வியாழன், 9 ஜூன், 2016

மிளிர் கல்- இரா.முருகவேள்

மிளிர் கல்
---------------
புத்தாயிரத்திற்குப்பின்னர் வந்த நாவல்கள் என்ற தலைப்பில் எஸ்.ரா அவர்கள் பரிந்துரைத்த நாவல், அதோடு நீண்ட நாட்களுக்கு முன்பே நண்பர் வாசித்த அனுபவத்தை சொல்லியிருந்தார் அதனால் அவரிடமே வாங்கி வாசித்து முடித்தேன், முல்லையும் நவீனும் கண்ணகி புகாரிலிருந்து கொடுங்களூர் வரை பயணித்த தடத்தை ஆவணப்படமாக்கும் போது எதிர்பாராத விதமாக ஸ்ரீகுமாரை சந்திக்கிறார்கள். அவரை சந்திக்காவிட்டால் இவர்களது பயணம் எப்படியிருக்கும்?
ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கும் தொல்பொருள் ஆய்வாளனுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
காங்கேயம் காளைகளுக்குத் தான் பெயர் போனது என்று நினைத்திருத்தேன், இவ்வளவு வளமிருக்குதா?
அசோகர் கலிங்கத்தை வெல்வதற்காக புத்த சமயத்தை தழுவினாரா? டிடிகோசாம்பியின் நூல்களை படிக்கத் தூண்டுகிறது. கலிங்கப்போரில் எண்ணற்ற உயிர்கள் கொல்லப்பட்டது உண்மையில்லையா? இந்த ஐயம் தீர்க்கப்படவேண்டும்.
ஏன் சமண, பெளத்ததிற்கு மாற்றாக சைவம் தோன்றியது அதற்கான விடைகள்.
குஜராத்தில் வைரம், கற்கள் பட்டை தீட்டும் தொழில் நடக்கிறது என்பதை அறிந்தோம், அந்த பட்டை தீட்டும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழல் இத்தனை மரணங்களும் சுவாச நோய்களும் ஏற்படுகின்றன என்பதை ஊடகம் சொல்லவில்லை! குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை மூலம் லாபம் கொழிக்கிறது!
நாவலில் முல்லையும், நவீனும் ஆவணப்படத்திற்கு பயணிக்கும்போது சீரிகுமாருடன் உரையாடும்போது தொ பரமசிவன் கட்டுரைகளை வாசித்தது போல இருந்தது. நாவலில் பாத்திரங்களுக்கு தேடல் இருந்தது. வாசித்து முடித்தபின் அந்தத்தேடல் வாசகனைத்தொற்றிக்கொண்டது.
பூம்புகார் திரைப்படத்தை பார்த்தாகிவிட்டது, இனி சிலப்பதிகாரம், கோசாம்பியின் நூல்களையும் சமணம் பெளத்தம் சார்ந்த நூல்களையும் வாசிக்கவேண்டும். இந்த நாவல் வாசகனை மேலும் பரந்த வாசிப்பிற்கு இட்டுச்செல்கிறது.
இரா. முருகவேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

கருத்துகள் இல்லை: