திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஆயுதபூஜை


இந்தியாவில் ஆயுதங்களை வழிபடுவதற்கு, நன்றி செலுத்துவதற்கு ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியில் எத்தனையோ கருவிகள், பொருடகளை உற்பத்திசெய்வதற்கும், மனித உழைப்பை எளிமைப்படுத்தவும் கருவிகளை படைத்திருக்கிறோம். மனிதசமுதாயத்தின் ஆரம்பகாலத்தில் மற்றவிலங்குகளைப்போல் வேட்டையாடி உயிர்வாழ்ந்திருக்கிறான், விலங்களை கருவிகள் இல்லாமல் உடல்பலத்தில் வேட்டையாடும்போது உடலில் காயம்,உயிரிழப்பும் ஏற்பட்டது அதனால் தொலைவிலிருந்து விலங்குகளை தாக்குவதற்கு அவன் பயன்படுத்திய முதல் ஆயுதம் கற்கள், அந்த கற்களையே பலவிதமாக செதுக்கி வேட்டையாடுவதற்கு பயன்படுதியுள்ளான், பின்னர் வில் அம்பு வை பயன்படுத்தி விலங்குகளை தொலைவிலிருந்தே தாக்கமுடிந்தது. இப்போது எறிந்த அம்புகளை மீண்டும் உற்பத்தி செய்யவேண்டியிருந்தது, அதற்கு மாற்றாக பூமராங் எனப்படுகிற ஆயுதம். விலங்குகளை தாக்கியபின் மீண்டும் மனிதனின் கைக்கு திருப்பிவந்தது.

அதற்கு அடுத்தகட்டமாக விலங்குகளை பழக்கி மேய்ச்சல் தொழிலை செய்தான், அடுத்து பயிர்தொழிலை கண்டுபிடித்து நிலையாக ஓரிடத்தில் வாழ்வதற்கு ஏற்பாடுசெய்தான். கற்கருவிகளிருந்து, செம்பு, இரும்புக் கருவிகளை உற்பத்திசெய்தான். அப்போது இரும்பிலான கோடாரி கண்டுபிடித்தது மிகவும் மகத்தான சாதனை, அதைவைத்து காட்டை திருத்தி பயிர்செய்ய ஏற்ற நிலங்களை உருவாக்க முடிந்தது. இப்படி கருவிகளின் வள்ர்ச்சியோடுதான் மனிதவாழ்க்கை முன்னேறியது.

மனித வாழ்க்கைக்கு அவசியமான அந்த கத்தி, கோடாரி, வாள் என பலவிதமான ஆயுதங்களுக்கு நன்றிசெலுத்த வழிபடும் கடவுள்களின் கையில் ஆயுதமாக கொடுத்தான். அதற்கு வழிபாடுசெய்தான் அதுவே ஆயுதபூஜை.

தந்தை பெரியார் கேட்டார், அன்பே உருவான கடவுள்களுக்கு ஏன் கொலைகார ஆயுதங்கள் என்று. அது பெரியாரியப்பார்வை.

அந்த ஆயுதங்கள் அன்றைய உற்பத்திக்கருவிகள் என்பது மார்க்சியப்பார்வை.

கருத்துகள் இல்லை: