செவ்வாய், 20 நவம்பர், 2012

நோபல் பரிசு உருவான கதை.


அவரது பெயர் ஆல்பர்ட் பெர்ன்ஹார்டு நோபெல் , 1833ல் ஸ்டாக்ஹோமில் பிறந்தார்.அவரது தந்தை ரஷ்ய ராணுவத்திற்கு துப்பாக்கி ரவைகள் தயாரித்து வழங்கும் வேலை செய்துவந்தார்.

நோபெலும் அவரது அண்ணனும் தந்தைக்கு உதவியபடியே கல்வி கற்றுவந்தார்கள். பின்னாட்களில் ஸ்டாக்ஹோம் திரும்பியவர்கள் ஸ்வீடன் நாட்டு ராணுவத்திற்கு பலவகையான வெடி மருந்துகளை தயாரித்துக் கொடுத்தார்கள். நோபெல் தந்தையின் வெடிமருந்து தொழிற்சாலையின் வேதியியல் கூடத்தில் வெடிக்கும் பொருட்களை கலவைகளை பலவிதமாகத் தயாரித்து மினி வேதியியலாளர் ஆனார்.

1864ம் ஆண்டு ஒரு நாள் நைட்ரோ கிளிசரினுடன் பலவகை அமிலங்களை இணைத்து தயாரித்த திராவக வெடிக்கலவை செய்யும் ஆய்வில் இருந்தார், ஆய்வை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நோபெல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு ஒடினார் ஆய்வகமும் அவர்களது வெடிமருந்து ஆலையும் கூடவே அண்ணன் எமில் மற்றும் 26 பேரின் சடலங்களும் சிதைந்து கிடந்தன. அந்த சம்பவத்தால் நோபெலின் தாயும் தந்தையும் அதிர்ந்து போனார்கள் ஆனால் நோபெல் தனது ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அடுத்த ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்து உலகமெங்கும் கிணறு வெடுவதிலிருந்து, சுரங்க வேலைவரை பலவற்றிற்கு பயன்பட்ட வெடிமருந்து உற்பத்தி அவரை குறுகிய காலத்தில் செல்வந்தராக்கியது.

மனிதர் திருமணமே செய்துகொள்ளாமல் தனித்தே வாழ்ந்து தனது வாழ்வைப் பெரிய சாதனை என்றே கருதினார். 1895ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி காலையில் செய்தித்தாளை வாசித்து திடுக்கிட்டார்.

டைனமைட் வெடிமருந்து தயாரித்து பலர்சாக காரணமாக இருந்த ஆல்பிரட் நோபல் மரணம் என்று செய்தி பக்கத்தில் அவரது போட்டோவும் கூட. மனிதர் திரும்ப திரும்ப வாசித்தார் அவரைத்தான் இறந்துவிட்டதாக தினசரியில் செய்தி வந்திருந்தது.கோபமடைந்து பத்திரிக்கையாள்ர்களை தொடர்புகொண்டு திட்டித்தீர்க்க முடிவுசெய்தர், பிறகு முடிவை மாற்றினார். எல்லாரும் என்ன செய்கிறார்கள் பார்ப்போமே என்று அவருக்குத் தோன்றியது, ஆனால் அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஒருமணி நேரம், இரண்டு மணிநேரம் ...வீட்டுக்கு யாருமே வரவில்லை, உறவினர்கள் தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை. வீட்டிலிருந்து இறங்கீ தெருவில் நடந்தார், யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு தெரு தள்ளி ‘அழிந்தான் மனிதக் கொல்லி’ என பெரிய பேனர் வைத்து சிலர் இனிப்பு வழங்குவதைப் பார்த்து நொந்தார். வேகமாக வீடு திரும்பினார்.

அங்கே காத்திருந்தது ஒரே பெண்மணி பெர்தா வின்ஸ்கி, நோபெலின் பால்ய சினேகிதி.நட்புரீதியில் நலம் விசாரித்துக்கொண்டே பெர்தா வின்ஸ்கி அவரது நிலைமையை புரியவைத்தார். பணமும் புகழும் பெரிதல்ல், வேதியியாலாளராக இருந்தும் என்ன பயன்.. அழிவு ஆயுதங்களே செய்தவர் என்ற அவப்பெய்ரே நிலைக்கிறது, இருக்கும்போதே இறந்தவராக்கியது. நோபல் அந்தக் களங்கத்திலிருந்து வெளிவரக் கொண்டு வந்தவை தான் நொபல் பரிசுகள்.

கருத்துகள் இல்லை: