வியாழன், 31 டிசம்பர், 2015

கொல்கத்தா பயணம் -2

பேலூர் மடத்திலிருந்து படகுமூலம் தட்சினேஷ்வர் வந்தோம், சிறிய படகுதான் கொஞ்சதூரத்துல இன்ஞின் நின்னுபோச்சு.. கீ ஆச்சே என சிலர். கிச்சு நா. ஸ்டார்ட் கோயகாச்சி.ஹூக்ளியே எவ்வளவு அகலம் எவ்வள்வு தண்ணீ. அப்ப கங்கை எப்படியிருக்கும்? தலைக்கு 10 ரூயா 20 ரூயா ஞபாகமில்லை.
நதியிலிருந்து  தட்சினேஷ்வர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.




                                தட்சினேஷ்வர் அல்ல.. அதே மாதிரி இன்னொரு கோவில்


ஹூக்ளியின் 3வது பாலம் விவேகானந்தர் பாலம்.

தட்னேஷ்வர் கோவில் ஹூக்ளியின் நதிக்கரையில்.


கோவிலுக்கு உள்ளே சென்றோம், சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசை, கையில் மலர் கூடைகளோடு பக்தர்கள் நின்றிருந்தார்கள், இன்னொரு பக்கத்தில் வரிசையாக சிவலிங்கங்கள் 8 ?  9 ஆ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் சுத்தமாக இருந்தது  மனசுக்குள்ளே கும்பிடுபோட்டுவிட்டு வெளியேவந்தோம், காலை உணவு கச்சோரி எனப்படும் ஒருவகை பூரி அதற்கு சென்னா டால் சாப்பிட்டோம். பாலா ரெம்ப நாளா சங்கு வேணுமென்றான், சரி பேரம் பேசத்தெரியாமல் 200ரூக்கு நல்ல சங்கு வாங்கினோம். கோவிலைவிட்டு வெளியே வந்தால் பிச்சைபெறுவோர் கூட்டம் கூட்டமாக ஒரிடத்தில் 5ரூ 10 ரூயோ போட்டா நம்மை மொய்த்துவிடுவார்கள். சில்லரையாக கொஞ்சம் வைத்திருப்பது நல்லது. திட்டப்படி அடுத்து Belegachia விலுள்ள ஜெயின் மந்திருக்கு போகவேண்டும்.

தட்சினேஷ்வரிலிருந்து டாக்சியிலிருந்து டம்டம் செல்லலாமென்று ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டேன், ஏன் டாக்ஸியில் போற லோக்கல் ட்ரெயின் இருக்கு போ என்றான். அதுவும் நல்லதென்று லோக்கல் ட்ரெயினில் டம்டம் சென்று அங்கிருந்து மெட்ரோவுக்கு டிக்கெட் எடுத்து அடுத்த ஸ்டேசன் பெலிகாச்சியாவில் இறங்கி ட்ராம் டிப்போ நோக்கி நடந்தோம் ஜெயின் மந்திர் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. சார் உள்ளே பார்க்கவேண்டுமென்றேன்.. ஜெயின்? இல்லை நாங்கள் மதராஸிலிருந்து சுற்றிப் பார்க்கவந்தோம் என்று சொன்னதால் உள்ளேவிட்டார் காவலாளி.




இதென்ன சிவப்புகலர் கோவில், நம்ம எதிர்பார்த்தது மார்பில்ஸ் வைத்து கட்டப்பட்ட கோவிலாச்சே என்று விசாரித்தால் இது திகம்பரர் ஜெயின் கோவில் என்றார்கள். திகம்பரர்கள் ஆடை அணியமாட்டார்கள், திசைகளையே ஆடைகளாக அணிந்தவர்கள்தான் திகம்பர சமணத்துறவிகள். தமிழகத்தில் முன்னர் சமணமதம் வைதீக மதத்திடம் தோல்வி கண்டதும் இப்படி ஆடையில்லாமல் பெண்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லாமல் போனதும் ஆடைகளற்ற துறவுமுறை ஒரு காரணம் என்கிறார்கள். அவர்கள் ஊரில் தங்கமாட்டார்கள், மலைகளில் படுக்கை செய்து குகைகளில் வாழ்ந்தார்கள், இரவு அருகிலுள்ள ஊருக்குச்சென்று பிச்சைகேட்டு உண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் ஆரம்பித ‘பள்ளி’ இன்றைய்க்கு பள்ளிக்கூடம் என்று சொல்கி\றோம். சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரரான் பார்ஸவநாதரின் கோவில். தமிழகத்தின் பல பகுதிகளிலும் 23வது தீர்த்தங்கருக்கு சிலைகள் இருக்கின்றன, மதுரை அருகே சமணப்படுக்கைகள் இருப்பதாக தொ.பரமசிவன் ஒரு நூலில் எழுதியுள்ளார். ஆனால் இந்த கோவில் 20ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கல்கத்தாவில் எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளன. 

அங்கிருந்து வேறெங்கு செல்வது மதிய உணவுக்காக நேரமும் ஆகிவிட்டது, சரி ஆளுக்கு ரெண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பெலிகாச்சியா மெட்ரோவில் ஏறி  M G Road மெட்ரோவில் இறங்கி மார்பிள் பேலஸ் பார்க்கலாம் என்று நடந்தோம். அங்கே சென்றால் இன்னைக்கு விடுமுறை உள்ளே அனுமதி கிடையாது என்றார்கள், சரி எங்காவது போய் சாப்பிடலாம் என்று நடந்தோம், சித்தரஞ்சன் சாலையின் கீழ்தான் மெட்ரோ ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல ரெஸ்டாரெண்டை எங்க தேடுறது கண்ணுல பட்டா பார்க்கலாம் என்று மகாத்மா காந்தி சாலையில் கொஞ்சம் தூரம் நடந்தோம் ..எல்லா நகரங்களிலும் எம்.ஜி. ரோடு சிறப்பானதாக இருக்கும். கொல்கத்தாவில் நெரிசல் மிகுந்த சாலையாக இருந்தது. நல்ல ரெஸ்டாரெண்ட் எதுவும் கண்ணில் படவில்லை, பாரதிக்கும் பாலாவுக்கும் நடக்கவும் தெம்பில்லை. சரியென்று சித்தரஞ்சன் சாலைக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் எஸ்பிளனேட் சென்றோம்.

பதினைந்து வருடத்திற்கு முன்பு ரசகுல்லா சாப்பிட்ட கே.சி.தாஸ் கடை நினைவில் வந்தது, சரியென்று அங்கே சென்றோம், சிங்காடா (சமோசா) ரசகுல்லா, ரசமலாய்,ராஜ்போக் என வகையான இனிப்புகளை பசிக்கு சாப்பிட்டோம். அடுத்து கொஞ்சம் உறங்கினால் நன்றாகயிருக்கும். ஆனால் நேரம் விரயமாகுமே கிளம்பு இண்டியன் மியூசியம் 1 கி.மீ தூரம் ஜவஹர்லால் நேரு சாலையில் தெற்கு நோக்கி நடந்தால் நியூமார்க்கெட் தாண்டி இடதுபக்கம் பெரிய பில்டிங் இந்தியன் மியூசியம். சித்தரஞ்சன் சாலையேதான் எஸ்பிளனேடுக்கு தெற்கே ஜ.நேரு சாலை அது சென்னையின் மெளண்ட் ரோடு போன்றது.  ‘தேசபந்து’ சித்தரஞ்சன் தாஸ் என்று இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் படித்த அவரின் பெயரில் சித்தரஞ்சன் அவென்யூ. இந்தியாவின் மிகவும் பழ்மையான மியூசியம் கொல்கத்தாவின் இந்தியன் மியூசியம்தான். புத்தர்சிலைகள் அதிகம் வைத்திருந்தார்கள் , இந்தியாவில் பல்வேறு சாம்ராஜ்பத்தில் புழங்கிய நாணயங்களை காட்சிபடுத்தி இருக்கிறார்கள். தொல்லியல் ஆர்வம் உள்ள்வர்களுக்கும் மாணவர்களுக்கும் காண நிறைய உள்ளது.

குழந்தைகளுக்கு சும்மா மியூசியம் கோவில் என்றெல்லாம் போரடித்துவிடக்கூடாது என்பதற்க்காக மில்லிணியம் பார்க் சென்றோம். ஹூக்ளியின் கரையில் அமைந்துள்ள பார்க்கில் குழந்தைகள் விளையாட இடமே கிடையாது மட்டுமல்ல.அங்கே குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்லக்கூடாது. மாலை மயங்கும் வேளையில் காதலர்கள் ஒதுங்குமிடமாக இருக்கிறது. இதைவிட இந்தியன் மியூசியம் எதிரே இருந்த எலியாட் பார்க்கிற்கு சென்றிருக்கலாம். மில்லிணியம் பார்க்கிலிருந்து ஹொரா பாலம் ஹொரா ரயில் முனையம் தெளிவாகத் தெரிந்தது. அருகிலேயே பி.பி.டி பாக் என்ற லோக்கல் ரயில் செல்லும் ஸ்டேசன் உள்ளது. பி.பி.டி.பாக் ஏரியாவைச்சுற்றிலும் நிறைய அரசு அலுவலகங்கள் வங்கிகள் உள்ளன, மாலை அலுவலகம்விட்டு வீடு திரும்புவோர்கள் சர்குலர் ரயிலில் ஏறி செல்கிறார்கள், ஹொரா செல்வதற்கு பெரிய படகுகள் ghat களில் காத்திருக்கின்றன. சாலையில் நெருசலில் விலகி எளிதாக ஹொரா ரயில் முனையம் செல்ல படகு போக்குவரத்து உதவியாக உள்ளது. அந்தியாகிவிட்டது எல்லோருக்கும் ஓய்வும் தேவை, காளிகாட் செல்லலாம். மெட்ர்ரோ தான் எளிதான மார்க்கம் என்று அருகேயுள்ள மெட்ரோ ஸ்டேசன் எதுவென்று ஓ தாதா கொத்தோ தூர் ஆச்சே? என்று கேட்டோம் 1 கி.மீ தூரம்தான் செண்ட்ரல் என்றார், நடந்தோம் நடந்தோம் 2 கி.மீ, குறுகிய நடைமேடையில் மெல்லிய மழைச்சாரலில் நடந்து களைப்பாகிப்போனோம்.

மில்லிணியம் பார்க்கிலிருந்து ஹொரா ரயில் முனையம் மற்றும் பாலம்

காளிகாட் வந்து  சேர்ந்து அத்தோடு அன்றைய சுற்றலை முடித்துக்கொண்டோம்.



கருத்துகள் இல்லை: