
இந்தியாவின் இயற்கை வளத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தனிச்சொத்தாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கொள்ளையடித்து சேர்த்த பணம் தான். இந்தப் பணம் தான் கர்நாடக்த்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. இவர்கள் எத்தனை ஆண்டுகளாக சட்டத்திற்க்கு விரோதமாகவும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். அரசியல் சதுரங்க விளையாட்டில் இன்று மாட்டிக்கொண்டவர்கள், இன்னும் எத்தனையோ எத்தன்கள் இயற்கை வளத்தை சூறையாடியவர்கள் கம்பிகளுக்குள் செல்லவேண்டியவர்கள் புனிதர்களாக இருக்கிறார்கள், சென்செக்ஸில் அவர்கள் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தில் இருக்கும்வரை நம்முன் புனிதர்கள்தான். 2G விவகாரத்தில் தயாநிதியை குற்றமற்றவர் என்று வாசித்துவிடுவார்கள். அவர் சங்கத்தில் இருக்கிறாரோ என்னவோ? கடவுள் முன்பு இவர்களும் பக்தர்கள், இவர்கள் செய்யும் சட்டவிரோத தொழிலால் வாழ்க்கை இழந்த சாமான்யர்களும் பக்தர்கள், கடவுள் யார் பக்கம்? பாவம் கடவுள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக