சனி, 14 டிசம்பர், 2013

நிறவெறி vs தீண்டாமை

தீண்டாமை என்பது மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சிந்தனையை கற்பிப்பது அதை ஒரு மதத்தின் சித்தாந்தம் வலியுறுத்துகிறது.

நிறவெறி என்பது வெள்ளைநிறம் உயர்ந்தது, ஆளப்பிறந்தது கறுப்பு என்பது அடிமைகளின் நிறம், சிந்திக்க தெரியாத மனிதர்களின் நிறம் என்ற கருத்தியலை தென் ஆப்பிரிக்காவில் முதலில் வெள்ளையர்கள் விதைத்தார்கள்.

இந்தியாவில் தீண்டாமையுடன் நிறமும் சேர்ந்துகொண்டது, உலகின் முதல் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா என்கிறது மனித இனங்களை ஆய்வுசெய்கிற விஞ்ஞானம்! இந்தியாவில் பூர்வகுடிகள் கறுப்பர்களே! தோலின் நிறம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறதொ அங்கே கலப்பு நடந்திருக்கிறது என்று பொருள். மனிதர்கள் கறுப்பு நிறத்தை யாரும் விரும்புவதில்லை அதைவைத்து அழகு கிரீம்களின் சந்தை விரிந்துகிடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் உச்சம் என்னவென்றால், ஒரு தாய் தந்தைக்கு பிறந்த குழந்தை மாற்று நிறமாக இருந்தால் பிரித்து வைக்கப்படும்.
தீண்டாமை என்பது அந்த சாதி தம்பதியருக்கு பிறந்த குழந்த அதே சாதிதான் . இனக்கலப்பு நடைபெறாமல் தடுத்து அகமண முறை நீடித்திருப்பதில் சாதயடிப்படையின் நோக்கங்களில் ஒன்று.

SKIN என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு வெள்ளைக்கார தாய் தந்தைக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன, முதல் குழந்தை அசல் வெள்ளையினம், இரண்டாம் குழந்தையின் நிறம் கறுப்புமல்ல, வெள்ளையுமல்ல, மாநிறம். ஆனால் முகஜாடை வெள்ளையினமல்ல என்று காட்டிக்கொடுத்துவிடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 1950 களில் நிறவெறி உச்சத்தில் இருந்த காலகட்டம் அந்த தம்பதியினர் தங்கள் வெள்ளையல்லாத இரண்டாவது  குழந்தையை தங்கும்விடுதியுடன் கூடிய  பள்ளியில் சேர்க்க கொண்டுசெல்கிறார்கள் , பள்ளியில் பிறப்புச்சான்றிதழ் அடிப்படையில் அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆனால் மற்ற குழந்தைகள் அவளை வித்தியாசமாக பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அவளை வெறுக்கிறார்கள். ஒருமுறை வாய்ப்பாடு உரக்கச்சொல்லவில்லை என்று அடிஅடியென்று அந்த பிஞ்சுக்குழந்தையை அடிக்கிறார் வெள்ளை ஆசிரியர். பள்ளியில் அக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள், அவள் வெள்ளையினமா? கலப்பினமா? கறுபினமா? என்று. முடிவு அவள் நிறத்தவர் அதாவது கலப்பினம் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். மேலும் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நீக்கி விட்டுக்கெ கொண்டு போய் விட்ட்டுவிடுகிறது பள்ளி நிர்வாகம். அக்குழந்தை கெட்கிறது ஏன் என்னை பள்ளியிலிருந்து நீக்கினீர்கள் என்று, நிர்வாகம் உனது பெற்றோரிடம் கேட்டுக்கொள் என்று சொல்லிவிடுகிறார்கள்.

அந்த பெற்றோர் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், விசாரணையில் அந்தத் தாய் நான் இக்குழந்தைக்கு கருவுறும்போது எனது கணவருக்கு எந்த துரோகமும் இழைக்கவில்லை, அந்த கணவனும் நான் தான் இக்குழந்தையின் தந்தை என வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஒரு மனிசாட்சியுள்ள வழக்குறைஞர் அக்குழந்தைக்காக வாதிடுகிறார். நம் ஆப்பிரிக்கான்ஸ் மக்களிடம் கறுப்பினத்தின் ஜீன்கள் இருக்கின்றன, அதன் மூலம் பரிசுத்த வெள்ளைத் தம்பதிகளுக்கும் கூட நிறத்தவர்கள் (கலப்பினம்) பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார். வழக்கு வெற்றியடைந்தாலும் சமூகத்தில் அந்த பெற்றொர்கள் படும் அவதி கொஞ்சமல்ல. ஒரு ஹொட்டலோ, துணிக்கடையோ அது வெள்ளையருக்கென்றால் அக்குழந்தைக்கு இடமில்லை. இந்த சமூக விலக்கலால் அவள் வெள்ளையர்களை வெறுத்து அவள் வீட்டு கறுப்பின வேலைக்காரனை காதலிக்கிறாள். அவளுடைய தந்தை ஒரு இந்து மேல்சாதியின் மன்நிலையில் அக்காதலை வெறுக்கிறார். ஆனால் மகளின் காதலை தடுக்க முடியாமல் அவள் கறுப்பனை திருமணம் செய்துகொள்கிறார்.

கறுப்பர்கள் வாழ்கிற சமூகத்தில் அவள் வாழ்ந்துவருகிறாள், The urbans Area Act    சட்டப்படி கறுப்பர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. அங்கிருந்து இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள், குடிகார கணவனிடமிருந்து தன் இரண்டு குழந்தைகளோடும் ஒரிரவில் பிரிந்து செல்கிறார். குழநதைகளுடன் தலைந்கருக்கு சென்று அங்கே ஒரு நிறுவனத்தில் வேலைசெய்து வாழ்ந்துவருகிறார், அவளுடைய தாய் தந்தையை 20 ஆண்டுகளாக அவள் சந்திக்கவெ முடியவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிட்டது, ஆனால் தீண்டாமை இன்னும் நீடித்து அறிவியலோடும் பயணிக்கிறது.
 

கருத்துகள் இல்லை: