நம் நாட்டில் நடக்கிற மனித உரிமை மீறல் பற்றிய செய்திகள் வருவதேயில்லை, அடுத்த நாடுகளில் நடக்கிற மனித உரிமைகளைப் பற்றி இங்கே நிறைய விவாதிக்கப்படுகிறது அது ஒரு வகை அரசியல். மனித உரிமை மீறல்களை யார் செய்கிறார்கள்? தீவிரவாதிகளா? சமூகவிரோதிகளா? ரெளடிகளா? இல்லை. போலீஸூம் ராணுவமும் தான். இங்கே அரசு செய்யும் அடக்குமுறைகள் நியாயப்படுத்தப் படுகின்றன. பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் ஊடகங்களுக்கு வருவதில்லை, அப்படி வந்தாலும் எடிட்டரின் அறையிலேயெ அந்த செய்திகள் கொல்லப்படுகின்றன. அவர்கள் ஆளுகிறவர்களை காப்பாற்றுகிறார்கள். இந்தியாவின் பிரச்சனையாக இருக்கச்கூடிய காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமைமீறல்களும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை இங்கெ தேசவிரோதிகளாக சித்தரிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ராணுவத்தின் முகமூடியைக் கிழிப்பதால்தான். சமூகத்தில் அடித்தட்டு மக்கள்தான் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். பொருளாதாரரீதியில் பினதங்கியவர்களும் சாதியில் கடைநிலையில் இருப்பவர்களான ‘தலித் மக்கள்’ ஆதிக்கசாதியினராலும் காவல்துறையினராலும் தாக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் தலித்துகளுக்கெதிராக 27 வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன, இது அரசே கொடுத்த தகவல்கள். இது போன்று பொதுமக்களிடமிருந்து அந்நியமாக வசித்துவருகிற பழங்குடிமக்களும் காவல்துறையால் தாக்குதலுக்குள்ளான செய்தியை வாச்சாத்தி சம்பவத்தால் அறிந்தோம். அந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையிலெடுத்துப் போராடியதால் வெளிச்சத்திற்கு வந்தது.
‘சோளகர் தொட்டி’ நாவல் மூலமாகத்தான் இப்படி ஒரு இனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்தேன். இன்றைக்கு பூர்வகுடிகள் என்றால் அவர்கள் பழங்குடியினர் மட்டுமே, மற்ற எல்லா இனமக்களும் ஏதோ ஒரு இடத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்கள் நாகரீக வாசிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்நாவலின் தொடக்கத்தில் அம்மக்களின் வாழ்க்கைமுறையை சொல்கிறது. பிற்பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையால், பாதுகாப்புப் படையினரால் அந்த இனமக்கள் விசாரணை என்ற பெயரில் சித்தரவதைக்குள்ளாகிறார்கள். நாகரீக மனிதர்களைப் போல் அவர்கள் தனியாக சொத்துசேர்ப்பதில்லை. காடுகளில் வசிப்பவர்களால் காடுகள் அழியவேயில்லை, வனத்தை காப்பதற்கு வேலியாக இருப்பவர்கள் தான் ‘மேய்ந்தார்கள்’. சந்தனமரக் கடத்தலுக்கும் அந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை, அவர்கள் வனத்தின் எல்லையில் குடியிருந்தாலேயே, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்ற பெயரில் ஆண்களை தனிமுகாம்களில் அடைத்து சித்தரவதை செய்தனர், பெண்களை கைதுசெய்து முகாம்களில் அடைத்து காவலர்கள் பாலியல் வண்புணர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அந்தமக்களுக்கு தெரியாத தகவல்களை காவல்துறையினர் பெறுவதற்கு அவரகளை பல்வேறு சித்திரவதைக் குள்ளாக்கினார்கள், விரல் நகங்களை பிடிங்குதல், மின்சாரத்தால் ஷாக் கொடுப்பது, கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது, பெண்களை தினமும் பாலியல் வல்லுறவு செய்வது, அவர்களின் ஆடைகளை கழைந்து எல்லாரையும் நிர்வாணத்தைக் காணுமாறு கட்டாயப்படுத்தி அடிப்பது. இது போன்ற எண்ணற்ற கொடுமைகள் நாவலை வாசிக்கும் போது மனம் கனக்கிறது, இப்படிப்பட்ட சமூகத்தில் தான் வாழுகிறோமா? இதற்கெல்லாம் ஆளுபவர்கள் தானே பொறுப்பு. வீரப்பனை பிடிக்கமுடியாத நேரத்தில் முகாம்களில் சித்தரவதைக்குள்ளான சோளகர்களுக்கு வீரப்பன் கூட்டம் அணிகின்ற ‘யூனிபார்ம்’ களை காவல்துறையே அணிவித்து சுட்டுக்கொன்றுவிட்டு மோதலில் கொல்லப்பட்டனர் என்று மீடியாக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
நாவலை எழுதிய திரு.ச.பாலமுருகன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனித உரிமை அமைப்புகளில் இணைந்து போராடியவர். சோளகர் இனத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அரசு இயந்திரத்தால் எப்படி இந்த சமூகம் கொடூர அடக்குமுறைக்கு உள்ளானது பற்றியும் தெரிந்துகொள்ள இந்நாவலை வாசிக்கவேண்டும்.
ஞாயிறு, 8 மே, 2011
வியாழன், 5 மே, 2011
சமச்சீர் மின்வெட்டு
தமிழ்நாட்டில மூன்று வருஷமா தீராத பிரச்சனை மின்வெட்டுதான், சரியான திட்டம் போடாம அவசர கோலத்துக்கு எல்லாக் கம்பெனியையும் தமிழ்நாட்டுக்கு கூப்பிட்டு இங்க வந்து தொழில் செய்யின்னு ஒப்பந்தம் போட்டாங்க.அதே சமயத்தில மின்சார உற்பத்திக்கும் திட்டம் போட்டாங்க அது ரெம்ப வருஷமா காகிதத்தலேயே இருந்தது, ஆனா பன்னாட்டு கார் கம்பெனி, செல்போன் கம்பெனியெல்லாம் உடனே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இருக்கிற மின்சாரத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்வதற்கு பேருதான் மின்வெட்டு, ஆனா இந்த மின்வெட்டிற்கும் வர்க்க வேறுபாடு இருக்குது. எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி மின்வெட்டு கிடையாது. நகரங்களில் 2மணிநேரம் மின்வெட்டுனா கிராமத்தில அது 4 மணிநேரம் ,6 மணிநேரம் கூட கட் பண்ணுவாங்க, நகரத்திலதான பணக்காரங்க இருக்காங்க. சென்னையில் மின்வெட்டே கிடையாது அங்கே தான் நிறைய பன்னாட்டு நிறுவனக்கள் இருக்குதே, அதே உள்ளூர் தொழில் செய்பவர்களுக்கு வேறமாதிரி. இந்தமாதிரி முக்கியத்துவம் கொடுக்கிறதுக்கு என்ன வியாக்யானம் கூட கொடுக்கலாம். ஆனா ரிசல்ட் மக்களை நஷ்டப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களை வாழ்வைக்கிற கொள்கைதான் காரணம்.
நேற்று கோவையில் நடந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டத்தை ‘தினமலரும் தினமணியும் ஆதரித்தே செய்தி வெளியிட்டார்கள். தினமலர் இப்படி “தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது. இதேபோல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது” செய்தி வெளியிட்டுள்ளது. ஏனென்றால் இந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டம் நடத்தியவர்கள் சிறுதொழில் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள். அரசுக்கெதிராக அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களோ தங்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தினால் தினமலர் நக்கல் செய்து எழுதும். பொதுமக்கள் கஷ்டப்படுகிற மாதிரி எழுதுவாங்க.. சாலைமறியல், ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று எழுதுவார்கள். இங்கே தான் அவர்களின் வர்க்கசிந்தனை வெளிப்படுகிறது. எப்படி தமிழகத்தின் சிறுதொழில் செய்பவர்கள் ,வணிகர்கள் தங்கள் பிரச்ச்னைகளை கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாதபோது பொதுவெளியில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக போராடுகிறார்களோ அதே நியாயம் தான் ஒவ்வொரு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த மின்வெட்டினால் தொழிற்துறையினர் பாதிக்கப்படும்போது அதில் தொழிலாளர்களும் வேலையிழக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கேற்றது மிகவும் பாராட்டத்தக்கது.மத்திய அமைச்சரவையில் எந்த இலாகாக்கள் வேண்டும் என்பதை பிடிவாதமாக பெறும் கழக அரசு பற்றாக்குறை மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு என்ன தயக்கமோ?
நேற்று கோவையில் நடந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டத்தை ‘தினமலரும் தினமணியும் ஆதரித்தே செய்தி வெளியிட்டார்கள். தினமலர் இப்படி “தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது. இதேபோல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது” செய்தி வெளியிட்டுள்ளது. ஏனென்றால் இந்த மின்வெட்டிற்கெதிரான போராட்டம் நடத்தியவர்கள் சிறுதொழில் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள். அரசுக்கெதிராக அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களோ தங்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தினால் தினமலர் நக்கல் செய்து எழுதும். பொதுமக்கள் கஷ்டப்படுகிற மாதிரி எழுதுவாங்க.. சாலைமறியல், ஊர்வலத்திற்கு தடைவிதிக்கவேண்டும் என்று எழுதுவார்கள். இங்கே தான் அவர்களின் வர்க்கசிந்தனை வெளிப்படுகிறது. எப்படி தமிழகத்தின் சிறுதொழில் செய்பவர்கள் ,வணிகர்கள் தங்கள் பிரச்ச்னைகளை கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாதபோது பொதுவெளியில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக போராடுகிறார்களோ அதே நியாயம் தான் ஒவ்வொரு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த மின்வெட்டினால் தொழிற்துறையினர் பாதிக்கப்படும்போது அதில் தொழிலாளர்களும் வேலையிழக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கேற்றது மிகவும் பாராட்டத்தக்கது.மத்திய அமைச்சரவையில் எந்த இலாகாக்கள் வேண்டும் என்பதை பிடிவாதமாக பெறும் கழக அரசு பற்றாக்குறை மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு என்ன தயக்கமோ?
வாழ்வும் தாழ்வும்
கடந்தபோன வரலாற்றிலும் சரி நிகழ்கால வாழ்க்கையிலும் சரி சிந்தனையும் கருத்தும் இரண்டு விதமாக இருக்கிறது, ஒன்று ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றொன்று அடித்தட்டு மக்களின் சிந்தனை. இந்த சிந்தனையையும் கருத்தையும் பத்திரிக்கைகள், ஊடகங்கள், இலக்கியம் வாயிலாக பார்க்கிறோம். ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும் எல்லாரையும் இடதுசாரியா, வலதுசாரியா வென்று பிரித்துவிடலாம், சிலபேர் நாங்க ரெண்டு பக்கமும் இல்ல நடுவில இருக்கிறோம் என்று சொன்னால் அது ஏமாற்றுவேலை. எப்போதுமே ஆட்சியை புகழ்ந்து எழுதுவதினாலும் பேசினாலும் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கும். நீங்கள் ஆட்சியை விமர்சித்து எழுதினீர்களோ பேசினீர்களோ என்றால் தேசவிரோதிகளாக சித்தரிப்பார்கள். நீங்கள் இலங்கையில் நடந்த அல்லது நடக்கிற இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து பேசினால் ‘அரசு’ கவலைப்படுவதில்லை. அதே சமயம் நீங்கள் இந்திய ராணுவம் காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறலைப் பற்றி எழுதினால் உங்கள் மீது தேசவிரோத வழக்கு கூட வந்துவிடும். மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரத்தை தேசபக்தியாக எல்லா ஊடகங்களும் எழுதினார்கள் பேசினார்கள். யாருக்கான இந்தியா ஒளிர்கிறது என்பது தெரிந்துவிட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக அரசோட புள்ளிவிவரங்களே சொல்கின்றன. இந்தியாவிக்குள்ளேயே இரண்டு இந்தியா இருக்கிறதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார், ஆனால் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான திட்டம் ஆட்சியாளர்களிடம் இல்லை. வருடத்திற்கு வருடம் நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது அதே சமயத்தில ஐநாவின் Human Development indicatorல் இந்தியாவின் Rank மோசமாகிக்கொண்டே வருகிறது. Forbes நிறுவனம் பில்லிணியர்களின் ரேஸ் பத்தி எழுதிக்கிட்டேயிருக்காங்க, அதுல இந்தியா 4வது இடத்தில இருக்குது, ஆனா HDIல் 134வது இடம் இருக்கு. பில்லினியர்கள் அமெரிக்கா,ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்தபடியா இந்தியாவுலதான் அதிகம் பேர் இருக்காங்க. பில்லிணியர்களோட சொத்துமதிப்பை வச்சுப்பார்த்தா இந்தியா ரெண்டாவது இடத்துல இருக்குது ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் சும்மா நானும் பில்லினியர் அப்படி எண்ணிக்கையில் இருக்காங்களே தவிர அவங்ககிட்ட அதிகமா ‘பில்லியண் டாலர்’ இல்ல. இப்படி ஒரு சமூகத்தில் 1சதம் பேரின் வளர்ச்சியைத்தான் ஒளிர்கிறதென்று கொண்டாடுகிறோம். இன்னும் நடுத்தர வர்க்கத்தில் பத்து சதவீதம்பேர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறுவிவசாயிகள் இந்த பதினைந்து வருடத்தில் சுமார் 2,00,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் கடன்சுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களோட கடன்சுமை ரூ 50,000 இருந்து 2 லட்சம் வரைக்கும் இருக்கலாம் இது ஐடி யில் வேலைபார்க்கிறவரோட ஒருமாச சம்பளம். இப்படி ஒருபகுதியினர் வேகமாக வளர்வதும் மறுபுறம் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாவதற்கும் என்ன காரணம். அவங்களோட தலைவிதியா இல்ல அரசாங்கத்தோட கொள்கைமுடிவா? யோசிக்கணும்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக அரசோட புள்ளிவிவரங்களே சொல்கின்றன. இந்தியாவிக்குள்ளேயே இரண்டு இந்தியா இருக்கிறதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டார், ஆனால் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான திட்டம் ஆட்சியாளர்களிடம் இல்லை. வருடத்திற்கு வருடம் நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது அதே சமயத்தில ஐநாவின் Human Development indicatorல் இந்தியாவின் Rank மோசமாகிக்கொண்டே வருகிறது. Forbes நிறுவனம் பில்லிணியர்களின் ரேஸ் பத்தி எழுதிக்கிட்டேயிருக்காங்க, அதுல இந்தியா 4வது இடத்தில இருக்குது, ஆனா HDIல் 134வது இடம் இருக்கு. பில்லினியர்கள் அமெரிக்கா,ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்தபடியா இந்தியாவுலதான் அதிகம் பேர் இருக்காங்க. பில்லிணியர்களோட சொத்துமதிப்பை வச்சுப்பார்த்தா இந்தியா ரெண்டாவது இடத்துல இருக்குது ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் சும்மா நானும் பில்லினியர் அப்படி எண்ணிக்கையில் இருக்காங்களே தவிர அவங்ககிட்ட அதிகமா ‘பில்லியண் டாலர்’ இல்ல. இப்படி ஒரு சமூகத்தில் 1சதம் பேரின் வளர்ச்சியைத்தான் ஒளிர்கிறதென்று கொண்டாடுகிறோம். இன்னும் நடுத்தர வர்க்கத்தில் பத்து சதவீதம்பேர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறுவிவசாயிகள் இந்த பதினைந்து வருடத்தில் சுமார் 2,00,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் கடன்சுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களோட கடன்சுமை ரூ 50,000 இருந்து 2 லட்சம் வரைக்கும் இருக்கலாம் இது ஐடி யில் வேலைபார்க்கிறவரோட ஒருமாச சம்பளம். இப்படி ஒருபகுதியினர் வேகமாக வளர்வதும் மறுபுறம் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாவதற்கும் என்ன காரணம். அவங்களோட தலைவிதியா இல்ல அரசாங்கத்தோட கொள்கைமுடிவா? யோசிக்கணும்.
ஞாயிறு, 1 மே, 2011
மே தின வாழ்த்துக்கள்

சிகாகோ நகரில் 1886ல் மே முதல் நாள் 8மணி நேர வேலைக்கான போராட்டத்தின் அடையாளமே இன்று உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் மேதின நாளாக கொண்டாடிவருகிறது. இந்தியாவில் இன்னும் 8மணிநேர வேலையென்பது எல்லாருக்கும் வந்துவிடவில்லை, நாட்டின் மக்கள் தொகை பெருகியது போலவும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது போன்றும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. முறைசாரா தொழிலாளர்கள் பெருகியுள்ளனர், அவர்களுக்கு எந்தவித பணிப்பாதுகாப்போ, மருத்து்வசதியோ, சுத்தமான பணிச்சூழலோயில்லை. மாறாக நாட்டின் பில்லிணியர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துவருகிறது. உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச தொழிலாளர் நலச்சட்டங்களை அரசு தொழில் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தமறுக்கின்றன.போராடுகின்ற தொழிலாளர்களை தமிழன் என்றும் மனிதன் என்றும் பாராமல் பன்னாட்டு நிறுவனக்களின் நலன்களுக்காக தடிகொண்டு அடக்குகிறார்கள்.
இந்த நாளில் தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி வேறுபாட்டின்றி ஒரே வர்க்கமென்று உறுதிகொள்ள சபதமெடுப்போம். எல்லா அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி மேதின விழாவை கொண்டாடுகிறார்கள், தொழிலாளர்களாகிய நாம், யார் நம் பக்கம் நிற்கிறார்கள், நமக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுகிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணரவேண்டும். தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாதபோது வேறுவழியின்றி வேலைநிறுத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதை நமது ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன. ஒரு துறையினரின் ஊழியர்களின் போராட்டங்கள் அடுத்ததுறை ஊழியர்களால் இழிவுசெய்யப்படுகிறது. இதை தவிர்த்து வர்க்க ஒற்றுமையின் மூலம் ஒற்றுமை பேணப்படவேண்டும்.
உலகத்தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)