வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ

மிருகத்தனம் – சாதத் ஹசன் மண்ட்டோ




மிகுந்த சிரமத்தோடு கணவனும் மனைவியும் வீட்டில் உள்ள சில மதிப்புள்ள பொருட்களோடு தங்களை எப்படியோ காப்பாற்றிக்கொண்டார்கள்.

ஆனால் அவர்களின் வயதுவந்த மகளைக் காணவில்லை.
அந்தத் தாய் தன்னுடைய, பெண் கைக்குழந்தையை நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டாள்.

எருமை மாடு ஒன்று அவர்களிடம் இன்ருந்தது. கலக்காரர்கள் அதை இழுத்துச் சென்றார்கள். பசுமாடு கலகக்காரர்கள் பார்வையிலிருந்து எப்படியோ தப்பித்தது. ஆனால் அதன் கன்றுக்குட்டியைக் காணவில்லை.
கணவனும், மனைவியும், கைக்குழந்தையும் பசுமாடும் ஓர் மறைவிடத்தில் பத்திரமாக இருந்தார்கள். அப்பொது இருட்டு மிக மோசமாகக் கருத்துக் கிடந்தது. அந்தப் பெண்குழந்தை பயத்தால் அழுதபோது, அதை அசைவற்ற அந்த இரவில் மேளம் கொட்டுவது போன்ற சத்தத்தை எழுப்பியது. தாய் நடுங்கிப்போனாள். விரோதிகளுக்கு இந்தச்சத்தம் கேட்காமல் இருக்கக் குழந்தையின் வாயைத் தன் கையால் மூடினாள். சத்தம் சற்றுக் குறைந்தது. மேலும் பாதுகாப்பிற்க்காகத் தந்தை ஒரு தடித்த சொரசொரப்பான துணியைப் போட்டு அந்த குழந்தையை மூடினார்.
சில நிமிடங்கள் கழிந்தது. திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து கன்றுக்குட்டி ஒன்று கத்தியது. இந்தச் சத்தத்தைக் கேட்ட பசுமாட்டின் காதுகள் சிலிர்த்துக்கொண்டு விறைப்பானது. அதுமிகவும் அமைதியற்ற நிலையில் மேலும் கூழும் நகர்ந்து சத்தமாகத் திரும்பக் குரல் கொடுத்தது. அவர்கள் அதை அமைதியாக இருக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை.

இந்தச் சத்தம் இவர்களைத் தேடிக்கொண்டிருந்தவர்களை உஷார்படுத்தியது. எரிந்து கொண்டிருந்த தீவெட்டி வெளிச்சங்கள் தொலைவில் நிழலாடியது.

அந்தப்பெண் அவளின் கணவரிடம் கோபமாக, ‘’கேடுகெட்ட மிருகத்தை ஏன் நம்மோடு இழுத்து வந்தீர்கள்?’’ என்று கேட்டாள்.


## கோத்ராக்களும், முஸாபர்பூர்களும் நினைவில் நிழலாடியது.

கருத்துகள் இல்லை: