செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஊழல்களின் தேசம்

தினமும் செய்தித்தாளை திறந்தால் லஞ்சம் ஊழல் பற்றிய செய்திகள் நிறைந்து கிடக்கின்றன, ஒவ்வொரு செய்தித்தாளும் லஞ்சம்/ஊழல் பற்றிய செய்திகளுக்காகவே ஒரு சில பக்கங்கள் ஒதுக்கலாம். அந்த அளவிற்கு ஊழல் செய்திகள்.எங்கு இல்லை ஊழல்/லஞ்சம். இன்று கிரிக்கெட் IPL ஊழலும், இந்த வார கேதன் தேசாயும் இந்த வார நட்சத்திர புள்ளிகள். கோடிகளில் ஊழல் புரிந்தவர்கள் எல்லாம் நம் நாட்டில் தண்டிக்கப்பட்டதாய் வரலாறு இல்லை.

ஊழல் செய்வதில் பலவகை, அது நேரடியாக நம்மை பாதிக்காவிட்டாலும் அரசுக்கு வருவாய் இழப்பு அதன் சுமை ‘அம் ஆத்மி” மீது தான்,கிரிக்கெட்டில் நடப்பது ஊழல் அல்ல,ரசிகர்களை மோசடி செய்தது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மோகத்தை வியாபார உத்திக்கு பயன்படுத்தியது தான், தேசபக்திக்காக ஆடியவர்கள் அடிமைகள் போல ஏலம் போகிறார்கள். அப்பாவி ரசிகர்கள் விளையாட்டை நேரில் பார்த்தாலும் தொலைகாட்சியில் பார்த்தாலும் IPL க்கு வருமானம் தான். இந்தியாவின் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் நிறுவன லாபம் போதாது என்று விளையாட்டை வியாபாரமாக மாற்றிவிட்ட பங்கு அவர்களுடையது, இந்த தேச பக்த வீரர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு, கேளிக்கை வரி விலக்கு தேசமே மின்வெட்டில் மூழ்கினாலும் விளையாட்டு எந்தவகையில் பாதிக்கப்படமல் தங்கு தடையற்ற மின்சாரம், இவற்றையெல்லாம் அனுமதிக்கும் அரசு துறை சார்ந்த அரசியல்வாதி (அமைச்சர்)க்கு லாபத்தில் பங்கு. சரி இந்த IPL பரபரப்பு 3வது சுற்று விளையாட்டோடு முடிந்துவிடும் நாமும் மறந்துவிடுவோம் ஏனெனில் தொடர்ந்து பரப்ரப்பு செய்திகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.

கேதன் தேசாய் (தேசபக்தரோ?) வாங்கிய லஞ்சம் கொஞ்சமா? அதை தங்கமாக டன் கண்க்கிலும் கரண்சி நோட்டாக மூட்டைகளிலும் பல கிடங்குகளில் வைத்துள்ளான். இவன் அனுமதித்துள்ள கல்லூரியோ மருத்துவமனையோ எந்த லட்சனத்தில் இருக்கும், மக்களின் உயிருடன் விளையாடியவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் பொருத்திருந்து பார்க்கலாம்.அதற்குத்தான் தனியார் துறைகளுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.கல்லூரிக்கு அனுமதியளித்தால் பல மாணவர் சீட்டுகளையே பரிசு தருகிறார்கள், விலைக்கு வாங்கிய மாணவ்ரின் தரம் எப்படி இருக்கும்.

இந்த தேசத்தில் எல்லாம் விற்கப்படுகிறது பொதுத்துறை ஆலைகள், பழங்குடியினர் வசிக்கும் காடுகள் நாம் பயன்படுத்தும் ஏரிகள் சில சமயம் அமைச்சகமே கூட்டணி (தர்மம்)பேரத்திற்காக விற்கப்படுகிறது. முன்பெல்லாம் அரசியல்வாதிக்கும் ரவுடிகளுக்கும் தான் ஓர் உருவில் இருப்பார்கள், பின்னர் சாராய வியாபாரிகளானர்கள் அரசே சரக்கை விற்று வருவதால் கல்வித்தந்தை யானார்கள், (அரசு தன்னிடமிருந்த கல்வியைவிற்றுவிட்டு டாஸ்மாக்கை கைப்பற்றியது அவர்களுக்கும் இல்வச டிவி வழங்க பணம் வேணுமே). இப்போது பாரளுமன்றம் செல்கிறவர் அரசியல்வாதியா, மக்கள்பிரதிநிதியா அல்லது தொழிலதிபரா என விளங்கவில்லை, எனென்றால் இந்திய கோடீஸ்வரர்களில் அங்கு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

facebook likes
1000 facebook likes

http://phasmid-study-group.org/content/Phasmid-Studies http://www.roughstock.com/history/urban-cowboy#comments
buy facebook likes facebook likes buy facebook likes
Hey, i have been having alot of problems wit my CPU and its been very slow and i keep getting those Online Spam pop ups where you get those fake virus scans. I also have problems downloading Programs and opening and using certin programs. It ether doesnt open or cant find certin programs. I officially got sick of it when i bought a 200$ iPod Touch and cant use it due to Itunes never being able to install and always stoping and saying theres a problem with windows installer in mid installation. Please Tell me a way to fix my computer! the first person whos answer solves my problem gets 10 points. Thanks you dudes and dudets are my only hope.

1000 facebook likes buy facebook likes [url=http://1000fbfans.info]buy facebook likes [/url] get facebook likes