வெள்ளி, 15 மார்ச், 2013

கேணி சந்திப்பில் முன்னால் நீதிபதி சந்துரு

சென்னையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றிக்கிழமை ‘கேணி’ கூட்டத்தை பத்திரிக்கையாளர் ஞாநி தன்னுடைய வீட்டில் நடத்துகிறார்.  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தான் அதிகமாக பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் அல்ல நீதிபதி சந்துரு அவர்கள் பங்கேற்று பேசினார்கள் வழக்கமாக வாசகர்  கலந்துரையாடல் நிகழ்ச்சியும் உண்டு. சமீபகாலமாக நீதிபதி சந்துரு பற்றி சில வழக்குகளை கேள்விப்பட்டிருந்தேன், அதில் குறிப்பாக சாதிக்கொரு சுடுகாட்டை முடிவுகட்டி தீர்ப்பு எழுதினார். குறிப்பாக அடித்தட்டு மக்கள், பெண்கள் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார், மனித உரிமை சம்மந்தமாக வழக்குகளில் அவர் வழக்கறிராக இருக்கும்போது வாதாடியிருக்கிறார், அதில் பொடாவுக்கு எதிராக, ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்று 4 பேருக்கு வாங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து வாதாடியிருக்கிறார். இன்று நீதிமன்றத்தில் சில வழ்க்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறி காசுக்காக ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள், சங்கம் அமைப்பு என்ற பெயரில் அடிக்கடி வேலைநிறுத்தம், உள்ளூர், வெளியூர், குறிப்பாக இலங்கைப் பிரச்சனைக்காக அடிக்கடி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம், ஒரு வழக்கு இழுத்துக்கொண்டே போனால் சாமானியர்களால் வழக்கை நடத்தமுடியௌமா? அதற்கு வழக்கறிஞர்கள் துணைபோகலமா? இங்கே வேலைநிறுத்ததிற்கு எதிராக பேசவில்லை, அவர்களுடைய அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களைப் பற்றித்தான் சொல்கிறேன். இன்னும்மைப்பு ரீதியாக சேர்ந்துகொண்டு சிலருக்கு வாதாடமாட்டோம் என்கிறார்கள், இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது, அது அப்சல்குருவாக இருந்தாலும், அஜ்மல் கசாப் ஆக இருந்தாலும் அவர்களுக்கு சட்டௌதவி செய்வது என்பது இந்திய அரசியலமிப்புச்ச்ட்டம். அப்படி காஞ்சி மடம் பற்றி முரண்பாடான கருத்துகொண்ட சந்துரு அவர்கள் ஜெயேந்திரருக்காக வாதாடியதைக் குறிப்பிட்டார்.

அறிமுகம் செய்து பேசிய ஞாநி தனக்கும் சந்துரு அவர்களுக்கும் உள்ள நெடு நட்பை விளக்கினார், ஞாநி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிள் வேலைசெய்தபோது சங்கம் அமைத்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார், அந்த வழக்கை  வழக்கறிஞராக சந்துரு ஏற்று நடத்தி நியாயம் வாங்கிக்கொடுத்தார் என்பதைவிட ஒரு பைசா காசு வாங்கவில்லை, இது அவருடைய நண்பர் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய கொள்கைப்பிடிப்பு. சந்துரு அவர்கள் பேசும்போது என்னுடைய நீதிமன்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன் என்று பல வழக்குகளைப் பற்றி பேசினார்.

அவர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது, மதுரை மாநகராட்சி மதுரை மாநராட்சியில் பணியிலிருக்கும்போது ஒரு கார்டனர் இறந்துவிட்டார், அவர் பணியிலிருக்கும்போது நகராட்சி கொடுத்த குவார்ட்டர்ஸ் என்று சொல்லப்பட்ட குடியிர்ப்பில் அவர் குடும்பம் தொடர்ந்தது, அதே  சமயம் அவருடைய மாணவி தினக்கூலியாக நாளொன்றுக்கு 60 ரூ சம்பளத்தில் வேலை செகிறார். கார்ப்பரேசன் கமிஷனர் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தார், அந்தப்பெண்மணி ஸ்டே ஆர்டர் வாங்க நீதிமன்றத்தை அணுகினார், அதற்கு கமிசனர் அந்தப் பெண்ணிடம் என்னுடைய வேலைநேரத்தை வீணடிதாய் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அந்த கார்ப்பரேசன் கமிஷனரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து நீதிமன்றத்திற்கு ஒரு பெண், ஜனநாயக நாட்டில் யாரும் நீதிமன்றத்தை அணுகலாம் நீங்கள் எப்படி தடுக்கலாம என்று 5000 ரூ அபராதம் விதித்திருக்கிறார்.

இன்னும், அங்கன்வாடி ஊழியரை மன்நலம் சரியில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் முதலில் அந்த பெண்ணிற்கு மனநலம் சரியில்லை என்பது பொய், அப்படியே பணியில்ருக்கும்போது ஒருவருக்கும் விபத்து ஏற்பட்டால் வேலைநீக்கம் செய்யாமல் வேறு வேலை கொடுக்கவேண்டும் அல்லத் ஓய்வுபெறும்வரை ஊதிஒயம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார், பெண்கள் பூசாரியாகலாமா? என்ற வழக்கு அகில இந்திய கவனத்தை பெற்றது. அவருடைய ஒரு தீர்ப்பால் 22000 தலித்களுக்கு அங்கன்வாடியில் இடஒதுக்கீடு கிடைத்தது மட்டுமல்ல, தலித் அங்கன்வாடி பெண் சமையல் செய்வதை ஏற்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை மாவட்டநிர்வாகம்  கையிலெடுத்து நடத்தவேண்டும் என்ற தீர்ப்பை அடுத்து பள்ளி நிர்வாகம் பணிந்துபோனது. சமபந்தி போஜனத்தை வருசத்திற்கொரு நாள் சடங்கு மாதிரி செய்யாமல் இந்த அங்கன்வாடியில் தலித்கள் ச்மைத்து அதை எல்லா மாணவகளும் சாப்பிட்டார்ல் அதுவே சமபந்தி யென்று வரலாற்றில் வ.வே.சு ஐயர் நடத்திய சேரன்மகதேவி விடுதியில் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தனி பந்தி என்பதை எதிர்த்து பெரியார் போராடியதை சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண் போலிஸ்துறையில் வேலைசெய்யும்போது அதிக (15நாள்) தொடர்விடுப்பு காரணமாக பணிநீக்கம், அந்த வழக்கில் அந்த பெண் சொல்கிறார், நான் பிராமண சமூகத்தை சார்ந்தவள், கணவனை இழந்த பிராமணப்பெண் வெளியே உடனே நடமாடக்கூடாது என்பது இந்த சமூகத்திற்குத் தெரியும். காவல்துறை அதிகாரிகள் என்னுடைய கணவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அந்த வழக்கில் சமூக நிலைமையை விளக்கி தீர்ப்பு வழங்கியதால் மீண்டும் வேலை கிடைத்தது.

வக்கீல்கள் வேலைநிறுத்தம் அன்று ஒரு பெண்மணி, நீதிமன்றத்திற்கு வந்தார், அவர் செல்போன் உபயொகித்தார் என்பதற்காக வக்கில்கள் அந்தப்பெண் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு போட்டார்கள், தீர்ப்பை வழங்க பல நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு (ஒரு சில வக்கீல்கள் கூட்டம் சேர்த்துகொண்டு  குண்டாஸ் போல செயல்படுவது தமிழர்களுக்கு தெரியும்) பயந்து வழக்கை எடுத்துகொள்ள மறுத்தார்கள். சந்துரு அந்த வழக்கில் அந்த பெண்னை மொபைலில் போட்டோ எடுத்த வழக்கறிஞருக்கு அபராதம் விதித்தார். இன்னும் சில வழக்குகளில் வக்கீல்கள் இவருக்கெதிராக கோஷம் போட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் சாமானியர்களுக்காக நீதிமன்றத்தில் உழைத்தார்.

ராஜீவ் கொலைவழக்கில் 4 பேருக்கு தூக்கு வழங்கியபின் கருணைமனு, தமிழக அமைச்சரவைக்கு வருகிறது அப்போதைய முதல்வர்  கருணாநிதி அப்படியே ஆளுநர பாத்திமா பீவிக்கு அனுப்பிவிட்டார். பாத்திமாபீவி அவர்கள் தள்ளுபடி செய்துவிட்டார். மீண்டும் அமைச்சரவைக்கு வருகிறது சோனியாகந்தி என்னுடைய குழந்தைகள்மாதிரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுபவிக்கவேண்டாம் என்பதை அடுத்து நளினிக்கு மட்டும் கருணை கிடைத்தது. கருணாநிதி நினைத்திருந்தால் எல்லாருக்கும் கருணை வழங்கியிருக்காலாம் அதிகாரத்தில் இருக்கும்போது செய்யாமல் இப்போது மற்ற 3பேரின் தூக்குதண்டனையை பேசுவதை விமர்சித்தார். சமீபத்தில் நீதிமன்ற விழாவில் நீதிபதியாக இருந்த சந்துரு அவர்கள் கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழாவில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இன்னும் எத்தனையோ சமூக முன்னேற்றத்திற்காக தீர்ப்புகளை வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு ஒரு சல்யூட்.

நிகழ்ச்சியின் காணொளியின் இணைப்பு கீழே...

http://www.youtube.com/watch?v=y5p0GYavVSE

Regards
Hariharan

1 கருத்து:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! உங்களுக்காக "பவந்தர்" திரைப்படம் பற்றி எழுதியுள்ளேன்!---காஸ்யபன்.