திங்கள், 7 ஜனவரி, 2013

இந்தியாவும் பாரதமும்...


பாலியல் பலாத்காரம் இந்தியாவில்தான் நடக்கிறது ,அது பாரதத்தில் இல்லை என்று அருளியிருக்கிறார் சங்பரிவாரத்தின் தலைவர் மோகன் ஜி! அதென்ன இந்தியாவும் பாரதமும் வேறு வேறா? கிராமப்புற இந்தியாவை பாரதம் என்கிறார், நகரங்கள்  அவர்களுக்கு இந்தியா! இன்னும் அவர் கண்களில் பழய்ய பாரதத்தில் நிலப்பிரபுக்கள், குறுநில மன்னர்கள் யோக்கிய சிகாமணிகளாகத் தெரிகிறார்கள். பெண்களை போகப்பொருட்களாக அந்தப்புரத்தில் அடக்கிய மன்னர்கள் காலத்தில் பாலியல் வன்முறை வெளியே எப்படி நடக்கும். தான் ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் பலாத்காரமாக தூக்கிவருவது வீரச்செயல் மட்டுமல்ல கலாச்சாரம்!

நகர்புறங்களில் அதுவும் தில்லியில் நடந்த பாலியல் வன்முறை மட்டும்தான் இவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்களின் தலைமையகத்திலிருந்து 80மைல் தொலைவிலுள்ள கயர்லாஞ்சியின் கொடுமை தெரியவில்லை அது புண்ணிய பாரதபூமியில் தான் உள்ளது. ஒரு தாயையும் மகளையும் நிர்வாணமாக தெருவில் விரட்டி அவர்களை வன்புணர்ச்சி செய்ததை அந்த கிராமமே வேடிக்கை பார்த்தது. தருமபுரிக்கு அருகே தலித்களின் வீடுகளை தீக்கிரையாக்கியது பாரதத்தில்! ஹரியானா மாநிலத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் மட்டும் 19 பாலியல் வன்முறைகள் நடந்துள்ளது அதில் 15 பாலியல் வன்முறைகள் தலித் பெண்கள் மீது இதுவும் நிச்சயமாக பாரதத்தில் தான் உள்ளது. கிராமப்புறங்களில் நடக்கின்ற வன்செயல்கள் ஊடகத்தில் வருவதில்லை.

மோகன் ஜி சொல்கிறமாதிரி இந்தியா என்பது Modenrn Industrial Socity பாரதம் என்பது  Feudal Socity. இன்னும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கததிலிருந்து அவர் சிந்தனை மாறவில்லை. பெண்கள் அரைகுறை ஆடையணிவதால் மட்டும் தான் பாலியல் வன்முறை நடக்கிறதாச் சொல்கிறவர் கிராமப்புறங்களில் அப்படி ஆடைகளை அணியாமல் பெண்கள் ஏன் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். பெண்கள் வேலைக்குச் சென்றால் கலாச்சாரத்திற்கு ஆபத்து என்கிற சங்கராச்சாரியார்களின் சிந்தனையும் இவர் சிந்தனையும் எவ்வளவு ஒத்துப்போகிறது. மேலும் நேற்று இந்தூரில் கீழ்க்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

“A husband and wife are involved in a contract under which the husband has said that you should take care of my house and I will take care of all your needs. I will keep you safe.
 
“So, the husband follows the contract terms. Till the time, the wife follows the contract, the husband stays with her, if the wife violates the contract, he can disown her,” he told a rally here on Saturday.
 
“...Similarly, if a husband is unable to fulfil the terms of contract, then the wife can break it. Everything is based on contract. ( இன்றைய தி ஹிந்து நாளிதழ்)
 
இவர்கள் அதிகம் பேசவேண்டும், உள்ளக்கிடக்கைகள் வெளிவரும் அது, ஒன்றும் கொமேனிகளின் பேச்சுக்கு குறைவாக இருக்காது என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை: