வெள்ளி, 27 மே, 2011

உலகப் பேரரசு முயற்சியில் அமெரிக்கா

அமெரிக்காவைப் பத்தி செய்தி இல்லாத நாளும், நாடும், டிவியும் கிடையாது..அந்த அளவிற்கு உலகத்தில் ஒரு முக்கிய நாடா அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்கள் ஒவ்வொருத்தரிடமும் இருக்கிறது. அமெரிக்காவை ஒரு ஏகாதிபத்திய நாடாக பார்ப்பவார்கள் ஒருபக்கம் மற்றொரு பிரிவினர் ரட்சகராக பார்ப்பவர்கள். முதல் பிரிவினர் ஒரு இடதுசாரிகள் மற்றும் அமெரிக்காவால் நேரடியாகவோ மறைமுகவாகவோ பாதிக்கப்பட்டவர்கள். அமெரிக்காவை உலகத்தின் பேரரசாகவும் தீவிரவாதத்திலிருந்து காக்கும் ரட்சகராக பார்ப்பவர்கள் எல்லா நாட்டிலுமுள்ள மேல்தட்டு மற்றும் பணக்காரவர்க்கத்தினர்.

உலகநாடுகளில் அதிகமாக தூதரகங்களை திறந்துவைத்துள்ள நாடு அமெரிக்கா தான் என்பதில் ஐயமில்லை, எல்லா நாடுகளும் தூதரகங்களை வர்த்தக நோக்கங்களுக்காகவும், கலாச்சாரம்,சுற்றுலாவை மேம்படுத்தி குறிப்பிட்ட நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவதற்க்காகவும் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் தூதரகங்கள் ஒருபடி மேலே மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் தலையிடுவதை நாம் காண்கிறோம். தங்களின் ஏகபோக வர்த்தக நலன்களுக்கு எதிராக உள்ளவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு உள்ளூர்வாசிகளின் உதவியுட்னே களத்தில் இறங்குகிறார்கள். இதுவரை அமெரிக்காவின் தலையீட்டால் பல நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு, ராணுவத்தின் உதவியுடன் ஒரு பொம்மை அரசை அமைத்துக்கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது என உண்மைகள் வெளிவந்தாலும் சிறிதும் கலக்கமின்றி தொடர்ந்து அதன் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலேயே கம்யூனிஸ்ட்களை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்கு காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் போன்றவற்றிற்கு உதவியிருக்கிறார்களென்றால் சிறிய நாடுகளின் கதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

தினமும் அமெரிக்கக்கொடி ஏதாவது ஒரு நாட்டில் எரிக்கப்படுகிறது அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று போர்கள் மூலம் நாடுகளை பிடிக்கமுடியாது என்ற சூல்நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடு தான் உலகமயம். ஜான்பெர்க்கின்ஸ் எழுதிய `ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்` புத்தகத்தில் தன்னுடைய அனுபவ்த்தை பகிர்ந்துகொண்டு உலகிற்கு அமெரிக்காவின் நரித்தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த பொருளாதார அடியாட்களின் பணி, “அமெரிக்க வணிகநலன்களை முனனிறுத்தும் விரிந்த வலைப்பின்னலின் பகுதியாக உலகநாடுகளின் ஆட்சியாளர்களைத் தூண்டுவது. முதலில் இந்தத் தலைவர்கள் மீள்முடியாத கடன்வலையில் சிக்கிக்கொள்வார்கள். அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு அரசியல், பொருளாதார, இராணுவத்தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம், இதற்கு மாற்றாக அந்த நாட்டில் மின்திட்டங்கள், சாலைகள் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்படுத்துவார்கள்.

ஜான் பெர்க்கின்ஸ் புத்தகத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஈரான், இந்தோனேசியா, சவுதிஅரேபியா, குவைத், ஈராக் என பல நாடுகளில் பொருளாதார அடியாள்களின் அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நானும் இந்தியாவைப் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று எதிர்பார்த்தேன் இல்லை இந்த புத்தகம் 2004ல் எழுதியிருக்கிறார். ஒருவேளை இப்போது தான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலமாக இந்தியா அந்த வலையில் விழுந்திருக்கிறதோ என ஐயம் எழுகிறது. அமெரிக்காவின் தந்திரங்களை அடுத்த இடுகைகளில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: