வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தாய்மொழியில் எழுதுங்கள்..


எந்த பாஷையானாலும் சொந்த பாஷையில் படி என்கிறார்கள் மொழி அறிஞர்கள். ஆனால் இப்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலவழிக் கல்வியே பிரதானமாக இருக்கிறது. தாய் மொழியை இரண்டாம் மொழி, மூன்றாம் மொழிப் பாடமாகககூட பயில்வதற்கு தயங்குகிறார்கள். இன்று தமிழர்கள் பிறமொழிக் கல்ப்பில்லாமல் பேசமுடிவதில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் புதிய சொற்களை பயன்படுத்தமுடியும். நாம் பேசும் போது ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தினால் `மேலானவர்கள்` என்ற எண்ணம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆங்கிலமொழி நம்மை ஆண்டதால் இன்னும் அதை ஆதிக்க மொழியாக அங்கீகரித்துள்ளோம். அதற்காக தமிழ் தான் மூச்சு என்று பிற மொழிகளை வெறுத்து ஒதுக்கவேண்டாம்.

அவரவர் மொழியில் முதலில் புலமை பெறவேண்டும், ஆங்கிலத்தில் தான் நாம் மருத்துவம், தொழில்நுட்பம், கணனி எல்லாமெ கற்கிறோம். சொந்த மொழியில் படித்தவர்கள் மிகச்சிறப்பாக விளங்குகிறார்கள் அதற்கு ஜப்பான்,சீனா பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய்மொழியில் தான் எல்லாவற்றையும் படிக்கிறார்கள்,ஆனால் அவர்களின் இணைப்பு மொழி என்பது ஆங்கிலமாக உள்ளது. அதை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கிறார்கள். நாம் நம்து தேர்வில் தாய்மொழிக்கும் 35 மதிப்பெண் ஆங்கிலத்திற்கும் 35 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண் என வைத்திருப்பது நமது மொழிக்கொள்கையில் உள்ள குறைபாடு என ஒரு கல்வியாளர் சொல்கிறார். இன்று மொழிதான் `இனம்` என்பதை அங்கீகரிக்கிறது. நாம் தாய் மொழியை புறக்கணிக்கும்போது இனத்திலிருந்தே வெளியே சென்றுவிடுகிறோம் என்பது மட்டுமல்ல நாம் அடையாளமற்று போய்விடுகிறோம். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொருந்தும். இதற்கு எளிய உதாரணம் தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், செளராஷ்டிரம் பேசும் மக்கள் முன்பு மன்னர்கள் ஆட்சி காலத்தில் பிற பகுதிகளிலிருந்து தமிழக்த்தில் குடிவந்திருக்கிறார்கள். தாய்மொழியை அவர்கள் இன்றும் பேசிவந்தாலும் அவர்கள் மொழியில் அவர்களுக்கு எழுதும் பயிற்சியும் திறமையும் இல்லை. அவர்கள் அப்போதே அவர்களின் இனத்திலிருந்து அன்னியப்ப்ட்டுவிட்டார்கள்.

நம்மில் பெரும்பாலன நண்பர்கள் ஆங்கிலத்தில் தான் இந்த `பேஸ் புக்` கில் எழுதுகிறார்கள். நமக்கு பிறமொழி நண்பர்களும் குழுமத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக பொதுமொழியிலும் மற்றவை தமிழில் எழுதலாம். பலர் தமிழை ஆங்கில எழுத்தில் எழுதிவருகிறார்கள். தட்டச்சு செய்வதற்கு நமக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கலாம். ஆனால் தமிழ்மொழியை செம்மைப்படுத்துவதற்கு `ஆட்சியாள்ர்கள்` அல்லது அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் நம்க்கு வேண்டாம். இந்தோனேசிய மக்கள் தங்கள் மொழியின் எழுத்துக்களைப் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை அவர்கள் ஆங்கில எழுத்துக்களை வழியாக தங்கள் மொழியை எழுதுகிறார்கள், பெரும்பாலோனோர் அவர்களின் எழுத்துருக்களை மறத்திருப்பார்கள். இந்த நிலை தமிழுக்கோ தமிழர்களுக்கொ வரவேண்டாம் என்பது அன்பனின் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை: