வியாழன், 29 ஏப்ரல், 2010

CBI மத்திய அரசின் கைப்பாவையா?

இந்தியாவிலேயே நியாயமாக விசாரணை மேற்கொள்ளும் அமைப்பாக மத்திய புலணாய்வு நிறுவனம் (CBI)என்று பொதுவான கருத்து நிலவியது, அதன் அடிப்படையில் தான் சில பெரிய கிரிமினல் குற்றங்களையும் லஞ்சம் ஊழல் வழக்குகளையும் CBI விசாரணை தேவை என எப்போதும் எதிர்கட்சிகள் கோரிக்கைகள் வைப்பது வழக்கம் ஆனால் இன்றைய நிலை?

இன்று சிபிஐ ஏன் மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டது தற்செயலான செயல் அல்ல இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்பது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுதான், பெட்ரோல்.டீசல் விலைவாசி உயர்வுக்கு எதிராக இடதுசாரிகளின் தலைமையில் காங்கிரஸ்,பாஜக அல்லாத 13 கட்சிகளின் கூட்டத்தில் அரசுக்கெதிரான வெட்டுத்தீர்மானத்தை கொண்டுவருவது,பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வது என முடிவுசெய்யப்பட்டது, ஆனால் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் உறுதியாக பங்குபெற்று லாலுவும் முலாயம்சிங்கும் பாராளுமன்றத்தில் வெட்டுத்தீர்மானத்திற்கு மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்தார்கள். காங்கிரஸ் கட்சியை தன்னுடைய மாநிலத்தில் அரசியல் ரீதீயாக எதிர்த்து வந்த மாயாவதி மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தார். ஜார்க்கண்டில் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் சிபுசோரன் கட்சி வெட்டுத்தீர்மானத்தை மத்தியஅரசுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டது, தன்னுடைய ஆட்சி கவிழும் என்ற போதிலும் சிபுசோரனின் முடிவு அவர் மீதுள்ள குற்றங்கள் மீதான நடவடிக்கை தான்;இதன் பின்னணி என்ன என்பதை சிறு குழந்தை கூட அறியும் தங்களுடைய ஊழல்களை மூடிவைக்கவேண்டும் என்பது தான் அந்த கட்சிகளின் தலைவர்களுக்குள்ள நிர்பந்தம்.


நன்றி: The Hindu

2008ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இடதுசாரிக்கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றனர், எப்போதும் போல கடைசிவரை இடதுசாரிகளுடன் குழாவிவந்த முலாயம்சிங் கடைசியில் இடதுசாரிகளின் முதுகில் குத்தினார் அதற்கும் CBI தான் காரணம். ஆனால் இடதுசாரி கட்சிகளை இப்படி பழிவாங்கமுடியாமல் அவர்கள் கறைபடியாதவர்களாக இருந்ததால், கேரளாவில் அந்தக்கட்சியின் செலவாக்கை குலைப்பதற்கு CPM ன் மாநில செயாலாளர் மீது ஊழல் புகாரை சுமத்தி CBI மூலமாக வழக்கு தொடர்ந்தனர், சமீபத்தில் வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் திரு.விஜயன் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லை என CBI கூறிவிட்டது.

மத்திய ஆட்சியை நடத்துகிற காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது, வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பதையெல்லாம் விட ஆட்சியை எப்படி தக்க வைப்பது என்று நன்றாக தெரிந்து அதை அமல்படுத்துகிறார்கள், இதற்காகவே உட்கார்ந்து யோசிக்க சில ஓய்வுபெற்ற புள்ளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. முன்பெல்லாம் மத்தியரசுக்கு அடிக்கடி கடிதம் எழுதும் நமது முதல்வர் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல், அழகிரியின் பாராளுமன்ற நடவடிக்கையை காரணமாக மத்திய அரசு எதை சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருக்கிறார். மடியில் கனமிருந்தால் வழியில் பயம் வரத்தானே செய்யும்.

தமிழகத்தின் திமுகவும் அதிமுகவும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் போது இந்த CBI எந்த அமைச்சரவையின் கீழ் வருகிறதோ அதையும் சட்டத்துறையிலும் அமைச்சரவை பொறுப்புகளை மன்றாடிப் பெற்று தக்கவைத்திருந்தார்கள், ஒருவருக்கு அதைவைத்து ஊழல் செய்த கட்சியின் தலைவரை ஒழிப்பதற்காகவும் மற்றவருக்கு தற்காத்துக்கொள்ளவும் தேவைப்பட்டது. இதன் அடிப்படையில் மத்தியில் ஆளும் காங்கிரஸோ அல்லது பாஜகவோ CBI அமைப்பை தேர்தல் ஆணையம் போன்று ஒரு சுயமான அமைப்பாக மாற்றம் செய்யவில்லை.மத்திய புலணாய்வு அமைப்புகளை தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் பயன்படுத்துவது ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால் மத்திய புலணாய்வு அமைப்பு சுயமான அமைப்பாக மாற்றப்படவேண்டும்.

இன்னும் நாம் நீதித்துறையும் அரசுத்துறையும் நடுநிலையாக செயல்படுகிறது என நம்பினால் அது அறியாமையால் தானோ?

4 கருத்துகள்:

Hai சொன்னது…

தலைப்புக்கு என்னுடைய பதில்

அதில் என்ன சந்தேகம்.

hariharan சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

யாசவி சொன்னது…

nice one

யாசவி சொன்னது…

hari suggesting to remove word verification :)

This will uncomfort for the visitors