திங்கள், 4 ஜனவரி, 2016

ஜே.சி.குமரப்பா



காந்தியப்பொருளாதார அறிஞர் குமரப்பாவின் பிறந்தநாள் இன்று. அவருடைய பொருளாதார சிந்தனைகள் சிலவற்றை பார்க்கலாம்...குமரப்பா அவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் சிலவற்றை வெ.ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தாய்மைப்பொருளாதாரம் என்ற நூ்லை இயல்வாகைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.




உற்பத்தி.
மூன்றாம் உலக நாடுகளில் அதிகமான உற்பத்தி சக்திகள் குவிந்து கிடக்கின்றன, எனவே இங்கு மனித உழைப்பைக் குறைக்கும் பெரிய இயந்திரங்களுக்கு இடம்ளிக்ககுடாது. அதிகமான மனித ஆற்றலைப் பயன்படுத்த்துவதன் மூலம் மக்களுக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும்.


கூலி
உழைப்புக்கும், தேவைக்கும் ஏற்ற கூலி தரப்ப்டவேண்டும். ஒருவர் ஆரோக்கியமான உண்வைப் பெறும் வகையில் சம்பளம் தருவது அரசின் கடமை. முதலாளித்துவ நாடுகளில் கூலி அளவே பொருட்களின் விலையை நிர்ணயிப்பதாக உள்ளது. கூலி லாபத்திற்கும், சந்தை விலைக்கும் ஏற்ப ஏற்ற இறக்கம் காணுகிறது. லாபம் கொண்டு கூலியை நிர்ணயிக்கக்கூடாது. கூலி என்பது தொழிலாளியின் ஆரோகியமான வாழ்வைப் பாதுகாக்க உதவும் வகையில் அமைய வேண்டும்.


நுகர்வோர்
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருளில் என்ன உள்ளது, என்ன மதிப்பு என்பது தெரியாமலேயே வாங்கிக்கொண்டுள்ளனர். பொருளுக்கு வைக்கப்பட்ட விலைக்கு அது மதிப்புள்ளது என நம்புகின்றனர். பொருளின் மதிப்பை பற்றி அறிவது அவசியம்.


போர்.
ஆக்கிரமிபும், சுரண்டலும் அடிப்படையான் காலனியமே போருக்குக் காரணமாகிறது. தொழில்நுட்பம் கொண்டு அதிகப்பொருள் செய்து குவிக்கப்படுகிறது. இவை மக்களின் வறுமை பொக்க, பசி திர்க்க உதவிவில்லை. மனித வாழ்வௌ மேலும் பாதுகாப்பற்றதாக, கவலைமிக்கதாகவே மாறியுள்ளது.
செல்வக்குவிப்புப் பேராசையை விட்டு, சாதாரண மக்களின் நலவாழ்வுத்தேவைகளைத் தர ஒவ்வொரு நாடும் முயற்சி செயவேண்டும். உலகச்சந்தை, அதிக உற்பத்தி, அதிக விற்பனை, அதிக லாபம் என்பதை விட்டு அனைத்துமக்களின் மகிழ்ச்சியான நிறைவான வாழ்வுக்கு உதவும் பொருளாதார மாற்றம் இல்லையென்றால் உலகசமாதானம் என்பது வெறும் கற்பனையே.


காந்தி படுகொலை செய்யப்பட்ட அதெ ஜனவரி 30ம்தெதி ஜே.சி.குமரப்பா மறைந்தார்.



கருத்துகள் இல்லை: