வெள்ளி, 20 டிசம்பர், 2013

Run for Unity?

ஒற்றுமைகான ஓட்டம் என்ற பிரச்சாரத்தை மோடியும் பாஜக பரிவாரமும் செய்வது வேடிக்கையாக உள்ளது. சமீபத்திய தேர்தல்கள் மூலம் அவர்களின் வாக்குவங்கி வட இந்தியாவில் முன்னைவிட அதிகரித்திருக்கிறது. தென் மாநிலங்களிலும் படித்த நடுத்தர வர்க்கத்து மக்கள், சாதியில் மேல்சாதியினரும், இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்களும் இன்று இட  ஒதுகீட்டை தேவையில்லை என்று சந்தர்ப்பவாத அணுகுமுறையுடனும் பாஜகவின் பிரச்சார பீரங்கிகளாக மாறியுள்ளனர்.

90களில் தமிழகத்தில் சாதியை அடிப்படையாக வைத்து நடந்து அரசியலை புறந்தள்ளிய மத்தியதர வர்க்கம் இன்று அரசியலில் மதத்தை புகுத்தி மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிற வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிறார்கள். இவர்கள் ஒரு சாரார் மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் மிகுந்த ஊழல் கட்சி என்றும் சோனியாவின் குடும்ப ஆட்சி என்றும் , மோடியின் தலைமையில் குஜராத் அபரிதமான வள்ர்ச்சி கண்டுள்ளது அதற்காக மத்தியிலும் மோடியின் தலைமையை ஆதரிக்கிறார்கள்.

மற்றொரு பிரிவினர், அப்பட்டமாக சிறுபான்மை மீது துவேஷ அரசியலை நடத்துவது பாஜக என்பதாலேயெ அவர்களை ஆதரிக்கிறார்கள். பன்முக கலாச்சாரம் மிக்க சமூகத்தில் சிறுபான்மையினருக்கெதிராக  மதத்தை வைத்து மக்களை ஒருமுகப்படுத்தும் அரசியலை வெக்கமின்றி ஆதரிக்கிறார்கள். விடுதலைப்போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி என்பது பல்வெறு சித்தாங்கள் கொண்டவர்களையும் பிணைத்த இயக்கமாக இருந்தது. சோசலிச லட்சியத்தையுடைய நேருவும், நிலப்பிரபுத்துத்தை ஆதரித்த படேலும் காங்கிரசில் இருந்தார்கள். பாஜகவினர் இன்று படேலை முன்னுறுத்தி நேருமீது அவதூறு கிளப்புகிறார்கள். இதிலிருந்து படேல் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் பெரும்பான்மை மதவெறி மகாத்மாவைக் கொன்றது, நேரு 1952 தேர்தலில் வகுப்புவாதத்திற்கெதிரான பிரச்சாரத்தை செய்தார் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்குப்பின் சமரசமில்லாத பெரியதொரு பிரச்சாரம்  காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் செய்யவில்லை. அப்படிப்பட்ட தலைவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள்.

தேர்தலில் பாஜக 1952லிருந்து 1977 வரை குறிப்பிட்ட வாக்குகளை பெறாவிட்டாலும் அதன் வளர்ச்சி மெளனமாக பெருகி வந்துள்ளது. பெரும்பான்மை இந்துக்கள் மத அடிப்படையில் அணிதிரளாமல் இருந்தார்கள், இப்போது அதன் சதவீதம் அதிகரித்துவந்துகொண்டே இருக்கிறது. சமூகத்தில் சிறு பிரச்சனை கூட மதமோதலை உருவாக்கி அதை வாக்குகளாக மாறும் உத்தியை பாஜக கையாளுகிறது.

படேலை ஏன் முன்னிறுத்துகிறார்கள்! அவர் நேரு அமைச்சரவையில் துணைப்பிரதமராக இருந்தபோது எடுத்த சில நடவடிக்கைகளை ராமச்சந்திர குஹா எழுதிய  `காந்திக்குப்பிறகு இந்தியா` நூலிலிருந்து...

படேலின் உள்துறை அமைச்சகச் செயலர் மற்றதுறை செயலர்கள் கவனத்துக்கு என கடிதங்கள் எழுதினார்..... பாகிஸ்தான் உடனான உறவில் தற்போதுள்ள சூழலில் அவசரமும் முக்கியத்துவமும் பெறும் ஒரு அம்சம் இது. குறிப்பாக இந்திய யுனியனுடைய காஷ்மீர் மற்றும் ஹைதராபத் விஷ்யங்களிலான கொள்கையால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் ஒரு பகுதியினரின் பரிவு குறைந்து, திவிரமாக பாகிஸ்தான் பக்கம் மிகுந்து வருவதற்கான சான்று அதிகரித்து வருகிறது. அத்தகைய அரசு ஊழியர்கள், (ரகசியச்) செய்திகளை எதிர்த்தரப்பிற்கு அனுப்ப பயனுள்ள வழிகளாக இருப்பார்கள். குறிப்பாக அவர்கள், தம் உறவினர்களின் செல்வாக்குக்கு எளிதில் உட்படக்கூடும்.

அரசின் முஸ்லீம் ஊழியர்கள் சிலர், இந்த வகையினராக இருக்கக்கூடும்.நிர்வக அமைப்பில் அவர்கள் அபாயகரமான ஓர் அம்சமாக அமைவார்கள் என்பது தெளிவு. எனவெ அவர்கள் வசம் முக்கியமான, தனிபட்ட ரகசியப் பணிகள் எதுவும் ஒப்படைக்கக்கூடாது. அவர்கள் முக்கியமான பதவிகளில் இருக்கக்கூடாது. இதற்காகத் தங்கள் அமைச்சகத்தில் உள்ள, மற்றும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களிலும், இந்திய டொமியனுக்கு விசுவாசக் குறைவாக இருந்து, நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக்கூடும் என்று கருதப்படுவோரது பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்க வெண்டுகிறேன். இந்த பட்டியல்கள் கருத்துடன் தயாரிக்கப்படவெண்டும். துறைத்தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகள் இவற்றைச் சரிபார்க்கவேண்டும். அத்த்கையோர் முக்கியமான, பொறுப்பான பதவிகள் வகிக்காமலும் முக்கிய, தனிப்பட்ட ரகசியப் பணிகளைக் கையாளாமலும் இருப்பதர்கு மட்டுமே இந்த்ப் பட்டியலைப் பயன்படுத்தவெண்டும்.

இதனால தவறாக யாரும் பழிவாங்கப்படக்கூடாது என்பதையும் நிஜமாகவே சந்தேகம் ஏற்படுத்துவோர் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படவெண்டும் என்பதையும் நான் சொல்லத்தேவையில்லை. உண்மையாக விசுவாசம் உள்ளவர்களுக்கும் திருப்திகரமாகப் பணியாற்றுபவர்களுக்கும், பிற பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்குத் தரும் வாய்ப்புகள் அனைத்தும் தரப்படவேண்டும்.

செயலர் ஒருவரது கடிதம் அமைச்சரின் அனுமதியில்லாமல் சுற்றுக்கு விடப்பட்டிருக்காது. இன்றளவும் அரசாங்கபணியிடங்களில் சிறுபான்மையினரின் பங்கு ஏன் குறைந்திருக்கிறது என்பதற்கு இந்த கடிதத்தின் சாராம்சமே ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
 

கருத்துகள் இல்லை: