சனி, 2 ஜூலை, 2011

புதுசா வந்த பணக்கார சாமி

இது நாள் வரைக்கும் பணக்கார சாமி திருப்பதி ஏழுமலையான் இருந்தாரு அவருகிட்ட இருக்கிற நகைகளோட மதிப்பு 52,000 கோடி ரூபா, ஆனா இப்ப கேரளாவில இருக்கிற பத்மநாத சுவாமி கோயில்ல இருக்கிற பூட்டிய அறைகளைத் திறந்து அங்கிருக்கிற செல்வங்களை மதிப்பிடும் வேலை நடக்குது. இன்னைக்கு கேட்ட செய்தியின் படி சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நகைகள் தேரும் போல.இத என்ன பண்ணுவாங்க ???

திருப்பதிக்கு முக்கிய வருமானமே உண்டியல் தான். உண்டியல் 5 ரூ, 10ரூ காணிக்கையை போட்டு அவ்வள்வு சொத்து சேரல. சில வியாபாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் எல்லாம் சாமிகிட்ட சில அக்ரிமெண்ட் போட்டு முறைகேடா கிடைக்கிற பணத்துல சில பங்கை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துறாங்க. எல்லாம் பரிகாரம்,ஒரு பயம் தான் காரணம். சாமிகிட்ட அதக்கொடு இதக்கொடுன்னு கேக்குறதுக்காகவே ரெம்ப பேரு கோயிலுக்கு போறாங்க. திருப்பதி உண்டியல் சில சமயம் ஒரே கட்டுல கோடிக்கணக்கான ரூபா நோட்டுகள் கிலோ கணக்கில் நகைகள் உண்டியல்ல வந்திருக்கு. இப்படி அந்த சாமி பிறப்பால பணக்காரரு கிடையாது, பக்தர்களோட காணிக்கை தான். அவருக்கு பக்தர்கள் அம்பானியிலிருந்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்‌ஷே வரைக்கு இருக்காங்க.

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்திச்சு? அந்தக் காலத்துல திருவாங்கூர் மஹாராஜாவோட கட்டுப்பாட்டுல திருவனந்தபுரம் இருந்துச்சு.இப்ப பூட்டிக்கிடந்த அறைகளிலிருந்து எடுத்த நகைகளெல்லாம் அந்த ராஜா காலத்து செல்வங்கள் தான். அந்தக் கால்த்து ராஜாக்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மக்களை குறிப்பாக விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரிமேல் வரி போட்டுத்தான் இப்படி செல்வங்களை சேர்த்தார்கள்.சேர்த்த செல்வங்களயெல்லாம் கோவில்களிலே பதுக்கினார்கள்,ஏனென்றால் மக்கள் ஒருவேளை பொங்கியெழுந்தாலும் கோயில்ல இருக்கிற கொள்ளை செல்வத்திற்கு ஆபத்தில்லை. அடுத்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ராஜாக்களுக்கு இந்த ரகசியம் தெரியும் அதனால தான் முதல்ல கோயில இடிப்பான், கொள்ளையடிப்பான் அப்புறம் பரிகாரமும் செய்வான். ஆட்சி செய்த பகுதியெல்லாம் ராஜாவோட நிலம் தான், அவரு குறுநில மன்னருக்கு அதிகாரம் கொடுப்பார் ஏக்கருக்கு இத்தனை ரூபா கொடுக்கணும் என்று, குறுநில மன்னர்,நிலப்பிரபுக்கள், ஜமீன்கள், அப்புறம் பண்ணையார்கள் கடைசியா அந்த நிலத்துல உழுகிற விவசாயி குத்தகை தரணும். இப்படி வரிசைக்கிரமமா அக்கிரமம் பண்ணினாங்க உழைக்காம ஒரு கூட்டம் படைகளை வச்சிகிட்டு உழைக்கிறவங்கள உறிஞ்சிவாழ்ந்த காலம் அது.வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவங்க கவலைப்படல. வெள்ளைக்காரனுக்கு ஒழுங்கா கப்பம் கட்டிவந்ததால அவங்க சம்ஸ்தானம் தப்பிச்சது. இப்படிப்பட்ட `மஹாராஜா’க்களை தான் அந்தக் கால்த்து மக்கள் தெய்வாம்சமா வணங்கினாங்க, இப்பவும் தான். அடிமைப்புத்தி என்னைக்கு போச்சு.

இந்த பணத்த என்ன பண்ணலாம்,. நாட்டுல வறுமையை ஒழிக்கிறதுக்கு பணம் இல்லைன்னு சொல்றாங்களே அதுக்கு பயன்படுத்தலாம், இந்த பணத்தை வச்சு நாடு பூராவும் ஆஸ்பத்திரி கட்டலாம், நிறைய பள்ளிகள் கல்லூரிகள் அரசாங்கமே கட்டலாம். எதுவுமே நடக்காது. `அனந்தசயன’ நாராயணன் மாதிரி இந்த நகைகள் திரும்பவும் தூங்கும்.

3 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! புதுக் கணக்குப்படி 2லட்சம் கோடி.இன்னும் ஒரு அறை திறக்க வேண்டும். கோவில் கள்ளப்பண கிட்டங்கியாக இருந்திருக்கலாம். அந்தக்காலத்தில் பத்மநாப சாமி கொவிலீல் "ஊட்டுபொறை "என்று உண்டு. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.(பிராமணர்கள் மட்டும்.) நெல்லை மாவட்டத்தின் தென் கோடி அம்பை,செங்கோட்டை,தாலுகா மக்கள் (பிராமணர்கள்) ஊட்டுப்பொறையில் படித்து வக்கீல்,இஞ்சினியர் ,டாக்டர் ஆகி சக்கை போடு போட்டவர்கள் உண்டு. எனக்கு உள்ள கவலை அதுவல்ல. தேவஸ்வம் போர்டு தேர்தல் இனி சூடு பறக்கும்.அடி,தடி,,கொலை....பயமாக இருக்கிறது.கஸ்யபன்.

hariharan சொன்னது…

2 லட்சம் கோடி யப்பா!!!
அந்தக் காலத்தில் ஒவ்வொரு கோவிலும் ஒரு சுவிஸ்வங்கியாக இருந்திருக்கிறது.

கோவிலை குறிப்பிட்ட ஒரு கூட்டம் மட்டுமே அனுபவித்து வந்திருக்கிறது.

பூட்டிய அறைகளை இப்போது எப்படி திறக்கவேண்டிய யோச்னை வந்தது. சமஸ்தான வாரிசுகளுக்கு தெரியாமலா இருக்கும்.

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! தனிப்பட்ட நபர் ஒருவர் பொதுநல வழக்கு போட்டார். இப்பொது உச்சநீதிமன்றம் நிலவறையைத்திறந்து பாருங்கடா என்று உத்திரவிட்டது.இன்னுமொரு அறையைத்திறக்க எதிர்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்---காஸ்யபன்.