ஞாயிறு, 15 டிசம்பர், 2013

Madiba ! Son of Africa....


நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்துகிறார்கள், அவர் நீண்ட நாட்கள் சிறையிலிருந்தார் என்பதற்காகவா, தென் ஆப்பிரிக்காவின் விடுதலையின் ஆதர்சநாயகனாக இருந்தார் என்பதலா, நிறவெறிக்கு எதிராக மக்களை திரட்டி போராடியதற்காகவா எல்லாவற்றிற்க்காகவும் தான். அதற்கு மேலே!

நெல்சன் மண்டேலா விடுதலையடிந்த 1991க்குப்பின் அரசியல் இயக்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது, நாட்டின் 80 சதவீத கறுப்பின மக்களின் ஒற்றைக்குரலாக ANC  என்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விளங்கியது, நூற்றாண்டுகளாக 20 சதவீதற்கும் குறைவான வெள்ளையர்கள் மற்றும் ஆப்பிரிகான்ஸ் இனமக்கள் பூர்வகுடிகளை ஒடுக்கிவந்தார்கள், அதற்கு எதிர்வினையாக வெள்ளையர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுமோ என்று அஞ்சிய சூழ்நிலையில் மண்டேலா, இனி தென் ஆப்பிரிக்காவில் பல இனங்கள் இணங்கி வாழும் சமாதானம், ஜனநாயகம் தான் எங்கள் அரசியல் என்றார்.

காந்தியின் அகிம்சை வழியில் ஏ.என்.சி. போராட்டப்பாதை அமைந்தது. உலகின் எந்த நாட்டிலும் சொந்தமக்கள் தென் ஆப்பிரிக்கர்களைப் போல் நிறவெறியையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்திருக்கமாட்டார்கள். அவர் 1994 தேர்தலில் வெற்றியடைந்ததற்கு பின்னால் நாட்டின் 80 சதவீத நிலங்களையும் செல்வங்களையும் வைத்திருந்த வெள்ளையர்களும் ஆப்பிரிகான்ஸ்களும் எங்கே ஆட்சி மாறினால் தங்களிடமிருந்த நிலங்களை பறித்துவிடுவார்களோ , நாம் புறக்கணிக்கப்படுவோமோ என அஞ்சினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்தார். 1995ம் ஆண்டு உலகக்கொப்பை ரக்பி விளையாட்டை தென் ஆப்பிரிக்காவின் வெற்றி என்பது அந்த நாட்டின் மக்களை ஒற்றுமை கொள்ளச்செய்தது. தேசத்திற்கு விளையாடிய வீரர்கள் அனைவரும் வெள்ளையர்கள் அவர்களுக்கு அவநம்பிக்கையே இருந்தது. நெல்சன் மண்டேலா அந்த வீரர்களை உற்சாகப்படுத்தினார், அதைப்போல் கறுப்பின மக்களும் அந்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார்கள்.

நெல்சன் மண்டேலா மிகவும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது, ரக்பி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது. மக்கள் தங்கள் நிறங்களை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

விளையாட்டை மக்கள் ஒற்றுமைக்கு பயன்படுத்திய மாமனிதர் Madiba!

கருத்துகள் இல்லை: