சனி, 9 ஜூலை, 2011

ஜவுளிக்கடை சிப்பந்திகள்

இந்தவாரம் கோவையில் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன், அது எல்லா ஜவுளிக்கடைகள் இருக்கிற பிரதான சாலையில் இருக்கிறது. தரைத்தளம், பேஸ்மெண்ட், அப்புறம் மூன்றுமாடிகள்.உள்ளே நுழையும்போது எனக்கு ஏதாவ்து திருமண சத்திரத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது, அப்படியொரு வரவேற்பு. கடைக்கு வரும் கஷ்டமர்களை கும்பிடு போடுவதற்காக மூன்று , நான்கு பெண்களை வாசலில் நிறுத்தியிருக்கிறார்கள். அப்புறம் அதை கண்காணிப்பதற்கு சிலர் வேறு. எனக்கு கூச்சமாகிப்போனது. ஒரு கடைநிலை சிப்பந்தியைப் பார்த்து யாராவது சார் என்று விளித்தது போல் ஆகிவிட்டது.

கடையின் உள்ளே நுழைந்தால் எங்கும் யூனிபார்ம் அணிந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கடையில் வேலைபார்ப்பவர்கள். வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும் அவரை பிடித்து இழுக்காத குறைதான். இப்போது புதிதாக முழைத்துள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பில் போடுவதற்குத்தான் ஆளிருப்பார்கள். ஆனால் இங்கெ தலைகீழ். சரி எப்படி இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், ஒரு தளத்திற்கு குறைந்தபட்சம் 50 பேர் என்றால் மொத்தம் 5தளங்கள் 250 பேர். வாதத்திற்காக 250 குடும்பங்களை வாழ்வைக்கிறார்கள் என்று சொன்னால் அந்த பாரம் எல்லாம் வாடிக்கையாளர்கள் தலை மீது தானே வைக்கிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகள் எல்லாயிடத்திலும் இதே நிலைமைதான். ஆனாலும் அங்கெ செல்வதை தவிற்க்கமுடியவில்லை.

வாசலில் வரவேற்பு செய்பவர்களைப் பார்த்தவுடன், பழைய ஞாபகம் வந்தது.சென்னையில் நான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் ஒரு பொதுமேலாளரின் மகள்/மகன் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. அந்த அதிகாரி அவர் சார்ந்த துறையில் வேலைசெய்யும் ஊழியர்களை மண்டபத்திற்கு அழைத்திருந்தார். மறுக்கமுடியாமல் சென்று தொண்டூழியம் செய்தோம். நானும் எனது நண்பனும் வரவேற்பு இடத்தில் வந்தவர்களுக்கு பன்னிர் தெளிப்பது, மற்றும் செயற்கையாக சிரிக்கும் வேலைகளை செய்தோம். எனது நண்பன் வருபவர்களை வைதுகொண்டே வரவேற்பான், எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு புன்னகை செய்தேன். அரசியல்கட்சி மாநாட்டிற்கு மட்டும் காசு கொடுத்து ஆள்களை திரட்டிவரவில்லை. இப்படி சில தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை அடிமை வேலைகளை ஏவுகிறார்கள் ஆனால் வெளியில் தெரிவதில்லை.

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! அரசுத்துறையும் அப்படித்தான். தொழிற்சங்க பலம் உள்ள துறைகளில் பரவாயில்லை. இல்லையென்றால் சுய மரியாதையை இழந்து நிற்கவெண்டியதுதான்.---காஸ்யபன்