வெள்ளி, 3 செப்டம்பர், 2010

FCI குடோன்களில் வீணாகும் உணவு தானியம்

இந்திய உணவு தானிய கிடங்குகளில் (FCI) கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 இலட்சம் டன்கள் அளவிற்கு உணவுதானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழும் மேலும் வாழும் கோடிக்கணக்கான் மக்கள் உணவின்றி பட்டினியாகி கிடக்க, அம்மக்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியத்தை அரசு புழுக்கச்செய்திருக்கிறது. ஐநா வின் சமீபத்திய அறிக்கையின் படி 63 சதவீத இந்தியக் குழந்தைகள் ஒருவேளை உணவின்றி படுக்கைக்கு செல்கின்றன. இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் வறுமையைப் போக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, ஆனால் மக்களின் பசி, பட்டினி தான் இன்னும் தீர்ந்தபாடில்லை.


courtesy: "The Hindu"

தில்லியைச் சேர்ந்த திரு.ஆசிஸ் தேவ் பட்டாசார்யா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்திடம் உணவு தானிய இருப்புகளையும் வீணாண விபரத்தையும் கேட்டதன் வாயிலாகவே இச்செய்தியை அறியமுடிகிறது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசை பட்டினியால் வாழும் மக்களுக்கு வீணாவதற்கு முன்பே உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு வழங்க அறிவுறுத்திய பின்பும் மைய அரசு செயல்படாமல் உள்ளது.

உணவுக்கிடங்குகளை சரியாக நிர்வகித்தாதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் நெல் வீணாகிவந்துள்ளது. FCI-யின் அறிக்கையின்படி 1997-2007 க்கும் இடைப்பட்ட காலத்தில் 183,000 டன் கோதுமையும், 395,000 டன் அரிசியும், 22,000 டன் நெல் மற்றும் 110 டன் அளவிற்கு மக்காச்சோளமும் வீணடிக்கப்பட்டுள்ளது. எலிகள் தின்கிற தானியத்தைக் கூட மக்களின் பட்டினியைப் போக்க தர அரசு மறுக்கிறது. உணவுப் பஞ்சம் உற்பத்தி குறைவால் ஏற்பட்டதல்ல மாறாக விநியோக முறையின் கோளாறால் தான்.



இந்தியமக்களின் சராசரி தனிமனிதன் உட்கொள்ளும் உணவுதானியத்தின் அளவு (2005-2008 வரை) 436 கிராம், 1955-1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 440 கிராமாக இருந்துள்ளது. இது தான் வளர்ச்சியா? இந்திய உணவுக்கழகத்தை நிர்வகிக்கும் விவசாயத்துறை அமைச்சர் தனது துறையைக் கவனிக்காமல் கிரிக்கெட் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பட்ட அமைச்சரவை சகாக்களை இன்னும் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்க்கிறார் தன்னிச்சையாக இயங்கமுடியாத பிரதமர் மன்மோகன்சிங்.

கருத்துகள் இல்லை: