வெள்ளி, 4 ஜனவரி, 2013

Feudal to Modern indusrial Socity -1

சென்ற ஆண்டின் கடைசியில் இரண்டு சமூகக் கொடுமைகள் ஒன்று தில்லியில் நடந்த பாலியல் பலாத்காரம் மற்றொன்று தருமபுரியில் ஆதிக்கசாதி வெறியர்கள் நடத்திய வன்முறை அதை சாதிக்கட்சியின் தலைவர் ராமதாஸ் நியாயப்படுத்துவது மேலும் வன்செயல்களை தூண்டிவிடுவது போல் கிராமங்கள் தோறும் பேசுவது. தில்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தபின் நியாயத்திற்காகவும் பென்களின் பாதுகாப்புக்காகவும் மக்கள் தன்னிச்சையாக தெருவில் இறங்கி அதுவும் அதிகார மையமான காங்கிரஸ் தலைவர் வீட்டுமுன்பு போராடினார்கள், இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் மத்தியதர வர்க்க மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள். தனக்கு நேர்ந்தால் சோகம் அது மற்றவர்களுக்கு நேர்ந்தால் செய்தி என்பதை இழிசொல்லாக மாற்றிக்காட்டியது தில்லியின் போராட்டம் அதைத்தொடர்ந்து நாடெங்கும் மாதர்சங்கம், இளைஞர் அமைப்புகள ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுவரை ஊர்வலம் , சாலைமறியல் செய்வதெல்லாம் பொதுபுத்திக்கு அசிங்கமாக இருந்த செயல்கள் இப்போது அவர்களே ஊழல்களுக்கெதிராகவும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை களுக்கெதிராகவும் சமூக அநீதிகளுக்கெதிராகவும் வீதியில் இறங்கிப் போராடினர்கள்.

வடமாவட்டங்களில் ராமதாஸின் ஓட்டுவங்கி சரிய ஆரம்பித்துவிட்டதன் எதிரொலியாக அந்த சாதி மக்களை ஓரணியில் திரட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்துபவர்களாக சித்திரித்து பிரச்சாரம் செய்தார்கள், இனத்தை வைத்து, மொழியை வைத்து, மதத்தை வைத்து பிழைப்பு அரசியல் செய்வோர் எல்லோரும் கையாளும் ஒன்று  “அச்சுறுத்தும் ஓர் எதிரியை கட்டமைப்பது” அதை செய்தார்கள். ராமதாஸைத் தொடர்ந்து தமிழகத்தில் பிறசாதித்தலைவர்களும் சாதி ரீதியாக மக்களை அணிதிரட்டும் பணிகளை துவக்கியுள்ளார்கள். இடஒதுக்கீட்டின் மூலம் அரசு சலுகையை அனுபவிக்க நாங்கள் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று சாதியை அடையாளம் போட்டுக் கொள்பவர்கள் தலித்கள் விசயத்தில் பார்ப்பனீயத்தை கடைபிடிக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றான் பாரதி , வலைப்பக்கம் ஒன்றில் ‘சாதிகள் இல்லையடி டாக்டர்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது என்று எழுதினார் ஒரு நண்பர். இல்லை, நேற்றுவரை சாதிக்கடசிகளை விமர்சித்தபடித்த, மிகவும் படித்தவர்கள் அதிகமாக சாதி அபிமானத்தில் சிக்கியிருக்கிறார்கள் . படித்த கல்வி எந்த விதத்திலும் சமூகப் பார்வையை உயர்ந்தவில்லை. எல்லா சாதியினரும் ஏதாவது ஒரு பழய்ய சாம்ராஜ்யத்தின் ராஜாவின் சாதியை ஆராய்ச்சி செய்து நாங்கள் நாடாண்ட ‘சாதி’ என்று பெருமை பட்டுகொள்கிறார்கள். போர் வெறியர்களை எங்கள் சாதிக்காரன் என்று சொல்வதில் என்ன ‘ஆதிக்கப் பெருமையோ’ தெரியவில்லை. உன் சாதியின் வரலாறு என்ன? மனிதன் தொன்றிய காலத்திலேயெ உன்சாதி இருந்ததா? இடையில் என்ன காரணத்திற்காக தோன்றியதோ அது ஒரு நாள் அருகித்தான் போகும். மனிதன் என்ற அடையாளத்தைவிட உன்னதமான அடையாளம் என்ன வேண்டிக்கிடக்கிறது? மத்மென்றால் அதுக்கும் அதிகபட்சமாக 1500,2000, 3000 ஆண்டுகள்தான் வரலாறு. அதற்கும் முன்னாரும் மனிதர்கள் இப்புவியில் வாழ்ந்தார்கள். மொழி அடையாளம் என்றால் அதற்கு தோன்றிய வரலாறு இருக்கிறது, தேசமென்றாலும் அதற்கொருஆரம்ப ஆண்டு இருக்கிறது இப்போது இருக்கிற ராஜ்ஜியங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி இருக்கவில்லை, ஏன் இந்தியா என்ற தேசம் 70 ஆண்டுகளுக்கு முன் இப்படியிருக்கவில்லை. ஆனால் மனிதனே உன்னுடைய மூதாதையர்களின் வரலாறு இருக்கிறதே, அது நிமிர்ந்து நடைபோடு கைகளை உழைப்பில் பயன்படுதிய காலத்திற்கும் முன்பு செல்கிறது. என்னுடைய வரலாறு , தேசத்தின், மொழியின் மதத்தின் வரலாற்றை பாரபட்சமின்றி தெரிந்துகொண்டால் இந்த சாதித்தலைவர்கள் உன்னை ஒன்றும் செய்யமுடியாது, வெட்கித்துப்போவார்கள்.

இந்தியாவின் வரலாறு என்ன? இங்கே ஏன் உலகத்தில் எங்கும் இல்லாத அள்விற்கு மனித இனக்கள், கருப்பாக சிலர், மங்கோலியர்களைப் போல் சிலர், ஐரோப்பியர்களைப் போல் சிலர் என்ற நிறவேறுபாட்டிலும், எத்தனை மொழிகள், எழுத்தே இல்லாத மொழிகள் ஆயிரமாவது இருக்கும். கலாச்சாரம் எத்தனை, கடவுளகள் எத்தனை! எப்படி இங்கே இத்தனை வேற்றுமையான இனம், மதம்,மொழி பண்பாடு கொண்டவர்கள் இருக்கிறார்கள்? 130 கோடி மக்கள்தொகை கொண்ட அத்தனை பெரிய நிலப்பரப்பு கொண்ட சீனநாட்டில் ஒரே மொழி, 90 சதமக்கள் ஹன் இனத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் மங்கோலியர்களை போல் இருப்பார்கள் பேசுகின்ற மொழி பல இருந்தாலும் எழுத்துமொழி மாண்டரின் என்ற ஒரு மொழிதான். ஏன் இந்த வித்தியாசம் என்பதை அறிவியல் பூர்வமாகப் பார்க்கவேண்டும், ஏனென்றால் இந்தியா ஒரு குடியேற்றநாடு, அமெரிக்காவைப்போல் 200 அல்லது 300 ஆண்டுகளில் குடியேற்றம் நிகழ்ந்துவிடவில்லை இந்தியாவின் குடியேற்ற காலம் அதிகபட்சமாக 10000 ஆண்டுகள். ஏன் அப்படி மக்கள்கூட்டம் இந்தியா நோக்கி வந்தார்கள்? வெள்ளைக்காரன் 300 வருடங்களுக்கு முன்பு வந்தானென்றால் இங்கே செல்வங்கள் குவிந்துகிடந்தன் அதைப்பார்த்து வந்தான், பத்தாயிரம் வருசத்துமுன்பு வாழ்ந்த மனிதன் ஏன் இந்திய நிலப்பரப்பை நோக்கி ஏன் ஓடிவரவேண்டும். இன்றைக்கு இந்தியர்கள் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் ஏன் ஓடுகிறார்களோ அதே செளகரியாமான அல்லது சோறு கிடைக்கிற தேசமென்று வந்தார்கள்.

இந்திய நிலப்பரப்பு அந்தமாதிரி, நமக்கு மேலே ஆப்கனில் பாறைகள் பாதி பரப்பள்வை நிறைந்திருக்கும் அங்கே விவசாயம் செய்யமுடியாது, அதற்கும் மேலே இருப்பவர்களுக்கு நிலம் பனி உறைந்து அது ஒரு 6மாதகாலம் நீடிக்கும் எப்படி அங்கே சோறுகிடைக்கும், வேட்டையாட விலங்குகள் கூட கிடைக்காது, இப்படித்தான் உலகின் பல பகுதிகளிலிருந்து இங்கே குடியேறினார்கள்.இங்கே நதிகள், விவசாயம் செய்வதற்கேற்ற வெப்பநிலை. சம்வெளிப்பிரதேசம் என்பது குடியேற்றவாசிகளுக்கு நல்ல வாழ்வை கொடுத்தது. வரலாற்றில் இந்தியாவிலிருந்து ஒரு கூட்டமாக யாரும் பிழைப்புதேடி செல்லவில்லை, பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி ஆதிக்கவாதிகள் தங்களுடைய வேரு காலனிநாடுகள்க்கு இங்கெயிருந்து மக்களை கொண்டுசென்றதை தவிர்த்து. சிலர் பிழைப்பு அரசியலுக்கு ஆரியர்களை வந்தேரிகள் என்கிறார்கள், அப்படி அழைப்பவர்களும் வந்தேறிகள்தான். திராவிடர்கள் பூர்வ குடிகள் அல்ல, இன்றைக்கு காடுகளில் வசிக்கும் பழங்குடியினர்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தோடர்கள், சந்தால் பில் என்ற பழங்குடிகள் தான். அவர்களை (அ)நாகரீக மனிதர்களாக நாம் காட்டிற்குள் துரத்திவிட்டோம், இபோது கார்ப்பரேட்டுகள் அவர்களை காடுகளிலிருந்து துரத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பது வேறுகதை. ஒவ்வொரு நாகரீகவாசியும் பிழைக்கவந்த கூட்ட்டத்தின் அங்கத்தினர்கள், இவர்கள் தனித்தனி குழுவாக தனித்தனி பிரதேசங்களிலிருந்து வெவ்வேறான மொழி, பண்பாடு, கடவுளை இங்கே கொண்டுவந்தார்கள் அதை தொடர்கிறார்கள். இப்போது பேச்சு மொழி ஒவ்வொரு 50 அல்லது 100 கி.மீ தூரத்தில் வித்தியாசம் இருக்கிறது. சாதியின் வர்லாறும் அப்படித்தான் மற்ற தேசங்களில்  தொழில்முறை சாதிகளாக இருந்த மக்கள் பிரிவினர் இங்கே ஆதிக்கம், அடிமை சாதிகளாக ஆட்சிசெய்த மதம் தத்துவனக்கள் உருவாக்கின. இங்கிலாந்தில் இன்னும் பெயர்களில் Taylor, Smith, Goldsmith, Baker, Butcher, Potter, Barber, Mason, Carpenter, Turner, Waterman, Shepherd, Gardener் என்று முடிகின்றன இவைகெளெல்லாம் அவர்கள் தொழில்முறை சாதியினர். தொழிற்புரட்சி இந்த முறையை தகர்த்துவிட்டது, இந்தியாவிலும் இந்த முறை மாறும். இப்போது பாதிகிணறு தாண்டியாகிவிட்டது, இன்னும் முடிவேட்டுபவரின் மகன் முடிவெட்டத்தான் வேணும் என்று யாரும் கட்டளை இடமுடியாது.

மாற்றங்களை யாரும் தடுக்கமுடியாது, மெதுவாக அல்லது விரைவாக மாறுவது என்பது நிலவும் அரசியல் மக்கள் போராட்டங்களில் தான்.

 

கருத்துகள் இல்லை: