வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கிட்டிபோடுதல்


தமிழகத்தில் அடிமை முறை என்ற நூலில் ‘அட்டைப்பட’ ஓவியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சைமாவட்ட பொன்விழா மாநாட்டில் வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும் கூட ‘பண்ணையாள்’ என்கிற அடிமைமுறை நீடித்தது. அப்போது அவர்களின் வேலைநேரம் என்ற அதிகாலை கோழி கூவியவுடன் தொடங்கும், வேலைமுடியும் நேரம் இரவு கொசு கடிக்கத்துவங்கும் நேரம். உடம்பு சரியில்லையென்று ஒரு நாள் வேலைக்கு வரவில்லையென்றால் பண்னையாளை கூப்பிட்டு சாட்டையால் அடிப்பார்கள் ரத்தம் தெரிக்கும்வரை, மாட்டுச்சாணத்தை கரைத்துவைத்து வடிகட்டி சாணிப்பாலை வாயில் ஊற்றி தண்டித்தார்கள், அதற்கெதிராக செங்கொடி இயக்கம் போராடியது வரலாறு. 
பெண்களுக்கும் தண்டனை கொடுத்தார்கள், அந்த தாயின் மார்பகத்தை கிட்டியால் முறுக்கி கசக்கிப்பிழிந்து ரத்தம் சொட்ட அலறித்துடிக்கச்செய்யும் அலங்கோலத்தை கண்டு மிராசுதார்கள் ரசித்தார்கள். கூலி வேலை செய்யும் பெண்கள் சேலையை முழங்காலுக்கீழே வரக்கூடாது , அப்படி வேலைசெய்யும் நேரத்தில் இழுத்து செருகப்பட்ட சேலை முழங்காலுக்குக் கீழே வந்துவிட்டால் ‘காருவாரியை ‘ விட்டு அடிக்கச்சொல்வார்கள். முழங்காலுக்கு கீழே கணுக்கால் வரை சேலை கட்டுவதற்கும் போராடியிருக்கிறார்கள் மணலி. கந்தசாமி என்ற தோழரின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த தண்டனைக்களுக்கு ஆளானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை: