வெள்ளி, 11 ஜூன், 2010

போபால்: மறுக்கப்பட்ட நீதி

இந்த வாரத்தில் மிகுந்த வேதனையடையச்செய்த சம்பவம் பெரிய விபத்தோ உயிரிழப்பிற்கோ அல்ல 26 ஆண்டுகளுக்கு முன்னால் போபாலில் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு மீதான நீதி(?)மன்றத் தீர்ப்பு தான். தாமதமாக வழங்கப்படுகிற நீதியே மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள் ஆனால் தீர்ப்பைத் தாமதாக்கி நீதியையே கொன்று விட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட 8 பேர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது மேலும் 25000 பணம் செலுத்தினால் ஜாமீனிலும் செல்லலாம். நீதியை விமர்சிக்கக் கூடாது என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு, இதை நீதி என்று சொன்னால் இந்திய அரசு மனித உயிரின் மதிப்பை இதைவிட கேவலப் படுத்தமுடியாது. விஷவாயுக்களை மூலப்பொருட்களைக் கொண்ட நிறுவனத்தை நகரின் எல்லைக்குள் எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் அரசாங்கம் கூறும் உயிரிழப்பு மூவாயிரத்திற்கும் அதிகமானோர் ஆனால் உண்மையில் 25000 பேர் உடனடியாக இல்லாவிட்டாலும் அதன் பாதிப்பினால் இறந்திருக்கிறார்கள். இன்னும் அந்த சயனைடு மண்ணில் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்தி அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இலட்சக்கணக்கில்.


முக்கியக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரண் ஆண்டர்சன் இந்தியாவில் கைதாகி எப்படி ஜாமீனில் வெளியே போனார் என்பது மர்மமாகவே உள்ளது. இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பிலும் அவரைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை போலும், அமெரிக்க பிரஜைகள் குற்றவாளி என்ன தீவிரவாதிகளகவே இருந்தாலும் அவர்களை இந்தியா தண்டனைக்குள்ளாக்க முடியாது என்பதை சமீபத்திய டேவிட் ஹெட்லியே உதாரணம். பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கவேண்டிய நஷ்ட ஈட்டுத்தொகையான 3.3 பில்லியன் டாலரில் 15% மான 470 டாலரை வழங்கிவிட்டு கைகழுவி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு என்ற பெயரில் தொழில் தொடங்க வருவது இந்தியாவை வளப்படுத்தவோ இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவோ அல்ல, வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் அங்கு நடத்த முடியாத பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளை தான் இங்கு அமைக்கிறார்கள். இதற்கு இந்தியா போன்ற நாடுகள் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து ஆட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வழங்குகிற இலஞ்சப்பணதிற்காக சொந்த மக்களை காவுகொடுக்கிறார்கள்.

தற்போதைய காங்கிரஸ் கூட்டணியரசு “அணுசக்தி இழப்பீட்டு மசோதா” வை நிறைவேற்றத்துடிக்கிறது, இதன் மூலம் அமெரிக்க அணு உலைகளால் எதிர்காலத்தில் இந்தியாவில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் நஷ்ட ஈடு வழங்குவதற்கு உச்சவரம்பையும் நமது அரசு அளிக்க தயாராகயிருக்கிறது. இந்த சமயத்தில் வெளிவந்த இந்த “கருணைமிக்க” தீர்ப்பை பன்னாட்டு நிறுவனங்கள் இருகரம் கூப்பி வரவேற்கும் ஆனால் சர்வதேச சமூகத்தில் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும். தன் மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றுவதற்கு நமது சட்டங்கள் பலவீனமாக இருக்கிறதா அல்லாது அவ்வளவு தூரம் வளைத்துவிட்டார்களா?



அமெரிக்க அணு உலைகள் இந்தியாவில் அமைக்கும்போது எதிர்காலத்தில் ஏதேனும் விபத்து நடந்தால் நிச்சயம் மக்களுக்கு நீதி கிடைக்காது. அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற இந்தியாவிற்கு அமெரிக்கா இன்னும் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. லாபமே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எதிர்கால சந்ததிகளையும் பல்லுயிர்களையும் பற்றி சிறிதும் கவலைப்படாது என்பதை மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிஸ் பெட்ரோலியம் ஏற்படுத்திய எண்ணைக்கசிவிற்கு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. எண்ணெய் வளலாபத்தை தனியார் நிறுவனமும் அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதையும் நாம் காண்கிறோம்.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சொந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் யார் பாதிப்படைந்தால் என்று அக்கறையில்லாமல் விவசாய நிலங்களை வலிந்து கையகப்படுத்தி தொழில் வளர்ச்சி காணத்துடிக்கிறது. இந்திய மாநிலங்களும் போட்டிபோட்டுக் கொண்டு வரிச்சலுகைகளையும் தடையில்லா மின்சாரத்தையும் தொழிலுக்குகந்த “தொழிலாளர் நலச்சட்டங்கள்” களால் பாதிக்கப்படாமல் SEZ அமைக்கிறார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் நடத்துகிற ஆட்சியாளர்களுக்கு வெள்ளையறிக்கை வெளியிட ஒன்றும் கஷ்டமில்லையே?

7 கருத்துகள்:

kashyapan சொன்னது…

poor Hari!Warren Anderson escaped.I was a journalist at that time.He was wisked away from Bopal.sent to delhi.Arjun singh was the chief minister.P.V.Narasimharao was the home minister.Rajiv Gandhi was the prime minister.Anderson was arrested,bail granted on same day ,sent to Delhi on M.P. govt.plane,and from Delhi he went to America.Union carbide was taken over by a company called Dow. Dow is connected to Union carbide remotely...kashyapan

hariharan சொன்னது…

Thanks com.kashyapan,

I am getting very informative and historical feedback from you.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங் களை தோலுரிக்கிறது உங்கள் கட்டுரை ... மிக அருமையான அலசல் தோழர் !

vasan சொன்னது…

Read the 'Confessions of an Econamic Hit Man' by John Perkins. You will know this is a stereo type scandal of the USA government. Remember "ENRON" issue on Power (Energy) Project?

hariharan சொன்னது…

Thanks

Neo , Vasan.

I read in that book in tamil by John Perkins, still in halfway.

It is very nice.

kashyapan சொன்னது…

DearVasan! Enron representative came to India.If I remember correct her name is Rebecca.She went to "Mathusri" and met Bal Thakare. When Vajpai went to U.S hewas escorted by enron people.Vajpai orRajive Enron or Union Carbode all are same.....kashyapan

hariharan சொன்னது…

closed