ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழலை ஒழிக்க சாமியார்கள்?

ஒரு மாசத்துக்கு முன்னாடி எப்படி அண்ணா ஹசாரே எப்படி இந்தியா முழுசும் பேமஸ் ஆனாரோ அதேமாதிரி இன்னைக்கு பாபா ராம்தேவ் ஊழலை ஒழிக்க வந்துட்டார், ஏற்கனெவே லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு ஒரு குழு அமைச்சு சும்மானாச்சும் வாரவாரம் மீட்டிங் போட்டு பேசிகிட்டு இருக்காங்க. எப்படி தீடிர்னு பாபா ராம்தேவ் உள்ளவந்தார்ன்னு தெரியல , நம்ம மீடியாகாரங்க நினைச்சா இந்த மாதிரியான புரட்சியை உடனே பத்தவைக்க முடியும். லோக்பால் மூலமா பிரதமரையும் உச்சநீதிமன்ற நீதிபதியையும் விசாரிக்க இடம் தரக்கூடாதுன்னு ராம்தேவ் சொன்னாரு, அப்புறம் பல்டி அடிச்சாரு. இப்ப ராம்லீலா மைதானத்துல 18ரூபா செலவு செஞ்சு பிரம்மாண்டமா செட் போட்டு, குழுகுழு ஏசி போட்டு நாடகத்தை ஆரம்பிச்சிடாங்க. எதையோ மறைக்கிறதுக்கு முயற்சி நடக்குற மாதிரி தெரியுது.

மத்திய அரசாங்கமே கறுப்புப்பணத்தை ஒழிக்க ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட் மூலமா நடவடிக்கை எடுக்கப்போறதா செய்தி வந்துச்சு, அம்பானி பிரதர்ஸ் ஒண்ணா இருந்தப்போ வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பா மாத்தி ஒரு கொள்ளையை அடிச்சதை CBI நடவிடிக்கை எடுக்கலன்னு சொல்லி CIC மத்திய தகவல் ஆணையத்தலைவர் CBI க்கு கடிதம் எழுதினாரு. தயாநிதிமாறன் டெலிகாம் மந்திரியா இருந்தப்ப 323 டெலிபோன் லைன்களை சொந்த வியாபாரத்துக்காக அமைச்சாராம், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வந்தது மாதிரி சன் டிவிக்கும் 700கோடி ரூபாய் வந்துருக்குது. அதப்பாத்துத்தான் கலைஞருக்க்கு ஐடியா வந்திருக்கொ என்னன்வோ? இப்படி சமீப காலமாத்தான் ஒரு பதினைஞ்சு வருஷ்மா பெரிய அளவுல கோடி,ஆயிரம்கோடி, லட்சம் கோடின்னு ஊழல் நடக்குது, மக்களோட பணம் பெரிய கார்ப்பரேட் ஆளுக பாக்கெட்டுக்கு போயிகிட்டு இருக்கு. இல்லன அம்பானி குழுமமொ சன் டிவி குழுமமோ உலகம் பூராவும் தெரியருது மாதிரி பில்லிணியர் ஆகமுடியுமா? அப்படி என்ன திறமை அவங்க கிட்ட இருக்குது? புதுதா வருகிற தலைமுறை அவங்களப் பாத்து மோசடி பண்ண ஆரம்பிச்சா நாடு தாங்குமா? மத்தியில காங்கிரஸ் ஆட்சியானாலும் பாஜக ஆட்சியானலும் இந்த கார்ப்பரேட் ஆளுகளுக்கு புரோக்கர் வேலையைத்தான செய்றாங்க. உண்மையா ஊழல்ல அதிக பலன் அடைஞ்சது கார்ப்பரேட் ஆளுக தான், அரசியல் வாதிங்களுக்கு கிடைக்கிற பங்கு ஏதோ பத்து முதல் இருபது சதம் இருக்கும்.ஆனா கார்ப்பரேட் ஆளுக சீன்ல்யே வருகிறது இல்ல, எல்லாத்தையும் நாங்க தாங்கிக்கிறோம்னு அவங்களுக்கு ஏஜெண்ட் வேலை பார்க்கிற அரசியல்வாதிங்க இடிதாங்கியா ஏத்துகிறாங்க. மீடியாவும் டாடாவையும், அம்பானியையும் இல்ல புதுசா வந்த வேதாந்தா குழுமத்தையும் பத்தி பேசுறதே இல்ல. ஊழலுக்கு முக்கிய காரணம் உலகமயம்ன்னு தெரிஞ்சுபோச்சு.

ஹசாரேயை வைச்சு எப்படியாவது ஆதாயம் பார்க்கலாம்னு இருந்தது பாஜக, தீடிர்னு ஹசாரே காந்தி பிறந்த குஜராத்துல பாலைவிட சாராயம் நிறைய விக்குது, மோடி அரசாங்கம் மோசம்னு பேச ஆரம்பிச்சவுடனே பாபாவை உள்ள கொண்டுவந்துட்டாங்க.எல்லாம் துறந்த? இந்த சாமியாருக்கு வருசத்துக்கு 1000கோடி வருமானம் வருது.யோகா சொல்லித்தரது அப்புறம் எல்லா சாமியார் செய்யறவேலை, மக்களை அரசியல் பக்கம் போகாமா பாத்துக்கிறது. மத்திய அரசாங்கம் மக்களை கொள்ளையடிக்கிற மாதிரி பெட்ரோல் விலையை ஏத்துறது பத்தி இந்த சாமியாருக்கு கவலை கிடையாது, அதுக்கு எதிரா பேசினா அது கார்ப்பரேட்ட்டு ஆளுகளுக்கு எதிரா பேசினமாதிரி ஆயிடுமே?

நம்ம மெடில்கிளாஸ் ஆளுங்களுக்கு தீனி போடுறது மாதிரி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாம செய்தி சொல்ற இங்கிலீஷ் நீயூஸ் சேனல்கள் ஊழலுக்கு எதிரா அவங்களும் இருக்கிறது மாதிரி காட்டிறாங்க. NDTV யில நீயூஸ் வாசிக்கிற பர்கா தத் மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கும் கார்ப்பரேட்டு ஆளுகளுக்கு புரோக்காரா இருந்ததை மக்கள் மறந்துட்டாங்களா? எல்லாரும் அனுபவத்துல இருந்து தெரிஞ்சுக்கணும் யாரு உண்மையிலேயே மக்களுக்காக அரசியல் நடத்துறாங்க, இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாம ரெம்ப காலம் ஆட்சி செய்தவங்க இருக்காங்க. நம்ம நினைக்கிற மாதிரி எல்லா அரசியல்வாதியும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள் இல்ல.மீடியா இதுவரைக்கும் இடதுசாரி கட்சிகளை இருட்டடிப்பு செய்றதை கொஞ்சம் கவனிக்கனும். மீடியாக்கள், சாமியார்கள் மாதிரி தீடீர்னு ஊழலை ஒழிச்சிடமுடியாது! அதுக்கு சட்டம் மட்டும் போட்டா போதுமா? செயல்ல காட்ட வேண்டாமா? ஊழலுக்கு முக்கிய காரணம் பொதுச்சொத்துகளை தனியார்மயமாக்கும் போது நடக்குது, அப்புறம் நாட்டோட இயறகை வளங்களை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏலம் விடும் போது நடக்குது, விலைவாசி ஏறுனா கம்பெனிகளுக்கு லாபம் வர்றதுல ஊழல். அதுக்கு கிளைகள் நிறைய இருக்குது. இந்த கொள்கைகளை அமல்படுத்துற ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இருக்கிறது வரை ஊழ்லை ஒழிக்கமுடியாது.

1 கருத்து:

காமராஜ் சொன்னது…

மிக மிக அருமையான பதிவு தோழர்.
இங்கே திட்டமிட்ட திசைதிருப்பல்களும்,திட்டமிட்டபப்ளிசிட்டிகளும் நடந்துகொண்டே இருக்கிறது.ஊழல் நடவடிக்கைகளில் நிஜமான பயனாளிகள் கண்டுகொள்லப்படுவதேஇல்லை.அம்பானிகுழுமம் போன்றவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்க தொடுக்கப்பட்ட பொதுநலவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.