்க சம்ஸ்தானம் தப்பிச்சது. இப்படிப்பட்ட `மஹாராஜா’க்களை தான் அந்தக் கால்த்து மக்கள் தெய்வாம்சமா வணங்கினாங்க, இப்பவும் தான். அடிமைப்புத்தி என்னைக்கு போச்சு.
இந்த பணத்த என்ன பண்ணலாம்,. நாட்டுல வறுமையை ஒழிக்கிறதுக்கு பணம் இல்லைன்னு சொல்றாங்களே அதுக்கு பயன்படுத்தலாம், இந்த பணத்தை வச்சு நாடு பூராவும் ஆஸ்பத்திரி கட்டலாம், நிறைய பள்ளிகள் கல்லூரிகள் அரசாங்கமே கட்டலாம். எதுவுமே நடக்காது. `அனந்தசயன’ நாராயணன் மாதிரி இந்த நகைகள் திரும்பவும் தூங்கும்.
சனி, 18 ஜூன், 2011
ஊழலுக்கு மரியாதை..

Courtesy:'The Hindu'
மரியாதையாக அழைப்பதற்கு ஹிந்தியில் “ஜி” என்பார்கள், ஆனால் இப்போதோ ஊழல்கள் எல்லாம் 2G, CWG, KG என வந்துகொண்டேயிருக்கிறது. தோண்டத்தோண்ட புதிய பூதங்கள் கிளம்பிகிட்டேயிருக்கு. இதுக்கு எல்லையேயில்லை. தனியார்மயம் என்றாலே அது அரசுக்கு வருவாய் இழப்பில்தான் முடியும். அதையெல்லாம் தாண்டி ஊழல் தாராளமயம், உலகமயம் ரேஞ்சுக்கு போயிருச்சு. ஊழலுக்கு வேர் எதுன்னு தெரியாம சும்மா ‘லோக்பால்’ அமைக்கனும் ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க கிளம்பிட்டாங்க. இப்ப யாரு ‘சொசைட்டி’ பெரிசுங்கிற போட்டி வேற நடக்குது. சில வெளிநாட்டு ஆளுக நம்ம ஊருல்ல நடக்குற இந்த ‘சிவில் சொசைட்டி’ கூத்தை பாத்துட்டு இந்தியால இராணுவ ஆட்சியா நடக்குதுன்னு கேட்கிறாங்க. அவங்களுக்கு தெரியாது போல..உலகத்துலேயெ பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்கிற விஷயம். எனக்கும்தான் புரியல ஹசாரே, அப்புறம் இந்த சாமியாரு பாபா ராம்தேவ் இவங்கெல்லாம் சிவில் சொசைட்டின்னு சொன்னா நம்ம தேர்தல்ல நின்னு ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்க எல்லாம் யாரு? எல்லாம் இந்த பேப்பர் காரனும் டிவிகாரனும் பண்ற வேல. இந்த ‘சிவில் சொசைட்டி’ வார்த்தையை அமெரிக்காவிலிருந்து பிடிச்சாங்களோ? இந்த வருசம் டெல்லியில இலட்சக் கணக்காண தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியோட INTUC உட்பட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது, அதை பிபிசி, ரூயிடர்ஸ், செய்தி சேகரிச்சாங்க ஆனா இந்தியன் மீடியா அதை கவரேஜ் பண்ணவேயில்ல, இல்ல அவங்களால ரோடு டிராபிக் ஜாம் ஆயிடுச்சுன்னு ‘தினமலர்’ மாதிரி சொல்வாங்க. இலட்சக்கணக்காண சாதாரண மக்களை , தொழிலாளிகளை பிரதிநுவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள் ‘சிவில் சொசைட்டி’ கிடையாது. கார்ப்பரேட் பக்தர்களுக்கு சிஷ்யர்களாகயிருக்கிற எலைட் மெடில்கிளாஸ் மக்கள்தான் சிவில் சொசைட்டி என்னய்யா நியாயம்.
பாரதீய ஜனதாக் கட்சி ஊழலுக்கு எதிரா தேசிய அளவில பெரிய யாத்திரை நடத்தப்போறாங்கன்னு சொன்னாங்க. முதல்ல கர்நாடகா சுரங்க ஊழல் செஞ்ச மந்திரிய வெளிய தள்ளிட்டு அப்புறம் தொடங்கலாம். நேத்து வரைக்கு ஊழல்ன்னு பேசுனவங்க இப்ப அம்பானி பிரதர்ஸ் பண்ற கோதாவரி பேசின் ஊழலை பத்தி வாயே தொறக்கல. ஏன்னா, அவங்க பைனான்சியர் ஆச்சே? நாட்டுல புதுசா இரும்பு கிடைச்சா, நிலக்கரி கிடைச்சா, காப்பர்கிடைச்சா, எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைச்சா நாடு முன்னேறியிரும் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் தனியார் கல்லாவுக்கு தான் போயிட்டுஇருக்கு. ஒரு டன் இரும்புத்தாது தோண்டுனா அரசாங்கத்துக்கு 27ரூபாய் தான் போகுது, மார்க்கெட் விலை 5000ரூபாய். வருசத்துக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது இந்தியாவிலயிருந்து ஏற்றுமதியாகுது. கையில இருக்குற வெண்ணெய இப்ப கொடுக்குறாங்க.. சில வருஷம் கழிச்சு இரும்புத்தாதுவை அரசே இறக்குமதி பண்ணுவாங்க. சீனா தன்னுடடைய நாடு வளர்ச்சியடைனும் சொல்லி இரும்பு, காப்பர், அலுமினியம் அவங்ககிட்ட சுரங்கமிருந்தாலும் எங்க கிடைக்கிதோன்னு தேடி அலையுது. அமெரிக்கா அங்கயிருக்கிற எரிவாயுகிணறுகளை இன்னும் தோண்டவேயில்லை. ஆனா நம்ம ஊருல ஆத்து மணலைக்கூட வித்து அதுல தனியார் காசு பாக்க வழிசெய்றாங்க.
இந்த ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க இதைப்பத்தியெல்லாம் பேசமாட்டாங்க, அப்படி பேசுனா இந்த கார்ப்பரேட் மீடியா அவங்கள காட்டியிருக்கவே மாட்டாங்க. பாபா ராம்தேவ் நடத்துன உண்ணாவிரத டிராமவை ‘லைவ்’காமிச்சவங்க உத்தர்கண்ட்ல ஒரு சாமியார் கங்கையை தூய்மைப்படுத்தனும் சொல்லி உண்ணாவிரதம் இருந்து செத்தே போனாரு. அவரைப் பத்தி அவ்வளவா கவரெஜ் இல்ல. ஏன்ன அது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விவகாரம். சுற்றுச்சூழலை பத்தி பேச ஆரம்பிச்சா வேதாந்தா அலுமினியச்சுரங்கம் பண்ற மாசு பத்தி பேசவேண்டியிருக்கும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செய்கிற மாசு பத்தி சொல்லனும். அம்பானியோட ரிலையன்ஸ் 'Dept free' கம்பெனியா மாறிடுச்சுன்னு செய்தி வந்தது, அதான் இந்தியா கடனாளி ஆகிருச்சே? மாறன், அம்பானி, வேதந்தா எல்லாம் திறமையாலயா முன்னுக்கு வந்தாங்க? பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியெல்லாம் அவங்களுக்கு தோதா பட்ஜெட் போட்டு, வரியை தள்ளுபடி பண்ணி அவங்கள பில்லிணியர் ஆக்கினாங்க. காணி நிலம் பாரதி கேட்டான், இந்தியக் குடிமகன் மனைநிலம் கேட்கிறான் அதெல்லாம் கிடைக்கல. ஆனா பன்னாட்டு நிறுவனக்களுக்கு இருக்கிற நிலத்தையும் பிடுங்குது அரசாங்கம். ஆகஸ்டு15ம் தேதிக்குள்ள ‘லோக்பால்’ நிறைவேறவில்லையென்றால் Elite மெடில்கிளாஸ் எல்லாம் மெழுகுவர்த்தி ஏந்துவாங்களா? இல்ல மறியல் பண்றாங்களான்னு பார்ப்போம்.
வெள்ளி, 10 ஜூன், 2011
நெடுஞ்சாலை விபத்துகள்

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழகம் சாலைப்பாதுகாப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் சாலைவிபத்துகள் ஒரு நிமிடத்து ஒரு விபத்து ஏற்படுகிறது, நான்கு நிமிடத்தில் ஒருவர் அதாவ்து ஒரு மணிநேரத்தில் 14 பேர் கொல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.60 இலட்சம் பேர், அதுவே 2009ம் ஆண்டில் 1.25 பேர் மரணமடைந்துள்ளனர். வருடத்திற்கு வருடம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 13,746 பேர் சாலைவிபத்தில் இறந்துள்ளனர். இது மொத்தவிபத்தில் 11 சதவீதம் ஆகும். இந்தியாவில் ஆந்திரம்,மஹாராஷ்டிரா,தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சாலை விபத்தில் கொல்லப்படுகிறவ்ர்களின் எண்ணிக்கை தேசிய அள்வில் 50 சதவீதமாகும்.

சாலைகள் அதிக அள்வில் விரிவுபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன, தேசிய நெடுஞ்சாலையில் 120 கீமீ வேகத்தில் வாகனக்கள் செல்லக்கூடிய சாலைவச்தியிருந்தாலும் இணைப்பு சாலைகளில் முக்கிய சாலைகளில் கூடுமிடங்களில் தேவைப்படுகிற எச்சரிக்கைகள் இல்லை. கல்வியறிவு நமது மக்களிடம் வளர்திருந்தாலும் சாலைப்பாதுகாப்பு பற்றிய கல்வியோ பயிற்சியோ இல்லை. ஓட்டுனர் உரிமங்களை வீட்டிலிருந்தபடியே கையூட்டு மூலம் பெறமுடியும் என்ற நிலை இருந்தால் என்ன செய்யமுடியும். இருசக்கர வாகன் ஓட்டிகள் பின்னால் வருகிற வாகந்த்தை அறிய உதவுகிற கண்ணாடிகளை பொருத்துவதில்லை, தலைக்கவசம் அணிவதில்லை. புதிதாக வந்த கார்களில் சீட்பெல்ட் இருந்தாலும் அணிவதில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தில் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சாலை விபத்துகளில் மரணவிகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளும் ஒன்றாகும். உலக அளவில் இந்தியாவில் சாலைவிபத்தில் மரணமடைபவர்கள் குறித்து ஐ நா எச்சரிக்கை செய்துள்ளது. சீனாவில் 2004 முதல் சாலை விபத்துகளை தடுப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. விதிகள் கடுமையாக்கப் படவேண்டும் என்பதைவிட தாங்களாகவே பாதுகாப்பாண பயணத்தை மேற்கொள்வதற்கு சாலைப்பாதுகாபு விழாக்கள் கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)