நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எழுதுகிறேன், தினமும் வலைப்பூவின் பக்கம் வந்தாலும் சோம்பலோ, மனக்குழப்பமோ களைப்போ காரணமாக பதிவிடமுடியவில்லை. நான் தொடரும் சில வலைப்பூக்களை தினமும் வாசித்தாலும் கருத்திடமுடியவில்லை.பெப்ரவரி 13ம்தேதி எனது துணைவி பெண்மகவை ஈன்றாள், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணோ பெண்ணோ ‘பாரதி’ யின் பெயரை சூட்டியாயிற்று.
மிகுந்த கூட்டணி கணக்குகள் முடிந்து அரசியல்கட்சிகள் ஒருவழியாக தேர்தல்களம் காணுகிறார்கள், வழக்கமான தேர்தல் போல இந்த தேர்தல் இல்லையென்று செய்திகள் மூலம் தெரிகிறது.தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு அன்பளிப்பு வழங்கமுடியாமல் தவிக்கிறார். காங்கிரஸ் கட்சி சிபிஐ என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி திமுகவை அடக்கிவிட்டது, காங்கிரஸ்காரர்கள் 63 நாயன்மார்களை ஸ்பெக்ட்ரம் உதவியால் பெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதுபோல உக்காந்து யோசிப்பதற்கென்றே நிறைய பேரை அப்பாயிண்ட செய்திருகிறார்கள், அங்கெ எல்லோருமே அப்பாயிண்ட்மெண்ட் மூலம் தானே பதவியில் இருக்கிறார்கள். திமுக அணி எதிர்பார்த்தது போல அதிமுக கூட்டணி சுக்கு நூறாக உடையவில்லை, இந்த தேர்தல் கூட்டணி அமைவதற்குள் நம் அரசியல் கட்சித்தலைவர்கள் எத்தனை இரவுகள் தூக்கத்தை கழித்தார்கள்.ஏப்ரல் 14ம்தேதியிலிருந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்கலாம் இடதுசாரிகள் தவிற்த்து. அவர்கள் கட்சி அலுவலகம் சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பாமக, அதிமுக தேமுதிக திமுக இன்னும் எத்தனையோ தேர்தல் காலத்தில் புதிதாக முளைத்த கட்சிகள் தேர்தல்கள், பதவிகள், காண்ட்ராக்டுகளுக்கு என்றே இயங்குகின்றன, அவர்கள் அரசியல் அப்படி ஏதோ பிரைவேட் லிமிடேட் கம்பெனியில் சேரும் பங்குதாரர்கள் மாதிரி அதன் தலைவர்கள். இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்கள் 10சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் இந்த சுயநல அரசியல்வாதிகளிடம் கெஞ்சவேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை என்றால் மக்கள் offer இருக்கிற கடையைத் தானே மொய்க்கிறார்கள். கடந்த தேர்தலில் நடந்த ஒரு கூத்து, மதுரையில் திமுகவினர் நாளிதழ்கள் வழியாக ஓட்டுக்குப்பணம் கொடுத்திருக்கிறார்கள் அதை கண்டுபிடித்த போலிசில் புகார் செய்த மார்க்சிஸ்ட்கட்சியின் ஆபிசில் பொதுமக்கள்! ரகளை செய்திருக்கிறார்கள் என்ன செய்வது எரிகிற வீட்டில் பிடுங்குவது போல அலைகிறார்கள். நண்பர் ஒருத்தர் இதுக்கு விளக்கம் கொடுத்தார், அதாவது ஊழல் செய்த மக்கள் பணம்தானே யார் கொடுத்தாலும் வாங்குவம் , பிடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுவம் , இப்பிடி யோசிச்சா என்ன பண்ரது. இந்த விவகாரம் அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது நமது அஞ்சாநெஞ்சனின் புகழும் சிதம்பரத்தின் ‘குலக்கொழுந்தின்’ புகழும் அமெரிக்காவிற்கே சென்றிருக்கிறது. பின்னே நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் விலைபோகமாட்டார்களா?
விக்கிலீக்ஸ் புயல் அமெரிக்காநாட்டை ஆட்டிவிட்டு இப்போது இந்தியாவை ஒரு வழி பண்ணுகிறது, இதற்கு ‘ஹிந்து’ நாளிதழ் என்ன பாடு படப்போகிறதோ?மடியில் கணமில்லையென்றால் வழியில் பயமில்லை. ‘ஹிந்து’வின் நேர்மை ‘சாயாத தலை’ மக்களை தெளிவுபெறசெய்தமைக்காக அதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.இதுவரை மன்மோகன்சிங் அரசின் வெளியுறவுத்துறை ஹிலாரிகிளிண்டனின் கட்டுப்பட்டில் இயங்குவது ஆச்சரியம் அளிக்கவில்லை, ஒருவேளை Disinvestmentல் அதை அமெரிக்காவிற்கு கொடுத்தாகிவிட்டதோ? மத்தியமைச்சரவை மாற்றியமைத்தால் அவர்களுக்கு பிடித்தமாதிரி, அத்வானிஜி வெளிய ஒருமாதிரி பேசுறாறு, அமெரிக்கத் தூதர்கிட்ட ஒருமாதிரி பேசுறாரு. அவங்க கொள்கையே அப்படித்தான! முதல் ஐக்கியமுண்ணனி ஆட்சியயின் கடிவாளம் இடதுசாரிகளிடம் இருந்ததால் பிரகாஷ்காரத்தைப் பார்த்து பேசியிருக்காங்க ,அங்க பப்பு வேகுமா, நல்லுறவு வைச்சுக்குவம் தப்பில்லை, அதுக்காக நாட்டை அடகு வைக்கிற மசோதாவை நாங்க அனுமதிக்கமாட்டோம்ன்னு நின்னார். அமெரிக்க கூடஅணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் சொன்னபின்னாடி ஆட்சியை தாங்கிப்பிடிக்க அமெரிக்கத்தூதரக ஊழியரே பட்டுவாடா செய்திருக்கார்ன மசோதாவாலா யாருக்கு பலன்கிடைக்கிற ஒப்பந்தமோ? பின்ன என்ன பன்றது அந்தக் கட்சியை உண்டு இல்லண்ணு பன்ற வேலைதான் இப்ப மேற்குவங்கத்தல மம்தா மாவோயிஸ்ட் மூலமா செய்றாங்க போல.
ஜப்பானில் நடந்த சோகமான நிலநடுக்கம்,சுனாமி ஆபத்து எல்லாத்தையும் விட சுனாமியால் உடைந்த அணுமின் நிலைய ரியாக்டர் வெடித்ததில் ஏற்பட்ட பாதிப்பு தான் அதிக கவலையளிக்கும் செய்தி. இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உடனே பிரதமர் ஆய்வு செய்யனும்னு பாவலா காமிக்கிறாரு, உடனே ரிட்டயரான அணு விஞ்ஞானி அனில் காகோட்கர் தூக்கத்திலிருந்து எ்ழுந்துவந்து அப்படியேல்லாம் இந்தியா அணு உலைக்கு பாதிப்பு வராதுன்னு சொல்றார். ஒருவேளை போபால் மாதிரி வந்தா நம்ம சாகமாட்டம்ன்னு நினைக்கிறாரா? படித்தவன் சூதும்வாதும் செய்கிற காலம் தான! அனல்மின்சாரம் செய்யத்தேவையான கனிமவளம் நம்மிடம் இருக்கிறது, வாய்ப்பு இருக்கிற இடத்தில் நீர்மின் நிலையம் அமைக்கலாம், சூரியசக்திக்கு அரசு மானியம் அளித்து இலவசங்களுக்கு பதில் கலைஞர் அதைக் கொடுக்கலாம் (அதிலஎங்க மானாடா மயிலாட வருது). மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஜெய்தாப்பூரில் மிகப்பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டு நிறுவன் உதவியுடன் 10,000 மெஹாவாட் அமைய உள்ளது, கொங்கன் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதி மட்டுமில்லை விவசாயமும் மீன்பிடியும் அங்கு முக்கிய தொழில். நிலநடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பும் அங்க இருக்கு அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள். இங்க சிலர் என்னபன்றது நமக்கு தடையில்லா மின்சாரம் குறைந்தவிலை?யில் வேணுமே சொல்றாங்க. ஐரோப்பா நாடுகளில் அணு உலைகளுக்கு பலத்த எதிர்ப்பு வருகிறது, என்ன செய்ய அதுக்கு தான் third worldன்னு நாம இருக்கமே! தொடர்ந்து பயனிக்கமுடியும் என்ற நம்பிக்கையில்...
வெள்ளி, 25 மார்ச், 2011
வெள்ளி, 21 ஜனவரி, 2011
மக்களின் சுகாதாரமும் அரசின் கொள்கையும்
உலகில் வருடந்தோறும் சுமார் ஒரு கோடி மக்கள் மருத்துவத்திற்கு செலவு செய்தே ஏழைகளாகிறார்கள் என்கிறது ஐநாவின் ஆய்வறிக்கை. இந்தியாவிலும் மருத்துவத்திற்கான செலவு வருடத்திற்கு வருடம் அதிகரித்துவருகிறது. அரசு திட்டமிட்டு பொதுசுகாதாரத்தை சீர்குலைத்து வருவதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை அதிகமாக நாடவேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் மக்களின் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் 70 முதல் 90 சதவீத மருத்துவ செலவை அரசே ஏற்கிறது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரம் என்பதை சந்தைச்சரக்காக மாற்றிவிட்டார்கள்.மூன்றாம் உலக நாடுகளில் மொத்த சுகாதார செலவீனத்தில் அரசின் பங்கு 15- 20 சதவீதம் தான் உள்ளது. தமிழகத்தில் அரசின் திட்டங்களில் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட “கலைஞர் காப்பீட்டுத்திட்டம்” அரசு மருத்துவமனைகளை தற்கொலைப் பாதைக்கு இட்டுச்செல்கிறது. இந்தத்திட்டம் மக்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் என்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிரந்தர ‘வருமானத்திற்கான’ காப்பீடு என்று சொல்லலாம். நடுத்தர மக்களிடையே இந்தத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றதற்குக் காரணம் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம் என்பதாலேயே. அரசு மருத்துவமனைகளுக்கு நடுத்தரவர்க்க மக்களும் உயர்வகுப்பாரும் செல்வதில்லை, ஏழைமக்கள் தான் அதிகமாக செல்கிறார்கள். அரசு மருத்துவமனைகளின் தரம் அவ்வள்வு மோசமாக உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பதைப் போல அரசு மருத்துவர்கள் தங்கள்வேலை நேரத்திலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ‘விசிட்’ செய்கிறார்கள், தனியாக கிளினிக் நடத்துகிறார்கள். அரசு பொதுமருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கக்கூடிய மருத்துவர்களோ ஊழியர்களோ இல்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டுபெற்றுள்ளது. ஆனால் வருடந்தோறும் காப்பீட்டு என்ற பெயரில் அரசு செலுத்தும் ரூ 750 கோடியை அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போதிய ஊழியர்களை நியமித்தல், தேவையான நவீன உபகரணங்களை நிறுவுதல் என்று செய்திருந்தால் மக்களின் நீண்டகால நலனை அடையலாம். இதனால் தர்மாஸ்பத்திரிகளின் செயல்பாடு குறைந்துவிடும். ஆண்டுக்கு ஆண்டு பொது மருத்துவமனைகளை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து விட்டால், தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் வைப்பது தான் சட்டமாகிவிடும். ஆளும் கட்சியினரும் அவர்தம் உறவினர்களும் செய்கிற தொழிலாக ‘மருத்துவம்’ மாறிவிட்டது. எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே MCIயிடம் லஞ்சம் கொடுத்து ஒரு மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கான அனுமதியைப் பெறலாம் என்ற நிலையை நாம் கண்டோம். அந்த கேதான் தேசாய், ஸ்பெக்ட்ரம்,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல் போன்றவற்றால் அரசும் நீதிமன்றமும் அவரை கண்டுகொள்ளவில்லை. மத்தியில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பொதுத்துறை நோய்தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ‘தரம்’ சரியில்லை என்று மூடினார். அடுத்த சில மாதங்களில் போலியோ சொட்டுமருந்துக்கு பற்றாக்குறை நிலவியது.பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பலமடங்கு விலையில் சொட்டுமருந்துகளை வாங்கி மக்கள் பணத்தை வீணடித்தார்கள்.
மருத்துவ காப்பீடுத்துறையில் தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைந்தவுடன் தங்களின் வருமானத்தை உத்திரவாதப்படுத்த அரசுக்கு ஆலோசனை தருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குகிறார்கள், இதன் மூலம் ஊழியர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அரசு நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு வருடத்திற்கொருமுறை பிரிமியம் செலுத்திவிடுகிறது. நடப்பாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளது இதன் மூலம் ஒவ்வொருமுறை மருத்துவமனிக்கு செல்லும் போது காப்பீட்டு அட்டையுடன் 25 ரியால் செலுத்தவேண்டும் இதை பயனாளி தான் செலுத்தவேண்டும். அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் Re-imbursement செய்யமுடியாது. இதன் மூலம் பயனாளி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை தடுத்து காப்பீட்டு நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
காப்பீட்டு அட்டையின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறும்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன, அதை பயனாளியும் கண்டுகொள்வதில்லை ஏனென்றால் அவர் கையிலிருந்து எதையும் கொடுக்கப் போவதில்லை. இப்படி கட்டணங்கள் உயரும் போது காப்பீட்டை பயன்படுத்தாத நோயாளியும் அதிக கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது.
மருத்துவ காப்பீடுத்துறையில் தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைந்தவுடன் தங்களின் வருமானத்தை உத்திரவாதப்படுத்த அரசுக்கு ஆலோசனை தருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குகிறார்கள், இதன் மூலம் ஊழியர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அரசு நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு வருடத்திற்கொருமுறை பிரிமியம் செலுத்திவிடுகிறது. நடப்பாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளது இதன் மூலம் ஒவ்வொருமுறை மருத்துவமனிக்கு செல்லும் போது காப்பீட்டு அட்டையுடன் 25 ரியால் செலுத்தவேண்டும் இதை பயனாளி தான் செலுத்தவேண்டும். அவர் பணிபுரியும் நிறுவனத்திடம் Re-imbursement செய்யமுடியாது. இதன் மூலம் பயனாளி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை தடுத்து காப்பீட்டு நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
காப்பீட்டு அட்டையின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறும்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன, அதை பயனாளியும் கண்டுகொள்வதில்லை ஏனென்றால் அவர் கையிலிருந்து எதையும் கொடுக்கப் போவதில்லை. இப்படி கட்டணங்கள் உயரும் போது காப்பீட்டை பயன்படுத்தாத நோயாளியும் அதிக கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது.
வெள்ளி, 31 டிசம்பர், 2010
திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை

இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் - திமுக, திரிணாமுல் கட்சி கள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் ஆட்சி இந்திய நாட்டின் ஏழை-எளிய மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற பெரு முத லாளிகளுக்குமே சேவை செய்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில்லரை ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தாராளமய சந்தைப்பொருளாதாரம் தீவிரமாக அமல் படுத்தப்பட்ட பிறகு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட் டிருக்கிறது.
மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் ஏழை, எளிய இந்திய மக்களின் பிரதமராக இல்லை. மாறாக முதலாளிகளின் சேவகராகவே செயல்படுகிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட கேந்திரமான இலாகாக்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை டாடா, அம்பானி போன்ற பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். திமுக தலைவர் கலைஞர் “நான்தான் ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறையை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்” என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் பெருமுதலாளிகளே தங்களது தேவைக்காக அவருக்கு அந்தத்துறையை மீண்டும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
தயாநிதிமாறன் தங்களுக்கு ஒத்துவரமாட் டார் என்பதால் ஆ. ராசாவை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்புக்கு பெருமுதலாளிகள் கொண்டுவந்தார்கள் என்பதை நீரா ராடியா உரையாடல் டேப் தெளிவாக்கியுள்ளது. இதை திமுக எந்த வகையிலும் மறுக்கமுடியாது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங் களவையிலும், “அனைத்தும் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது” என்று ஓங்கி கூறி னார். அப்போது அவையிலிருந்த பிரதமர், வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் தில்லி யில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் “மறைப்பதற்கு என் னிடம் எதுவும் இல்லை” என்று சாதிக்கிறார். ஆ.ராசா மீது வழக்கு தொடர 16 மாத காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியபோதும், பிரதமரின் அறிவுரைகளையே ஆ.ராசா மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும் பிரதமர் மன்மோகன் சிங் மவுனத்தையே பதிலாகத் தந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பங்கிற்கு ஊழல் ஒழிப்புக்கு ஐந்து அம்சத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அறிவிப்பது காங் கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல; 20 அம்ச திட்டம், 10 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைக் கேட்டு கேட்டு மக்களுக்கு புளித்துப் போய் விட்டது. எதையுமே அவர்கள் நிறைவேற்றிய தில்லை.
ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் சாதித்து வந்தார். இனி வேறு வழியேயில்லை என்ற நிலையில்தான் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். “நான் ஒரு வழக்கறிஞர், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று ராசா ஜம்பமாக கூறி னார். முதல் நாள் அவரிடம் எட்டு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள னர். இரண்டாவது நாள் ஐந்து மணி நேரத்திற் கும் மேலாக விசார ணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் ஆ.ராசா தன்னுடன் ஒரு மருத்துவரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பக்கத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு விசாரணை நடந்துள்ளது எனத் தெரிகிறது. அவரிடமும், நீரா ராடியாவிடமும் மீண்டும் சிபிஐ விசார ணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மத்திய தணிக்கை துறை அதிகாரியின் 77 பக்க அறிக்கையில் ஆ.ராசா மீது 25க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர, நீரா ராடியா உரையாடல் அடங்கிய டேப்பில் பல்வேறு விவரங்கள் உள்ளன. இதுகுறித்தெல்லாம் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அவருக்கு அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ஆ.ராசா எந்தத் தவறுமே செய்யவில்லை என்று திமுக பிரச்சாரம் துவக்கியிருப்பது வியப்பாக உள்ளது.
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு நேர்காணலில் இந்தியாவின் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான கிரண் பேடியிடம் “ஹர்ஷத் மேத்தா, கார்பரேட் முதலாளி சத்யம் ராமலிங்க ராஜூ ஆகியோரை கைது செய்த பிறகே சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆனால் ஆ.ராசா, நீரா ராடியா போன்றவர் களை கைது செய்யாமல் விசாரணை நடத்தி யது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரண் பேடி “ நீங்கள் ஒன் றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதுவும் சுயேட்சையாக இயங்கு பவை அல்ல. அவை அனைத்தும் அரசுக்கு கட்டுப்பட்டவை. அரசு என்ன கருதுகிறதோ அதன்படியே வழக்கு விசாரணை நடத்தப் படும். இந்த வழக்கும் அப்படித்தான்” என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு மட்டும் தொடர்பு இல்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் இதில் லாபம் பெற்றிருக்கிறார்கள். ஹவாலா மூலம் பல நாடுகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. திமுகவை மட்டும் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி விலகிக்கொள்ள முடியாது. ஊழலின் முழு பரிணாமும் வெளியே வரவேண்டுமானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே ஒரே வழி. ஆனால் இதற்கு காங்கிரஸ்-திமுக கூட் டணி அரசு மறுத்து வருகிறது. பொது கணக்குக்குழு முன்பு ஆஜ ராகத் தயார் என பிரதமர் தாமாக முன்வந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற மர்மம்தான் புரியவில்லை.
அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி, திமுகவைச் சேர்ந்த பலரும் சிறை சென்றார்கள். சிலர் அடிஉதை பட்டார்கள். சாத்தூர் பாலகிருஷ் ணன், சிட்டிபாபு போன்றவர்கள் சிறையி லேயே மரணமடைந்தனர். அவசரநிலைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிசா’ என்ற அடைமொழி கொடுத்து பெருமையாக அழைத்தது திமுக. ஆனால் இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பெயருக்கு முன்னால் ‘ஸ்பெக்ட்ரம்’ ராசா என்று ஊடகங் கள் அடைமொழி கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேசிய கட்சியாக மாறி விட்டது என்று கூறப்பட்டதன் பொருள் இதுதான்.
திமுகவைப் பொறுத்தவரை ஊழல் குற்றச்சாட்டுக்களை எப்போதும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீராணம் ஏரி ஊழல், சர்க்காரியா கமிஷனால் கண்டறியப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என எதையும் திமுக ஒத்துக் கொண்டதில்லை. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்திலும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.
நாட்டின் கஜானாவுக்கு வந்து சேர்ந் திருக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. ஆனால் இது இழப்புதானே தவிர ஊழல் அல்ல என்கிறார்கள். திமுக இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், நியாயப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள் ளதாக சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போய்விட்டது. இத்தகைய ஒரு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடி யாது என்று அடுத்து கூறினார்கள். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவர் களாவது வெளிப்படுத்தலாம் அல்லவா?
நாட்டின் பணம்,கொள்ளையடிக்கப்பட் டிருக்கிறது. ஆனால் திமுகவும், காங்கிரசும் இது ஏதோ அவர்களது கூட்டணி சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதுபோல, உறவில் விரிசல் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் மேற்கொண்ட அணுகுமுறை யைத்தான் ஆ.ராசாவும் பின்பற்றினார் என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கரூரில் இந்த கருத்தைத்தான் வெளியிட்டுள்ளார். தயாநிதி மாறனும் இதே கொள்கையைத்தான் பின்பற்றினார் என்றும் அவர் கூறினார். இதுகுறித்தெல்லாம் தயாநிதி மாறன் வாய்திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?
மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனை வரையும் கண்டறிந்து சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் வலுவான இலாகாக்களை பெற்று, அதன் மூலம் பெருமுதலாளி களுக் கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சேவகம் செய்து வருகிறது. என்னதான் வாய் சாதுர் யத்தால் தப்பிக்க முயன்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையிலிருந்து திமுக தப்பமுடியாது.
-டி.கே.ரங்கராஜன் எம்.பி.
நன்றி: தீக்கதிர்
வியாழன், 30 டிசம்பர், 2010
நீதித்துறை : சீனாவும் இந்தியாவும்
அண்மையில் சீனாவின் நீதித்துறையைப் பற்றி செய்தி வந்தது, அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்டனை உறுதிசெய்யப்படுகிறதாம், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் சீனாவின் நீதித்துறை பார்வையிடச் சென்ற ICJ என்ற சர்வதேச நீதிபதிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்வையிட்டுள்ளார்கள். சீனாவில் 23 வயது நிரம்பியவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கமுடியும், ஒருவர் நீதிபதியாவதற்கு முன்பு வழக்கறிஞராக பணியாற்றவேண்டிய அவசியம் இல்லை. NJE எனப்படும் National Judiciary Examination தேர்வில் வெற்றியடைந்தால் சில மாதங்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றபின்பு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். NJE என்பது இந்தியாவின் ICS தேர்வுக்குச் சமமானது. பிரைமரி கோர்ட் லிருந்து சுப்ரீம் கோர்ட் வரை முழுவதும் கணணிமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்திற்கான வசதிவாய்ப்புகள் பிரைமரி கோர்ட், இண்டர்மீடியட் கோர்ட், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நீதிமன்றங்களுக்கும் சமவசதி வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.சீனா முழுவதும் 1,90,000நீதிபதி பணியிடங்கள் உள்ளன, அதில் 700 பேர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள். நீதித்துறைக்கான மொத்த பணியாளர்கள் 3,20,000 பேர். பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மீது ஊழல் புகார் எழுப்பபட்டால் நீதிபதிகளின் கமிட்டி பரிந்துரைக்குப் பின்னர் அரசு நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்துவிடுகிறது. சீனாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவும் சீன நீதித்துறையிடம் கற்றுக் கொள்ளவேண்டியதுள்ளது.
இந்தியாவில் எல்லாத்துறைகளைவிட நீதித்துறையில் அதிகமாக லஞ்சம் ஊழல் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஊழல்பேர்வழிகள் என்று பேட்டிகொடுத்ததால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானார். ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.
1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

ஆனால் கடைசியாக உச்சிநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது இப்போது ஊழல் புகார் வந்துள்ளது. குற்றச்சாட்டை வைத்தவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தான்.
இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கும்,இல்லையென்றால் இவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பார்களா? கறைபடிந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிப்பாரா அல்லது நான் ஒரு ‘தலித்’ என்று தப்பிக்கப் பார்ப்பாரா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் அறிக்கைவிடவில்லையே?
இந்தியாவில் எல்லாத்துறைகளைவிட நீதித்துறையில் அதிகமாக லஞ்சம் ஊழல் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஊழல்பேர்வழிகள் என்று பேட்டிகொடுத்ததால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானார். ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.
1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

ஆனால் கடைசியாக உச்சிநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது இப்போது ஊழல் புகார் வந்துள்ளது. குற்றச்சாட்டை வைத்தவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தான்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”.என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்டபோது தன்னுடைய சொத்துமதிப்பு ரூ25000 மட்டுமே எனகூறியவரின் சொத்துமதிப்பு இன்று பலகோடி மதிப்பு வாய்ந்தவை. தகவல் அறியும் உரிமச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்துவிபரம் வெளியிடவேண்டும் என்ற விவாதம் வ்ரும்போது உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி அதிலிருந்து விதிவிலக்காவார் என்று தப்பித்தவர். அண்மையில் மத்தியயமைச்சர் ராசா சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டதாக செய்தி வந்தபோது அதற்கு உடந்தையாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இதில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கும்,இல்லையென்றால் இவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிப்பார்களா? கறைபடிந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிப்பாரா அல்லது நான் ஒரு ‘தலித்’ என்று தப்பிக்கப் பார்ப்பாரா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்னும் அறிக்கைவிடவில்லையே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)