புதன், 20 பிப்ரவரி, 2013

நாட்டு நடப்பு

கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக தினமும் குறைந்தது 12 மணினேரம் நிறுவனத்திலேயே இருக்கவேண்டியதிருந்ததால் செய்திகள் வாசிக்காமல், பதிவுலகத்திற்குள் செல்லாமல் ஒரு தீவுக்குள் இருப்பதை போன்று இருந்தேன். ஆனால் கடந்த மாதத்தில் செய்திகளில் பொருளாதார விவகாரங்கள் எதுவும் தலைகாட்டவில்லை, மாறாக சமூகத்தில் ஒருவித பதற்றம் நிலவியதாக நான் உணர்ந்தேன். விஸ்வரூபம் ஏற்படுத்திய சர்ச்சை அதை தடை செய்யவேண்டும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்ற இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம், விவாதங்களால் செய்திஊடகங்கள் மூச்சுத் திணறியது. வழக்கம்போல் சினிமாக்களில் தீவிரவாதம் என்றால இஸ்லாமியர்கள் தான் என்பதை மற்றவர்கள் சொல்வதைவிட கமல் சொலவது ஆழமானது, ஆனால் அந்த திரைப்படத்தை தடைசெய்யவெண்டும் அனுமதிக்கமாட்டோம் என்பது அதைவிட மோசமானது. அதன் மூலம் தமிழகத்தில் சாதாரண இந்துக்களை இந்துத்துவாவின் பக்கம் கொண்டுபோய் விட்டுவிட்டதோ என்று ஐயமுறவேண்டியதுள்ளது. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாமல் அடிப்படைவாதம் கொம்புசீவப்படுகிறது. ஹைதராபாத் இஸ்லாமிய அரசியல்வதி ஓவைசி யார் வீரமிக்கவர்கள் என்பதை காவல்துறையை சிலநிமிடம் விடுப்பு எடுக்கச்சொல்லிவிட்டு பார்க்கலாம் என்று பேசினார், அதற்கு ஒரு கூட்டம் கைதட்டுகிறது. அப்படியே மறுபக்கம் இந்துத்துவாவின் தொகாடியா வரலாற்று ஆதாரத்தோடு கங்கையில் யாருடைய இரத்தம் ஓடியது, குஜராத்தில் யார் கொல்லப்பட்டார்கள்? என்று வீரவசனம் பேசுகிறார், இதை அப்படியே வாக்குமுலமாக வைத்து அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இரண்டு பக்கமும் மதவெறி பேச்சுக்கள் முதலில் சாம்பிராணி புகைபோல் பரவியது இப்போது விசைமூலம் வெளியேற்றப்படுகிற நீரைப்போல் வெளிப்படுகின்றன. மிகவும் அச்சமாக உள்ளது, இந்தியப் பிரிவினை ஏற்படுத்திய ரணம் இன்னும் ஆறவில்லை அதை கிளரிவிடுவதில் தான் அரசியல்.

மத்தியில் காங்கிரஸ் மிகபுத்திசாலித்தனமாக செயல்படுகிறது, அஜ்மல் கசாப், அப்சல் குரு வை இன்னும் தூக்கிலிடவில்லை என்ற பாஜகவின் அரசியலை முறியடித்ததன் மூலம் கொஞ்சம் இந்துத்துவா அபிமானிகளை தன்பக்கம் ஈர்த்துவிட்டது. தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பவர்களை தூக்கிலிட முயற்சிசெய்கிறபோது அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் தூக்குதண்டனைக்கு எதிராக தீர்மானம் போடுகிறோம், சிலநேரம் தூக்குதண்டனைக்கு எதிராக முற்போக்குவாதம் பேசுகிறோம் அதே நேரம் இஸ்லாமிய தீவிரவதிகளை தூக்கில்போடும்போது இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறோம், இந்துத்துவா தீவிரவாதிகள் சிலர் குண்டு வைத்தார்கள் அவர்களை தூக்கில்போட்டால் பெரும்பான்மை சமூகம் இனிப்பு கொடுக்குமா? சவுதியில் மதச்சட்டத்தின் பெயரால் மரணதண்டனை விதிப்பதை சிலசமயம் கண்ணுக்குக் கண் என்ற தண்டனையை வரவெற்கிற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்சல் குரு தூக்கிலிடப்படும் போது மனித உரிமைவாதிகள் பக்கம் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் மனித உரிமை போராளிகள் தொடர்ந்து மரணதண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த மதம், மொழி, இனம் நாடு என்பதை பார்க்காமல் சமர்செய்கிறார்கள் அவர்களில் வி.ஆர்.கிருஷ்ண்ய்யர் தமிகத்தில் மனுஷ்யபுத்திரன் முக்கியமானவர்கள் அவர்களை வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை: