புதன், 28 மார்ச், 2012

ஊடகங்கள் யாருக்காக...

நான் வாசிப்பது நடுநிலை நாளிதழ் என்று நினைத்துக்கொண்டு பேப்பர் படிக்கிறார்கள், அப்படி எந்த ஒரு பேப்பரும் அச்சடிக்கப்பட்வே இல்லை. நான் அப்படி தினமணி நாளிதழை நம்பி வாசித்தேன். ஆனால் மக்களுக்கு தெரியவேண்டிய செய்திகளை மறைக்கவும் செய்தது ஆனால் தலையங்கம் என்ற மனசாட்சியின் குரலை எந்தபப்த்திரிக்கையும் வெளியிடாத சம்யத்தில் தலையங்கம் எழுதியது. அந்த தலையங்கமும் நடுப்பக்கத்தில் வருகிற கட்டுரையும் தான் தினமணியின் பலம். இன்றும் மற்ற வெகுஜன நாளிதழ்களை விட தினமணி பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனாலும் அதற்கே உரித்தான வர்க்க குணம் என்பது அவ்வப்பஓது வெளிப்படும். தினத்தந்தி எப்போதும் யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்கு ஜால்ரா அடித்தே செய்திவெளியிடும்,அதனால் அதன் விளம்பர வருமானத்திற்கு எந்த பங்கமு நேராது. மிகவும் தமிழ்மொழியை கொச்சைப்படுத்துகிற நாளிதழ் தினமலர் தான். தமிழகத்துக்கு ஒரு சாபம் இரூக்கிறது, எது மோசமானதோ அதை நிறையபேர் விரும்புகிறார்கள். வக்கிரங்கள் நிறைந்த ஒரு பத்திரிக்கை தினமலர். சாதி அபிமானம், மதாபிமானம், சிறுபான்மையினரை இழிவுப்டுத்துதல், தொழிலாளர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துதல், கிசுகிசு எழுதி வாச்கர்களை கவருதல், மக்களிடம் பகதி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைத்தல் என இழிசெயல்கள் செய்து நம்மிடம் கொடிகட்டி பறக்கிறது.



இன்றைய ஜனரஞ்சக ஊடகங்கள் எதுவும் மக்களை அல்லது அதன் வாசகர்களை நம்பி இல்லை, ஒரு தொலைக்காட்சி ஆகட்டும் அல்லது பத்திரிக்கையாகட்டும் அதன் விளம்பர வருமானம் தான் அதன் பலம் அதைமட்டும் நம்பியிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிற நிகழ்ச்சி உங்களுக்கு பரிசு தருமா? அல்லது 10ரூபாய் மதிப்புள்ள வார இதழ் 10ரூக்கும் மேலே பரிசுப்பொருள் தருமா? சிமகார்டும் தருகிறது? அது செய்வது பிரச்சாரம் பிரச்சாரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது அதன் ரேட்டிங். அதற்கு விள்ம்பரம் தருகிறவர்கள் மிகப்பெரும் நிறுவனக்கல் பன்னாட்டு நிறுவனங்கள். அரசின் நடவடிக்கை எல்லோருக்குமான அரசு என்பது இல்லை, சமூகத்தின் குறைவான எண்ணிக்கையுள்ள சிலரை மில்லிணியர்களாகவும் பெரும்பாலானவர்களை தரித்திரம் பிடித்தவர்களாவும் மாற்றுவதற்கு அதன் கொள்கைகள் தான் காரணம். இத்தைகைய கொள்கைகளை ‘நல்லது’ என்று வாசிக்கிறவர்கள் மேல் திணிப்பதற்கு உண்டான கருவி இந்த ஊடகங்கள். அதனால் அது வாச்கர்களின் நிலமையை ஆதரிப்பதில்லை மாறாக நம்மை சலுகை பெறுபவர்கள் என்ரு இழிவுபடுத்்துகிறது. பெரும் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிற வரிச்சலுகைகளை சரிதான் அப்போது தான் நாடு முன்னேறும் என்று நியாயப்படுத்துகிறது. சாய்நாத் அளித்துள்ள பட்டியலைப் பாருங்கள் 2004-05 ஆண்டிலிருந்து 2010-11 ஆண்டுவரை எத்தனை லட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை. இதை நீங்கள் வாசித்துவருகிற பத்திரிக்கைகள் தகவல் அளித்ததா? நமக்கு பெட்ரோல்,எரிவாயு வுக்கு மானியம் தருகிறேன் என்று இழிவுசெய்கிறது இறக்குமதி செய்யப்படுகிற கச்சா எண்ணைக்கும் வரி, அதை சுத்திகரிப்புசெய்தபின்பு சுங்கவரி, கலால்வரி, அது மாநிலத்திற்குள் விற்றால் விற்பனைவரி, நெடுஞ்சாலைக்கு ஒரு செஸ், கல்விக்கு ஒரு செஸ் அப்புறம் சாலையை மேம்படுத்த டோல்கேட்டில் தெண்டம். இவற்றையெல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு தான் இந்த ஊடகங்கள் உதவுகின்றன.

வாசகர்களை மட்டும் நம்பி வெளிவருகிற பத்திரிக்கைகள் தான் நம்முடைய நலன்களை பிரதிபலிக்கும். மற்றவையெல்லாம் நடிக்கும். பத்திரிக்கை, ஊடகங்கள் வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிரார்கள். எங்கும் போகவேண்டாம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சன் டிவி எப்படி உதவியது என்று நமக்குத்தெரியும், இப்போது கலைஞர் டிவி அந்த வேலையை செய்கிறது அதற்கு 2Gலிருந்து பணம் வந்ததுவரை. இதற்கு போட்டியாக ஜெயா டிவி இரண்டையும் ஒருவர் மாறிமாறி பார்த்தால் பைத்தியம் தான் பிடிக்கும் மூன்றாவதாக நேற்று முளைத்த தேமுதிகவுக்கு ஒரு சேனல். பிரான்சில் சர்கோசி ஆட்சிக்கு வந்ததற்கும் இத்தாலியில் பெர்லோஸ்கோனி பதவியில் நீடிப்பதற்கும் சார்பு ஊடகங்கள் தான் காரணம். விளம்பரவருமானம் என்பது நம்மால நினைத்தும் பார்க்கமுடியாத அளாவிற்கு வருகிறது, இல்லையென்றால் சன் இத்தனை சேனல்கள் தொடங்கமுடியுமா அரசியல் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும் வருமானம் பெருகியதற்கு அது மக்க்ளை சென்றடைந்தது தான் காரணம்.

2 கருத்துகள்:

kashyapan சொன்னது…

ஹரிஹரன் அவர்களே! இந்தியாவின் மதிப்புக்குரியபத்திரிக்கை அதிபரோடு பேசும்வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் பத்திரிகைகளின்மாதச்சந்தாவுக்கும் வருமானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார். வருமானம் (revenue) தான் தீர்மானிக்கிறது. எங்கள் பத்திரிகையை இலவசமாக உங்களுக்கு கொடுத்துவிட்டு கும்பகோனம் டிகிரிகாப்பி ஒன்றும் இலவசமாக எங்களால் கொடுக்கமுடியும் என்றார். மேலை நடுகளில் பத்திர்கைகள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன .சாலகளில் உள்ள "கிஸோக் " களில் பத்திரிகைகள் இருக்கும்.உங்களுக்கு எது வேண்டுமோ அதைவீட்டிற்கு கொண்டுபோகலாம். (New York Times) உட்பட. இது மிகச்சிறிய அளவில் சென்னையில் நடக்கிறது. மாம்பலம் டைம்ஸ் ,வேளச்செரி டைம்ஸ் ,என்று பகுதி வாரியாக இலவசமாக வினியோகம் செய்யப்படுகின்றன.---காஸ்யபன்

hariharan சொன்னது…

நீங்க சொல்றது சரிதான் தோழர்.

நான் கத்தாரில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் பெனின்சூலா வாங்கறேன். அந்த பேப்பருக்கு வருட சந்தா 625 ரியால் ஆனா அந்த சந்தா கட்டுனா 700 ரியாலுக்கு ஷாப்பிங் கூப்பன் தரான். மொத்தத்துல அரசாங்கம் அவர்களுக்கு பிரச்சார சலுகை வழங்குறது மாதிரி இருக்கு.