வியாழன், 9 ஜூன், 2011

பங்குச்சந்தை - Stock Index or Misrey Index.



சமீபத்தில் ‘பெரு’ நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரிக்கட்சியை சேர்ந்த ஒல்லண்டா ஹூமாலா வெற்றியடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவானவுடன் அந்த நாட்டின் பங்குச்சந்தை 12.5% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே அனுபவம் நிறைய நாடுகளுக்கு உண்டு, எப்போதெல்லாம் பெருவாரியான மக்கள் மாற்றத்திற்க்காக புதிய அரசை தேர்ந்தெடுக்கும் போது பங்குச்சந்தை அதற்கு மாறாக இருக்கும். சாதாரண மக்கள் ஒரு அரசை விரும்பினால் அப்போது பங்குச்சந்தை எதிர்மறையாக இருக்கும். இதைத்தான் Stock Index ஐ misrey Index என்று பிரபல் பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுவார்.

இந்தியாவில் 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த பாஜக ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு மாற்றாக இருக்கமுடியாது என்று மீடியாவின் ‘பண்டிட்கள்’ சொன்னதற்கு மாறாக பிரதேச கட்சிகளும் இடதுசாரிகட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இடதுசாரிக்கட்சிகள் இல்லாத ஆட்சியை மத்தியில் காங்கிரஸ் அமைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் படுபதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்தியாவில் 1.15 சதவீதம் பேர் விளையாடுகிற அந்த பங்குச்சந்தை வீழ்ந்தவுடன் துடித்துப்போய் சிதம்பரம் மும்பைக்கு ஓடினார், முதலீட்டளர்களை காப்பாறுவதற்கு. ஐ மு -1 வது ஆட்சியில் மத்திய அரசு நினைத்த அள்விற்கு ‘சீர்திருத்தம்’ செய்யமுடியவில்லை. இன்றைக்கு பெட்ரோல் விலை தாறுமறாக உயருவதற்கு காரண்மான ‘கீர்த்தி பரேக்’ கமிட்டியின் அறிக்கை 2004 அமல்படுத்த அரசு முனைந்த போது இடதுசாரிகள் தடுத்தார்கள். இன்சூரண்ஸ் துறையிலும், வங்கித்துறையிலும் அந்நிய மூலதனத்தின் கட்டுப்பாடு வரம்புகளை தள்ர்த்த முனைந்த போதும் ‘கடிவாளம்’ தடுத்தது. உலகெங்கும் 2008ல் பொருளாதார மந்தம் தேக்கம் ஏற்பட்ட போது இந்தியா அப்படிப்பட்ட சிக்கலை சந்திக்காதற்கு காரணம் ‘வங்கிகள், இன்சூரன்ஸ்’ போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த்தால் தான் என்று ’தாராளவாதி’மன்மோகன்சிங் அவர்களே ஒத்துக்கொண்டார். மீடியாக்கள், மத்தியதர வர்க்கத்தின் பொதுப்புத்திகளை தாண்டி முதல் ஐக்கிய முண்ணனி அரசு தக்வல் அறியும் உரிமைச்சட்டம், நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் போன்ற மக்கள் நலத்திடங்களை அறிவித்தது. மீண்டும் பங்குச்சந்தைக்கு வ்ருவோம்..

2004 ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்கு ஆசியாவில் சுனாமியின் தாக்குதலில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அள்வில் பாதிப்பிற்கு உள்ளாயின, அதிக பட்சமாக இந்தோனேசியாவில் 160,000 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழக்த்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 30,000 பேர் வீடுகளை இழந்தனர். சுனாமி ஆழிப்பேர்லை பலி கொண்ட சில நாட்களில் இந்தியா, இந்தோனேசியா,இலங்கை போன்ற பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உச்சத்தில் இருந்தன. அதாவது நிவாரணப்பணிகளுக்கு அந்நிய மூலதனம் வரவேற்பதற்கு. அதனால் தான் Misrey Index என்ற பதம் மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது. இந்தியாவில் சாதாரணம்க்கள் பாதிப்படைகிற மாதிரி பட்ஜெட் அமைந்தாலோ அல்லது விலைவாசி உயர்ந்தாலோ சென்செக்ஸ் அதிகரிக்கும். 30 சதவீதம் வரிபோட்டு பெட்ரோல் விலையால் வருமானம் சேர்க்கும் அரசு பெட்ரோலுக்கு மானியம் தருவதாக சொல்கிறது.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்
http://www.cashthechaos.com/blog/?p=668

கருத்துகள் இல்லை: