சனி, 19 ஜூன், 2010

கோடிகளில் புரளும் CEO-க்கள்

இந்தியாவிற்குள்ளே இன்னொரு இந்தியாவும் இருக்கிறது, பெரிய இந்தியா என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சிலர் மதில் மேல் பூனையாக மத்தியதர வர்க்கமாகவும், இல்லாமலும் இருக்கிறார்கள். நாளொன்றுக்கு தனிநபர் ரூ.20 வீதம் செலவு செய்து வாழும் மக்கள் சுமார் 70 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று மத்திய அரசு நியமித்த கமிட்டியே கூறியுள்ளது.

மற்றொரு சிறிய இந்தியா என்பது கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள், இந்திய அரசே இவர்களை முன்னிலைப் படுத்திதான் பொருளாதார கொள்கைகளை வகுக்கிறது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் CEO க்கள் பெறும் சம்பளமும் சலுகைகளும் பல கோடிகளைத் தாண்டுகிறது.இதில் முதல் இடத்தைப் பிடித்தவர் சன் குழுமத்தின் கலாநிதிமாறன் இவர் வாங்கும் சம்பளம் வருடத்திற்கு 37 கோடி, இவருடைய மனைவி காவேரி கலாநிதிமாறன் இணை நிர்வாக இயக்குனராக சன் குழுமத்தில் பணியாற்றுகிறார், இந்த தம்பதிகளின் வருட சம்பளம் ரூ.74.16கோடி.

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் வருடத்திற்கு ரூ.15கோடிகள். இவரின் RIL நிருவனத்தில் செயல் இயக்குனர்களுக்கும் ரூ10 கோடிக்கும் மேல் சம்பளம். இதில் முகேஷ் அம்பானிக்கு ரூ.39.36 கோடி அளவிற்கு சம்பளம் வழங்க அனுமதியிருந்தாலும் சிக்கன நடவடிக்கைகாக அவர் சம்பளத்தை ரூ.44 கோடியிலிருந்து (2007-08) 15 கோடிகளாகக் குறைத்துக்கொண்டார். 2007-08ம் ஆண்டிற்கான அதிக சம்பளம் பெற்றவர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல JSW Steel, atni Computers, Ranbaxy, Hindustan Construction, HDFC Bank, Sobha Developers, Infosys, IndusInd Bank, ACC, GlaxosmithKline Pharma, Crisil, Raymond, Sterlite Industries, Development credit Bank, ICICI Bank, Axis Bank, Nestle India, Yes Bank மற்றும் Rallis India நிறுவனங்களும் தங்கள் நிறுவந்த்தின் CEOக்களுக்கு கோடிகளில் சம்பளம் வழங்குகிறது.

ஆதாரம்: "The Hindu"

1 கருத்து:

kamaraj சொன்னது…

அது அவர்கள் வாங்கி வந்த வரமாகவும்.தினம் 20 சம்0பாதிக்க வக்கிலாதவர்களுக்கு சாபமாகவும் கற்பிக்கப்படுகிற இந்தியாவின் மேடுபள்ளங்கள் மதமும் சாதியும் உருவாக்கியவை.