சனி, 18 ஜூன், 2011

ஊழலுக்கு மரியாதை..



Courtesy:'The Hindu'

மரியாதையாக அழைப்பதற்கு ஹிந்தியில் “ஜி” என்பார்கள், ஆனால் இப்போதோ ஊழல்கள் எல்லாம் 2G, CWG, KG என வந்துகொண்டேயிருக்கிறது. தோண்டத்தோண்ட புதிய பூதங்கள் கிளம்பிகிட்டேயிருக்கு. இதுக்கு எல்லையேயில்லை. தனியார்மயம் என்றாலே அது அரசுக்கு வருவாய் இழப்பில்தான் முடியும். அதையெல்லாம் தாண்டி ஊழல் தாராளமயம், உலகமயம் ரேஞ்சுக்கு போயிருச்சு. ஊழலுக்கு வேர் எதுன்னு தெரியாம சும்மா ‘லோக்பால்’ அமைக்கனும் ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க கிளம்பிட்டாங்க. இப்ப யாரு ‘சொசைட்டி’ பெரிசுங்கிற போட்டி வேற நடக்குது. சில வெளிநாட்டு ஆளுக நம்ம ஊருல்ல நடக்குற இந்த ‘சிவில் சொசைட்டி’ கூத்தை பாத்துட்டு இந்தியால இராணுவ ஆட்சியா நடக்குதுன்னு கேட்கிறாங்க. அவங்களுக்கு தெரியாது போல..உலகத்துலேயெ பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்கிற விஷயம். எனக்கும்தான் புரியல ஹசாரே, அப்புறம் இந்த சாமியாரு பாபா ராம்தேவ் இவங்கெல்லாம் சிவில் சொசைட்டின்னு சொன்னா நம்ம தேர்தல்ல நின்னு ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்க எல்லாம் யாரு? எல்லாம் இந்த பேப்பர் காரனும் டிவிகாரனும் பண்ற வேல. இந்த ‘சிவில் சொசைட்டி’ வார்த்தையை அமெரிக்காவிலிருந்து பிடிச்சாங்களோ? இந்த வருசம் டெல்லியில இலட்சக் கணக்காண தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியோட INTUC உட்பட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது, அதை பிபிசி, ரூயிடர்ஸ், செய்தி சேகரிச்சாங்க ஆனா இந்தியன் மீடியா அதை கவரேஜ் பண்ணவேயில்ல, இல்ல அவங்களால ரோடு டிராபிக் ஜாம் ஆயிடுச்சுன்னு ‘தினமலர்’ மாதிரி சொல்வாங்க. இலட்சக்கணக்காண சாதாரண மக்களை , தொழிலாளிகளை பிரதிநுவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள் ‘சிவில் சொசைட்டி’ கிடையாது. கார்ப்பரேட் பக்தர்களுக்கு சிஷ்யர்களாகயிருக்கிற எலைட் மெடில்கிளாஸ் மக்கள்தான் சிவில் சொசைட்டி என்னய்யா நியாயம்.

பாரதீய ஜனதாக் கட்சி ஊழலுக்கு எதிரா தேசிய அளவில பெரிய யாத்திரை நடத்தப்போறாங்கன்னு சொன்னாங்க. முதல்ல கர்நாடகா சுரங்க ஊழல் செஞ்ச மந்திரிய வெளிய தள்ளிட்டு அப்புறம் தொடங்கலாம். நேத்து வரைக்கு ஊழல்ன்னு பேசுனவங்க இப்ப அம்பானி பிரதர்ஸ் பண்ற கோதாவரி பேசின் ஊழலை பத்தி வாயே தொறக்கல. ஏன்னா, அவங்க பைனான்சியர் ஆச்சே? நாட்டுல புதுசா இரும்பு கிடைச்சா, நிலக்கரி கிடைச்சா, காப்பர்கிடைச்சா, எரிவாயு, கச்சா எண்ணெய் கிடைச்சா நாடு முன்னேறியிரும் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் தனியார் கல்லாவுக்கு தான் போயிட்டுஇருக்கு. ஒரு டன் இரும்புத்தாது தோண்டுனா அரசாங்கத்துக்கு 27ரூபாய் தான் போகுது, மார்க்கெட் விலை 5000ரூபாய். வருசத்துக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது இந்தியாவிலயிருந்து ஏற்றுமதியாகுது. கையில இருக்குற வெண்ணெய இப்ப கொடுக்குறாங்க.. சில வருஷம் கழிச்சு இரும்புத்தாதுவை அரசே இறக்குமதி பண்ணுவாங்க. சீனா தன்னுடடைய நாடு வளர்ச்சியடைனும் சொல்லி இரும்பு, காப்பர், அலுமினியம் அவங்ககிட்ட சுரங்கமிருந்தாலும் எங்க கிடைக்கிதோன்னு தேடி அலையுது. அமெரிக்கா அங்கயிருக்கிற எரிவாயுகிணறுகளை இன்னும் தோண்டவேயில்லை. ஆனா நம்ம ஊருல ஆத்து மணலைக்கூட வித்து அதுல தனியார் காசு பாக்க வழிசெய்றாங்க.

இந்த ‘சிவில் சொசைட்டி’ ஆளுங்க இதைப்பத்தியெல்லாம் பேசமாட்டாங்க, அப்படி பேசுனா இந்த கார்ப்பரேட் மீடியா அவங்கள காட்டியிருக்கவே மாட்டாங்க. பாபா ராம்தேவ் நடத்துன உண்ணாவிரத டிராமவை ‘லைவ்’காமிச்சவங்க உத்தர்கண்ட்ல ஒரு சாமியார் கங்கையை தூய்மைப்படுத்தனும் சொல்லி உண்ணாவிரதம் இருந்து செத்தே போனாரு. அவரைப் பத்தி அவ்வளவா கவரெஜ் இல்ல. ஏன்ன அது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விவகாரம். சுற்றுச்சூழலை பத்தி பேச ஆரம்பிச்சா வேதாந்தா அலுமினியச்சுரங்கம் பண்ற மாசு பத்தி பேசவேண்டியிருக்கும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செய்கிற மாசு பத்தி சொல்லனும். அம்பானியோட ரிலையன்ஸ் 'Dept free' கம்பெனியா மாறிடுச்சுன்னு செய்தி வந்தது, அதான் இந்தியா கடனாளி ஆகிருச்சே? மாறன், அம்பானி, வேதந்தா எல்லாம் திறமையாலயா முன்னுக்கு வந்தாங்க? பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியெல்லாம் அவங்களுக்கு தோதா பட்ஜெட் போட்டு, வரியை தள்ளுபடி பண்ணி அவங்கள பில்லிணியர் ஆக்கினாங்க. காணி நிலம் பாரதி கேட்டான், இந்தியக் குடிமகன் மனைநிலம் கேட்கிறான் அதெல்லாம் கிடைக்கல. ஆனா பன்னாட்டு நிறுவனக்களுக்கு இருக்கிற நிலத்தையும் பிடுங்குது அரசாங்கம். ஆகஸ்டு15ம் தேதிக்குள்ள ‘லோக்பால்’ நிறைவேறவில்லையென்றால் Elite மெடில்கிளாஸ் எல்லாம் மெழுகுவர்த்தி ஏந்துவாங்களா? இல்ல மறியல் பண்றாங்களான்னு பார்ப்போம்.

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே ! மெழுகு வத்தியும் எத்துவாங்க ! மறியலும் பண்ணுவாங்க! ஆனா காரியத்தில மட்டும் கண்ணா இருப்பாங்க!---காஸ்யபன்.